tag:blogger.com,1999:blog-116858322024-03-14T00:22:06.574+05:30ஆழ்வார்க்கடியான்கண்ணனமுது படைக்கும் ஆழ்வார் சொல்லமுது!Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comBlogger131125tag:blogger.com,1999:blog-11685832.post-4304289360006062922020-05-20T16:28:00.002+05:302020-05-27T20:39:53.445+05:30கோவிட்19 ம் பட்டினம் காப்பும் (பாசுரம் 10)<div>அரவத் தமளியி னோடும் அழகிய பாற்கட லோடும்</div><div>அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து</div><div>பரவைத் திரைபல மோதப் பள்ளிகொள் கின்ற பிரானை</div><div>பரவுகின் றான்விட்டு சித்தன் பட்டினம் காவற்பொ ருட்டே</div><div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-oP32aSf_H9U/XsUMBFsxRBI/AAAAAAABCqM/iSBPRsXESm88OCJ1-ZV9qsOgV4ntCQwPwCK4BGAsYHg/Churning_of_the_ocean_-_Manthan-2.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1397" data-original-width="1000" height="320" src="https://1.bp.blogspot.com/-oP32aSf_H9U/XsUMBFsxRBI/AAAAAAABCqM/iSBPRsXESm88OCJ1-ZV9qsOgV4ntCQwPwCK4BGAsYHg/s320/Churning_of_the_ocean_-_Manthan-2.jpg" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><br />திருமால் பள்ளி கொள்ளும் அரவமான ஆதிசேஷன், அவை இருக்கும் திருப்பாற்கடல், பெருமாளுடன் துஞ்சும் மலர்மகள் ஆகிய எல்லோரோடும் அகம் புகுந்து வந்த திரை மோதும் கடலில் பள்ளி கொள்ளும் பிரானாகிய திருமாலை விட்டுசித்தனாகிய நான் பரவித் துதிக்கிறேன். பட்டினம் காவற்பொருட்டு இத்தனையும் நடந்தது ஓர் அதிசயமே! என்று முடிக்கிறார் பெரியாழ்வார்.<div><br />அடிப்படையான கருத்து என்னவெனில், உலகைப் படைத்துவிட்டு அலட்சியமாக இறைவன் இருந்து விடவில்லை. 10 அவதாரங்கள் எடுத்து இப்பூவுலகையும் அதில் வாழும் உயிரினங்களையும் காத்து ரட்சிக்கும் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொள்கிறான். இதைத்தான் “ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்துழல்தல்” என்பார் நம்மாழ்வார். இதுவொரு அர்த்தம் கற்பிக்க முடியாத உழற்சி, ஓர் ஆக்க செயல். அதை இறைவன் சதா செய்த வண்ணமுள்ளான். அப்படிப்பட்ட சர்வ வல்லமை பொறுந்திய பரம்பொருள் தன்னையும் ஓர் பொருட்டாகக் கருதி, தன் ஊனுடலைச் சுத்தம் செய்து, சித்தம் தெளிவித்து தன் ஜீவிதம் ஒளிரும் வகை செய்தான். அக்கருணைக்கு ஈடு இணை உண்டோ என்று வியக்கிறார் விட்டு சித்தர்.</div><div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-qAsOO2MHLlY/Xs6CsgKT25I/AAAAAAABD9M/hLr5iWiQVIcxBuGTKles-GHST4Y3hOYYQCK4BGAsYHg/Gita.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="210" data-original-width="240" src="https://1.bp.blogspot.com/-qAsOO2MHLlY/Xs6CsgKT25I/AAAAAAABD9M/hLr5iWiQVIcxBuGTKles-GHST4Y3hOYYQCK4BGAsYHg/Gita.jpg" /></a></div><div><br />உலகம் மிகப்பெரியது. சூர்ய மண்டலமோ அதைவிடப் பெரியது. சூர்ய மண்டலம் இருக்கும் பால்வெளி திரளோ அதை விடப் பெரிது. பால்வெளி போன்ற பரவெளி மண்டலங்கள் கோடிக்கணக்கில் சுழலும் அண்டமோ மிக மிகப்பெரியது. இதில் பூமியோர் சுண்டைக்காய், அதில் வாழும் மனிதன் ஓர் தூசு. ஆயினும் இத்தூசினும் தூசான மனிதன் மீது அக்கறை கொண்டு இப்பிரபஞ்ச சக்தி அவன் நோய் வாய்ப் படாமல் காக்கிறான் எனில் அது அவனது தனிப்பெருங்கருணையால் மட்டுமே சாத்தியப்படும். பட்டினம் காக்கும் பொருட்டு திருமால் தானிருக்கும் திருப்பாற்கடலிலிருந்து இழிந்து வந்திருப்பது ஓர் அதிசயச்செயல். ஓர் அவதாரம். </div><div><br />எப்படி கஷ்ட காலங்களில் சுந்தர காண்டம் படிக்க வேண்டும் என்பது ஓர் நியதியோ அது போல் கோவிட்19 காலங்களில் பண்டன்று பட்டினம் காப்பு ஓதுவது சாலச் சிறந்தது. <br /><br /><br /><br /></div>Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-11685832.post-23799742660642319892012-10-08T16:25:00.000+05:302020-06-03T10:36:55.460+05:30தென் தமிழின் பத்துக்கட்டளைகள் - 1<br />
ஐயன்மீர்:<br />
<br />
பெரியாழ்வாரின் பல்லாண்டு, பல்லாண்டு பாசுரங்களைக் கேட்டவுடன் எனக்கேனோ Decalogue அல்லது Ten Commandments நினைவிற்கு வந்தது. பெரியாழ்வார் தமிழ் இறைமையின் 10 கட்டளைகளை முன்வைக்கிறார். அவரது பல்லாண்டு, பல்லாண்டு எனும் 10 பாசுரங்களை ஏன் முதலில் சொல்ல வேண்டும் என்று வைத்தனர் என யோசித்தால் நான் சொல்ல வருவது புரியும். அதில் மிகத்தெளிவாக பாகவத இலட்சணம் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது இறைமையை நோக்கிய நமது அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பட்டயம் போட்டு எழுதி வைத்துவிட்டார் பட்டர்பிரான். 10 பாசுரங்களிலும் தெளிவாய் சில கட்டளைகள் / அணுகுமுறை சொல்லப்படுகிறது.<br />
<br />
Disclaimer: ஒரு பேச்சுக்கு பத்துக்கட்டளை என்பதால் வரிக்கு வரி யூத, கிறிஸ்தவ பத்துக்கட்டளைகளுடன் ஒப்பு நோக்க வேண்டாம் ;-)<br />
<br />
<br />
இறைவன் ஒருவன், அவனைப் பல்வேறு பெயர் சொல்லி, பல்வேறு வகைகளில் வழிபடுகிறோம் என்பதைத் தமிழ் அருளாளர்கள் மிகத்தெளிவாகச் செப்பியுள்ளனர்.<br />
<br />
<span style="color: blue;">வணங்கும் துறைகள் பலபல ஆக்கி, மதிவிகற்பால்</span><br />
<span style="color: blue;">பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவையவைதோ</span><br />
<span style="color: blue;">றணங்கும் பலபல ஆக் கிநின் மூர்த்தி பரப்பிவைத்தாய்</span><br />
<span style="color: blue;">இணங்குநின் னோரையில் லாய்,நின்கண் வேட்கை எழுவிப்பனே.</span><br />
<br />
எனவே இங்கு நான் சொல்லப்போவதை நம் தமிழ் மரபின் குரல் என்று காணுமாறு வேண்டுகிறேன். உங்கள் பின்னூட்டங்கள் நம் மரபுப்புரிதலை வளர்த்தெடுக்கும். நன்றி.<br />
<br />
<br />
<br />
தென் தமிழின் பத்துக்கட்டளைகள்<br />
<br />
கட்டளை 1.<br />
<br />
<b><i>இறைவன் தாயும் தந்தையுமற்ற தனிப்பொருள். வேரும், வித்துமற்ற தொன்மரம். இறைவன் நம்மைக் காக்கின்றான் என்பது </i></b><br />
<b><i>பொதுப்புரிதல் என்றாலும் தாயும், தந்தையுமற்ற இறைவனைக் காக்க நாம் ‘காப்பு, காப்பு’ என்று தூய்மையுடன் எண்ணுதல் </i></b><br />
<b><i>வேண்டும். </i></b><br />
<br />
<br />
<span style="color: blue;">பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு</span><br />
<span style="color: blue;">பலகோடி நூறாயிரம்</span><br />
<span style="color: blue;">மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்</span><br />
<span style="color: blue;">செவ்வடி செவ்விதிருக் காப்பு</span><br />
<br />
<br />
<iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/qcxnjdvplYc" width="450"></iframe><br />
<br />
<br />
இறைவனை நாம் காப்பதாவது? அவனுக்கு நாம் ‘காப்பு, காப்பு’ என்று சொல்வதாவது எனும் கேலிக்குரல் உள்ளே எழுவது<br />
நியாயமானதே! இறைவழிபாடு என்பது அடிப்படையில் பா(b)வசுத்தி அளிப்பது. கல்ப கோடி காலங்களாக அவன் தன்னுள்ளே படைத்து, காத்து கெடுத்து உழன்று கொண்டு இருக்கிறான். நாம் கையில் ஒன்றுமில்லாமல் பிறக்கிறோம். எல்லாமுமாக அவன் உடன் இருந்து, ‘கல்லினுள் தேரைக்கும், கருப்பை’ உயிர்க்கும் உள்ளுயிராய், உறை பொருளாய் இருந்து வெளியே காற்று, நீர், மண்ணிலிருந்து உணவு இவைகளை நமக்களித்து இரட்சிக்கின்றான். அத்தகைய வள்ளலுக்கு நாம் செய்யக்கூடிய கைமாறு, ‘நீ! நல்லா இருப்பா!’ என்று வாழ்த்துவதே! இப்படி வாழ்த்துவது ஒரு வகையில் நம்மை நாமே வாழ்த்துவதாகும். ஏனெனில்,<br />
<br />
<span style="color: blue;">யானும் நீயே என்னுள் உறைதலின்</span><br />
<span style="color: blue;">எனதும் நீயேயுனதன்றியின்மையின்... (ஸ்வாமி வேதாந்த தேசிகன்)</span><br />
<br />
என்று சொல்கின்றார்போல<br />
<br />
<span style="color: blue;">நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே</span><br />
<span style="color: blue;">நீயென்னை யன்றி யிலை. (திருமழிசை ஆழ்வார்)</span><br />
<br />
எனும்படிக்கு அவனை வாழ்த்துவது நம்மை நாமே வாழ்த்திக்கொள்வதாகவும் அமையும்.<br />
<br />
மேலும், ‘<i>தாயினுற்சிறந்த தயாபரனாக</i>’ அவன் இருந்தாலும், அவனுக்குத் தாயாக நம்மை ஆக்கிக்கொண்டு அவனை வாழ்த்துவது ஒரு மிகச்சிறந்த தமிழ் மரபு என்பதை எண்ணுங்கால் உள்ளம் குளிர்கிறது.<br />
<br />
நா.கண்ணன்<br />
<br />
<br />
Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-11685832.post-37424289906844822972012-10-07T14:55:00.000+05:302020-06-03T10:37:54.665+05:30தென் தமிழின் 10 கட்டளைகள் - 2<br />
கட்டளை 2<br />
<br />
<br />
<b><i>ஒத்த இறையுணர்வு கொண்ட அடியவருடன் இறைவனை ஏத்தல் நலம்.</i></b><div><b><i><br /></i></b><div><b><i><br /></i></b></div><div><b><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-sfcGZEdPjcM/XsYpNqf9LOI/AAAAAAABC4U/moeL0NZv4HQaFJZxGKBLaIw1-B0P-uq3QCK4BGAsYHg/Prabupada.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="350" data-original-width="535" src="https://1.bp.blogspot.com/-sfcGZEdPjcM/XsYpNqf9LOI/AAAAAAABC4U/moeL0NZv4HQaFJZxGKBLaIw1-B0P-uq3QCK4BGAsYHg/s320/Prabupada.png" width="320" /></a></div><i><br /></i></b>
<br />
<br />
<span style="color: blue;">அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு</span><br />
<span style="color: blue;">வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு</span><br />
<span style="color: blue;">வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு</span><br />
<span style="color: blue;">படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே</span><br />
<br />
<a href="http://youtu.be/RYsg9mjc0xk">பாடல் கேட்க</a>!<br />
<br />
ஒரு கச்சேரிக்குப் போகிறோமெனில் நல்ல ரசிகர் உடன் இருந்தால் இசையை ரசிப்பது மட்டுமன்று, இசையின் நுணுக்களையும் நன்கு அறிந்து அனுபவிக்கலாம். கம்பனை ரசிக்க வேண்டுமெனில், ‘ரசிகமணி’ டி.கே.சி யோடு இருக்க வேண்டும் என்பார் கி.இராஜநாராயணன். அப்போதுதான் கம்பனின் கவித்துவம், அவனது அழகியல், பக்தி எல்லாம் மிளிருமாம். கொரியாவில் கவிதை வாசித்து அனுபவிக்க வேண்டுமென ஜென் பௌத்த பிட்சுக்கள் மலையின் ஓர் பகுதியில் அழகிய தேனீர் குடிலொன்றை இன்றைக்கு 500-600 ஆண்டுகளுக்கு முன் அமைத்து கவிதானுபவம் பெற்றார்கள். அதே போல்தான் இறை அனுபவம் என்பதும். இறைவன் என்பவன் கல்யாண குணங்கள் அனைத்தும் உடையவனாய் இருக்கின்றான். அதை நாம் சேர்ந்து அநுபவிக்க ஒரு வாழ்நாள் போதுமோ? ஸ்ரீரங்கத்து வீதிகளில் இப்படி அடியார்கள் கோஷ்டி, கோஷ்டியாக இருந்து பாகவத, பக்தி அனுபவத்தில் இருக்கும் போது இறைவன் திருவுலா கொள்கிறான். இறை அனுபவத்திற்கு இறைவனே இடையூறு செய்வதால் ‘நம்பெருமாளுக்கு’ “கோஷ்டி கலைப்பான்” என்ற பட்டப்பெயருண்டு. வெண்ணெய் திருடி கோபியரிடம் மாட்டிக்கொண்ட கோவிந்தனுக்கு கலியிலும் நல்ல பெயர் கிடைக்காது போலும்!!<br />
<br />
நாம் முன்பே கண்டோம், இறைவனை ஏத்துதல் ஒரு வகையில் நம்மையே நன்றாக இரு! என வாழ்த்திக்கொள்வதாக அமைகிறது என்று. இங்கும், “அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு” என்று தம்மையும் மங்களாசாசனம் செய்து கொள்கிறார் பெரியாழ்வார். இது தவறு இல்லையோ? எனக்கேட்டால், தவறு இல்லை என்கின்றனர் பெரியோர். ஏன்? என்று கேட்பதற்கு அழகான பதிலொன்று வருகிறது, “இத்தலை இருந்தாலன்றோ அத்தலைக்கு மங்களாசாசனம் செய்விப்பது!” என்று.<br />
<br />
<i>எனவே ஒத்த இறையுணர்வு கொண்ட அடியாரோடு இறைவனை ஏத்துதல் இன்பத்திலும் இன்பம். </i><br />
</div></div>Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-11685832.post-64693799542464349022012-10-06T14:57:00.000+05:302020-06-03T10:38:41.401+05:30தென் தமிழின் பத்துக்கட்டளைகள் - 3<br />
கட்டளை 3<br />
<br />
<b><i>கூழுக்கு ஆசைப்பட்டு கோயிலுக்குப் போவதற்குப்பதில் கும்பிடும் தெய்வத்தின் தன்மையறியச் செல்வீர்!</i></b><br />
<br />
<span style="color: blue;">வாழாட்பட்டு நின்றீ ருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும்கொண்மின்</span><br />
<span style="color: blue;">கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்</span><br />
<span style="color: blue;">ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை</span><br />
<span style="color: blue;">பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாண்டு கூறுதமே</span><br />
<br />
<iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/7Z-RKmeQPFE" width="560"></iframe><br />
<br />
அமிழ்தமே என்றாலும் விருந்து புறத்து உண்ணுதல் தவறு எனும் வழக்குப்படி (<span style="color: red;">விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று </span>- குறள்) பெரியாழ்வார் எல்லோரையும் இறை அனுபவத்திற்கு அழைக்கிறார். வந்து சேர்ந்தவர்களில் பலவகை மாந்தரைக் காண்கிறார் பட்டர்பிரான். ஒரு சிலர் இறைவனை மட்டுமே கருத்தில் கொண்டு வந்து நிற்கின்றனர். சிலர் இறைவன் துணையால் கைவல்யம் எனும் தனி உலகு கண்டு தளையற்று இருக்க ஆசைப்படுகின்றனர். ஒரு சிலரோ கோயிலுக்குப் போனால் பிரசாதம் கிடைக்கும். புளியோதரையும், தயிர்சாதமும், வெண்பொங்கலும் அந்தக் கோயில் மடப்பள்ளியில் தயாராவது போல் எங்கும் கிட்டாது என்று வருகின்றனர். ஆனால், இப்படி கூழாட்பட்டு வருகின்ற ஜனங்களை ஒதுக்கிவிடுகிறார் பெரியாழ்வார். ஏன் சாப்பிடுதல் இனிமை இல்லையா? என்றால். ஆம் உண்ணுதல் இனிமை, பருகுதல் இனிமை, போகம் இனிமை. ஆனால் இத்தனையும் செய்விப்பவன் இறைவன் என்ற இறையுணர்வு முக்கியம். நம்மால் தனித்து ஒன்றும் செய்யவியலாது. வயிற்றுப்போக்கு என்றால் சாப்பிடமுடியாது. வாய்ப்புண் என்றாலும் அதுவே. வலுப்பு, வாதம் என்றால் போகிக்கமுடியாது. எனவே எல்லாவற்றிலும் உள்நின்று இயக்குபவன் இறைவன் என்ற உணர்வோடு கோயிலுக்கு வர வேண்டும் என்கிறார் பட்டர். பின்னொரு பாடலில், கால் முடமாகிவிட்டால் கோயிலுக்குப் போகமுடியாது. வாய் கோணி விட்டால் இறைவனைத் தோத்திரம் கூறித்தொழ முடியாது எனவே உடல் ஆரோக்கியமாக இருக்கும் போதே கோயிலுக்கு செல்லும் வழக்கத்தைக் கொள்வீர் என்றும் சொல்வார் பட்டர்.<br />
<br />
மேலும், இறைத்தொடர்பு என்பது இப்பாசுரத்தை வாசித்த பின்னா வருகிறது? கோடான கோடி காலமாக, என்று உயிர்த்தோற்றமுற்றதோ அப்போதே தொடங்கிவிடுகிறது இல்லையா? எனவே இது புது உறவு அன்று. காலம், காலமாகத்தொடரும் உறவு. அதையும் மனதில் கொண்டு கோஷ்டி சேருங்கள் என்கிறார்.<br />
<br />
“மண்ணும் மணமும் கொண்மின்” என்பது வழக்கொழிந்து போன ஒரு தமிழ் மரபு. முற்காலத்தில் அடிமை யோலை யெழுதும்போது ”மண்ணுக்கும் மணத்துக்கும் உரியேனாகக் கடவேன்” என்றெழுதுவது வழக்கமாம். அதன் படியே, <b><i><span style="color: #cc0000;">இறைத்தொண்டு ஒன்றே குறியாக, ‘பரமனுக்கு அடிமை’ எனும் மனோபாவத்துடன் வாழ்த்தல் சிறப்பு என்றும் தம் கட்டளையில் எழுதுகிறார் பட்டர்பிரான்.</span></i></b><br />
<br />
Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-11685832.post-53232401466334975382012-10-05T21:09:00.000+05:302020-06-03T10:39:18.328+05:30தென் தமிழின் பத்துக்கட்டளைகள் - 4<br />
கட்டளை 4<br />
<br />
<b><i>இறைவன் இவன்தான் (இப்படிப்பட்டவன்) எனும் சுய வரம்புகளை ஒழித்து உண்மையான இறைஅனுபவம் கூட அடியார்களோடு சேருங்கள்!</i></b><br />
<br />
<span style="color: blue;">ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்து</span><br />
<span style="color: blue;">கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ</span><br />
<span style="color: blue;">நாடுநகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று</span><br />
<span style="color: blue;">பாடுமனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே.</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/U8esD9O7ZjU" width="420"></iframe></span><br />
<br />
ஸ்ரீவைஷ்ணவம் இப்பாடலுக்கு விரிவாக அதன் மொழியில் பொருள் சொல்கிறது. அதற்கு முன் எளிமையான பொருளென இப்படிக்கொள்ளலாம். உடல் மண்ணில் சரிவதற்கு முன்னம் இறைவனை ஏற்றித்தொழும் அடியார் கூட்டத்தில் சேர்ந்து, அதற்கு முன்னர் ”இறைவன் இப்படிப்பட்டவன்” என்று நாம் கொண்ட முன்வரைவுகளை முற்றுமாய் ஒழித்து, நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணா! என்று பல்லாண்டு கூறுக! என்பதோர் கட்டளை.<br />
<br />
இறைவனைப்பற்றி பல்வேறு கருத்தாங்கள் உள்ளன. அவை மதி விகல்பத்தால் வருவதாக திருவாய்மொழி சொல்கிறது. இருப்பவன் ஒருவன் தான். அவனை நன்கறிய வேண்டுமெனில், இதற்கு முன்னம் நாம் கொண்ட கருத்தாக்கங்களிலிருந்து விடுபட்டு, அதை முற்றுமாக ஒழித்து, நல்ல அடியார்களுடன் சேர்ந்து பரம்பொருளை நன்கு அறிந்து கொள்ளுங்கள் என்பது பட்டர்பிரான் வேண்டுகோள். அவர் பரம்பொருள் நிர்த்தாரணம் செய்தவர் எனவே அவர் இப்படிக் கூவி அழைப்பது சாலப்பொருந்தும்.<br />
<br />
ஆனால் விசேஷப்பொருளாக ஸ்ரீவைஷ்ணவர்கள் சொல்வது துறை சேர்ந்தோருக்கு உவப்பாக இருக்கலாம். அதாவது, நமக்கு இருவகையான உடல்கள் உள்ளன. பஞ்சபூதங்களின் (ஸூக்ஷ்ம அவஸ்தைகளாகிய) தந்மாத்ரைகள் ஐந்தும் கருமேந்திரியங்கள் ஐந்தும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் மநஸ்ஸு (மனது) ஒன்றும் ஆகிய பதினாறு தத்துவங்களுடன் கூடிய சரீரம் ஸூக்ஷ்ம (சூட்சும) சரீரமெனப்படும்; தந்மாத்ரைகளின் ஸ்தூலங்களான பூதங்களூடன் சேர்ந்து அவற்றோடு பஞ்சவிஷயங்களும், ப்ரக்ருதி, மஹாந், அஹங்காரம் - ஆகிய இருபத்தினான்கு தத்துவங்களுடன் கூடிய சரீரம் ஸ்தூலசரீரமெனப்படும். (matter & antimatter போல).<br />
<br />
உயிர் உடலை விட்டு நீங்கிய பின் சூட்சும சரீரம் கொண்டு இறைவனை அடைய முயல்கிறது. அதுசமயம், ஆன்மநுபூதியை மட்டுமே குறிக்கோளாக கொண்டோர் வாழும் ’கைவல்யம்’ எனும் முக்தி நிலையை வேண்டுவோர் அங்கு சென்று விடுவார்களெனில் மீண்டு வரவியலாது என்பதை மனதில் கொண்டு, ஏடு கைவல்ய நிலத்தில் இடும் முன்னர், பரமபதம் எனும் உலகிற்கு அடியார்களோடு வந்து சேர்ந்து வைகுந்த அநுபூதியை அடையுங்கள் என்று வேண்டுவதாக விசேஷப்பொருள் சொல்கின்றனர்.<br />
<br />
கைவல்யம் எனும் தனிமையைத்தவிர்த்து, ‘<span style="color: blue;"><i>குள்ளக்குளிர குடைந்து நீராடு</i></span>’ என்று சொல்கிறார்படி அடியார்களோடு இருந்து இறைவனை வாழ்த்தி அனுபவியுங்கள். அது <b>இகலோகமாக இருந்தாலும், பரலோகமாக இருந்தாலும் கூடி இருத்தலே கோடி நன்மை என்பது வைணவ வழி</b> என்று புரிந்து கொள்ளலாம். Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-11685832.post-69566852676012118782012-10-04T20:07:00.000+05:302020-06-03T10:39:55.330+05:30தென்தமிழின் பத்துக்கட்டளைகள்: 5<br />
கட்டளை 5<br />
<br />
<b><i>எப்போதும் பிரயோஜனத்தையே குறியாகக் கொண்டு தொழும் நீவீர் அதைவிடுத்து அண்டத்திற்கே அதிபதியான இறைவனது பல்லாயிரம் நாமம் சொல்லி வாழ்த்தி புதிய வாழ்வு பெறுவீர்!</i></b><br />
<br />
<span style="color: blue;">அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை</span><br />
<span style="color: blue;">இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு</span><br />
<span style="color: blue;">தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி</span><br />
<span style="color: blue;">பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டு பல்லாயிரத் தாண்டென்மினே.</span><br />
<br />
<iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/wF2ELBMs8xo" width="420"></iframe><br />
<br />
அகிலாண்ட கோடி பிரம்மாண்டங்களை தன் ஆளுமைக்குள் வைத்திருக்கும் அதிபதியை, தீமைகளனைத்தையும் (உம். அரசுர், இராக்கதரரைக் களைதல்) நீக்குகின்ற இருடீகேசனை ஆயிரம் நாமங்கள் சொல்லித்தொழும் தொண்டர் குலத்திடை சேர்ந்து வாழ்வு பெறுவீர். இதற்கான உத்தம தகுதி இதுவரை காரியம் ஒன்றையேக் குறியாகக் கொண்டு வாழ்ந்த வாழ்வைப் புறம் தள்ளுதல் ஆகும்!<br />
<br />
சிறப்புரை:<br />
<br />
பல்லோரை அழைக்கும் பட்டர்பிரான் இப்பாசுரத்தால் இரண்டுவகையான மக்களை அழைக்கிறார். ஒருவர் தம் சொத்தைப் பறிகொடுத்து எமக்கு அதை மீட்டுத்தர மாட்டீரா? எனத்தொழும் கோஷ்டி. இதில் மற்ற தெய்வங்களை நம்பி உள்ளதையும் இழந்தோர், இராக்கர் போன்றோரிடம் சொத்து, பத்துக்களை இழந்தோர் என்போர் அடங்குவர். மற்றொரு கோஷ்டி, அண்டத்தையே ஆளும் அன்பரே! உமது போக்யத்தில் கொஞ்சமேனும் எமக்குக்கொட்த்து எம்மை சௌகர்யமாய் வைத்திருக்க மாட்டீரா? என சதா பொருள் வேண்டும் கோஷ்டியினர். இப்படி பிரயோஜனத்தையே நாடும் குலம் விட்டு, ஆயிரம் நாமங்கள் கொண்ட இருடீகேசனை வாழ்த்துவது ஒன்றிலேயே அனைத்து இன்பங்களையும் காணும் தொண்டர் குலத்தில் சேர்ந்து உய்வு பெருங்கள்! என்பதோர் கட்டளை!<br />
Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-11685832.post-13595973593116516322012-10-03T13:52:00.000+05:302020-06-03T10:42:13.204+05:30தென்தமிழின் பத்துக்கட்டளைகள்: 6<br />
கட்டளை 6<br />
<br />
<b><i>வாழையடி வாழையாக எந்தை, தந்தைதம் மூத்தப்பன் என்று இம்மண்ணின் வளத்துடன் உருவாக்கித்தந்திருக்கும் இறைப்பொருளை இறைஞ்சுதலே எம் தலையாய கடமை!</i></b><br />
<br />
<br />
<span style="color: blue;">எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி</span><br />
<span style="color: blue;">வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்</span><br />
<span style="color: blue;">அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை</span><br />
<span style="color: blue;">பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே</span><br />
<br />
<iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/qV2MogB0pJo" width="560"></iframe><br />
<br />
மரபு என்பது மண் சார்ந்தது. எந்தையும், தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது இந்நாடு! அதனாலேயே அது வந்தனைக்குரியது. காலம், காலமாக, தலைமுறை, தலைமுறையாக சித்தாங்களை வளர்த்தெடுத்து, சீர் செய்து, நெறிப்படுத்தி நம் கையில் கொடுத்துள்ளனர். அதை வந்தனை செய்து, மகிழ்ந்து, ஏற்று, வணங்கி உய்வுறுதல் எளிது. அதனை விடுத்து புதிய சித்தாங்களை ஏற்று, அவதியுற்று, அல்லல்பட வேண்டாமென முன்னைய கட்டளையில் சூசகமாச் சொன்னார்.<br />
<br />
அது மட்டுமில்லை, இறைவனே காலத்திற்கு ஏற்ற வடிவில் தக்க தன்மையுடன் வந்து அருளுகிறான் என்பதைக் குறிக்க நரசிம்ம அவதாரத்தை முன்மொழிகிறார். ’குழந்தை’ பிரகலாதன் இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று கூற. “இங்கு இருப்பானா?” எனக் கேள்வி கேட்காமல், “<span style="color: red;">இங்கு இல்லையெனில்</span>” உன்னைக் கொல்வேன் என்று கூறும் அளவிற்கு எதிர்மறை உள்ளம் கொண்ட இரணியன் போன்ற கொடிய அரக்கரைக் கொல்ல மிகக்குரூரமான நரசிம்ம அவதாரம் எடுத்து வந்தவன் இறைவன். பக்தனின் பலம், எதிரியின் பலம், காலத்தின் தேவை இவையெல்லாம் கணக்கில் கொண்டு அவதாரம் நடக்கிறது. தேவ தேவர்களெல்லாம் நரசிம்மரின் உக்கிரத்தைக் கண்டு நடு, நடுங்கி பதைக்கும் போது ‘குழந்தை’ பிரகலாதன், இக்கொடூர ரூபத்திலும் உறைபவன் நாரணனே எனக் கண்டான் எனச் சொல்லும் விதமாக ‘திருவோண நட்சத்திரத்தை’ நினைவுறுத்துகிறார் பட்டர்பிரான். இத்தகைய பல்வேறு அவதாரங்கள் தோன்றிய பூமி, இங்கு வழி, வழியாக நாம் ஹரியின் புகழ் பாடி உய்வுற்று வளர்ந்து வந்தோம். எனவே அந்த அழகிய மரபிற்கு ஓர் பல்லாண்டு என்று மங்களாசாசனம் செய்கிறார் பட்டர்பிரான். <i><span style="color: purple;">இப்படி மரபைப் பேண வேண்டும் என்று கட்டளை போடுவதால்தான் அவர் பெரியாழ்வார்! </span></i><br />
<br />
நம் பெருமிதங்கள் அறிந்து சிறப்புற வாழ வாழ்த்துக்கிறார் எம் ஆழ்வார்கோன்!<br />
Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-11685832.post-91436612417458471172012-10-02T14:28:00.000+05:302020-06-03T10:42:45.807+05:30தென்தமிழின் பத்துக்கட்டளைகள்: 7<br />
கட்டளை 7<br />
<br />
<b><i>கோயிலெனும் அமைப்பின் மூலமாக ஒற்றுண்டு, வாழையடி வாழையாக திருமாலின் திருச்சின்னங்களைத் தோளில் ஏந்தி அடியார்களுக்கும், எம்பெருமானுக்கும் தொண்டு செய்து வாழ்வீராக!</i></b><div><b><i><br /></i></b><div><b><i><br /></i></b></div><div><b><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-1xw_s7F4wY8/XsYosB8NXlI/AAAAAAABC4A/XhIpU_YX1d0RbDNI523GnLKv_NHUf-u_QCK4BGAsYHg/Ranga-6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="639" data-original-width="792" src="https://1.bp.blogspot.com/-1xw_s7F4wY8/XsYosB8NXlI/AAAAAAABC4A/XhIpU_YX1d0RbDNI523GnLKv_NHUf-u_QCK4BGAsYHg/s320/Ranga-6.jpg" width="320" /></a></div><i><br /></i></b>
<br />
<br />
<span style="color: blue;">தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி திகழ்திருச் சக்கரத்தின்</span><br />
<span style="color: blue;">கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்</span><br />
<span style="color: blue;">மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழிகுருதி</span><br />
<span style="color: blue;">பாயச் சுழற்றிய ஆழிவல் லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/t7gTStEzhRY" width="420"></iframe></span><br />
<br />
மிக நேர்த்தியாக எரிகின்ற தீயைவிடப் பொலிவு கொண்ட செஞ்சுடராழியெனும் சக்கரத்தின் பொறி (யந்திரம்)ஆகத் திகழும் கோயிலில் ஒன்றுபட்டு வந்து நின்று ஏழுதலைமுறையாக (குடிகுடியாக) திருமாலுக்கு ஆட்செய்கின்றோம். மாயப்போர் செய்கின்ற பாணாசுரனின் ஆயிரம் தோள்களும் அறுபட்டு, குருதியாறு பாயும் படி செய்த ஆழி வல்லானுக்கு பல்லாண்டு கூறி வாழ்த்துவோமே!<br />
<br />
தீ என்பது இந்துக்களுக்கு எல்லாவகையிலும் முக்கியமானது. இந்திய மரபின் தொன்மையைச் சுட்டும் முகமாக தீ அமைந்துள்ளது. மனிதப்பரிமாணாத்தின் மிக முக்கிய மைல்கல் நெருப்பின் பயனை அறிந்து கொள்ளுதல். அதுவரை பச்சைக்காய்கறிகளையும், மாமிசத்தையும் உண்டு வந்த மனிதன் நெருப்பின் பயனறிந்து சமைக்கத்தொடங்குகிறான். வேளாண்மை எனும் அடுத்த மைல்கல்லைத் தொட்டவுடன் அதுவரை உண்டு செறிக்க முடியாத அரிசி, பருப்புவகைகளை சமைத்து உண்ணக்கற்றுக்கொள்கிறான். எப்படி நெருப்பு என்பது மண்ணில் விளையும் பயிர்களையும், உயிர்களையும் உயிர்சக்தியாக மாற்றி அருளுகிறதோ, அதே அக்னி பூமியிலிருந்து தேவர்களுக்குப் படைக்கப்படும் படையல்களையும் ஏந்திச் செல்வதைக் காண்கிறான். அக்னி அவன் வாழ்வின் முக்கிய ஊடகமாக அமைகிறது. அக்னியை அணையாமல் வைத்திருந்து வழிபடும் வழக்கம் (அக்னிஹோத்ரி) தோன்றுகிறது. அக்னி சாட்சியாக திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் வருகிறது. அக்னியின் தீச்சுவாலையில் தூசுகள் சுடுபட்டு அழிவது போல் செஞ்சுடராழி கொண்ட திருமாலின் நினைவாலே பாபங்கள் அழியும் என்கிறாள் பட்டர்பிரான் கோதை (தீயினுள் தூசாகும் செப்பு!).<br />
<br />
இத்தகைய பெருமையுடையது தீ. ஆயினும் இத்தீச்சுவாலையே வெட்கப்படும் படியான ஒளி பொருந்தியது திருமாலின் சுதர்சனம் எனும் சுடராழி. அதுஎத்தன்மையது எனக்கேட்போருக்கு அதன் பராக்கிரமத்தைச் சுட்டும் முகமாக பாணாசுரவதம் எனும் கதையை நினைவுபடுத்துகிறார் பட்டர்.<br />
பாணாசுரன் ஒரு சிவ பக்தன். ஒருமுறை சிவனின் ஆனந்த நடனத்தைக்காணும் பாக்யம் கிடைக்கிறது அவனுக்கு. சிவ நடனத்திற்கு மத்தளம் வாசித்துக்கொண்டிருந்த அவனுக்கு, ‘எமக்கு ஆயிரம் கைகளிருந்தால் இன்னும் எவ்வளவு திறமையாக வாசிக்கலாம்!’ எனும் எண்ணம் வர, சிவனிடம் ஆசையோடு ஒரு வரம் கேட்கிறான். பக்தர்களின் எல்லா ஆசைகளையும் உடனடியாக நிறைவேற்றி வைக்கும் சிவபெருமான் பாணாசுரன் வேண்டிய படி ஆயிரம் கைகளை வழங்குகிறார். ஆயிரம் கைகள் பெற்ற பாணாசுரன் நாளடைவில் அவை மத்தளம் வாசிக்கக் கொடுக்கப்பட்டவை என்பதை மறந்து, தன் புதிய தோள் வலியால் தேவர்களையும், மானுடர்களையும் வதைக்கத்தொடங்குகிறான். வழக்கம் போல் எல்லோரும் திருமாலிடம் வந்து முறையிட அவர் கிருஷ்ணாவதாரத்தில் தமது சுடராழி கொண்டு அவனது ஆயிரம் கைகளையும் அரிந்து அவனை மானகர்வபங்கப்படுத்துகிறார். ஆயிரம் கைகளைக் கொய்யும் போது குருதி பெருக்கெடுத்து ஆறாக ஓடுகிறது. இக்காட்சி பட்டர்பிரானுக்குத் தோன்ற ஆழிவல்லானான திருமாலுக்கு மங்களாசாசனம் செய்கிறார்.<br />
<br />
இத்தகைய பெருமையுடைய ஆழி, சுதர்சனம் என தனியாக வழிபடப்பெறுகிறது. சுதர்சன யாகங்கள், சுதர்சன மந்திரம், சுதர்சன யந்திரம் எனத் தொன்று தொட்டு வழிபடப்பட்டு வருகிறது. சில கோயில்களில் பெருமாளைவிட சுதர்சனர் சந்நிதி பிரபலமாக வழிபடப்படுவதுண்டு. அத்தகையதோர் கோயிலை நினைவில் கொண்டு, “சக்கரத்தின் கோயிற் பொறி”யாக விளங்கு கோயில் என்கிறார். உதாரணமாக திருமோகூர் கோயிலாக இருக்கலாம். பட்டர்பிரான் பல்லாண்டு பாடிய கூடல் நகருக்கு அருகிலிருக்கும் கோயிலாகுமிது! திருமால் கோயிலே மிகச்சக்தி வாய்ந்த ஒரு யந்திரம் எனும் பொருளும் தொக்கி நிற்கிறது இங்கு. கோயிலுக்கு வருகை புரிதலே பல நன்மைகளைச் செய்யும் என்று சொல்லி கோயிலில் குடி குடியாக வந்து ஆட்செய்கின்றோம் என்கிறார். ‘நாடுநகரமும் நன்கறிய’’எல்லோரும் வந்து நாராயணா எனும் திருமந்திரத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அறைகூவலிட்டதற்கிணங்க அடியார்கள் கூட்டம் திருமால் கோயிலில் வந்து நெருக்கக் காண்கிறார் பட்டர். எல்லோருக்கும் சங்கு, சக்கர முத்திரைகளை தோளில் பதித்து விஷ்ணு பக்தர்களாகின்றனர். ”சக்கரத்தின் பொறி” என்பதை சக்கர அடையாளம் என்று கொண்டால், பாணாசுரன் தோள்களை நினைவுபடுத்தும் விதத்தைப் பார்த்தால் இப்படியும் பொருள் கொள்ள வாய்ப்புள்ளது!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-4dTS0p197Iw/UGqsQVSALUI/AAAAAAAAMKw/DP2O7xMRbdQ/s1600/kanchipuram-temple1.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="http://4.bp.blogspot.com/-4dTS0p197Iw/UGqsQVSALUI/AAAAAAAAMKw/DP2O7xMRbdQ/s320/kanchipuram-temple1.jpg" width="320" /></a></div>
<br />
<br />
ஆழ்வார்கள் பொதுவாக பிரபந்ந ஜன கூடஸ்தர்கள். ஆகமாசாஸ்திர முறையை தென் தமிழகத்தில் பரப்பியவர்கள். அக்னிகோத்ரிகளாக தனியாக<br />
இறைவழிபாடு செய்து வாழ்ந்து வந்த உயர்குலத்தின் உயர் விழுமியங்களை எல்லோருக்கும் விநியோகிக்கும் இடமாக கோயிலை உருவகித்து கோயில் வழிபாட்டை முக்கியப்படுத்துகின்றனர். அவ்வகையில், பெரியாழ்வார் இப்பாடலில் கோயில் என்பது ”குமுகாயப்பொறி” (social engine) என்று சொல்வது மிகமுக்கிய சமூகவியல் பொருள் கொண்டது. வேளாண்சமூகத்தின் சக்தியை ஒன்று திரட்ட பின்னால் வந்த தென்னக அரசுகள் கோயிலையே பிரதான கேந்த்ரமாகப் பயன்படுத்துகின்றன. அதனாலேயே கோயில் என்பது கோட்டை போல் இருப்பதைக் காணலாம். மக்கள் ஒன்று கூடுகின்ற இடமே அரசியல் பிரசாரத்திற்கும், சக்தியைத்திரட்டுவதற்கும் ஆதாரமாகிறது. பின்னால் வந்த சைவ, வைஷ்ணவசண்டைகளுக்கும் இந்த அரசியல் பங்கீடு அளிக்கும் கோயில் அதிகாரம் முக்கியமாகப்போய்விடுகிறது. வேளாளர்களின் கைவசமிருந்த சைவக்கோயில்கள், புறநகர்ப்புறம் அமைந்து விளிம்புநிலை மக்களின் அதிகாரத்தைக் கைக்குள் வைத்திருந்த வைஷ்ணவக்கோயில்கள், இவை இரண்டிற்குமான சமூக அரசியல் அதிகார பங்கீட்டுச் சண்டையே தத்துவார்த்தமான சைவ-வைஷ்ணவச் சண்டை போல் உருவகப்படுத்தப்படுகிறது என்றும் காணலாம். எனவே பெரியாழ்வாரின், “கோயில் பொறி” எனும் பதம் இங்கு ஆழ்ந்து நோக்கத்தக்கது!<br />
<br />
<i><b>எப்படியாயினும் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதே இக்கட்டளை என்றும் கொள்ளலாம்!</b></i><br />
<div>
<br /></div>
</div></div>Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-11685832.post-82921089233746875122012-09-30T15:32:00.000+05:302020-06-03T10:29:11.374+05:30தென் தமிழின் பத்துக்களைகள்: 8<br />
கட்டளை 8<br />
<br />
<b><i>அன்னையிட்ட சோறு ருசியில் குறையில்லாமல் இருப்பது போல் வாழ்வதற்கு தேவையான அனைத்தும் தந்து அதன் மேலும் நம்மை வெள்ளுயிர் (சுத்த ஆத்மா) ஆக்கி தளிர்ப்பிக்கும் இறைவனை வாழ்க, வாழ்கவென்க! </i></b><br />
<br />
<br />
<span style="color: blue;">நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்</span><br />
<span style="color: blue;">கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்</span><br />
<span style="color: blue;">மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல</span><br />
<span style="color: blue;">பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே</span><br />
<br />
<iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/0QGTDgmPuB8" width="420"></iframe><br />
<br />
<br />
நல்லுயிர் வாழ தாரகம் (அன்னம்), போஷகம் (நெய், பால்), போக்யம் (சந்தனம், புஷ்பம்) இவை தேவை. இதுவே பலர் வேண்டும் வரமாகவும் உள்ளது. இது அருளப்பெற்றால் போதுமென்றே பலர் சொல்லக்கூடும். அத்தகையோர் ஆசைக்கேற்ப அனைத்தும் வழங்கியும் நில்லாது அதற்கும் மேலாக எமது ஆன்ம சொரூபத்தைக் காட்டி தொண்டூழியம் செய்யும் படி ஆட்செய்த கருடக்கொடியோனுக்கு பல்லாண்டு கூறுமினே!<br />
<br />
மிகப்பொருள்ள ஒரு கட்டளை. இறைவனை ஏன் வணங்க வேண்டும்? எனும் கேள்விக்கு இங்கே பதிலுள்ளது. நாம் பிறக்கும் போது கையில் ஏதும் கொண்டு வருவதில்லை. எல்லாமும் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. பிறப்பு என்பது ஒரு விருந்து. போகிக்க வேண்டிய அனைத்தும் முன்னமே படைக்கப்பட்டுள்ளது. நாம் வந்து, பிறந்து, வளர்ந்து, போகிக்க வேண்டியதுதான். அதைத்தான் நம்மில் பலர் செய்து கொண்டு, ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலமென’ வாழ்கிறோம். ஆயினும் நம்மில் சிலருக்கு இந்த பிறப்பின் ரகசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது? எதற்காக இந்தப் படைப்பு? நான் யார்? நான் இவ்வுலகிற்கு வருமுன்னர் எங்கிருந்தேன்? ஏன் இவையெல்லாம் எனக்கு முன்னமே வழங்கப்படுள்ளன? இதன் பொருளென்ன? என்ற கேள்விகள் எழுகின்றன. ‘இந்த வேட்கையை’ எழுவிப்பவனும் இறைவனே! இந்த வேட்கை வளர, வளர நமது உண்மையான<br />
ஆத்ம சொரூபம் விளங்கப்பெறுகிறது.<br />
<br />
உலகம் ருசிக்கிறது! உண்ணும் சோறு ருசிக்கிறது. பருகும் நீர் (பால், தயிர் இத்யாதி) இனிக்கிறது, தின்னும் வெற்றிலை (போகப்பொருள்கள்) ருசிக்கிறது. ஏன் இவை தரவேண்டும்? ஒரு தாய் தன் பிள்ளைக்கு ருசியாகச் சோறு போட எக்காரணமும் தேவையில்லை. அவள் தாயுள்ளம் அதை விரும்புகிறது. நன்றாக குண்டு, குண்டாக பிள்ளை இருந்தாலும், ‘ஐயோ! பாவம்! குழந்தை இளைத்துவிட்டது! என்று இன்னொரு கை சோறு போடுவாள். அது போல தாயிற் சிறந்த தயாபரனான இறைவன் நமக்கு எல்லாம் வழங்கி அழகு பார்க்கிறான். குழந்தைக்கு கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும் வைத்துப்பார்ப்பதில்தான் எத்தனை இன்பம்! இல்லையா? ஆடி வரும் தேர் இல்லையா குழந்தைகள்! இறைவனின் குழந்தைகள் நாம். எல்லாம் அனுபவித்து வளர்ந்து வரும் நாம், ஒரு நாள் நன்றிக்கடன் படுகிறோம். திடீரென்று உதிக்கிறது! எதற்காக பெற்றோர் நம்மை ‘இப்படி’ கவனித்துக்கொள்கின்றனர்? குறிப்பாக தாயின் அன்பிற்குக்காரணமென்ன? எனும் கேள்வி.<br />
<br />
அப்போதுதான் இறைவனுக்கும் நமக்கும் ஒழிக்க, ஒழிக்க ஒழியாத உறவு புலப்படுகிறது.<br />
<br />
பொதுவாக குணங்கள் மூன்று ஸத்வம், ரஜஸ், தமஸ் என்பன அவை. விஷ்ணு ஸத்வ குணம். பிரம்மா ரஜோ குணம். சிவன் தமோ குணம். பிரபஞ்ச பரிபாலணத்திற்காக பரம் இத்தகையக குணங்களை தன் மேல் ஏற்றிக்கொண்டு செயல்படுகிறது. இக்குணங்கள் ஆன்மாவிற்குமுண்டு. பகவான் ஸத்வ குணனாக இருக்கிறான். அதுவே உள்ளதில் சிறந்த குணம். அதைப்பெற துடிக்கும் அடியான், ‘பாகவதன்’ என்று அழைக்கப்படுகிறான். இறைவனுடைய ஸத்வ குணம் முழுமையாகப் பெற வேண்டும் என்பதே பாகவதனின் அவா. ஸத்வகுணத்தை வெண்ணிறம் உள்ளதாகவும், ரஜோ குணத்தைச் சிவப்பு நிறமுள்ளதாகவும், தமோ குணத்தைக் கறுப்பு நிறமுள்ளதாகவும் கூறுவது கவிமரபு. அதற்கிணங்க ஸ்த்வ குணசீலனாக எம்மை மாற்றிவிடும் போது நம்முயிர், ‘வெள்ளுயிர்’ ஆகிவிடுகிறது. அதாவது, சுத்தஸ்வரூபராக ஆக்கினான் நம்மை என்று காண்க!<br />
<br />
இப்படி ஆக்கியவன் எப்படிப்பட்டவன்? பை நாகப் பாம்பில் சயனித்து இருப்பவன். அந்த நாகத்திற்கு ஜென்மப்பகைவனான கருடனைக் கொடியாக, வாகனமாகக் கொண்டவன்! அதாவது நட்பு, பகைமை என்பது போன்ற துருவங்கள் அவனை ஒன்றும் செய்யாது. அக்குணங்களுக்கும் அடைக்கலமாக உள்ளவன் அவன். எனவேதான் அவன் ‘நிர்குணன்’.<br />
<br />
நமக்கு நல்லதோர் வாழ்வளித்து, மேலும் நமது உண்மையான ஆன்ம சொரூபத்தையும் துலங்கச் செய்யும் வள்ளலுக்கு பல்லாண்டு கூறுவது நமது<br />
கடமை என்று காண்க!<br />
<br />
<br />
Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-11685832.post-29998461999267418152012-09-29T13:49:00.000+05:302020-06-03T10:28:36.803+05:30தென் தமிழின் பத்துக்களைகள்: 9<br />
கட்டளை 9<br />
<br />
<b><i>நாம் வாழும் பிரபஞ்சம் என்பது இறைவனின் சிந்தனை பட்டுப்பிறந்ததால் நம் வாழ்வே பகவத்பிரசாதம் எனக்கொள்க!</i></b><br />
<br />
<span style="color: blue;">உடுத்துக் களைந்தநின் பீதக வாடை யுடுத்துக் கலத்ததுண்டு</span><br />
<span style="color: blue;">தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடும்இத் தொண்டர்களோம்</span><br />
<span style="color: blue;">விடுத்த திசைக்கரு மம்திருத் தித்திரு வோணத் திருவிழவில்</span><br />
<span style="color: blue;">படுத்தபைந் நாகணைப் பள்ளிகொண் டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.</span><br />
<br />
இறைவன் திருமேனியில் உடுத்திக் களைந்த பீதாம்பரத்தை நாங்கள் உடுத்திக்கொண்டும், அவன் உண்டு மீந்த உணவை நாங்கள் உண்டு மகிழ்ந்தும், அவன் சூடிக்களைந்த திருத்துளாய் (துளசி) மாலையை நாங்கள் சூடிக்கொண்டும் இறைவன் ஏவியனுப்பிய திக்கிலே ஆக வேண்டிய காரியங்களை ஒழுங்காகச் செய்து கொண்டும் பாம்பணையில் பள்ளி கொள்ளும் எம் பரந்தாமனுக்கு பல்லாண்டு பாடிக்கொண்டு மகிழ்வாய் வாழ்வோம்.<br />
<br />
இந்திய இறையியல் விழுமியங்களின் தோற்றுவாயைத் தொட்டுச் செல்கிறது இப்பாசுரம். ஊழி தோறும் இப்பிரபஞ்சத்தை படைத்து, காத்து கெடுத்துழலும் மூலப்பரம்பொருள் உண்டு என்று நம்புவோருக்குத் தெளிவாகப் புரிய வேண்டிய விஷயம், இப்பிரபஞ்ச் சிருஷ்டி என்பது அவனது சங்கல்ப மாத்திரத்தில் தோன்றுவது என்பது. அப்படியெனில் இப்பிரபஞ்சமே அவனது பிரசாதம். நாம் உண்ணும் சோறு அவனது பிரசாதம், பருகும் நீர் மற்றும் திரவ வஸ்துக்கள் அவனது பிரசாதம் (நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவம்), நாம் போகித்து அனுபவிக்கும் தாம்பத்ய இன்பம் என்பதும் அவன் பிரசாதம். நமக்கு உயிரளிக்கும் உயிர்வளி, நாம் துயில் கொள்ளும் மண் என்று நம் வாழ்வே பகவத் பிரசாதம். இதை பட்டர்பிரான் கவித்துவமாகச் சொல்கிறார். காதல் மிகுந்த மனைவி கணவனின் சட்டையை அணிந்து பார்ப்பாள். அம்மாவுடன் போகும் குழந்தைகள் முந்தானைக்குள் முகம் புதைத்துக்கொள்ளும். இது இயற்கையானது. அது போலவே எம்பெருமான் உடுத்திக்களைந்த ஆடையை அடியார்கள் உவப்புடன் அணிந்து மகிழ்வர் இன்றும் அம்பாளுக்கு சாத்திய புடவையெனில் பெண்கள் ஆசையுடன் வாங்கி அணிவர். கோயிலில் பெருமாளுக்கு நிவேதிதம் செய்த உணவே பகவத்பிரசாதமாக வழங்கப்படுகிறது. பெருமாளுக்கு சூட்டிய திருத்துளாய் மாலை அர்ச்சனை செய்வோருக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.<br />
<br />
இது அடிப்படையில் சொல்லும் சேதி உலகமே, இவ்வாழ்வே பகவத் பிரசாதம் என்பது. அதனால்தான் குழந்தைகளுக்கு பிரசாத் என்று பெயர் வைக்கிறார்கள். ‘அல்லாப்பிச்சை’ என்ற பெயர் தென் மாவட்டங்களில் மிகுதி. நம் வாழ்வு அவனிட்ட பிச்சை அல்லவா? இந்தக் கருத்து மெல்ல மெல்ல சமூக கட்டமைப்பிற்கு எடுத்தாளப்படுகிறது. அதாவது உலகிற்கு நாயகன் கடவுள். வீட்டிற்கு நாயகன் கணவன். எனவே கணவனே கண்கண்ட தெய்வம். இறைவனுக்கு அளிக்கப்பட்ட உணவின் மீதத்தை உண்பது பிரசாதம். கணவன் உண்டு மீந்த உணவுடன் அதே இலையில் உண்பது பெண்களுக்கு அழகு. கணவன் வாங்கிக்கொடுக்கும் ஒர் முழம் பூவிற்கு மதிப்பு அதிகம் என்று இக்கருத்து சமூகப் படிநிலை கட்டமைப்பிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஒரு பாகவதன் உண்டு மீந்த எச்சல் பகவத் பிரசாதமாகக் கருதப்படுகிறது. இப்பிரசாதம் கிடைக்க வழி செய்யவில்லை என்று பெரியவர்கள் விவாகரத்துவரை சென்றிருக்கின்றனர். இங்குதான் எது உருவகம்? எது நிஜம் எனும் மயக்கம் தோன்றுகிறது. உருவகத்தை உருவகமாக வைத்து சுகாதார அடிப்படையில் எச்சல் சாப்பாட்டை தவிர்க்கலாமே? என்றொரு எண்ணம் தோன்றுகிறது அதே நேரத்தில் காதல் முற்றிய நிலையில் சுகாதாரம் என்பது இரண்டாம் இடத்தையே பிடிக்கிறது என்பது நாம் அறிந்ததே. கணவன் உண்ட தட்டில்/இலையில் சாப்பிடும் வழக்கம் அருகி வருகிறது. கணவனே கண்கண்ட தெய்வம் என்று குஷ்டம் வந்த கணவனைக் கூடையில் தூக்கி வைத்து புறப்படும் பெண்களும் அருகி வருகின்றனர்.<br />
<br />
உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன். சரிதான்! ஆனால், நாம் செய்ய வேண்டியது ஒரு சின்னக்காரியம். “என்று கண்ணீர் மல்கி” என்கிறார் நம்மாழ்வார். நினைத்து கண் கலங்கினால் போதுமானது என்பதே ஆழ்வார்கள் திருவுள்ளம் என்றும் கொள்ளலாம்!<br />
<br />
இறுதியாக இறைவன் இட்ட கட்டளைக்கு இட்ட திக்கில் சென்று ஊழியம் செய்வோம்! என்று சங்கல்பம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று பட்டர்பிரான் சொல்கிறார். இதைப் பலர் மெய்ப்பித்துள்ளனர். நல்ல உதாரணம் சுவாமி விவேகாநந்தர். இவ்வுலகு ஒன்று என்று கண்ட அவர் மேலைநாடுகளுக்குச் சென்று இந்திய ஆன்மீகச் சிந்தனையைப் பகிர்ந்து கொண்டார். அவருக்கு ஆண்டவன் கட்டளை கன்னியாகுமரியில் கிட்டுகிறது. இட்ட திக்கிற்குச் செல்கிறார். அடுத்து பரமஹம்ச யோகாநந்தர். இவருக்கும் அமெரிக்கா போகக்கட்டளை வருகிறது. ஸ்வாமி பிரபுபாதா! பரனூப் பெரியவர் கண்ணீர் மல்கச் சொல்வார். ஸ்ரீரங்கத்தில் இருந்து ஆனந்தமாக தெய்வ தரிசனம் செய்து கொண்டு வாழலாமெனில், உலா வரும் நம்பெருமாள் இவரைப் பார்த்து,’நீ அங்கு போ! இங்கு போ!’ என்பானாம். அவனிட்ட கட்டளைக்கேற்ப இவர் அலைந்து கொண்டு இருப்பதாகச் சொல்வார். ஆழ்வார்களின் பார்வையில் ஆண்டவன் கட்டளை எது? என்று உ.வே.வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் மிக அழகாகச் சொல்கிறார். விழியம் காண்க!<br />
<br />
<div style="text-align: center;">
<iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" height="315" nbsp="nbsp" src="http://www.youtube.com/embed/66OVr2RN_xM" width="420"></iframe></div>
Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-11685832.post-64779193378539852602012-09-28T14:41:00.001+05:302020-06-03T10:35:55.979+05:30தென்தமிழின் பத்துக்கட்டளைகள்: 10<span style="font-family: arial; font-size: x-small;">கட்டளை 10</span><div><font face="arial" size="1"><br /></font></div><div><a href="https://1.bp.blogspot.com/-BneoK5yd2Lo/XsUO5nWjElI/AAAAAAABCq8/PZOb3EVpADEPl6smXtmpwcFC0bbdvojYgCK4BGAsYHg/Conch.jpg" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" data-original-height="283" data-original-width="180" height="320" src="https://1.bp.blogspot.com/-BneoK5yd2Lo/XsUO5nWjElI/AAAAAAABCq8/PZOb3EVpADEPl6smXtmpwcFC0bbdvojYgCK4BGAsYHg/w204-h320/Conch.jpg" title="Counch" width="204" /></a><font face="arial" size="1"><br /></font>
<br style="font-family: arial; font-size: small;" />
<b style="font-family: arial; font-size: small;"><i>என்று இறைவனுக்கு அடியேனென்று ஆட்படுகிறாயோ அன்றே உனக்கு வீடு பேறு சித்தித்தது என்று கொள்வாயாக! </i></b><div><font face="arial" size="2"><b><i><br /></i></b></font>
<span style="color: #000099; font-family: arial; font-size: x-small;">எந்நாள் எம்பெரு மான்உன் தனக்கடி யோமென் றெழுத்துப்பட்ட<br />அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்<br />செந்நாள் தோற்றித் திருமது ரையுள் சிலை குனித்து ஐந்தலைய<br />பைந்நா கத்தலை பாய்ந்தவ னே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே</span></div><div><span style="color: #000099; font-family: arial; font-size: x-small;"><br /></span></div><div><font color="#000099" face="arial" size="1"><br /></font>
<div style="text-align: center;">
<span style="font-family: arial; font-size: x-small;"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/DV7E-FRDJh0" width="420"></iframe></span></div>
<br style="font-family: arial; font-size: small;" />
<i><span style="font-family: arial; font-size: x-small;">எந்த நாளன்று எம்பெருமான் உனதடிக்கு அடியோமென்று திருத்தோள்களில் எழுத்தப்பெற்றோமோ அந்த நாளே தங்களது திருக்குடிலான பரமபத வீடு </span><span style="font-family: arial; font-size: x-small;">பெற்று உய்வுற்றோம். செம்மையான திருநட்சத்திரத்தில் தோன்றி, வடமதுரையில் சிலைவிழவு கூறி உனைச் சிறைப்பிடிக்க முயன்ற கஞ்சன் சிலை </span><span style="font-family: arial; font-size: x-small;">வளைத்து, ஐந்து தலைகள் கொண்ட பாம்பின் கொட்டத்தையும் அடக்கிய ஆண்டவனே! நீ வாழ்க! வாழ்க பல்லாண்டு!</span></i><br />
<br style="font-family: arial; font-size: small;" />
<span style="font-family: arial; font-size: x-small;">இதுவொரு ஆச்சர்யமான பாசுரம்! என்று <b>திருமாலடிமை</b> என்று திருக்கூட்டத்தில் சேர்கிறோமோ அன்றே, அப்போதே வீடுபேறு நிச்சயம் என்று </span><span style="font-family: arial; font-size: x-small;">துணிந்து கூறும் பாசுரம். எப்படி இவ்வளவு சர்வ நிச்சயமாகக் கூறமுடிகிறது? என்று கேட்கலாம். ஒன்று, உலக நாயகனாக வலம் வருபவன் </span><span style="font-family: arial; font-size: x-small;">திருவிக்கிரமன். அவனே சர்வ கோடி சேதன, அசேதன கூட்டங்களிலும், பல்வேறு தெய்வக்கூட்டங்களிலும் உள்ளுறை நியாமகனாக இருந்து </span><span style="font-family: arial; font-size: x-small;">செயல்படுத்துகிறான். மற்ற தெய்வங்களிடம் அல்ப பலன் கருதி அடிமைப்படுதலைக் காட்டிலும், சர்வ வியாபகனான சர்வேஸ்வரனிடம் சரண் புகுதல் </span><span style="font-family: arial; font-size: x-small;">சாலச்சிறந்தது என்று கீதையில் பகர்கிறான். சர்வ வல்லமை பொருந்திய அவனிடம் சரண் புகுந்தக்கணமே நமக்கு வீடுபேறுநிச்சயம். இதில் சந்தேகம் </span><span style="font-family: arial; font-size: x-small;">கொள்ள இடமே இல்லை. ஆயின் அதைவிட முக்கியமாக சில விஷயங்களை முன்வைக்கிறார் பட்டர்பிரான் இத்திருப்பல்லாண்டு பாசுரத்தில். </span><br />
<br style="font-family: arial; font-size: small;" />
<span style="font-family: arial; font-size: x-small;">ஒன்று, வாலைக்குலையில் எப்படி ஒரு காய் பழுத்தால் மற்ற காய்களும் மட, மடவென பழுத்துவிடுகின்றனவோ அது போல் திருமாலுக்கு அடியேன் </span><span style="font-family: arial; font-size: x-small;">என்று பல்லாண்டு கூறும் அடியார் கூட்டத்தில் சேர்ந்தவுடன், ஞானமுற்றோர் சேர்க்கையாலே நமக்கும் ஞானம் வர வீடுபேறு உடனே சித்திக்கிறது. </span><span style="font-family: arial; font-size: x-small;">இதே தொனியில் விழும் இன்னொரு பாசுரம் திருவாய்மொழியில் உள்ளது. அவர் இன்னும் ஒரு படி மேலே போய், ‘</span><span style="color: #000066; font-family: arial; font-size: x-small;"><b>மண்ணவர் வைகுந்தம புகுவது விதியே</b></span><span style="font-family: arial; font-size: x-small;">!’ என்று சொல்கிறார். திருவிக்கிரமானாக உலகளந்த போது திருவடி சம்பந்தம் மண்ணுலகவாசிகளுக்குக் கிடைத்ததால் அவர்கள் காலம் </span><span style="font-family: arial; font-size: x-small;">முடிந்தவுடன் வைகுந்தம் போவது உறுதி என்பது பொருள்.</span></div><div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div>
<span style="font-family: arial; font-size: x-small;">இரண்டு, இதையும் விடச் சுவையான பொருளொன்றைப் பெரியோர் சொல்வர். அது ஆழ்வார் வாக்கில் ‘</span><b style="font-family: arial; font-size: small;"><span style="color: #000099;">அச்சுவை பெறினும் வேண்டேன்</span></b><span style="font-family: arial; font-size: x-small;">’ என்று </span><span style="font-family: arial; font-size: x-small;">வருகின்ற பதத்தைப்பொருள் கொள்வதால் வருவது. சரி! வீடுபேறு நிச்சயம் என்று கீதாச்சார்யன் சொல்லிவிட்டானே என்றால், அச்சுவை கூட </span><span style="font-family: arial; font-size: x-small;">இவர்களுக்குத் தேவை இல்லையாம். அடியார்களோடு இருந்து, சத்சங்கத்தில் திளைத்து இறை அனுபவத்தை இவர்களோடு பங்கிட்டு அனுபவித்தலே </span><span style="font-family: arial; font-size: x-small;">வைகுந்தச் சுவையைவிடச் சுவையானது என்பது வைணவர்கள் துணிபு!</span><br />
<br style="font-family: arial; font-size: small;" />
<span style="font-family: arial; font-size: x-small;">இவ்வளவு விஷயம் இருக்கும் போது, ‘</span><span style="color: #3333ff; font-family: arial; font-size: x-small;">அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்</span><span style="font-family: arial; font-size: x-small;">!’ என்று சொல்வதில் ஆச்சர்யமே இல்லை. </span><span style="font-family: arial; font-size: x-small;">இவர்களது இந்த சர்வ நிச்சயமான துணிவு நாம் பெற்ற பெறும் பேரு என்றுதான் சொல்ல வேண்டும். பராசரபட்டர் மட்டும்கொஞ்சகாலம் கூட </span><span style="font-family: arial; font-size: x-small;">இருந்திருந்தால் ‘</span><b style="font-family: arial; font-size: small;"><i>வைகுந்தப்பதிக்கு சுழற்படி</i></b><span style="font-family: arial; font-size: x-small;">’ கட்டியிருப்பார்! தேவ ரகசியங்கள் அறிந்த இத்தகைய பெரியோர் வகுத்த ஒரு பெரும்நெறி இன்னமும் </span><span style="font-family: arial; font-size: x-small;">இந்த மண்ணில் வாழ்வது அதிசயம். இதற்கு அடிகோலியவர்கள் ஆழ்வார்கள். தெய்வம் என்றால் எது? அது எத்தகையது? அதைச் சேர்வது எப்படி? </span><span style="font-family: arial; font-size: x-small;">என்று தெள்ளத்தெளிவாக செந்தமிழில் பகர்ந்ததால்தான் நாலாயிரதிவ்யப்பிரபந்தம் இறைவன் முன் செல்ல, ஆக்கியோன் இவ்வருளிச்செயல் கண்டு </span><span style="font-family: arial; font-size: x-small;">ஆனந்தித்து பின் செல்ல, அதன் பின் வடவேதம் செல்கிறது. வேதம் இப்படி சர்வ நிச்சயமாகச் சொல்வதில்லை, அருளிச்செயல்களே அதைச் </span><span style="font-family: arial; font-size: x-small;">செப்புகின்றன எனக்கண்டு ஆய்ந்து வழி செய்த நம் பெரியோர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். </span><br />
<br style="font-family: arial; font-size: small;" />
<span style="font-family: arial; font-size: x-small;">செந்தமிழில் இப்படியோர் பொக்கிஷம் இருப்பது அறியாமல் நம்மில் பலர் வறுமையுற்று இருப்பது வருந்தத்தக்கது அன்றோ!</span></div></div>Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-11685832.post-77849464746255925942012-09-27T15:10:00.001+05:302020-06-03T10:34:15.608+05:30தென்தமிழின் பத்துக்கட்டளைகள்: 11<span style="font-family: arial; font-size: x-small;">தென்தமிழின் சமயக்கட்டளைகள்: 11</span><br style="font-family: arial; font-size: small;" /><br style="font-family: arial; font-size: small;" /><span style="font-family: arial; font-size: x-small;">கட்டளை 11</span><br style="font-family: arial; font-size: small;" /><br style="font-family: arial; font-size: small;" /><b style="font-family: arial; font-size: small;"><i>அல்வழக்கொழித்த அடியார்தம் பெருமை சொல்லுதல் அரிதே!</i></b><br style="font-family: arial; font-size: small;" /><br style="font-family: arial; font-size: small;" /><span style="color: #000099; font-family: arial; font-size: x-small;">அல்வழக் கொன்றுமில் லாஅணி கோட்டியர் கோன்அபி மானதுங்கன்<br />செல்வனைப் போலத் திருமா லேநானும் உனக்குப் பழவடியேன்<br />நல்வகை யால்நமோ நாரா யணாவென்று நாமம் பலபரவி<br />பல்வகையாலும் பவித்திர னேஉன்னைப் பல்லாண்டு கூறுவனே.</span><br style="font-family: arial; font-size: small;" /><br style="font-family: arial; font-size: small;" /><span style="font-family: arial; font-size: x-small;"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/zPGa4eYt5pg" width="420"></iframe></span><br style="font-family: arial; font-size: small;" /><br style="font-family: arial; font-size: small;" /><span style="font-family: arial; font-size: x-small;">பத்துக்கட்டளைகள் என்று சொல்லிவிட்டு பதினோறாவது கட்டளையை எப்படி வைக்கலாம்? என்று கேட்கக்கூடாது. நாலாயிரம் (திவ்யப்பிரப்ந்தம்) </span><span style="font-family: arial; font-size: x-small;">என்று சொல்வது ஒரு round up figure தானே! திருப்பல்லாண்டு பாசுரங்கள் மொத்தம் 12. </span><span style="font-family: arial; font-size: x-small;">பதினோறாவது கட்டளையென்று முன் வைப்பது ஸ்ரீவைஷ்ணவத்தின் சாரமாக அமைகிறது. </span><br />
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
இது அல்வழக்கு ஒழித்த அடியார்தம் பெருமை அளவிடற்கரியது என்பது அது! அவ்வகை அடியார்தம் அடியாராக இருப்பதினாலே ஒருவன் மோக்ஷம் அடைகிறான் என்பது சாரம். அல்வழக்குகள் ஒழித்த அடியாரின் குணங்கள் என்னவென்று புரிந்து கொண்டால் ஸ்ரீவைஷ்ணவம் புரிந்துவிடும்! அல்வழக்கொழித்த அடியார், தேகமே ஆன்மாவென்று எண்ணமாட்டார், இறைவனுக்கு ஆட்பட்டு இருக்க வேண்டிய ஆன்மாவை சுதந்திரமானது என்று எண்ணமாட்டார், தேவதாந்தரங்களைப் பரதெய்வமென்று நினைக்கமாட்டார், இறைவனிடத்தில் அல்ப பலன்களை வேண்டிக் கையேந்தார், மோட்சம் வேண்டுமென்று கருமம், ஞானம் போன்ற உபாயாந்திரங்களைக் கைக்கொள்ளார். </div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
இப்படியொருவரை மேற்கோள் காட்டுகிறார் பட்டர்பிரான். செல்வநம்பிகள் என்றொரு பெரியவர் திருக்கோட்டியூரில் வாழ்ந்திருக்கிறார். அவர் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்திருக்கிறார் [இதுதானோ பட்டர்பிரானை ‘திருக்கோட்டியூரே கோகுலம் என்று பாட வைத்தது?]. நாம் முன்பு செப்பியது போல், வாழைக்குலையில் ஒரு காய் பழுத்துவிட்டால் மற்றவையும் பழுத்துவிடும் என்று சொல்வதற்கிணங்க செல்வநம்பிகள் போன்ற பெரியோரின் சகவாசத்தால் ‘நானும்’ உனக்கு ஆதிசேஷன் போல் பழவடியேன் என்று ‘பரநிர்ணயம் செய்த’ பட்டர்பிரான் சொல்கிறார் என்பதுதான் இதன் சிறப்பு!. அடியார்களுக்கு நன்மை பயக்கும் தாரக மந்திரமான நமோ நாராயணா! எனும் நாமத்தை பல்வகையாலும் பரவச் சொல்லி, பவித்திரமான பரம் பொருளே உமக்கு பல்லாண்டு பாடுவோமே!<br /><br /><b>1. தேகம் ஆன்மாவன்று.</b><br /><br />இதைப்புரிந்து கொள்வது எளிது. மண் கிடக்கிறது. மண்ணில், புல், பூண்டு முளைக்கின்றன. பயிர்களை உண்டு உயிர்கள் தழைக்கின்றன. உயிர்கள் சில காலம் வாழ்ந்த பின் மண்ணில் மடிகின்றன. மக்கி மண்ணோடு, மண்ணாகப் போகின்றன. மண்ணிலிருந்து மீண்டும் உயிர்கள் தழைக்கின்றன. இதுவொரு சுழற்சி. இப்படி இருக்கையில் தேகமே ஆன்மாவென்று எப்படி நம்புவது?<br /><br /><b>2. ஆன்மா சுதந்திரமானது அல்ல</b>.<br /><br />மண்ணிலிருந்து உயிர்கள் தழைக்கின்றன என்று கண்டோம். ‘சித்தினை, அசித்துடன் இணைத்தாய்! பரமா!’ என்கிறான் பாரதி. மண்ணுக்கு உயிருண்டோ? கிடையாது. ஆனால் எப்படி மண்ணிலிருந்து உயிர்கள் கிளம்புகின்றன? அசித்தான மண்ணுடனும், ஐம்பூதங்களுடனும் ‘சித்’த்தான உயிரை இணைக்கும் போது ‘யாக்கை’ உயிராக்கம் பெருகிறது. எனவே ஆன்மா சுதந்திரமானது அல்ல. அதன் சுழற்சியும் பரிபாலிக்கப்படுகிறது என்பது புரிகிறது.<br /><br /><b>3. தேவதாந்தரங்கள் பரதெய்வமன்று.</b><br /><br />எத்தனையோ வகையான ஆன்மாக்கள் உள்ளது போல் எத்தனையோ வகையான தெய்வங்ளும் உள்ளன. எனவே, ஒன்று தெய்வமாக இருப்பதாலேயே அதுதான் ‘பரதெய்வம்’ என்று எண்ணுதல் கூடாது. பிரபஞ்சத்தில் காணும் தேவதாந்திரங்களுக்குள்ளும் அந்தர்யாமியாக இருந்து செயல்படுத்துவது ‘பரம்’. அப்பரம் யாது எனக் கண்டு தெளியவடைய வேண்டும்.<br /><br /><b>4. இறைவனிடத்தில் அல்ப பலன்களை வேண்டிக் கையேந்துதல் கூடாது.</b><br /><br />மேலே சொன்ன மூன்றையும் புரிந்து கொண்டாலே, நான்காவது புரிந்துவிடும். எல்லாமே ஒரு சுழற்சியில், ஒரு நாயகனின் கைவண்ணத்தில் செயல்படும் போது நாம் நமக்கு, ‘இதைக்கொடு, அதைக்கொடு’ என்று கேட்பது அல்பமல்லவா? எனவே கோயிலில் போய் ‘பிச்சை’ எடுத்தல் கூடாது.<br /><br /><b>5. மோட்சம் வேண்டுமென்பதற்காக கருமம், ஞானம் போன்ற உபாயங்களைக் கைக்கொள்ளுதல் கூடாது.</b></div>
<div style="font-family: arial; font-size: small;">
<br /></div>
<div style="font-family: arial; font-size: small;">
”நெய்யிடை நல்லதோர் சோறும்” எனும் கட்டளையில் தெளிவாக விளக்குகிறார் எப்படி இறைவன் நமக்கு உண்ண உணவு, பருக நீர், வாழ வழிவகைகள் முன்னமே செய்து கொடுத்து அதன் மூலமாக தன்னிருப்பையும் அறிந்து கொள்ளும் புத்தி சாதுர்யத்தையும் கொடுத்துள்ளான் என்று. நாம் இறைவனின் அடியார்கள் (சேஷபூதன்) எனும் எண்ணம் ஆழப்பதிந்துவிட்டால், நமது உண்மையான சொரூபமான ‘வெள்ளுயிர்’ (சுத்தாத்மா) என்பது தெளிவாகிவிடும். ‘வைகுந்தம் புகுவது மண்ணவர் விதி’ என்று இருக்கும் போது அதற்காக சிரமப்பட்டு பிற உபாயங்களைப் பேணுதல் அவசியமில்லை. குழந்தை அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு இருந்தால் போதுமானது. தாய் போக வேண்டிய இடத்திற்கு அன்பாகவும், பாசமாகவும் இட்டுச் செல்வாள். நாம் ஏதோ சுதந்திரமானவன் போல் எண்ணிக்கொண்டு தனியாக நடக்க முற்படும் போதுதான் பிரச்சனைகள் உருவாகின்றன. அம்மா விரலைக் காட்டுகிறாள். பற்றிகொள்ள வேண்டியது நம் புத்திசாலித்தனம். இறைவன் பாகவதர்கள் (அடியார்) மூலமாக அப்படியொரு செயலைச் செய்கிறான். பாகவதர்களே பற்று என்று கையைப் பிடித்துக் கொண்டால் வைகுந்தம் புகுவது நம் விதி. இதில் மாற்றமேதுமில்லை.<br /><br />மிக, மிக ஆச்சர்யமாக, இறைவனுக்கு மங்களாசாசனமாக முன்னிருத்தும் பாசுரங்களில் செல்வநம்பிகள் எனும் அடியாரைப் பற்றிப்பேசுவது அதிசயமல்லவா? ஏனப்படிச் செய்கிறார் பட்டர்பிரான்?<br /><br />ஏனெனில் அல்வழக்குகள் அற்ற ஒருவரை முன்னுதாரணமாகக் காட்டுவதன் மூலம், ‘வாழைக்குலையில் இருக்கும் காய்களில் ஒன்று பழுத்துவிட்டது! எனவே மற்றவையும் பழுத்துவிடும்’ எனும் உறுதிப்பாட்டை, ‘செல்வனைப் போலத் திருமா லே! நானும் உனக்குப் பழவடியேன்’ என்ற வரிகளால் செப்புகிறார். இவர்தானே பரநிர்ணயம் செய்தவர். அப்படியிருக்க செல்வநம்பிகளைச் சிறப்பிப்பானேன்? என்று கேட்டால், “அதுதான் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம்” என்பது! பிற சம்பிரதாயங்களில், “ஸ்வாமி” என்று இறைவனைக் கொண்டாடும் போது. ஸ்ரீவைஷ்ணவம் ஒன்றுதான் அடியாரை ”ஸ்வாமின்னு” என்று விளம்புகிறது! அத்வைத சாரம் என்பது ஸ்ரீவைஷ்ணவத்திலேதான் சிறக்கக் கிடக்கிறது என்று காண்க.<br /><br />ஆக, பாகவத சம்பந்தம் வந்தவுடன் மட, மடவென சிலத்தெளிவுகள் நமக்குள் வருகின்றன. அதாவது, 1. தேகம் ஆன்மாவன்று, 2. ஆன்மா சுதந்திரமானது அல்ல, 3. தேவதாந்தரங்கள் பரதெய்வமன்று, 4. இறைவனிடத்தில் அல்ப பலன்களை வேண்டிக் கையேந்துதல் கூடாது, 5. மோட்சம் வேண்டுமென்பதற்காக கருமம், ஞானம் போன்ற உபாயங்களைக் கைக்கொள்ளுதல் தேவையில்லை போன்றவை.<br /><br />இந்த ஞானத்தெளிவு வந்தவுடன் வாயில் வரும் மந்திரம், ‘நமோ! நாராயணா’ என்பது. அதைப் பல்வகையிலும் பரவச் சொல்லி பல்லாண்டு பாடுவதே நம் களிப்பு. அதுவே வாழ்வின் களிப்பு. அதுவே மோக்ஷம்!</div>
Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-11685832.post-53533705192481636872012-09-26T15:23:00.000+05:302020-06-03T10:25:53.976+05:30தென்தமிழின் பத்துக்கட்டளைப் பலன்கள்<br />
<div style="background-color: white; color: #333333; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;">
பத்துக்கட்டளைப் பலன்கள்</div><div style="background-color: white; color: #333333; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-0cjYxcnXrCM/XsUOXIDWUaI/AAAAAAABCqo/40DP54841HU9iiUAZPnx4tWupSA8cQNQACK4BGAsYHg/Thiruman.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="753" data-original-width="2000" src="https://1.bp.blogspot.com/-0cjYxcnXrCM/XsUOXIDWUaI/AAAAAAABCqo/40DP54841HU9iiUAZPnx4tWupSA8cQNQACK4BGAsYHg/s320/Thiruman.jpg" width="320" /></a></div><div style="background-color: white; color: #333333; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;"><br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;">
<strong>இத்திருப்பல்லாண்டு திவ்யப்ரபந்தத்தை, நமக்கு நல்லகாலம் வந்துவிட்டதென்கிற கொண்டாட்டத்துடன் அநுசந்திக்க வேண்டியது!</strong></div>
<div style="background-color: white; color: #333333; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;">
<br /></div>
<div style="background-color: white; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;">
<span style="color: blue;">பல்லாண் டென்று பவித்திரனைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்</span></div>
<div style="background-color: white; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;">
<span style="color: blue;">வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்</span></div>
<div style="background-color: white; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;">
<span style="color: blue;">நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று</span></div>
<div style="background-color: white; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;">
<span style="color: blue;">பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே</span></div>
<div style="background-color: white; color: #333333; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;">
பலகோடி நூறு ஆயிரம் ஆண்டுகள் வாழ்க! வாழ்க என வாழ்த்தவேண்டுமெனில் வாழ்த்தப்படுபவர் அத்தனை சிறப்பிற்கும் உரியவராய் இருத்தல் வேண்டும். இவர் வாழ்த்துபவர் பரமபத நிலயன், நித்ய பரிசுத்தன். எதிரியைக்காட்டு! காட்டு என்று துள்ளும் சார்ங்கமெனும் வில்லை அடக்கி ஆள்பவன். வாழ்த்துகின்ற பெரியவரும் சாமான்யர் அல்லர். பெருமாளாலேயே, ‘பெரிய ஆழ்வார்’ என்ற பட்டத்தைப் பெற்றவர். ‘‘பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டோடி வந்து, என் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பி’’ என்று சொல்கிறார் போல ஸ்ரீயபதியை விட்டு ‘விட்டு சித்தர்’ மனதில் சதா குடிகொள்பவர் (அதனால் இவருக்கு விட்டு சித்தர் என்றாயிற்று). இப்படி ஸ்ரீவில்லிபுத்தூர் தலத்தில் வாழும் விட்டுசித்தர் மிக விரும்பிச்சொன்ன இப்பாசுரங்களை, ‘நமக்கு நல்ல காலம் பிறந்தது!’ என்ற மனமகிழ்வோடு பயில்வோர் என்றும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து என்றும் ‘பல்லாண்டு, பல்லாண்டு’ என வாழ்த்தும் நற்கதி அடைவர்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;">
பக்தி செய்வதற்குப்பலன் பக்தியே. தனியாக வேறுபலன் கிடையாது. என்னெனில் பக்தியில் எல்லாம் அடங்கிவிடுகிறது. அது போல் ‘பல்லாண்டு, பல்லாண்டு’ என வாழ்த்தும் இப்பாசுரங்களைப் பாடுவோருக்குப் பலன், என்றென்றும் பவித்ரனான ஸ்ரீமன் நாராயணனை, பரமேஷ்டியை ‘பல்லாண்டு! பல்லாண்டு’ என வாழ்த்தி மகிழும் வாய்ப்பும், அனுபவமும் கிடைக்கும் என்பதே!</div>
<div style="background-color: white; color: #333333; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;">
வாழ்த்துவதற்கு வயதில்லை, ஆதலால் வணங்குகிறேன் என்றொரு வசனம் இப்போது மிகப்பிரபலமாக தமிழகத்தில் உள்ளது. அது எவ்வளவு அசட்டுத்தனம் என்பதை இப்பாசுரங்கள் செப்புகின்றன. உலகிலேயே மிக அதிக வயதுடையவர் இறைவன். ஏனெனில் அங்குதான் தொடக்கமே நடக்கிறது! அப்படியெனில் அவ்வளவு வயதானவரை நாம் ‘பல்லாண்டு, பல்லாண்டு’ என வாழ்த்தலாமோ? வாழ்த்தலாம், வாழ்த்த வேண்டும் என்கிறது தமிழ் மரபு. ஏன் வாழ்த்த வேண்டுமெனில்? நித்ய மங்களம் பூரணமாய் பெற்ற பவித்திரனை தினம் வாழ்த்துவதன் மூலம் மங்களம் நித்யமாய் இப்புவியில் தங்குகிறது! எங்கும் மங்களம் பொங்கி வழிந்தால் நல்லதுதானே!</div>
<div style="background-color: white; color: #333333; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;">
//<i>பரமபதத்தில் எழுந்தருளியிருப்பவனாய் நித்ய பரிசுத்தனாய்ப் பஞ்சாயுதங்களைத் தரித்துக் கொண்டிருப்பவனான ஸர்வேச்வரன் விஷயத்தில் பெரியாழ்வார் பொங்கும் பரிவாலே பாடின இத்திருப்பல்லாண்டு திவ்யப்ரபந்தத்தை, நமக்கு நல்லகாலம் வந்துவிட்டதென்கிற கொண்டாட்டத்துடன் இவ்விபூதியில் எஞ்ஞான்றும் பாடுகிறவர்கள் மறுமையில் மோக்ஷலோகத்தை ய்டைந்து அங்கும் எம்பெருமானுடைய முகோல்லாஸத்தையே புருஷார்த்தமாக நினைத்து அனேக தேஹங்களை எடுத்துக்கொண்டு அப்பெருமானுடைய நான்கு பக்கங்களிலும் இருந்துகொண்டு மங்களாசஸநம் பண்ணப்பெறுவர்களென்று இதனால் பலன் சொல்லித் தலைகட்டிற்றாயிற்று</i>.//</div>
<div style="background-color: white; color: #333333; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;">
என்று ஸாதிக்கிறார் பிரதிவாதி பயங்கரம் அன்னங்கராச்சார்யர். நித்ய சூரிகள் நிற்கும் பரம பதத்தில் வேண்டிய உடலெடுத்து, வேண்டிய வண்ணம் வாழலாம் என்பது பெரியோர் காட்சி. எனவேதான், ”அனேக தேஹங்களை எடுத்துக்கொண்டு அப்பெருமானுடைய நான்கு பக்கங்களிலும் இருந்துகொண்டு மங்களாசஸநம் பண்ணப்பெறுவர்களென்று” என்று வியாக்கியானம் அமைகிறது. இப்பாசுரங்களைப் பயில்வோருக்கு அத்தகைய பாக்யம் கிடைக்குமெனில் நிச்சயம் சொல்ல வேண்டியதுதானே!</div>
<div style="background-color: white; color: #333333; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;">
பெரியாழ்வார் தமிழ் சிறப்பானது. அது எப்படி பண்டிதர்களுக்கு உவப்பாகிறதோ அதே அளவில் பாமரனுக்கும் உவப்பாகிறது. அவர் கிராமத்து வசனங்களை, வழக்குகளை நிறையப் பயில்வார். இங்கு கூடப்பாருங்கள், பல்லாண்டு பாடுவது எதற்கு என்றால் நல்லாண்டு கிடைத்தது என்று கொண்டாடுவதற்கு என்கிறார். நல்லாண்டு என்பது குடு, குடுப்பாண்டி வீட்டிற்கு வந்து, ‘நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது’ என்று அடிப்பானே! அது! பெரியாழ்வார் குடுகுடுப்பை அடிக்கிறாரா? இல்லை, இவரது கோஷ்டியில் சேர்ந்தவர் அடிக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் நூதனக் கோடாங்கி அடிக்கும் பாரதி போன்றோருக்கு பெரியாழ்வார் ஒரு inspiration ஆக இருக்க வாய்ப்புண்டு!</div>
<div style="background-color: white; color: #333333; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;">
பத்துக்கட்டளைகள் நிறைகொள்கின்றன.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;">
<br /></div>
<div style="background-color: white;">
</div>
<span style="color: #333333; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 11px; line-height: 16.5px;">நன்றி: இப்பாசுரங்ளுக்கான விசேஷார்த்தங்கள், பிரதிவாதி பயங்கரம் அண்ணா அவர்களின் உரையிலிருந்து பெறப்பட்டன. நாலாயிரம் பாடல்களுக்கும் இப்பெரியவர் எளிய உரை எழுதியிருக்கிறார். அவை தற்சமயம் இணையத்தில் <a href="http://dravidaveda.org/">வாசிக்கக்கிடைக்கின்றன</a>. </span></span><br />
<span style="color: #333333; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 11px; line-height: 16.5px;"><br /></span></span>
<span style="color: #333333; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 11px; line-height: 16.5px;">பிரதிவாதி பயங்கரம் அன்னங்கராச்சார்யர் அவர்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள <a href="http://www.acharya.org/acharya/pba/Interview-PBA-1979.htm">இங்கே சொடுக்குக</a>! </span></span><br />
<br />
<div style="background-color: white; color: #333333; font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 16.5px;">
<br /></div>
Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-11685832.post-34610779617299147702010-07-18T05:02:00.006+05:302020-05-21T12:44:36.025+05:30அருளாட்சியின் அருமை பெருமைகள்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-k0OAQypCTro/XsYqUr40D5I/AAAAAAABC40/RYFtrKaF-l4rwYKTnWFR1Zohq4Q9ih4RgCK4BGAsYHg/Ranga-15.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="680" data-original-width="510" height="320" src="https://1.bp.blogspot.com/-k0OAQypCTro/XsYqUr40D5I/AAAAAAABC40/RYFtrKaF-l4rwYKTnWFR1Zohq4Q9ih4RgCK4BGAsYHg/s320/Ranga-15.jpg" /></a></div><div><br /></div><div><br /></div><div><br /></div><a href="http://www.jcf.org/">ஜோசப் கேம்பல்</a> தொன்மறைகளில் பொதிந்துள்ள உருவகப் பேச்சை அதன் உள்ள பொருள் தெளியும் படி சொல்லுவார். இது அவர் இந்தியவியல் கற்றுக்கொண்ட பின் தீவிரமானது. பிறப்பால் ஐரீஷ் கத்தோலிக்கர் என்பதால் அவருக்கு விவிலியம் அத்துபடி. ஒருமுறை ஏசுவின் வாழ்வின் நடந்த நிகழ்வொன்றைச் சொல்லிக்கொண்டு வந்தார். ஏசுவிடம் சீடர்கள் வந்து,’ஐயா! பரமபிதாவின் அருளாட்சி பூமியில் நடக்குமென்று சொன்னீர்களே! எங்கே?’ என்றனராம். ஏசு பதிலாக, ‘மூடர்களே! அவனது அருளாட்சியில்தான் இத்தனை காரியங்களும் நடந்து வருகின்றன. ஏன் உங்கள் கண்களுக்கு அது தெரியவில்லையா?’ என்றாராம்.
ஏன் நம் கண்களுக்குத் தெரியவில்லை என்பதை விளக்கப் புக்கால் ஆன்மீகம் விரியும். எளிய பதில் ‘மாயை நம் கண்ணை மறைக்கிறது’ என்பதுதான். அது என்ன ‘மாயை’ என்று கேள்வி வரும், பின் அப்படியே தத்துவ விசாரம் விரியும்! அது நல்லதுதான். கேள்விகள் உவப்பானவை. நல்ல கேள்விகள் உவப்பானவை. முடிச்சுப்போடும் கேள்விகள் கேட்டு செக்குமாடு மாதிரி ஒரே இடத்தில் நின்று கொண்டு இருக்கக்கூடாது. எல்லாக் கேள்விகளுக்கும் விடை அக்கேள்வியிலேயே உண்டு என்பார் ஜே.கிருஷ்ணமூர்த்தி.
இவ்வளவு பேச்சும் எதற்கு என்றால், ஒரு பெரியவர் இருக்கிறார் அவரைக் காண்பதே அலாதி ஆனந்தம். ஆனால், நமக்கோ நேரமில்லை. தெருவில் போய்க்கொண்டு இருக்கும் போது போக்குவரத்தை நிறுத்தி அவர் வந்து எதிர் நின்றால் எப்படி இருக்கும்? நம் பயணம் தடை பட்டாலும், நாம் கண்டு ஆனந்திக்க வேண்டுமென்ற ஆவல் நிறைவேறி விடுகிறது இல்லையா?
அது போல்தான் பார்த்தசாரதி செய்தான். திருவல்லிக்கேணியில் அக்காவைப் பார்க்கப் போய் கொண்டு இருந்தேன். கோயிலுக்குப் போக நேரமில்லை. கோயில் பக்கம் வந்தவுடன் கார் மேலே போகாது நின்றுவிட்டது. ‘சரிதான், பெருமாள் புறப்பாடு போலும்’ என நினைத்து இறங்கி நின்றால் ஜில், ஜில்லென்று குதிரை வாகனத்தில் அவரே வந்து நிற்கிறார். இதைத்தான் ‘அருளாட்சி’ என்கிறார் ஏசு. நமக்கோ நேரமில்லை. அவரும் ரொம்ப பிசியான ஆசாமிதான். ஆனாலும் நமக்காக நேரம் ஒதுக்கிக்கொண்டு வந்து நிற்கிறார் எனில் அதை அருள் என்று போற்றுவதுதானே சரி.
சரி, அவர் உனக்கு மட்டும் வந்தார் என்று எப்படிச் சொல்ல? என்று கேட்கலாம். உண்மைதான் அவர் எல்லோருக்காகவும்தான் வருகிறார். ஆனால், எனக்குத்தான் அவர் என்னைப் பார்க்க வந்ததாகத் தோன்றுகிறது. கூடவே ஒரு அம்மாள். பாவம், அவளுக்கு என்ன அவசரமோ! இங்கும், அங்கும் நெளிந்து பெருமாள் கண்ணிலிருந்து படாமல் ஓடிவிட முயன்று கொண்டிருந்தாள். ஆனால் முடியவில்லை. வழியே இல்லை. கோபத்துடன் அவள் பெருமாள் இருப்பதையே கண்டு கொள்ளாமல் திரும்பி நடந்துவிட்டாள். அவளைப் பொறுத்தவரை அங்கு நடப்பது ‘அருளாட்சி’ இல்லை, வெறுமே போக்குவரத்து தொந்தரவு. அப்படியும் காணலாம்தான். நம் கண்ணில்தான் இருக்கிறது பார்வை. எனவேதான் மாணிக்கவாசகர் மிகச்சாதுர்யமாக, ‘அவன் அருளால் அவன் தாள் வணங்கி’ என்றொரு சொற்றொடர் போடுகிறார். அவன் நம்மைப் பார்க்க வருகிறான் என்று உணர வைப்பதும் அவனே. மாயையைக் கண்ணில் கட்டி விரட்டி விடுபவனும் அவனே. எனவேதான் நம்மாழ்வார் வைகுந்தம் போகிற வரைக்கும் தன் இயலாமை குறித்து வருந்தி, என்னை கடைசி நேரத்தில் ஏமாற்றிவிடாதே என்று புலம்புகிறார்.
<font color="blue">மாயம்செய் யேலென்னை உன்திரு மார்வத்து மாலைநங்கை
வாசம்செய் பூங்குழலாள் திருவாணை நின்னாணை கண்டாய்
நேசம்செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம்செய் யாதுகொண் டாயென்னைக் கூவிச்கொள் ளாய்வந்தந்தோ.</font>
இது கடைசிப் பத்து. அப்போதும் சந்தேகம்! ஏனெனில் விஷ்ணு மாயை என்பது காட்டமானது. பெரும் தவமிருந்து மனதைக் கட்டியதாய் நம்பி இருந்த ஒரு பெரும் முனிவருக்கு இறுதிக்காலத்தில் இறைவன் நினைவு வராமல் ஒரு மானின் மீது ஆசை வர, அவர் மானாகப் பிறந்ததாக ஒரு கதை சொல்வார்கள். இப்படியெல்லாம் செய்யக் கூடியவர்தான். இதனால்தான் பார்த்தார் இராமானுஜர், ‘நீ! ஏண்டா ஏதோ உன் சாமர்த்தியத்தால் சாதித்துவிடுவது போல் அலட்டிக் கொள்கிறாய்? பேசாமல், நிர்கதி என்று சொல்லி அவன் காலில் விழுந்துவிடு! பின் உன் நன்மை, தீமை எல்லாம் அவன் பழியாகிவிடும்’ என்று சொல்லிப் போந்தார். இராமானுஜ தரிசனத்தில் பரம சௌக்கியமுண்டு. ஏனென்று கேட்கிறீர்களா? உலகில் இதுவரை நீங்கள் பார்த்ததில், எங்காவது குட்டி/குழந்தை தன் முயற்சியில் தாயைப் பேணியதுண்டோ? தாய்தான் குட்டியை/குழந்தையைப் பேணுகிறாள். ஏனெனில் அவளுக்குத்தான் தன் குழந்தை மீது அக்கறை! (குரங்கு கட்டிக் கொள்கிறதே என்று கேள்வி வரும். அங்கும் பால் நினைந்தூட்டுவதும், குட்டியின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிப்பதும் தாய்தான். அது பிள்ளைக்கும் தெரியும். குட்டி இறந்து போனபின் அக்குட்டியை வைத்துக் கொண்டு அல்லாடும் ஆவணங்களெல்லாம் உண்டு. அப்போது குட்டி கட்டிக் கொள்ளவில்லை. தாய்தான் யாரையும் அண்டவிடாமல் காக்கிறாள் (குட்டி இறந்துவிட்ட பின்னும்))
எனவேதான் சொன்னேன், ‘பார்த்தசாரதி என்னைப் பார்க்க வந்தான்!’ என்று. ஏன் வந்தான்? அவனை ஸ்ரீரங்கத்தில் காண வேண்டுமென்று ஆசை. மலை வையாவூரில் காண வேண்டுமென்று ஆசை, மதுராந்தகத்தில் காண வேண்டுமென்று ஆசை. ஆசை, ஆசை கொள்ளை ஆசை! ஆனால் செம்மொழி மாநாடு, தமிழ் மரபு அறக்கட்டளை வேலைகள் என் நேரத்தை முழுமையாய் அபகரித்துவிட்டன. இந்தக் கையறு நிலையில், என் மாயை என்னைக் கட்டிப் போட்டாலும் அம்மாயையைக் கிழித்துக் கொண்டு அவன் அருளாசி வருவது எவ்வளவு சிறப்பு? சென்னை வாழ்வில்,’சாமியாவது, பூதமாவது’ என்று வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. இத்தனை அவசரத்திலும், அவன் பல்லக்கு வைத்துக் கொண்டு நம்மைக் காண வருகிறான் என்பதுதான் சிறப்பு.
எப்படி வருகிறான்? நான் மதுரைவாசி. எங்களுக்கு உற்ற துணை திருமால் இரும் சோலை அப்பன். அவனோ கள்ளழகன். அக்காட்சியில் காலம் கழித்தவர்கள். எனவே சென்னையில் வந்து காட்சி கொடுக்கும் போதும் அவன் பார்த்தசாரதியாக வராமல் கையில் சாட்டையுடன் குதிரை மீதேறி கள்ளழகர் ஆற்றில் இறங்குவது போல் வருகிறான். அது அவன்தானா? என்று சந்தேகம் வருமானால், குதிரைக்கடியில் ‘கருப்பணசாமி’ (விஷ்ணு பூதம்)கையில் அரிவாளுடன் நிற்கிறார். பிறகென்ன சந்தேகம்? நமக்கு எங்கே சந்தேகம் போகிறது? அக்காவைப் பார்த்து உலவளாவிய பின்னும் அவர் விடுவதாயில்லை. வாசலில் புறப்பாடு என்று வந்து நின்றோம்.
அன்று ஏதோ ஊசலாம். திருமங்கை ஆழ்வார் பெரிய திருடனாம். வழியில் போகும் பெருமாளிடம் எல்லாவற்றையும் கொள்ளையிடுவதாக நாடகம். பெருமாள் துரத்த, திருமங்கை ஓட. பெருமாள் கொஞ்சம் இளைப்பாறும் போது பட்டியியல் இடுகிறார்கள். என்னென்ன திருடிக்கொண்டு போயிருக்கிறாரென்று. உண்மையில் அங்கு பெரிய கள்வன் பெருமாள்தான். ஏனெனில் கன்னம் போடுபவனின் உள்ளதைக் கவர வந்துள்ள கள்வன் இவர்தான். அதுதான் கடைசியில் நடக்கிறது. இது அசடு, கலியன்! எல்லாம் திருடிவிட்டதாய் எண்ணிக்கொண்டு கடைசியில் பார்த்தால் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறது. கோஷ்டி பலமாக வாடினேன், வாடி வதங்கினேன்!! என்று சாற்றுகிறது. அதுதானே உண்மை. துயர் இடும் பெரும் பையில் விழுந்தவுடனே நம் வாடுதல் ஆரம்பித்துவிடவில்லையோ? இப்படியெல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கையில் வந்தார் ஒரு பாகவதர். நம் <a href="http://groups.google.com/group/mintamil/msg/41f5964efb79ade3">திருமலை விஞ்சாமூர் வேங்கடேசன் </a>எனும் மின்தமிழ் அன்பர். அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது ஏதேட்சையாக அவரும் சொன்னார், ‘உம்மைப் பார்க்க பெருமாள் வந்திருக்கார் ஓய்!’ என்று.
இவையெல்லாம் சம்பிரதாயமாகச் சொல்லும் வார்த்தை என்றுதான் இதுவரை எண்ணிவந்தேன். ஆனால் அருளாட்சியின் பூடக உலகில் இம்மாதிரி நிகழ்வுகளை சம்பிரதாயமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. மிகவும் துல்லியமான தனிச்சேதி என்றே கொள்கின்றனர். இதை விளக்க ஸ்ரீரங்கம் முரளி பட்டரின் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்று. அவரிடம் யாரோ அங்கிருக்கும் சில சம்பிரதாயங்களை விளக்கக் கேட்க இவரும் ஒரு புதுப்பொருள் சொல்ல, பின்னால் அவருக்கே சந்தேகம் வந்துவிட்டது. தாம் சொன்னது சரியா? தவறா? என்று. அங்கு வந்த கிருஷ்ணப்பிரேமி ஸ்வாமிகளிடம் அவர் கேட்க, ஸ்வாமிகள் நீ எங்கிருந்து இதைச் சொன்னாய்? என்று கேட்டிருக்கிறார். சந்நிதியில் என்றிருக்கிறார் முரளி பட்டர். பின் என்ன சந்தேகம்? பேசியது நீ அல்ல, அவன் என்று விளக்கியிருக்கிறார். ஸ்ரீரங்க வரலாற்றில் இப்படி அர்ச்சகர் மூலமாக அவனிட்ட கட்டளைகள்தான் எத்தனை? அவன் நம்முடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறான். ஆனால் நமக்குத்தான் ‘அவன்’ பேசுகிறான் என்று புரிவதில்லை.
அர்ச்சகர் என்றவுடன் இன்னொரு சம்பவம். என் பெண் ஸ்வேதாவிற்கு ஆண்டாள்தான், ‘கோயில் ஆழ்வான்’ என்று பாட்டி சொல்லிவிட்டார்கள். அவளுக்கு ஆண்டாள் மீது தனிப்பிரியம். பொதுவாகவே அவளுக்கு அம்பாள் கிருபை என்றும் உண்டு. அம்மூர்த்திகளே அவளைக் கவர்கின்றன. நியூயார்க்கில் (பிள்ளையார் கோயில்) நான் கிருஷ்ணன் அழகில் லயித்திருக்க இது சரஸ்வதி சந்நிதிமுன் அழுது கொண்டு நிற்கிறது! அப்படித்தான் அவள் ஸ்ரீரங்கம் ஆண்டாள் சந்நிதிக்குள் நுழைந்த நிமிடத்திலிருந்து ஆழி மழைக் கண்ணீர் விடத்தொடங்கிவிட்டாள். பாவம் அர்ச்சகர்! ஏதோ குழந்தைக்கு சோகமென்று விசாரித்து இருக்கிறார். இவளுக்கென்ன சோகம்? ஆண்டாளின் அருளாட்சியின் மழையில் நனையும் போது கண்கள் தானாக தாரை வார்க்கின்றன. துன்பம் மட்டும் கண்ணீர் வரவழைப்பதில்லை ஆனந்தமும் கண்ணீரைத்தான் வரவழைக்கிறது என்று அவருக்கு இவளால் புரிய வைக்க முடியவில்லை.
இப்படி ஆனந்த பாஷ்பம் செய்வது அடியார் பழக்கம். இதுவொரு பாகவத பாவம்
<font color="blue">அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன்
பாடி அலற்றுவன்,
தழுவல் வினையால் பக்கம் நோக்கி
நாணிக் கவிழ்ந்திருப்பன்,
செழுவொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்.
செந்தா மரைக்கண்ணா,
தொழுவன் னேனை யுன்தாள் சேரும்
வகையே சூழ்கண்டாய். 5.8.5 </font>
இப்படி தசபாவங்களுண்டு என்று பாகவதமும் சொல்கிறது.
செம்மொழி மாநாட்டில் நண்பர் அண்ணா கண்ணன் தன் அன்னையை அறிமுகப்படுத்தினார். ஆழ்வார்கள் மீதான என் காதலை அவரிடம் சொன்னார். நானும் குலசேகர ஆழ்வாரின்
<font color="blue">வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ
ஆளா வுனதருளே பார்ப்ப னடியேனே 5.4 </font>
எனும் பாடலைப் பற்றிச் சொல்ல அவர் கண்கள் பனித்தன.பின்னொரு சமயம் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் திருவேங்கடமணியுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது அவரது தாயார்,
<font color="blue">கற்பகமே விழிக் கருணை பொழிந்திடும் கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் ககனச் சிகை முடியும்
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத் துளதால்
இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிரே! </font>
என்று சொல்லி கண்ணீர் உகப்பர் என்று சொன்னார். அது என்ன? ஒன்று சொன்னார் போல், வைணவர்களுக்கு அடியார் பெயர் சொன்னால், ஆண்டவன் பெயர் சொன்னால் பொல, பொலவென்று கண்ணீர் வந்துவிடுகிறது? இப்படியானதொரு மனப்பக்குவத்தை எப்படி நம் பெரியோர் தமிழரிடம் உண்டாக்கினர்? அதுவும் செந்தரமாக்கப்பட்ட செவ்வியல் பதிப்பு போல் சாதி வேறுபாடு இல்லாமல், வைஷ்ணவனுக்கோர் லட்சணம் இது என்பது போல். புதுவையில் கி.ராவுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது வேடிக்கையாகச் சொன்னார், ‘இவனுகளுக்கு ரொம்ப அகந்தை ஓய்! தானொரு வைஷ்ணவனென்று! அது போகாதவரை உங்களுக்கு வைகுந்தம் இல்லை! என்று நான் சொல்வதுண்டு’ என்றார். அப்பேச்சின் ஊடாக வெளிப்படுவதும் இந்தக் கர்வமே! அதுவொரு தேவையான திமிர் போல்தான் எனக்கென்னமோ படுகிறது! திருவல்லிக்கேணியில் தெற்கு ரத வீதியில் நடந்த பெருமாள் புறப்பாடும், பெருமாளைத் தூக்கித் திணவெடுத்த வைணவர்களின் தோள் புடைப்பும், இடைவேளையில் கம்பத்திற்குக் கம்பம் ஓடி விளையாடும் சிறார்களின்ன் குதூகலமும், நடு இரவைத்தொட்டு விட்டது என்பது கூட மறந்த நிலையில் அங்கிருந்த ஆனந்தமும், இன்று இப்போது கொரியாவிலிருந்து எண்ணும்போது ஏதோ இன்பக்கனா போல் தோன்றுகிறது. பூகோள வைகுந்தம் என்பது என்னவென்று அன்று ஸ்ரீரங்கத்தில் உணர்ந்தேன். பிறிதொரு சமயம் திருவல்லிக்கேணியில் உணர்ந்தேன். ஏசு பேசுகின்ற அருளாட்சி இதுதான் என்று திரும்பச் சொல்ல வேண்டுமோ?Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-11685832.post-37482243800828427382010-05-16T10:23:00.004+05:302020-06-03T11:03:34.549+05:30பக்தவத்சலம் அச்சுதம்!பிறந்தால் கலி காலத்தில் பிறக்கவேண்டும்!
என்ன மாற்றி சொல்லிவிட்டேன் என்று சந்தேகமா? இல்லை நிச்சயமாக, கலிதான் மிக புண்ணிய யுகம். இந்த யுகத்தில் பிறந்த நாம் பாக்யசாலிகள்! ஏனப்படி? நம்மாழ்வாரைக் கேட்போம். கலியில் என்ன விசேஷமென்று!!
பொலிக பொலிக பொலிக!
போயிற்று வல் உயிர்ச் சாபம்,
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு
இங்கு யாது ஒன்றும் இல்லை,
கலியும் கெடும் கண்டு கொண்மின்!
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
மலியப் புகுந்து இசை பாடி ஆடி
உழிதரக் கண்டோ ம். 5.2.1
சர்வ நிச்சயமாகச் சொல்லிவிட்டார் சடகோபன். இப்பாசுரத்தின் ஒவ்வொரு சொல்லும் உயிர் பெற்று வலம் வருவதை உணர்வுடையோர் உணர்ந்து உய்வர். முதலில் கலியில்தான் எண்ணிரந்த பாகவதர்கள் உலவுகின்றனர். கலியில்தான் எங்கும் நாம கீர்த்தனம். கலியில்தான் மின்வெளி இணையம். கலியில்தான் யூடுயூப் வீடியோ. கலியில்தான் உட்கார்ந்த இடத்திலிருந்து அதி உத்தமமான, அற்புதமான நிகழ்ச்சிகளை பைசா செலவில்லாமல் கண்டு களிக்க முடிகிறது. கலியில்தான் “கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல் மலியப் புகுந்து இசை பாடி, ஆடி உழிதரக்’காண்கிறோம்.
அத்தகையை உழிதரும் நிகழ்வுதான் விசாகா ஹரியின் பிரகலாத விஜயம் எனும் இந்த நிகழ்ச்சி!
<a href="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/S-9-ZhoD7ZI/AAAAAAAAIfw/qZzeuroyVX4/s1600/Visaka03.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 297px;" src="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/S-9-ZhoD7ZI/AAAAAAAAIfw/qZzeuroyVX4/s400/Visaka03.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5471731049266670994" /></a>
கையில் நிறைய நேரம் வைத்துக் கொண்டு ஒரு சுதந்திரமான மனநிலையில் பிரகலாதன் கதை கேட்க உட்காருங்கள். 18 பாகங்கள் கொண்ட இந்த இசை நாடகம் சுமார் 3 மணி நேரம் ஓடுகிறது!!
விசாகா ஹரியின் கதை மிக விசேஷமானது! ஏனெனில் தியாகராஜய்யரின் பாடல்களில் இவருக்கிருக்கும் பாடாந்தரம் மலைக்க வைக்கிறது. கதை சொல்லிக் கொண்டு வரும் போதே, ஒரு சொல்! அதை உரக்கச் சொல்லி, தியாகய்யரின் கீர்த்தனைகளின் இடையில் வரும் அச்சொல்லுடன் கீர்த்தனத்தை ஆரம்பித்து பின் முழுக்கீர்த்தனைக்கும் வரும் அழகு இருக்கிறதே! அடடா! இவ்வளவிற்கும் பரனூர் அண்ணா போலவோ, விசாகாவின் கணவர் ஹரிஜீ போலவோ இவர் ஹரிகதா குடும்பத்தில் பிறந்து சிக்ஷை பெற்றவர் அல்லர். ஹரி உபன்யாசம் பண்ணும் போது அப்படி கடல் மடை திறந்தார் போல் கொட்டுகிறது என்றால், அது ‘குலத்தொழில் கல்லாமல் பாகம்படும்’ எனும் சங்கப்பழமொழிக்கு எடுத்துக்காட்டு. ஆனால் விசாகா குழந்தை முதல் கிருஷ்ணப்பிரேமி அண்ணாவின் கதை கேட்டு வளர்ந்த ஒரு தேர்ந்த ரசிகை! கதை கேட்டுக் கேட்டு இவரும் ஒரு உபன்யாசர் ஆகிவிட்டார் என்பதுதான் ஆச்சர்யம்.ஒருவேளை அண்ணா அடிக்கடி சொல்வது போல் பகவத் விஷயம் சொல்வதற்கு ஆள் போதாது. இன்னும் நிறையப் பேர் வர வேண்டும்! என்பதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு இவர் களத்தில் புகுந்தாரோ என்னவோ! ஆனால் பகவத் விஷய விநியோகம் என்பதை நூதனமாகச் செய்கிறார் என்பது உண்மை.
<a href="http://2.bp.blogspot.com/_eySWrbVwCy4/S--ACoHOs_I/AAAAAAAAIf4/ch_wtftoVkY/s1600/Visaka02.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 303px;" src="http://2.bp.blogspot.com/_eySWrbVwCy4/S--ACoHOs_I/AAAAAAAAIf4/ch_wtftoVkY/s400/Visaka02.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5471732854894277618" /></a>
பரனூர் பெரியவருக்கும், ஹரிஜிக்கும் நம் விசாகா ஹரிக்கும் ஒரு பெரிய வித்யாசமுண்டு. அது என்னவெனில் விசாகாவினுடையது ஒரு இசை நாடகம். அவரின் தேனினும் இனிய குரலில் மும்மூர்த்திகளின் கீர்த்தனைகள், மீரா பஜன், நாலாயிர திவ்யப்பிரபந்தம், பிரேமிகாகீதம், பாரதி பாடல்கள் என்று கேட்டு ஆனந்திப்பது ஒரு தனி அனுபவம். இசைக்கு நம்மை மேல் நிலைக்கு இட்டுச் செல்லும் சக்தியுண்டு. பக்தியுடன் பாடும் பாடல்கள் கல் நெஞ்சரையும் உருக்க வல்லது. கீழ்படிகளில் இருக்கும் நமது சக்கர நிலையை மேற்படிகளுக்கு இட்டுச் செல்லும் உந்துதல் இசைக்கு உண்டு. இசை உணர்வின் ஊடாகப் பாயும் அமுதம். இறைவனைப் பற்றிப் பேசும் திருமங்கையாழ்வார், ‘உணர்வெனும் பெரும்பதம்’ என்கிறார். உணர்வு உள்ளவன்தான் மனிதன். அந்த உணர்வின் வழியைச் சுத்தம் செய்து தெய்வீக அனுபவம் அதில் மண்டச்செய்ய வல்லது இசை. இந்த அரிய வழிமுறைக் கையாண்டு நம்மை உய்விக்கப் பிறந்திருப்பவர் விசாகா!!
நாமும் குழந்தையிலிருந்து கீர்த்தனங்கள் கேட்டு வருகிறோம். ஆனால் எந்தக் கீர்த்தனம் எச்சூழலில் எப்படி பாடப்பட்டது என்று நாம் அறிவதில்லை. மேலும் எல்லாப் பாடகர்களும் பக்தி சிரத்தையோடு பாடுகிறார்கள் என்று சொல்ல முடியாது. சில பேர் வெறும் வித்வத்துவத்தைக் காட்ட நீட்டி முழக்கி பாடும் போது வெறும் இசை நுணுக்கம் மனதில் நிற்குமே தவிர அப்பாடல் தர வேண்டிய உணர்வெனும் பெரும் பக்தி வந்து சேராமல் போய்விட வாய்ப்புள்ளது. ஆனால், இந்திய சநாதன தர்மத்தில் அத்தனை சாதனைகளும் ஒரு திக்கு நோக்கியே பாய வேண்டும் என்பது விதி. ‘யாழின் இசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!’ என்பது திருவாய்மொழி. நம் செவி இருப்பதின் பயன் நாரண கீதம் கேட்பதுதான், வாய் இருப்பதின் பயன் நாரண நாமம் சொல்வதுதான், கண் இருப்பதின் பயன் நாரண ஸ்வரூபத்தை உள்வாங்குவதுதான், அறிவு இருப்பதின் பயன் ஹரி எனும் பேருண்மையை அறிந்து கொள்ளுதல்தான். இப்படி, இப்பிறவியின் பயனே ஹரிகதை கேட்டு அவர் பாதார விந்தங்களில் சரண் புகுவதுதான். அப்படி இருக்கும் போது விசாகாவின் ஒவ்வொரு நிகழ்வும் மிக எளிதாக நம்மை இத்திக்கு நோக்கி இட்டுச் செல்வது நாம் செய்த பாக்யம் இல்லையா? இதைச் சொல்லும் போதே விசாகா ஹரி எடுத்துக் கொள்ளும் ஆர்வம், சுயமுனைப்பு, கடும் உழைப்பு இவை நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. மூன்று மணி நேரம் உபன்யாசம் செய்வதே கஷ்ட. ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரு மணி நேரத்திற்கு மேல் பேச மாட்டார். பாவம் விசாகா, ஒரு வாய் நீர் கூட அருந்தாமல் கதையும், தெள்ளிய குரலில் பாடவும் செய்வது வியப்பை அதிகரிக்கிறது. ஏனெனில் சும்மா வருடம் ஒருமுறை சீசனில் பாடுபவர் கூட தம் குரல் கெட்டுவிடும் என்பதில் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பர். அதிகம் பேசினால் தொண்டை வரண்டு சாரீரம் கெட்டுவிடும் என்பதொரு வழக்கு. ஆனால் விசாகா, அதையெல்லாம் பொருட்படுத்தாது, கதையும், சங்கீர்த்தனமும் செய்வது பரோபகாரம். நிச்சயமாக அண்ணாவின் பரிபூரண ஆசி கிட்டியிருப்பது தெரிகிறது. சில நேரம் தோன்றும், பாவம் குழந்தை! இப்படி நா வறண்டு போகும் படி கதை சொல்கிறதே! உடையவருக்கு வடுக நம்பி கிடைத்தது போல் இவருக்கு யாராவது ஒருவர் கிடைத்து அவ்வப்போது இவரைக் கவனித்துக் கொண்டால் எப்படியிருக்கும்? என்று தோன்றுகிறது.
இதில் இன்னொரு உண்மை இருப்பதையும் அறியலாம்.எனக்கு கதை கேட்க நேரமில்லை என்று சொல்லி அவசரப்படுபவர் எதை இழக்கிறார் என்று தெரிந்து கொள்ளவில்லை. கதை ஏன் நம்மை ஈர்க்கிறது. நமது பரிணாமமே கதை கேட்டு உய்வுற்ற பரிணாமம். கல்வி, கேள்விகள்தான் நம்மை இந்நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. மேலும் இறைவன் எனும் பூரணத்துவத்தைப் பற்றி நாம் கேட்கக் கேட்க அந்த உயர்ந்த குணங்கள் மெல்ல, மெல்ல நம்மில் படிகின்றன. எத்தனையோ கதைகள் இருக்க, ஹரிகதா என்பதை மட்டும் சிறப்பாக எடுத்து இந்திய மரபு வளர்த்தெடுத்து இருப்பது ஏன்? ஏனெனில், மும்மூர்த்திகளில் ஒருவராகவும், அவர்களுக்கு மேலாலானவராகவும் உள்ள நாரணன் சாத்வ குண பரிபாலனம். சத்வ உணவு, சத்வ நடத்தை, சத்வ அறிவு இதுவே நாம் அடைய வேண்டிய உயர் நிலை. ‘எங்கும் உளன் கண்ணன்’ எனும் உயர் அறிவு வாய்த்திட வேண்டும். ‘உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான்’ என்று கண்ணீர் விட வேண்டும். அதுவே சாத்வீக குணம். அதுவே உயர் அறிவு. இதை எட்ட வேண்டுமெனில் நாம் ஹரிகதை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அயர்வில்லாமல்.
தியாகய்யர் மூன்று நாடகங்கள் செய்திருக்கிறாராம். அதில் இரண்டுதான் இப்போது கிடைத்திருக்கின்றன. 300 ஆண்டுகளுக்குள் நாம் இதைத் தொலைத்திருக்கிறோம் எனும் போது நமது அஜாக்ரதையை என்ன சொல்லித் திட்டுவது? கிடைத்திருக்கும் இரண்டு நாடகங்களிலும் முத்து, முத்தான கீர்த்தனங்கள். ஒவ்வொன்றாய் விசாகா எடுத்துக்காட்டும் போது மெய்சிலிர்க்கிறது! அடடா! இந்தக் கீர்த்தனை இந்தச் சூழலில் இன்ன அர்த்தத்தில் பாடப்பெற்றதா? அடடா! இப்படித்தான் ஆக்கியோன் அனுபவித்து இருப்பானோ? என்று நம்மைக் காலம், வெளியை உடைத்து வேறொரு அனுபவ உலகிற்கு இட்டுச் செல்லும் வல்லமை விசாகா ஹரியின் இசை நாடகத்திற்கு இருக்கிறது.
குழந்தை போன்ற முகம். கண்ணைக் கண்ணை உருட்டிக் கொண்டு குழி விழ இவர் சொல்லும் கதை யாரைத்தான் மயக்காது?
<object width="480" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/U2CuYfgQM3I&hl=en_US&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/U2CuYfgQM3I&hl=en_US&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object>
பிரகலாத பக்த விஜயம் ஏன் கேட்க வேண்டும்? கேட்ட கதைதானே? அப்படி எண்ணக்கூடாது. சொல்லுபவர் சொல்லின் சொல்லாத பொருள் எல்லாம் சொலபத்தில் புலப்படும்! பிரகலாதன் தீனன். குழந்தை. பெரிய பராக்கிரமன் அல்லன். இவனுக்கு அருள் செய்ய ஒரு அவதாரம் என்றால் அது நாரணன் தீன தயாளன் என்பதைக் காட்டுகிறது.
பிரகலாதன் அசுரன். நீச்ச குலத்தில் பிறந்தவன். ஆனால் இறைவன் குலம் பார்த்தா அருள் செய்கிறான்? இல்லையே! ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது அவன் வாக்கன்றோ!
பிரகலாதன் அறிவுஜீவியல்ல. கற்றல் என்பது நடப்பதற்கு முன் உள்ள பள்ளிப் பாலகன். எனவே அவன் ஞானத்திற்கு மயங்கி இறைவன் வரவில்லை. அவன் எளிமை கருதி வருகிறான்.
இப்படி பிரகலாதன் எனும் உருவகம் எதைச் சுட்டுகிறது என்று மேலும், மேலும் ஆராயப்புகின், அந்த உருவகம் வேறு யாரையும் சுட்டவில்லை, அது நம்மைத்தான் சுட்டுகிறது என்று புரியும். நமக்கு என்ன அறிவு இருக்கிறது என்று பீற்றிக் கொள்ளமுடியும்? நமக்கு என்ன பராக்கிரமம் இருக்கிறது என்று மார் தட்ட முடியும்? அட! நமக்கு என்னதான் பெரிய குலம் இருக்கிறதென்று பறை சாற்ற முடியும்? ஒன்றும் கிடையாது. ஆயினும் தாய் முகம் பார்த்து ஏங்கும் குழந்தை போல், ஒரு பாலகனாக நாம் சக்தியற்று, திறனற்று, வலுவற்று நிற்கும் நிலையை பிரகாலத சரிதம் நம் முன் காட்டுகிறது.
ஆனால் பிரகலாதனுக்கு எவ்வளவு பெரிய பேறு கிட்டியது? பாகவ சக்ரவர்த்தி என்ற பட்டம், படைத்தவனால் கொடுக்கப்பட்டிருக்கிறது!! பிரகலாத சரிதம் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். இதனால்தான் இச்சரிதம் இத்தனை நூற்றாண்டுகளாக பல்வேறு ஞானிகளால், இசைக்கலைஞர்களால், பௌராணிகர்களால் மீண்டும், மீண்டும் சொல்லப்பட்டு வந்திருக்கிறது!அந்தப்பெரிய பொக்கிஷத்தை சரளமாகக் கையாண்டு நமக்கு நம்பிக்கை தர வந்திருக்கும் இசை நட்சத்திரம் விசாகா ஹரி. நம்மாழ்வார் பாடிய ‘பொலிக! பொலிக! பொலிக! போயிற்று வல்லுயிர் சாபம்! என்பதுதான் எவ்வளவு உண்மை!
எங்கும்முளன்கண்ண னென்றமகனைக்காய்ந்து,
இங்கில்லையால் என் றிரணியன் தூண்புடைப்ப,
அங்கப்பொழுதே அவன்வீயத்தோன்றிய, என்
சிங்கப்பிரான்பெருமை யாராயும்சீர்மைத்தே. 2.8.9Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-11685832.post-83254724289761675022009-05-17T07:05:00.003+05:302020-06-03T11:03:55.189+05:30கற்கும் கல்வி செய்வேனும் யானே!<div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-BrzbcinXuEo/XsYrKJbdSjI/AAAAAAABC5g/Otxr5f6QBIkBDhARZX0dNrrpMrMEPu5ugCK4BGAsYHg/Kekule.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="225" data-original-width="224" src="https://1.bp.blogspot.com/-BrzbcinXuEo/XsYrKJbdSjI/AAAAAAABC5g/Otxr5f6QBIkBDhARZX0dNrrpMrMEPu5ugCK4BGAsYHg/Kekule.jpg" /></a></div><div><br /></div><div><br /></div>அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் மேலைக் கலாச்சாரத்தில் மிகப்பெரிய பிளவு இருக்கிறது. அது கீழைக்கலாச்சாரத்தில் இல்லை. ஏனெனில் இந்திய மரபில் இறைவனை உணர்தல் என்பது அறிவின் பாற்பட்டே உள்ளது. இதை ஞான மார்க்கம் என்பர். அறிவியலில் எத்தகை நுண்ணிய, தீர்க்கமான பார்வைகளுண்டோ, அவையனைத்தும் ஞானமார்க்கத்திலும் உண்டு. எனவே இங்கு அறிவியல், மெய்யியல் என்பது பிரித்துக்காணமுடியாத ஒரு பெரும் பரப்பாய் உள்ளது. இந்த வசதி ஒரு மேலைத்திய விஞ்ஞானிக்கு இல்லை. <div><br /></div><div>டார்வின் தன் கோட்பாட்டை முன் வைத்த போது கிறிஸ்தவ தத்துவம் (christian doctrines) அதற்குத்தடையாக இருந்தது. விவிலிய முதல் ஏற்பாட்டின்படி, இறைவன் மனிதனைப்படைத்தது 5000 வருடங்களுக்கு முந்தி என்று இருக்கிறது. எகிப்திய கலாச்சாரம் கோலோட்சிய காலங்கள் அவை! அதே நேரத்தில், இந்தியப்பாரம்பரியத்தில் எழுதப்பட்ட ஒரு நூல் உயிர்கள் தோன்றி நூற்றுத்தொண்ணூத்தாறு கோடியே, எண்பத்தைந்து லட்சத்து, மூவாயிரத்து நூற்று ஒன்பது வருடங்கள் ஆகின்றன என்று சொல்கிறது. அதாவது, ஏறக்குறைய 2 பில்லியன் வருடங்கள் (1,968,503,109). இது நவீன அறிவியல் பார்வையுடன் ஒத்துப்போவதாக உள்ளது. (நூல்: ஸ்ரீமத்விகனஸோத்பத்தி சரித்ரம், தஞ்சை சர்ஸ்வதி மகால் வெளியீடு, 1997. ஆசிரியர் எஸ்.சுதர்சனன்)</div><div><br /></div><div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-O92uf7bW3Y8/XsYs2FZzKjI/AAAAAAABC6c/k_6MMo50BcYLS56xi6Y8XpIdhqId-B2_wCK4BGAsYHg/Viganospathi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="187" data-original-width="269" src="https://1.bp.blogspot.com/-O92uf7bW3Y8/XsYs2FZzKjI/AAAAAAABC6c/k_6MMo50BcYLS56xi6Y8XpIdhqId-B2_wCK4BGAsYHg/Viganospathi.jpg" /></a></div><div><br /></div><div><br /></div><div>ஆச்சர்யம் என்னவெனில் இப்போதுள்ள நவீன வேதிம, இயற்பியல் உபகரணங்கள் இல்லாமல் இவர்களால் எப்படி? இப்படியானதொரு காலக்கணக்கைச் சொல்லமுடிந்தது? அப்படியெனில், பிரபஞ்சத்தில் மறைபொருளாய் இருக்கும் தரவுக்கிடங்கை (database) அணுகும் ஆய்வுமுறை இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அந்தக்கல்வி முறை என்ன? அது இப்போதும் சாத்தியப்படுமா?
இப்படியொரு கேள்வி கேட்டோமெனில் நமது பனுவல்களை கொஞ்சம் வெட்கமின்றி, கூச்சமின்றி அணுகும் வாய்ப்புக்கிடைக்கிறது. </div><div><br /></div><div>நவீன உலகில், விஞ்ஞானி, விஞ்ஞானம் பேசுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆன்மீகவியலர் ஆன்மீகம் பேசுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இரண்டிற்குமான ஊடுபாயல் (crosstalk) இருக்கக்கூடாது என்ற எழுதாத சட்டமொன்றுள்ளது. அதனால் பலருக்கு இம்மாதிரி விஷயங்களைப் பேசுவதில் கூச்சம்.
விஞ்ஞானிகளிடமே கூட இது பற்றியெல்லாம் பேசுவது கூச்சமளிக்கும் செயலே. உதாரணமாக, Till Kekule என்பவர் பென்ஜீன் மூலக்கூறு கண்டு சொன்ன வரலாறு, இன்றும் அறிவியல் உலகில் விவாததிற்கு உள்ளாகும் பொருள்:
"...I turned my chair toward the fire place and sank into a doze. Again the atoms were flitting before my eyes. Smaller groups now kept modestly in the background. My mind's eye sharpened by repeated visions of a similar sort, now distinguished larger structures of varying forms. Long rows frequently rose together, all in movement, winding and turning like serpents; and see! what was that? One of the serpents seized its own tail and the form whirled mockingly before my eyes. I came awake like a flash of lightning. This time also I spent the remainder of the night working out the consequences of the hypothesis." </div><div><br /></div><div>ஆக, இதை நம்மொழியில் சொல்வதானால் `அருளிச்செயல்`. அதாவது, பிரபஞ்ச ஆக்கம், நிர்மாணித்தல், காத்தல், அழித்தல் சம்மந்தமான எல்லா சேதிகளும் எங்கோ ஒரு மாகணினியில் (super computer), ஒரு சேவியில் (Server) உள்ளது. அதை அணுகுவதற்கான access code சிலருக்குத் தெரிகிறது. பலருக்குத்தெரிவதில்லை.
ஏனிப்படி சொல்ல வேண்டியுள்ளது எனில், ஒரு உயிர் உருவாகும் போது, ஆண் அணுவும், பெண் அணுவும் சேர்ந்தவுடன், ஒரு மாபெரும் transcription of code நடக்கிறது! அதாவது, உலகில் காணும் எல்லா உயிரினங்களின் வாழ்வியல் சேதி DNA, RNA எனும் மூலக்குறில் குறிமவடிவில் (encoded, enscription) உள்ளது. இருபால் உயிரினங்களின் தோற்றம் இம்மூலக்கூறு சேர்க்கையிலும், இக்குறிம மொழிபெயர்பிலும் அமைந்துள்ளது. இது அனைத்திற்கும் பொது. ஆயினும், ஒரு யானை யானையாகவும், ஒரு மனிதன் மனிதனாகவும் மாறுவது விந்தை. அது மட்டுமல்ல, முதல் சேர்க்கையில் முட்டையும், விந்துவும்தான் சேர்கின்றன. அந்நிலையில் ஒரு மாறுபடாத (undifferentiated) கரு, மெல்ல, மெல்ல ஒவ்வொரு உறுப்பாக மாறுபடுவதும் விந்தையே! அறிவியல் இது, இது, இன்னின்ன முறையில் மாறுபடுகிறது என்றளவில் சொல்லி நிறுத்திக்கொள்கிறது. ஏன்? எப்படி எனும் கேள்விகளுக்கு விடையில்லை. ஏன் ஒரு செல் பல்வேறாக பெருகுகிறது? எப்படி ஒன்றே பல்வேறு வடிவங்களை ஏற்றுக் கொள்கிறது? பல்வேறு வடிவங்கள் ஏற்றுக்கொண்டபின் இதயம், இதயமாகவும், கல்லீரல், கல்லீரலாகவும் தொடந்து செயல்பட ஆணையிடுவது யார்? எதன் கட்டளையில், இவை கட்டுப்பட்டு செயல்படுகின்றன? மேல் தோல் கிழிந்தால் ஒட்டிக்கொள்கிறது, சில நேரம் முறிந்த எலும்பு கூட ஒட்டிக்கொள்கிறது. </div><div><br /></div><div>ஆனால் நரம்பு முறிந்தால் மீண்டும் வளருவதில்லை (regeneration). ஏன்? மூளையில் கூட, பாதிக்கப்பட்ட பகுதிகளின் செயல்களை பிற பாகங்கள் ஏற்று நடத்துகின்றன!
<embed allowfullscreen="true" allowscriptaccess="always" fs="1" height="344" src="http://www.youtube.com/v/cp2y6Lkq7lY&hl=" type="application/x-shockwave-flash" width="425"></embed>
மூளை இயங்கும் விதமே இவ்வித ஆச்சர்யத்திற்குரியதுதான். மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பற்றிய ஒரு வீடியோயை என் கவனத்திற்கு ஒரு அன்பர் கொண்டுவந்தார். இதில் ரெக்ஸ் எனும் சிறுவன் மூளை குன்றிய நிலையில் இசையின் நுணுக்களை மிக எளிதாக அறிந்திருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். இந்த வீடியோவில் மூன்று சிறுவர்/சிறுமிகளின் வாழ்வு காட்டப்படுகிறது. தமிழகத்தில் இதை musical prodigy என்பார்கள். பாலமுரளி கிருஷ்ணா இம்மாதிரி வரம் பெற்றவர். ஆனாலும், இவர்கள் போல் அல்லாமல் உடல் ஊனமுற்ற நிலையிலும் இப்படி வரம் பெற்று வாழ்வது சிறப்பு இல்லையா? </div><div><br /></div><div><embed allowfullscreen="true" flashvars="linkUrl=http://www.cbsnews.com/video/watch/?id=2294559n&releaseURL=http://cnettv.cnet.com/av/video/cbsnews/player-dest.swf&videoId=50062177&edid=2121&vert=News&autoPlayVid=false&name=cbsPlayer&allowScriptAccess=always&wmode=transparent&embedded=y&scale=noscale&rv=n&salign=tl" height="324" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" src="http://cnettv.cnet.com/av/video/cbsnews/player-dest.swf" type="application/x-shockwave-flash" width="425"></embed><a href="http://www.cbs.com/">Watch CBS Videos Online</a> </div><div><br /></div><div>இக்குழந்தைகளுக்கு இந்த வரம் எப்படி அமையப்பெறுகிறது? மூளை என்பதுதான் என்ன? அது சேதிகளை எப்படி சேகரிக்கிறது? எங்கு, எப்படி சேர்த்து வைக்கிறது? எப்படிப் புரிந்து கொள்கிறது? புரிந்துகொள்வது யார்? மூளை மட்டும்தானா? இசை கேட்கும் போது உடலில் புல்லரிப்பு ஏன் வருவானேன்? மூளை மட்டும் அனுபவிப்பதாகத் தெரியவில்லையே! நம்மாழ்வார் சொல்வது போல் உடலெங்கும் கரந்து பரவியிருக்கும் உயிர் அல்லவோ இசையை அனுபவிக்கிறது? இந்த இசை அனுபவம், ஒருவருக்கு மட்டும் சொந்தமா? இல்லையே! எல்லோரும் அனுபவிக்கிறோமே! மனிதர்கள் மட்டுமா? பல்வேறு விலங்குகளும், ஏன் தாவரங்கள் கூட அனுபவிக்கின்றனவே!</div><div><br /></div><div>தாவரங்களுக்கு மூளையுண்டா? கேள்விகள்தான் நிற்கின்றன. பெரிய விஞ்ஞானி Stephen Hawking. ஐன்ஸ்டைனுக்கு அடுத்து என்கிறார்கள். அவரால் பேசக்கூட முடியவில்லை. அவர் மிகவும் ஆச்சர்யமான வகையில் பிரபஞ்ச உண்மைகள் பற்றிச் சொல்கிறார் (கணினியின் உதவியுடன்). இதைப்பற்றி கொஞ்சம் யோசிக்கும் போது மூளைதான் எல்லாம் என்று எப்படிச் சொல்ல முடியும்? மூளைச்சாவு (brain death) என்பதையே உயிரின் கடைசி நிலை என்று இப்போது கணக்கிடுகிறோம். மூளை ஒரு பொறி போலும். உடற்பொறியின் சாவி அங்குள்ளது போலும். மூளை எனும் சாவி கெட்டுப்போனவுடன் உயிரியக்கம் நின்று விடுகிறது. அதுவரை அதை இயக்கியது யார் எனும் கேள்வியுடன்! </div><div><br /></div><div>எதற்குச் சொல்ல வருகிறேன் எனில், ஆன்மீகப்பேச்சில்தான் mysticism இருக்கிறது என்றில்லை. அறிவியலிலும் mysticism உண்டு. நிறைய உதாரணங்கள் தேடி எடுக்க முடியும். நாம் இங்கு அறிவியலை mystify செய்ய வரவில்லை. பிரபஞ்ச அமைப்பே, பெரிய பிரம்மிப்பாய் உள்ளது! அதன் படி நிலைகளை, அது செயல்படும் விதத்தை என்று நாம் அறியப்போகிறோம்? எப்படி அறியப்போகிறோம்?
அறிவியல் ஒருவழி. முன்பு சொன்னது போல், அறிவியல் என்பது வேதாந்த மார்க்கமே. இங்கு எந்த முரணுமில்லை. பேச்சு முறைகள், அணுகுமுறைகள், பரிபாஷைகள் கொஞ்சம் மாறுபடும். ஆனால் பேதமற்ற நெஞ்சுடன் பார்க்கப் பழகினால் நம்மாழ்வாரகட்டும், Stephen Hawking ஆகட்டும், இவர்கள் பேசுவது பொது உண்மை பற்றியே என்பது புலப்படும். </div><div><br /></div><div>அந்த உண்மையைக் கண்டறியும் ஆர்வத்தில், இந்திய அணுகுமுறை என்ன? இதன் நோக்கு என்ன என்று கொஞ்சம் பார்ப்போம்.
அடிப்படியாக ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். </div><div><br /></div><div><span style="color: #000099;">யானேயென்னை அறியகிலாதே, </span></div><div><span style="color: #000099;">யானேயென்தனதே யென்றிருந்தேன், </span></div><div><span style="color: #000099;">யானேநீயென் னுடைமையும்நீயே, </span></div><div><span style="color: #000099;">வானேயேத்து மெம்வானவரேறே!</span> </div><div><br /></div><div>நான் யார் என்று இது நாள் வரை அறிந்திலேன். நான் என்பது இந்த உடலும், அதன் இச்சைகளும், அதன் முரண்பாடுகளும் என்றிருந்தேன். ஆனால், ஒரு இனிய பொழுதில் நீ வந்து நான் என்பது நீயே என்று காட்டினாய். நான் உன் உடைமை என்றும் காட்டினாய். இனி, இக்கேள்விக்குள் எப்படிச் செல்வது என்பதையும் நீயே வந்து காட்டியருள வேண்டும்!</div>Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-11685832.post-77043893123691299562009-05-16T16:38:00.005+05:302020-06-03T11:04:12.352+05:30இந்தியப் பரிணாம நோக்கு<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-agbcuPFKGhE/XsYrd94iv6I/AAAAAAABC5w/hC2M-JiJGiUidFsVpqXOD37ONsLUZFqKACK4BGAsYHg/human-lineage.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="933" data-original-width="1600" src="https://1.bp.blogspot.com/-agbcuPFKGhE/XsYrd94iv6I/AAAAAAABC5w/hC2M-JiJGiUidFsVpqXOD37ONsLUZFqKACK4BGAsYHg/s320/human-lineage.jpg" width="320" /></a></div><div><br /></div><div><br /></div>அறிவியலை விஞ்ஞானிகளிடம் விட்டு, ஆன்மீகத்தை ஆச்சார்யர்களிடம் விட்டு, விட்டு நம்ம வேலையை பார்த்துக்கொண்டிராமல் ஈதென்ன விசாரம் என்று வினவலாம்.
காரணமிருக்கிறது. <div><br /></div><div>விஞ்ஞானி என்பவன் எங்கோ தேவலோகத்திலிருந்து பிறந்தவன் அல்ல. அவனும் இச்சமூகம் உருவாக்கிய ஒரு பிரஜைதான். இச்சமூகத்தின் சிந்தனைக் குழம்பில் ஊறிய ஒரு துளிதான். அவனை மற்றோரிடமிருந்து பிரிப்பது, அவன், அறிவு, அவன் நெறியான செயல்பாடு, திறந்த போக்கு போன்றவை. அறிவியல் என்பதும் இச்சமூகத்தின் ஒரு நிருவனம்தான். அதன் சிறப்பு அதன் அணுகுமுறைதான். அதாவது research methodology.
விஞ்ஞானிக்கும், மெய்ஞானிக்கும் பொதுவாய் இருப்பது அறிவு (ஞானம்). அங்கிருந்துதான் இருவருக்குமே inspiration என்பது வருகிறது. </div><div><br /></div><div>மேலும், அறிவியல், தத்துவத்தின் கட்டுமானத்திலேயே தன் செயல்பாட்டை அமைத்துக்கொள்கிறது. நல்ல அறிவியல் வர நல்ல தத்துவக் கோட்பாடுகள் அவசியம். இந்த இடத்தில் தத்துவ ஞானி உயர் இடத்தில் உள்ளான். முனைவர் என்பதை ஆங்கிலத்தில் doctor of philosophy என்கிறோம். Doctor of Biochemistry என்றோ doctor of Cosmology என்றோ சொல்வதில்லை. எனவே தத்துவமே அறிவின் உயர்பீடம். </div><div><br /></div><div>மெய்ஞானவியலை தத்துவங்கள் என்றுதான் சொல்கிறோம். நாம் உருவகப்படுத்திப்பார்க்கும் அனைத்துக் கடவுளரும் அடிப்படையில் தத்துவங்களே. மும்மூர்த்திகள் பிரபஞ்சத்தின் மூன்று குணங்களைச் சொல்ல வந்தது. சாத்வீகம் - விஷ்ணு, தமஸ் - சிவன், ரஜோ - பிரம்மா. மேலும் இப்படி விளக்குவார்கள். எனவே அறிவியலில் research methodology இருப்பது போல் மெய்யியலில் வேதாந்தம், சித்தாந்தம் என்ற research methodology உண்டு. அங்கும் எதையும் தீர விசாரிக்காமல் ஏற்றுக்கொள்வதில்லை. அசட்டுத்தனமான தி.க பிரச்சாரங்கள் சமூகத்திலுள்ள மூடநம்பிக்கைகளைக் கேலி செய்ய வந்தன. அதன் பின்னுள்ள தத்துவங்கள் விளக்கப்படும் போது அவை கேலிக்குரியவை அல்ல என்பது புரியும். </div><div><br /></div><div>விஞ்ஞானிகளுக்கும், மெய்ஞானிகளுக்கும் வாழ்வும், இயற்கையுமே பரிசோதனைக் கூடமாக, ஆய்வு பொருளாக, கற்பக தருவாக அமைகின்றன. டார்வின் H.M.S Beagle எனும் கப்பலில் பயணப்பட்ட போது கலப்பகஸ் தீவுக்கூட்டகளில் உயிரியல் பரிமாணத்திற்கான வித்து கிடைத்தது. 20 வருடங்கள் தன் கொள்கையை வெளியிடாமல் ஊறப்போட்டிருந்தார். குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று அவர் வாழ்ந்த எலிசபெத் அரசாட்சி காலத்தில் சொல்லமுடியவில்லை. ஆயினும் சொல்ல வேண்டிய நிர்பந்தம் எப்போது ஏற்பட்டது எனில் Alfred Russel Wallace எனும் இன்னொரு ஆங்கிலேயர் (ஆஸ்திரேலியர்) மலேரியக் காய்ச்சலில் நோவுற்ற போது கனவுபோல் பரிணாமக் கோட்பாடு அவருக்குத்தோன்ற அவர் இது குறித்து முதல் கட்டுரை வடித்துவிட்டார். </div><div><br /></div><div>ஆக, பரிணாமவியலும் ஒருவகையில் அருளிச்செயலே!
ஆழ்வார்களுக்கு பூரண அருளால் இது போன்ற பல்வேறு கோட்பாடுகள் தோன்ற அவைகளை பாசுரங்களாக வடித்து வைத்தனர்.
இரண்டு முறையிலும், அடிப்படையாக இயற்கையே ஆசானாக உள்ளது. உதாரணமாக வேதாந்த முறையில் ஈஸ்வரனைப் பற்றி விளக்க வரும் போது ஆதிசங்கர பகவத் பாதாள், நம்மை வைத்தே (அதாவது ஜீவனை வைத்தே) விளங்கச் சொல்வார். இப்படி, கண்களுக்குப் புலனாகும் பரு உலகையும்,உயிர்களையும் முதலில்சுட்டிக்காட்டி, அதற்கு ஆதாரம் எது என்பதை உணர்த்துவது உபநிஷத்தின் வழி (நன்றி தேவ்). இதைச் “சாகா சந்த்ர ந்யாயம்” என்பர்.
இதை எளிதாக விளக்கும் பாடல்: </div><div><br /></div><div><span style="color: #006600;">தாலத்தின் மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டுவார்போல்
ஆலத்தின் உடுக்கள் காட்டி அருந்ததி காட்டுவார்போல்
தூலத்தை முன்புகாட்டிச் சூக்கும சொரூபமான
மூலத்தைப் பின்புகாட்ட முனிவரர் தொடங்கினாரே.</span> </div><div>(கைவல்ய நவநீதம்) (நன்றி. <a href="http://groups.google.com/group/minTamil">மின்தமிழ்</a>) </div><div><br /></div><div>எனவே ஸ்தூல உடம்பைக்காட்டி, அதன் சூட்சுமங்களை விளங்கச் செய்து சூக்கும சொரூபமான மூலத்தைக்காட்டுவது நமது சம்பிரதாயம். எனவே மெய்ஞானிகளுக்கும் முறையான methodology உண்டு. இந்த முறையை hermeneutic science என்பர். </div><div><br /></div><div><span style="color: #000099;">திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை </span></div><div><span style="color: #000099;">படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும் </span></div><div><span style="color: #000099;">உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன் </span></div><div><span style="color: #000099;">சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே</span> </div><div><br /></div><div>உதாரணமாக உடலில் உயிர் எங்குள்ளது? என்று கேட்டால் எதைக் காட்டுவது? கையில் உள்ளதா? மூக்கில் உள்ளதா? இல்லை மூளையில் மட்டும் உள்ளதா? எங்குள்ளது. அது உடல்மிசை கரந்தெங்கும் பரவி இருக்கிறது. அது போல், விசும்பு, வெளி, நீர், நிலம், எரி எனும் ஐம்பூதங்களில் படர் பொருளாக உள்ளான் இறைவன்.
இதை எந்த methodology கொண்டு அறிவது? என்று கேட்போருக்கும் நம்மாழ்வார் பதில் சொல்கிறார், உளன்! யார் உளன்? உடம்பில் உயிர் எப்படிக் கரந்து பரவியுள்ளதோ, அது போல் இறைவன் பிரபஞ்சத்தில் உளன்! இதை, எதைக்கொண்டு அறிவது?
உளன்! சுடர்மிகு சுருதியுள்!!
அவன் சுருதி எனப்படும் வேதத்தின் உள்ளே methodologyயாக உள்ளான். வேதம் நன்கு கற்கும் போது அவன் இருப்பு வெளிப்படும். சரி, வேதமறியாத நம் போன்றோருக்கு கதி? </div><div><br /></div><div>சுவாமி வேதாந்த தேசிகர் சுட்டியது போல், திருவாய்மொழியே நமக்கு வேதம். இதில் இல்லாத கருத்து இல்லை. இதில் புரியாத விளக்கமில்லை! எனவே, சுடர்மிகு சுருதியான திருவாய்மொழியில் “அவன் உளன்”.
ஆகா! அதனால்தான், திருவாய்மொழி கொண்டு உலகைக்காண முயல்கிறோம். இறைவனை வேறு எங்கும் தேடவேண்டாம், “உளன்! சுடர்மிகு சுருதியுள்”. அவன் எழுத்தாகவே உள்ளான். அவன் பிரதியாகவே (text) உள்ளான். அவன் அணுகுமுறையாகவே உள்ளான்.
இதற்கு மேல் வேறென்ன காரணம் வேண்டும்? மெய்ஞான வழியில் விஞ்ஞான உண்மைகளுக்கு பின்புலம் காட்ட?</div><div><br /></div><div>(தொடர்வோம்)</div>Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-11685832.post-78379404372361222762009-05-15T16:56:00.005+05:302020-06-03T11:04:30.995+05:30பரிணாமம் உண்மையா?<div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-nkRHmg4E5MQ/XsYvz-IyAOI/AAAAAAABC68/mKpf9n1xxQADAc4_PqImLAJGpCMey7lhwCK4BGAsYHg/Evolution_clock.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="924" src="https://1.bp.blogspot.com/-nkRHmg4E5MQ/XsYvz-IyAOI/AAAAAAABC68/mKpf9n1xxQADAc4_PqImLAJGpCMey7lhwCK4BGAsYHg/s320/Evolution_clock.gif" width="320" /></a></div><div><br /></div><div><br /></div><div><br /></div><div><br /></div>நாத்திகம் எனக்கு இயற்கையாக வந்ததொன்றில்லை. புகுத்தப்பட்ட ஒன்று. முதல் நிலையில் திராவிட கழகம் அப்பழியை ஏற்கிறது. வீட்டைவிட்டு வெளியேறினால் சண்முகப்பட்டர் வீடு. அவர் வீட்டுச் சுவரிலேயே எழுத்திருப்பான், `கடவுளை நம்புகிறவன் முட்டாள்! கடவுள் இல்லவே இல்லை` என்று. பாவம் அவரும் வெள்ளையடிக்க, அடிக்க, இவனும் அழுத்தமாக எழுதிவைப்பான். ஒருநிலையில் `இது கடவுளுக்கே வெளிச்சமென அவரும் விட்டுவிட்டார். பள்ளி செல்லும் இளம் வயதில் இது உறுத்தியது. ஆயினும், தெருவில் உள்ள எல்லோரும், ஏன்? ஊரிலுள்ள எல்லோரும் கோயிலுக்கு வருவதாலும், பள்ளி மாணவர்கள் எல்லோரும் ஏறக்குறைய திருநீறு அணிந்து வருவதாலும், தி.கவின் இக்கூற்று என்னை அதிகம் பாதிக்கவில்லை. <div><br /></div><div>பெரிய மனக்குழப்பம் வந்தது அமெரிக்கன் கல்லூரியில்தான். உயிரியல் எடுத்ததுதான் வம்பு. அமெரிக்கன் கல்லூரி கிறிஸ்தவக்கல்லூரி, கல்லூரிக்குள்ளே தேவாலயமுண்டு. ஆனால், உயிரியல் பேராசிரியர் ஜே.சி.பி.ஆபிரஹாம் மட்டும் நாத்திகராகவே இச்சூழலில் இருந்தார். அவர் உயிரியல் பாடமெடுக்கும் முறை அங்கு பிரசித்தம். அவ்வளவு நல்ல ஆசிரியர், ஆனால் கடவுள் வேண்டாம் என்றிருந்தார். கல்லூரிக்காலங்களில் இயல்பாக இருக்கும் மத, மதப்பு, இளமை, எதிர்க்கும் குணம் எல்லாம் சேர்ந்து அவர் சொல்வதை நம்ப வைத்தது. அதிலும் எனக்கு உயிரியல் பரிணாமம் (evolutionary biology)என்பது இயல்பாகவே பிடித்த பாடம். அதில் விற்பன்னர் ஜே.சி.பிதான்.</div><div><br /></div><div>அவர் படித்த காலங்களில் பரிணாமவியலார் (evolutionist)என்றாலே கடவுள் வேண்டாம் என்று சொல்லுவோர் என்றிருந்தது. எனவே உயிரியல் விந்தைகள் எல்லாம், இயற்கை தானாக உருவாக்கியதே என்று சொல்லித்தந்தனர். எவ்வளவு, நம்பமுடியாத உயிரியல் எடுப்பும் (biological adaptation) நெடிய காலக்கெடுவில் தானாக சாத்தியப்படக்கூடியதே! என்று நம்பினர் இவர்கள். அது உண்மையாகவே இருக்கலாம். இயற்கைத்தேர்வு எனும் முறை நெடிய காலக்கணக்கில் கசடுகளைக் கழித்து, உயர்வானவற்றை தக்கவைக்கும் தன்மையதே. ஆயினும், இதற்காக பிரபஞ்ச காரணி என்ற ஒன்று தேவையே இல்லை என்று சொல்வதை என்னால் இப்போது கேள்வி கேட்கமுடிகிறது. அப்போது அந்த முதிர்ச்சியும், தெளிவுமில்லை. </div><div><br /></div><div>அதுமட்டுமில்லை, அப்போது, இயற்கையை ஆராய்வதற்கு இப்போதுள்ள வசதிகளும் இல்லை. நவீன தொழில்நுட்பம் வழங்கியிருக்கும் அளப்பரிய வசதியால் இயற்கையின் சந்து, பொந்திற்குளெல்லாம் புகுந்து படமெடுக்க முடிகிறது. மிகவும் கொடூரமான விலங்குகள் என்று நம்பியிருந்த விலங்குகளெல்லாம் ‘இதயம்’ உடைய (ih love & compassion) விலங்குகளே. அன்பு காட்டினால், பிரதி அன்பு செய்யக்கூடியவையே என்பதை நவீன உயிரியல் ஆவணமாக்கிக் காட்டியிருக்கிறது! </div><div><br /></div><div>உதாரணமாக சிங்கம், புலி, ஓநாய், கழுதைப்புலி, சிறுத்தை இவையெல்லாம் வீட்டு நாய் போல் பழகுவதைக் காணக்கூடியதாக உள்ளது. அவற்றின் குடும்ப வாழ்வை நோக்கினால், தாய்மை என்பதைப் பூரணமாகக் காணமுடிகிறது. குடும்ப வாஞ்சை என்பதில் மனிதருக்கு எவ்விதத்திலும் அவை சளைத்தவை இல்லை என்று தெரிகிறது. </div><div><br /></div><div>பின் ஏன் இந்த, Survival of the fittest மற்றும் Wildlife is full of killing and violence என்ற ஒரு அபிப்பிராயம்? காரணம் விலங்குகள் வேட்டையாடுவதை மனிதன் காணும் போது அது கொடூரமாக இவனுக்குத் தோன்றுகிறது. ஆனால், கொடிய விலங்குகள் என்று பெயர் பெற்றுவிட்ட விலங்குகள் இரை தேடுவது என்பது சாதாரண விஷயமில்லை. 10 முயற்சியில் ஒரு முயற்சிதான் பலிக்குமாம். அவை பல வாரங்கள் பட்டினி கிடக்கும் நிலமையுமுண்டு. எனவே, இப்போதெல்லாம், படமெடுக்கும் போது, அப்பாவியான மான் குட்டியை ஒரு சிறுத்தை கொல்கிறது என்றால் படமெடுப்பவர் தடுப்பதில்லை. ஏனெனில் அங்கு, நாலு சிறுத்தை குட்டிகள் தாய் கொண்டுவரும் உணவிற்காக ஏங்கி நிற்கின்றன. உண்மையில் சாகபட்சிணிகளைவிட, சிறுத்தை, புலிக்குட்டிகள் உயிர்பிழைத்து பெரியவைகள் ஆவது துர்லபம் என்று ஆய்வுகள் சுட்டுகின்றன. எனவே அங்கு நடப்பது எதுவும் கொடுமையானதல்ல. </div><div><br /></div><div>அடுத்து, இவைகளைப்படமெடுக்கும் போதுதான் தெரிகிறது, நமக்கும் அவைகளுக்கும் எவ்வளவு ஒற்றுமைகள் உள்ளன என்று. யானையைப் பலவருடங்களாக ஆவணப்படுத்தும் ஆய்வாளர் சொல்கிறார், ஒவ்வொரு யானையும் ஒருவிதம். கூச்சமான யானைகளுண்டு, சவுடால் யானைகளுண்டு, முரட்டு யானைகளுண்டு. இப்படி, எத்தனை குணங்களை நம்முள் காணமுடியுமோ அத்தனையும் அங்குண்டு. உண்மையில் அங்கிருந்துதான் நமக்கு, வழி, வழியாய் வந்திருக்கின்றன. </div><div><br /></div><div>இயற்கையில் பிறக்கும் போதே யார் நண்பன், யார் எதிரி என்று தெரிந்துவிடுகிறது. ஒரு யானைக்குட்டி ஒரு மானை, பகைவன் என்று கருதுவதில்லை. ஒரு மான், வரிக்குதிரையை எதிரி எனக்காண்பதில்லை. ஆனால், குள்ள நரியானாலும் அது பகைவன் என்று தெரிந்துவிடுகிறது. அதன் பல்லைப் பார்த்தா தெரிகிறது? இல்லை! உள்ளுணர்வு. அது என்ன உள்ளுணர்வு? </div><div><br /></div><div>மலேசியாவில் ஏதோவொரு அநாமத்தான கடற்கரையில் முட்டை வைத்து, குஞ்சு பொறித்துவிட்டால், இந்தக்குஞ்சு பெரிதாகி உலகில் எங்கிருந்தாலும் அதே கடற்கரைக்கு வந்து முட்டை இடுகிறது. முட்டைக்குள் இருக்கும் கருவிற்கு யார் சொல்லித்தந்தது? சாலமன் மீன் வருடாவருடம் சொல்லொணா இடர்களைத்தாண்டி, எதிர்நீச்சல் போட்டு கடலிலிருந்து, ஆற்றுக்கு வந்து, மலையருவி தாண்டி, எங்கு முட்டை பொறித்ததோ அதே குட்டைக்கு வந்து முட்டை பொறித்து சாகிறது. ஆம், முட்டை பொறித்தவுடன் அதுவரை உயிரைப்பிடித்துக் காத்திருந்த ஏதோவொரு வலு, போய் விடுகிறது. பட்டென மல்லாக்க செத்து மிதக்கிறது? என்ன அதிசயம்? என்ன ஒழுங்கு? </div><div><br /></div><div>இந்த உயிரியல் ஒழுங்கு, பிற பிரபஞ்ச ஒழுங்கிலிருந்து மாறுபட்டிருக்கிறதா? எல்லாமே ஒரு ஒழுங்கில் ஊழி, ஊழியாக செயல்பட்டு வருகின்றன. </div><div><br /></div><div>எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்தார்கள். உயிரியல் பரிணாமம் என்பது ஒரு செல் உயிரியிலிருந்து பல செல் உயிரிக்கு வளர்ச்சியடைதல் என்று. ஓரரறிவுப் பிராணியிலிருந்து, ஆறறறிவுப் பிராணியாக மாறுவது பரிணாமமென்று. இத்தனை நாள் நம்பியிருந்தேன், ஆழ்வார்களை அறியும் வரை! </div><div><br /></div><div>முட்டை ஒரு செல்தான். கருவுறுதல் என்பதைப் போன்றதொரு மந்திரச்செயல் உலகில் வேறேதுமில்லை. நேற்று யானை கருவுறுதலைப்பற்றிய படம் பார்த்தேன். நம்மைப் போல் கட்டிப் புரண்டு கலவி செய்ய யானையால் முடியாது. தாட்டியான உடம்பு. எனவே யானைக் கலவி என்பது சில விநாடிகளில் முடிந்துவிடுகிறது. ஆனால் 500 மிலிலிட்டர் விந்துவைப்பாய்ச்சுகிறது யானை. இதில் மனித விந்தணு போல் 10 மடங்கு அதிகம் விந்துக்கள் உள்ளன. ஆயினும் அவை மனித உடலைப் போலல்லாமல் யானையின் உடலுக்குள் சென்று கருவுறச்செய்வதற்குள், மிகக்கடினமான பாதைகளை, தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளது. இத்தனை கோடி விந்துவில் கடைசியில் ஒரேயொரு விந்து குட்டியானை உருவாகக் காரணமாகிறது. கருவுற்ற பின் 22 மாதங்கள் கர்பவாசம்! அப்பாடா! என்றிருக்கிறது. இதைவிட பெரிய விந்தை என்னவுள்ளது? </div><div><br /></div><div>அறிவு என்பது பெரிய காவியம் பாடுவதில் மட்டும் உள்ளதா? </div><div>அறிவு என்பது பெரிய பாலம் கட்டுவதில் மட்டும் உள்ளதா? </div><div>அறிவு என்பது அணுகுண்டு செய்து பல்லாயிரம் மக்களை மாய்ப்பதில் மட்டுமுள்ளதா? </div><div><br /></div><div>ஆராய்ந்து பார்த்தால் அறிவு என்பது பூரணமாக எங்கும் வியாபித்து இருப்பதே உண்மை. அது ஒரு கொசுவின் உடம்பில் சைதன்யமாக இருப்பது அதிசயம். அதே அறிவு ஒரு டைனோசார் உடம்பில் வாழ்ந்தது அதிசயம். ஒரு செல் பாக்டீரியாவிற்கு அறிவில்லையா என்ன? எங்கில்லை அறிவு. </div><div><br /></div><div>ஒவ்வொரு உயிரும் தத்தம் விதிவகை பிரபஞ்ச ஒழுங்கில் செயல்பட்டு வருகின்றன. யானை, யானையாகவே வாழ்கிறது. கழுதைப்புலி போல் கடித்துக் கொதறுவது இல்லை. அது, அதற்கு ஒரு தர்மம். புலி கொல்லும் போது, பிராண வேதனை அதிகமில்லாமல் குரல்வளைக் காற்றை ஒரே கடியில் வாங்கிக் கொல்கிறது. ஆனால் கழுதைப்புலி கிடைத்த இடத்தில் கடித்துக்கொதறுகிறது. சாகும் மான் பாதி உடல் போன பின்னும் மிரண்டு தவிக்கிறது. சிங்கம் ஒரே அடியாக பிடறியில் அறைந்து ஒரு நொடியில் கொன்று விடுகிறது. ஆனால், குழவி ஒரு புழுவை உயிருடன் பிடித்து, அதை ஒரு ஊசி போட்டு அப்படியே பதப்படுத்தி, தன் குஞ்சு பொறித்தவுடன் சுடச்சுட சாப்பிடும்படி செய்கிறது? </div><div><br /></div><div>இதற்கெல்லாம் பாடம் சொல்லிக்கொடுத்தது யார்? இவ்வளவு சூட்சுமம் உள்ளே எப்படிப் போனது?
பரிணாமம் என்ற கொள்கையே உண்மையா? என்ற கேள்வி வந்துவிட்டது இப்போது! இத்தனை நாள் நான் எழுதிவந்த மடல்களில் சொல்லிய பரிணாமம் உண்மையா? நான் படித்த பாடம் உண்மையா?
இல்லை! என்று தோன்றுகிறது. </div><div><br /></div><div>அறிவு பூரணமாக எங்கும், எப்போதுமுள்ளது. அது எடுக்கும் உயிர் நிலைக்கு ஏற்றவாறு பல்வேறுவகையில் தன்னை வெளிக்காட்டிக்கொள்கிறது.</div><div><br /></div><div><span style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">அவரவர்தமதமது அறிவறிவகைவகை</span></div><span style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">அவரவரிறையவர் எனவடியடைவர்கள்</span><br style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px; margin: 0px; padding: 0px;" /><span style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">அவரவரிறையவர் குறைவிலரிறையவர்</span><br style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px; margin: 0px; padding: 0px;" /><span style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">அவரவர்விதிவழி அடையநின்றனரே</span><div><br /></div><div><span style="color: #000099;"></span>எனும் திருவாய்மொழி ஏதோ நமக்குச் சொல்லியது போல் படுகிறது. ஆனால், இதையொரு பிரபஞ்ச விதிபோல் சொல்லிச்செல்கிறான் மாறன் சடகோபன். ஒவ்வொரு உயிரியும் தத்தமது அறிவு வகையென ஒரே பிரபஞ்ச அறிவைப் பிரதிபாலிக்கிறது. அறிவு வகையாக நிற்கும் போது அவையவைக்கு இட்ட கட்டளையைச் செய்து முடிக்கின்றன. முதலையாகப் பிறந்தால் கடித்துக்குதறுவதில் தவறில்லை. அது, அதன் சுயதர்மம். ஆனால், மனிதனாகப் பிறந்துவிட்டு அவனுக்கு இட்ட விதியை அறியாமல் விலங்கு போல் வாழ்வது தவறு. வேடிக்கையாகச் சொல்லுவார்கள், எறும்பாகப் பிறந்துவிட்டால் எறும்புக்கடவுளுண்டு என்று. அவரவர் இறையவர், குறைவிலர். ஆயினும் இவையெல்லாம் கடைசியில் அடைகின்ற ஒரு பாதம் இறைவன் ஒருவன்தான். </div><div><br /></div><div>ஏனப்படி சொல்ல வேண்டும்? </div><div><br /></div><div>எல்லா உயிர்களின் அடிநாதமாக தழுவல், கூடல், கலத்தல், உயிர்த்தல், என்று இருக்கிறது. இவையாவும் செய்யும் போது அன்பு ஒன்றே பிரதானமாக இருக்கிறது. வாழ்வு அனைத்துமே அந்த ஒரு கணத்திற்குத்தான். அப்போது காணும் இன்பம் பல்வேறாகப் பேசபடுகிறது. வாலை இன்பம். தந்திரம் என்று. மனித வாழ்வு என்று வரும் போது தனியாக இருந்து போகக்கூட்டு இல்லாமலே இதை அடையவும் முடிகிறது. அதை யோகம், சமாதி, சத்தோரி என்கிறோம்.</div><div><br /></div><div>எப்படிச் சொன்னாலும், எல்லா இயக்கத்திற்கும் ஆதாரமாக உள்ளது, அன்பு ஒன்றுதான். இதைக் கண்டு பிடித்துவிட்டனர் நம் முன்னோர்கள்.
<pre><span style="color: #000099;">சூதனாய்க் கள்வ னாகித்
தூர்த்தரோ டிசைந்த காலம்,
மாதரார் கயற்க ணென்னும்
வலையுள்பட் டழுந்து வேனை,
போதரே யென்று சொல்லிப்
புந்தியில் புகுந்து, தன்பால்
ஆதரம் பெருக வைத்த
அழகனூ ரரங்க மன்றே?</span> </pre>
இதற்கு வேறொரு வாசிப்பு கொடுத்துப் பாருங்கள். சூதனாய், கள்வனாய் என்பதை பல்வேறு பிறவி என்று கொண்டால், பல்வேறு வகையான உயிர் வலையில் பட்டிருந்த போதும், அவன் புந்தியில் புகுந்து, தன்பால் ஆதரம் பெருக வைத்துக்கொண்டுதான் இருக்கிறான். </div><div><br /></div><div>விலங்கிற்கு மனது இல்லையென்று யார் சொன்னது? </div><div><br /></div><span style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">நரகும் சுவர்க்கமும் நாண்மலராள் கோனைப்</span><br style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px; margin: 0px; padding: 0px;" /><span style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">பிரிவும் பிரியாமையுமாய்த் - துரிசற்றுச்</span><br style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px; margin: 0px; padding: 0px;" /><span style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">சாதகம் போல் நாதன் தனருளே பார்த்திருத்தல்</span><br style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px; margin: 0px; padding: 0px;" /><div><span style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">கோதில் அடியார் குணம்.</span> </div><div><br /></div><div>என்பது நமக்குச் சொன்னது? என்று எப்படிக் கொள்வது. பெரும்பாலான விலங்கு வாழ்வு அவனிட்ட வழக்காய், அவனருள் வேண்டித்தானே! இருக்கிறது திறந்த வெளியில், உண்ணக்காத்திருக்கும் விலங்கின்றும் காத்து ஒரு மான் குட்டிக்குப் பிரசவம் பார்ப்பது யார்? குட்டிக்கு பிறந்தவுடனே தத்தி, தத்தி நடக்கப்பண்ணுவது யார்? இயற்கையில் காணும் அத்தனை விலங்கியல் தந்திரங்களையும், சூட்சுமங்களையும் கற்றுக் கொடுப்பது யார? புலிக்கு கடிக்கத்தெரியுமென்றால் மானுக்கு ஓடத்தெரியும். சிங்கத்திற்கு அடிக்கத்தெரியுமென்றால் முள்ளம் பன்றிக்கு அடிக்கவிடாமல் தடுக்கத்தெரியும். கிட்ட வந்தால் ஒரு ஓட்டிற்குள் நுழைந்து கொள்ளும் தந்திரம் நத்தைக்கும், ஆமைக்கும் சொல்லித்தந்தது யார்? அவை யாரிட்ட வழக்கிற்கு வாழ்கின்றன? </div><div><br /></div><div>அரங்கன் கோயிலில் ஒரு சிற்பி. செதுக்கிக்கொண்டிருக்கும் போது, உளி பட்டு, கல் சிதற, உள்ளிருந்து சிறு தேரை தாவி ஓடியது. அது கண்ட சிற்பி, அப்படியே விட்டான் வேலையை! கல்லினுள் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும் வாழ்வளித்து காக்கும் ரங்கன் இனி என்னையும் ரக்ஷிக்கட்டுமென்று.</div><div><br /></div><div><span style="color: #006600;">”துரிசற்றுச் சாதகம்போல் நாதன் தனதருளே பார்த்திருக்கும் கோது இல் அடியார் குணம்". </span></div><div><br /></div><div>
என்பது இதுதான். நம்மைச் சூழ்ந்து அவனுள்ளான். அவனுள் ஐக்கியத்தின் ஐக்கியமாய் நாமுள்ளோம். </div><div><br /></div><div><strong>இன்று, இப்பொழுதே போகட்டும் வல்லுயிர் சாபங்கள்! கலி கெடட்டும். அவை நைந்து போன நமனுக்கு. நமக்கில்லை என்று உழிகொண்டு வாழ்வோம். வாழ்க! வாழ்க!!</strong></div>Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com27tag:blogger.com,1999:blog-11685832.post-35475562971400792442009-03-13T13:06:00.007+05:302020-06-03T11:04:47.150+05:30மந்திரமாவது வாழ்வு!<div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-ON9KKHlpXX8/XsYzlSD9C1I/AAAAAAABC7g/stpI5geeatMBQrxO_RffzsEOaeEYBGWZACK4BGAsYHg/Childhood.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2651" data-original-width="3756" src="https://1.bp.blogspot.com/-ON9KKHlpXX8/XsYzlSD9C1I/AAAAAAABC7g/stpI5geeatMBQrxO_RffzsEOaeEYBGWZACK4BGAsYHg/s320/Childhood.jpeg" width="320" /></a></div><div><br /></div><div><br /></div>Mr Magorium's Wonder Emporium எனும் படம் பார்த்தேன். <div><br /></div><div>கீழுள்ள சுட்டியில் படத்தின் முழுவிவரம் காணலாம் </div><div><a href="http://www.magorium.com/">http://www.magorium.com/</a> </div><div><br /></div><div>ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் Dustin Hoffman நடித்திருக்கிறார். குடும்பத்துடன் காணவேண்டிய படம். படத்தின் கதை எளிது.</div><div><br /></div><div>குழந்தைப்பருவத்தில் கண்ணில் தெரியும் மாந்தீரகத்தை சாகும்வரை தக்க வைத்துக்கொள்! என்பதே கதைக்கரு! </div><div><br /></div><div>குழந்தைப்பருவம் அவ்வளவு ஆச்சர்யமான பருவம். உலகமே ஒரு மாய உலகமாக. அதீத நிகழ்வுகளை மிகச் சாதரணமாகக் கொள்ளும் பருவம்.</div><div><br /></div><div>ஆனால் போகப்போக மனிதன் சமூகத்தால் மாற்றப்படுகிறான். மிக அழுத்தமான ஆளாக, பகுத்தறிவுப் பகலவனாக மாறிவிடுகிறான். அத்தோடு அவனது கனவுகள், கற்பனைகள், மாயாஜாலங்கள் சமாதியாகிவிடுகின்றன.</div><div><br /></div><div>ஆனாலும், மனிதன் குழைந்தப் பருவத்திற்கு ஏங்காத பொழுதில்லை.</div><div><br /></div><div>ஜெர்மனியில் குழந்தைப்பருவத்தை சிறப்பிக்கும் வகையில் 6-7 வயதுவரை பள்ளி செல்ல வேண்டிய அவசியமில்லை! கட்டாயமாக ரைம்ஸ் சொல்லி, 2ம் கிளாஸ் பாடத்தை கீழ்கிண்டர்கார்டனில் படித்துக்குடிக்க வேண்டியதில்லை! ஏன்? அப்பருவம், எப்பளுவுமில்லாமல், சுதந்திரமாக, தான் காணும் ஒரு மாய உலகில் சஞ்சரிக்கும் பருவம். அது போனால் வாராது என்பதால்தான். எனவே குழந்தைப்பருவத்தை பள்ளியெனும் சிறையில் அடைக்காமல் ஜெர்மனியில் நீட்டித்துள்ளனர். </div><div><br /></div><div>இதை நம்மவர் புரிந்து கொண்டுள்ளனரா? நிச்சயமாக. கண்ணன் எனும் கதாபாத்திரமே குழந்தைப்பருவத்தின் மாந்தீரீகத்தன்மையை தக்கவைக்க வந்ததுதான். கண்ணனின் பாலலீலைகளில் மயங்காத கவிகளுண்டோ? காவியுடையுடுத்தி, கடும் விரதமிருக்கும் சங்கரர்கூட கிருஷ்ணலீலையில் ஈடுபடுகிறார். காஞ்சிப்பெரியர், "பகவான் எப்படி மகிழ்வாக கோகுலத்தில் ஆடுகிறான்! நாம் அழுவதற்குப் பிறந்தவர்கள்" என்பது போல் பேசியிருக்கிறார். </div><div><br /></div><div>கவிஞர்களுக்கு இயல்பாகவே மென்மையான உள்ளம் என்பதால் கிருஷ்ணலீலை சுவைக்கிறது. விஞ்ஞானிகளுக்கோ ஆர்வத்தின் காரணமாக குழந்தை மனம் வந்துவிடுகிறது. அவர்களைக் "குழந்தை போன்ற முதியவர்கள்" என்றுதான் மேலை உலகில் அழைக்கின்றனர். கவிஞர் வேர்ட்ஸ் வொர்த் (William Wordsworth ) ஒருநிலை போய் child is the father of man என்று சொல்லிவிடுகிறார். அது என்ன? என்று ஆழ்வார்களைக் கேட்டால்தான் தெரியும்! </div><div><br /></div><div>வால்ட் டிஸ்னி குழந்தை உலகை சினிமாவில் தக்க வைக்க என்றே பிறந்தவர். இக்கருத்தை வைத்து எத்தனை அற்புதமான படங்கள் வந்துவிட்டன!</div><div><br /></div><div>கண்ணனின் பாலலீலைகள் 10 வயதிற்குள் அது முடிந்துவிடுகின்றன. கண்ணன் கோகுலத்தை விட்டு போனபின் அவனும் ஏங்குகிறான் அப்பருவத்திற்கு. </div><div><br /></div><div>தத்துவ சாரமாக, வாழ்வின் நிலையாமை குறித்து, மூப்பு குறித்து, பிணி குறித்து, இடும்பை இடும் பை குறித்து, பரத்துவம் குறித்து எல்லாம் பேசினாலும், ஆழ்வார்களுக்கு பிகவும் பிடித்தமான சப்ஜெக்ட் கிருஷ்ண லீலைதான். ஏனப்படி? அங்குதான் வாழ்வின் ரகசியமே அடங்கியிருக்கிறது.</div><div><br /></div><span style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">இலனது வுடையனி தெனநினை வரியவன்</span><br style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px; margin: 0px; padding: 0px;" /><span style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்</span><br style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px; margin: 0px; padding: 0px;" /><span style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">புலனொடு புலனலன், ஒழிவிலன், பரந்த அந்</span><br style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px; margin: 0px; padding: 0px;" /><div><span style="color: #000099;"><span style="background-color: white; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">நலனுடை யொருவனை நணுகினம் நாமே</span> </span></div><div><br /></div><div>
என்கிறார் திருக்குருகூர் ஞானதேசிகன். ஏதாவது புரிகிறதா? ஈடு இல்லையெனில் ஒன்றும் புரியாது. இறைவனைப்பற்றி சொல்லும்கால், 'அதனை உடையவன், இது இல்லாதவன்' என்று இருதன்மையாலும் நினைக்க முடியாதன். நிலம், விசும்பு எனும் எப்பரப்பிலும் உள்ளவன், உருவமுடையவன், அருவமானவன்,புலனொடு புலனாக உள்ளவன், ஆயினும் புலன் வழி இடர்களைச் சாராமல் இருப்பவன். இப்படிப்பரந்த நலன்களையுடைய ஒருவனை நாம் நம் வழித்துணைவனாகப் பெற்றோமே! என்கிறார். முதல் பத்து முழுவதும் இப்படி ஒரே ஞானதத்துவங்கள்தான். </div><div><br /></div><div>ஆனால் மூன்றாம் பத்து வருவதற்குள் பத்துடை அடியர்க்கு எளியவன் என்று கண்ணன் ஆப்புண்ட கதைக்குப்போய்விடுவார். பரம்பொருளை ஆப்பிடமுடியுமோ? யசோதையால் தாம்புக்கயிற்றை வைத்து கட்டிட முடியுமோ? ஆனால், அப்பருவத்தில்தான் அவ்வளவு எளிமை! அத்திறம் கண்டு மயங்கி நிற்கிறார் நம்மாழ்வார். </div><div><br /></div><span style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறா</span><br style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px; margin: 0px; padding: 0px;" /><span style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">மழலைமுற்றாதஇளஞ்சொல்லால் உன்னைக்கூவுகின்றான்</span><br style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px; margin: 0px; padding: 0px;" /><span style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">குழகன்சிரீதரன் கூவக்கூவநீபோதியேல்</span><br style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px; margin: 0px; padding: 0px;" /><div><span style="color: #000099;"><span style="background-color: white; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ</span> </span></div><div><br /></div><div>நம்ம பட்டர்பிரான் கண்ணனை மடியில் வைத்துக்கொண்டு 'மம்மு' சாதித்துக்கொண்டிருக்கிறார். திடீரென்று குழந்தை நிலாவைப்பார்த்து இதைக் கொண்டு வா! என்கிறது. ஏதோ வீட்டில் விளையாடும் 'சொப்பு' என்பது போல்! கேட்பவன் யார்? தெய்வீகக்குழந்தை! குழகன், சிரீதரன்!! கூவினால் வந்து சேர் என்கிறார் பட்டர்பிரான். எல்லாம் சாத்தியமே! ஈதெல்லாம் அவன் லீலாவிபூதிதானே! </div><div><br /></div><span style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">பாலகனென்று பரிபவம்செய்யேல் பண்டொருநாள்</span><br style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px; margin: 0px; padding: 0px;" /><span style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன்</span><br style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px; margin: 0px; padding: 0px;" /><span style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">மேலெழப்பாய்ந்து பிடித்துக்கொள்ளும்வெகுளுமேல்</span><br style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px; margin: 0px; padding: 0px;" /><div><span style="color: #000099;"><span style="background-color: white; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">மாலைமதியாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா</span> </span></div><div><br /></div><div>
இவனை வெறும் பாலகனென்று பரிபாவம் செய்யாதே மாமதீ! இவன் பண்டொருநாள் உன்னையும், என்னையும், சகலலோகங்களையும் ஆலிலைச் சிறுவனாக இருந்து விழுங்கியன். எனவே மரியாதையாக நீயே கீழே வந்து விளையாடு என்கிறார். ஏன் முடியாதா? என்ன? </div><div><br /></div><span style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">உண்டா யுலகேழ் முன்னமே,</span><br style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px; margin: 0px; padding: 0px;" /><span style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">உமிழ்ந்து மாயை யால்புக்கு</span><br style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px; margin: 0px; padding: 0px;" /><span style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர்</span><br style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px; margin: 0px; padding: 0px;" /><span style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">உவலை யாக்கை நிலையெய்தி</span><br style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px; margin: 0px; padding: 0px;" /><span style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">மண்டான் சோர்ந்த துண்டேலும்</span><br style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px; margin: 0px; padding: 0px;" /><span style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">மனிசர்க் காகும் பீர் சிறிதும்</span><br style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px; margin: 0px; padding: 0px;" /><span style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">அண்டா வண்ணம் மண்கரைய</span><br style="background-color: white; color: #000099; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px; margin: 0px; padding: 0px;" /><div><span style="color: #000099;"><span style="background-color: white; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; font-size: 12px;">நெய்யூண் மருந்தோ? மாயோனே. 1.5.8</span> </span></div><div><br /></div><div>
இவன் ஏன் கோகுலத்தில் வந்து நின்று வெண்ணெய் உண்டான் என்பதற்கு நம்மாழ்வார் ஒரு புதுக்கதை சொல்கிறார். இவன் முன்பு உலகமெல்லாம் உண்டவன். அப்போது வயிற்றில் நிறைய மண் தங்கிப்போய் சோகை பிடித்துவிட்டது. அதைப்போக்க சிறு மானுடராய் பிறந்து வெண்ணெய் உண்டு நோய் போக்கிக்கொண்டானாம்.
</div><div><br /></div><div>எவ்வளவு பேசமுடிகிறது பாருங்கள்! </div><div><br /></div><div>மாயையை, மாயையால்தான் நீக்க முடியும். நாரண மூர்த்தி மாய வலையை விரித்து லீலாவிபூதியை உருவாக்கினால், நாமும் மாயையை உண்மை என்று நம்பி ஆனந்தித்து, குதூகலித்து மகிழும் போது 'மாயைக்கே' சந்தேகம் வந்துவிடுகிறது ;-) </div><div><br /></div><div>கஷ்டப்பட்டு தவமிருந்து, உடலை வருத்தி, உலகே மாயம் என்று காண்பதற்குப்பதில், பசித்த போது புசித்து, வேர்த்த போது குளித்து, உலக வாழ்வை அதன் போக்கில் ஆனந்திக்கும் போது அவனின் மாயாவிபூதியை உள்ளபடி அனுபவித்ததாகிறது! பிறகென்ன? இறைவனை அனுபவிக்கத்தானே பிறப்பு? </div><div><br /></div><div>காணும் காட்சியெல்லாம் மந்திரம், செய்யும் செய்கையெல்லாம் மந்திரம், பேசும் பேச்செல்லாம் மந்திரம், இப்படி எழுதி வீசி கணினித்திரையில் வாசிப்பதும் மந்திரம்!!</div><div><embed allowfullscreen="true" allowscriptaccess="always" fs="1" height="344" src="http://www.youtube.com/v/H-Vz9EvAQhI&hl=" type="application/x-shockwave-flash" width="425"></embed></div>Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-11685832.post-59585696055419849252009-02-22T09:24:00.003+05:302020-06-03T11:05:03.051+05:30குற்றம் நீங்கின வேதங்களே!<div align="left"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-gDEss-m7eCo/XsY1V7gkhXI/AAAAAAABC78/JtRB2KXXSMoNBr1IRjQ2N2Xph4PW6Qy_QCK4BGAsYHg/Nammalvar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="500" data-original-width="350" height="320" src="https://1.bp.blogspot.com/-gDEss-m7eCo/XsY1V7gkhXI/AAAAAAABC78/JtRB2KXXSMoNBr1IRjQ2N2Xph4PW6Qy_QCK4BGAsYHg/s320/Nammalvar.jpg" /></a></div><div align="left"><br /></div><div align="left">நம்மாழ்வாரை இவ்வளவு கொண்டாடக் காரணமென்ன? </div><div align="left"><br /></div><div align="left">ஒவ்வொரு துறை சார்ந்தோர் ஒவ்வொரு கருத்துச் சொல்வர். அரங்கனார் (ஸ்ரீரங்கம் மோகன ரங்கன்) ஒரு பெரிய கட்டுரையே எழுதிக் கொண்டிருக்கிறார். </div><div align="left"><br /></div><div align="left">நம்மாழ்வார் ஓரு தொன்மையான மரபை நமக்கு மீட்டுத்தந்திருக்கிறார்.
</div><div align="left">ஒரு புதிய பாதையை காட்டி அருளியிருக்கிறார்.
</div><div align="left">நம் எல்லோருக்கும் எக்காலத்திலும் உற்ற தோழனாய்/தோழியாய் இருக்கும் வண்ணம் பாமாலையில் உறைந்து காட்டியிருக்கிறார்.
</div><div align="left">நம்மாழ்வாருக்கு 'வெறும்' நாமத்தைச் சார்த்திவிட்டு ஒதுக்கிவிடாமல் அவரது பனுவல்களை தமிழராகிய நாம் ரசித்து, உய்த்துணரப் பழக வேண்டும். அதற்கு இத்தொடர் உதவும். </div><div align="left"><br /></div><div align="left"><font size="2"><span style="background-color: white; color: #000066; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif;">மனையும் பெருஞ்செல் வமுமக்க ளுமற்றை வாழ்வுந் தன்னை</span><br style="background-color: white; color: #000066; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; margin: 0px; padding: 0px;" /><span style="background-color: white; color: #000066; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif;">நினையும் பதமென நின்றபி ரான்குரு கூர்நிமலன்</span><br style="background-color: white; color: #000066; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; margin: 0px; padding: 0px;" /><span style="background-color: white; color: #000066; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif;">புனையுந் தமிழ்க்கவி யால் இருள் நீங்கிப் பொருள்விளங்கி</span><br style="background-color: white; color: #000066; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; margin: 0px; padding: 0px;" /><span style="background-color: white; color: #000066; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif;">வினையுந் திரிவுற் றனகுற்ற நீங்கின வேதங்களே!</span></font></div><div align="left"><em><br /></em></div><div align="left">
<em>குடும்பம், சொத்து, பந்தம் இவையே வாழ்வென இருக்கும் நமக்கு, குற்றமற்ற நம்மாழ்வார் பாதங்கள் கிடைக்கப்பெற்ற பின், அவரது இன்சுவை தமிழ் கவியால் நம் வினைகள் யாவும் விலகி, வாழ்வின் பொருள் விளங்கி, இதுவறை செய்திருந்த குற்றங்கள் எல்லாம் நீக்கப்பெற்று வளம் பெற்றன வேதம் புதிதெனும் அவன் வாக்கால்.</em> </div><div align="left"><br /></div><div align="left">இந்தக் கடைசி வரியை எப்படிப் பொருள் கொள்ளலாமென யோசித்தேன்? நம் குற்றங்களை அவன் வேதங்கள் நீக்கினவா? இல்லை, அவன் இன்கவியால் வேதங்கள் தம்மிடமிருந்த குற்றங்களை நீக்கினவா? நினைக்கக்கூட பயமாக இருந்தது! வேதத்தில் குற்றமா? இருக்காதுதான். ஆயினும், இந்த அரங்கத்து <span style="color: #cc33cc;">'தாமரைப் புரட்சியை'</span> கண்ணுறும் போது அப்படியொரு பொருள் பூடகமாக உள்ளுரைவது போல் தோன்றுகிறது.
திருக்குறளை புகழ்ந்து எழுந்த திருவள்ளுவ மாலையில் ஒரு பா. வெள்ளி வீதியார் என்பவர் எழுதியிருக்கிறார். அது அப்படியே திருவாய்மொழிக்குப் பொருந்துவதுதான் ஆச்சர்யம்! </div><div align="left"><br /></div><div align="left"><font size="2"><span style="background-color: white; color: #006600; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif;">'செய்யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த</span><br style="background-color: white; color: #006600; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; margin: 0px; padding: 0px;" /><span style="background-color: white; color: #006600; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif;">பொய்யா மொழிக்கும் பொருளொன்றே--செய்யா</span><br style="background-color: white; color: #006600; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; margin: 0px; padding: 0px;" /><span style="background-color: white; color: #006600; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif;">அதற்குரிய ரந்தணரே யாராயி னேனை</span><br style="background-color: white; color: #006600; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif; margin: 0px; padding: 0px;" /><span style="background-color: white; color: #006600; font-family: TheneeUniTx, "Lucida Grande", Geneva, Arial, Verdana, sans-serif;">யிதற்குரிய ரல்லாதா ரில்.'</span></font></div><div align="left"><em><br /></em></div><div align="left">
<em>அதாவது, செய்யா மொழி (எழுதாக்கிளவி) என்று சொல்லப்படும் வேதத்தின் பொருளும், திருவள்ளுவர் செய்த பொய்யா மொழியும் பொருளால் ஒன்றே. ஆயின், செய்யாமொழி (வேதம்) அந்தணர்க்கு என்றாகிப்போனது. இக்குறை தீர்க்க வள்ளுவனின் புதிய வேதம் எல்லோர்க்கும் என்றாகிப்போனது. </em></div><div align="left"><br /></div><div align="left">
மிக அழகான பாடல். நம் மண்ணில் 50களில் உருவான கலாச்சார புரட்சியால் வள்ளுவனை சுத்தப்படுத்த முயன்றாலும் (sterilize him from social stigma), தமிழ் மரபு திருக்குறளை வேதம் என்றே சொல்கிறது. At least, அவர் காலத்தவர்கள் அப்படித்தான் கண்டனர் என்று தெரிகிறது. <span style="color: #cc0000;">'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'</span> என்று வள்ளுவன் வேதத்தைப் பொதுமைப்படுத்தியிருப்பது தெரிகிறது. ஆனால், மிகச்சாமர்த்தியமாக, வேதம் என்று சொல்லிவிட்டால் பிற மதத்தினர், பிற சாதியினர் (குறிப்பாக அந்தணர்கள்) மிரண்டு விடுவர் என்றெண்ணி வள்ளுவன் அதை எப்பெயரிட்டும் அழைக்காமல், மற்றோரும் எப்பெயரிட்டும் அழைக்கமுடியாமல் ஒரு பெரும் காரியம் செய்துவிட்டான். ஏனப்படி செய்தான்? என்று யோசித்தால், அப்படிச் செய்தால்தான் வேதக்கருத்துக்கள் மக்களை எவ்வித filters ம் இல்லாமல் சென்றடையும் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கிறது. கருத்து போவது முக்கியமா? இல்லை அதை எடுத்துச் செல்லும் பாத்திரம் முக்கியமா? என்ற கேள்வி வந்தால், கருத்திற்கே முதலிடம் கொடுத்தனர் சான்றோர். எல்லோரும் திருக்குறளைச் சொல்லுகின்றனர். ஆத்திகமோ, நாத்திகமோ. எப்படியோ வேதக்கருத்துக்கள் மக்களிடம் சென்றால் சரி, என்று சொல்லவருகிறார் வெள்ளிவீதியார் எனும் சங்கப்புலவர்.</div><div align="left"><br /></div><div align="left">அதே போல், பல நூற்றாண்டுகளுக்குப்பின் மீண்டும் வேதம் புதிது செய்ய வேண்டிய காலம் நம்மாழ்வார் காலம். இவரும் வள்ளுவர் போல், வேதத்தின் சாரத்தை அப்படியே தமிழ்ப்பாவில் வடிக்கிறார். வடித்து அதை அந்தணர்க்கு மட்டுமின்றி எல்லோருக்கும் விநியோகம் செய்கிறார். இவரின் உளக்கிடக்கை(ஆசார்ய ஹ்ருதயம்) அறிந்த வைணவப் பெரியோர்கள் இதையே கோயில் மொழியாக்கி, எல்லோரும் அறிவும் வண்ணம் செய்துவிட்டுப் போயினர். ஆயினும் காலப்போக்கில் இதுவும் அந்தணர்மாட்டே நின்று போனது. </div><div align="left"><br /></div><div align="left">எனவே மீண்டும், அதை எடுத்து எல்லோருக்கும் விநியோகம் செய்ய <a href="http://groups.google.com/group/minTamil/">மின்தமிழ்</a> முயல்கிறது! </div><div align="left"><br /></div><div align="left">சரி, வேதத்தில் குறை என்ன? கேள்வியை தி.க, தி.மு.காவிடம் கொடுத்தால் பேசுவர், பேசுவர் அவ்வளவு பேசுவர். அவ்வளவு குறைகளை எடுத்துச் சொல்வர். சரி, இதை நமது ஆச்சார்ய சீலர்கள் உணரவில்லையா? என்றால். ஆம்! அவர்களும் உணர்ந்துள்ளனர். நான் முன்பு எழுதியது போல், வேதம் என்பது காலம்கடந்து நிற்கிறது. </div><div align="left"><br /></div><div align="left">மனித பரிணாமத்தில், தோற்றமுற்ற காலங்களில் அக்காலக்கட்டத்திற்கு தேவையான விதிமுறைகளைச் சொல்லிச் சென்றது. ஆயின், காலம் மாற, மாற பழைய கணக்குகள் பொருந்துவதில்லை. எனவே அவற்றைக்களைய வேண்டியது அவசியமே. இதை அறிந்துதான் பட்டபிரான், வல்லப பாண்டியனுக்கு பரஞானம் காட்டிய போது எல்லா வேதங்களையும் எடுத்துரைக்கவில்லை. கழிப்பதைக்கழித்து, ஏற்பதை ஏற்று, "வேண்டிய ஓதங்கள் ஓதி, விரைவில் கிழி அறுத்தான்" என்று சொல்கிறது சரித்திரம். எனவே, எப்படி திருக்குறள் குற்றமற்று நிற்கிறதோ, அதே போல், திருவாய்மொழியும் குற்றமற்று நிற்கிறது. </div><div align="left"><br /></div><div align="left"> அப்படியெனில் "குற்றம் நீங்கின வேதங்களே" என்று சொல்லலாம் அல்லவா!</div>Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-11685832.post-74679752178681109932008-02-20T11:16:00.007+05:302008-06-14T12:09:31.681+05:30பாசுர மடல் - நுழை வாயில்<strong>பாசுர மடல்கள்</strong><br /><br />000. <a href="http://thirumozi.blogspot.com/2008/02/000.html">நாலாயிர திவ்விய பிரபந்தம் - முன்னுரை </a><br />001. <a href="http://thirumozi.blogspot.com/2008/02/001.html">ஆழ்வார்களின் அறிமுகம்</a><br />002. <a href="http://thirumozi.blogspot.com/2008/02/002.html">எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்</a><br />003. <a href="http://thirumozi.blogspot.com/2008/02/003.html">பாயிரம் வாயிலாகத் தமிழ் மறுமலர்ச்சி</a><br />004. <a href="http://thirumozi.blogspot.com/2008/02/004.html">ஆழ்வார்கள் அனுபவித்த இறைமை</a><br />005. <a href="http://thirumozi.blogspot.com/2008/02/005.html">காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ</a><br />006. <a href="http://thirumozi.blogspot.com/2008/02/006.html">விதையாக நற்றமிழை வித்திட்டாய்</a><br />007. <a href="http://thirumozi.blogspot.com/2008/02/007.html">சொல்லினில் சுருங்க நின் குணங்கள் சொல்ல யார் வல்லரே?</a><br />008. <a href="http://thirumozi.blogspot.com/2008/02/008.html">அதீத காதலும் பக்தி இலக்கியமும்</a><br />009. <a href="http://thirumozi.blogspot.com/2008/02/009.html">சாதிகள் இல்லையடி பாப்பா!</a><br /><br />010. <a href="http://thirumozi.blogspot.com/2008/02/010.html">என் அமுதினைக் கண்ட கண்கள்</a><br />011. <a href="http://thirumozi.blogspot.com/2008/02/011.html">வேதம் தமிழ் செய்த மாறன்</a><br />012. <a href="http://thirumozi.blogspot.com/2008/02/012.html">இதத்தாய் இராமானுசன்!</a><br />013. <a href="http://thirumozi.blogspot.com/2008/02/blog-post.html">பாசுர வரலாறும் தமிழ் வரலாறும்</a><br />014. <a href="http://thirumozi.blogspot.com/2008/02/014.html">பற்றுடை அடியவர்க்கு எளியவன்</a><br />015. <a href="http://thirumozi.blogspot.com/2008/02/015.html">திருமழிசை என்ற அதிசயம்</a><br />016. <a href="http://thirumozi.blogspot.com/2008/02/016.html">பை நாகப் பாயை சுருட்டிக் கொள்!</a><br />017. <a href="http://thirumozi.blogspot.com/2008/02/018_02.html">வைணவ பரிபாஷையும் பக்தி செய்தலும்</a><br />018. <a href="http://thirumozi.blogspot.com/2008/02/018.html">ஆழி மழைக் கண்ணா!</a><br />019. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/019.html">ஊமையின் கனவு</a><br /><br />020. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/021_30.html">கண்ணனுக்கே ஆமது காமம்!</a><br />021. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/021.html">சின்னஞ்சிறு கிளியே!</a><br />022. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/022.html">செய்ய தாமரைக் கண்ணினாய்!</a><br />023. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/023.html">செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா!</a><br />024. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/024.html">வாழ்வு நிலையே கண்ணம்மா!</a><br />025. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/025.html">வேங்கடவற்கு என்னை விதி</a><br />026. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/026.html">படைப்பிலக்கியமும் சுதந்திரமும்</a><br />027. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/027.html">சில்லென்று அழையேல்!</a><br />028. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/028.html">விண்ணீல மேலாப்பு!</a><br />029. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/029.html">நின்மலா! நெடியாய்!</a><br /><br />030. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/030.html">எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே!</a><br />031. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/031.html">என் சரண் என் கண்ணன்</a><br />032. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/032.html"> கலியும் கெடும் கண்டு கொண்மின்!</a><br />033. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/033.html">ஆற்று நீர்வழிப் படூஉம் புணை போல் ஆருயிர்!</a><br />034. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/034.html">இன்னுமோர் நூற்றாண்டு இரும்!!</a><br />035. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/035.html">கண்ணுக்கினிய கருமுகில் வண்ணன் நாமமே!!</a><br />036. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/036.html">கற்றினம் மேய்ந்த எந்தை கழனினை பணிமின் நீரே!</a><br />037. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/037.html">நீராய் அலைந்து கரையன</a><br />038. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/038.html">அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்!</a><br />039. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/039.html">செத்ததன் வயிற்றில் சின்னது பிறந்தால்?</a><br />040. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/041_06.html">காற்று வெளியிடைக் கண்ணம்மா!</a><br /><br />041. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/041.html">காதல்(பக்தி)? களவு? கற்பு</a><br />042. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/042.html">கல்யாணக் கனவுகள்</a><br />043. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/043.html">அறிவின் பயனே! அரிஏறே!!</a><br />044. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/044.html">கனவிடை தோய்தல்</a><br />045. <a href="http://thirumozi.blogspot.com/2008/01/045.html">பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே!</a><br />046.<a href="http://thirumozi.blogspot.com/2008/01/046.html">பாவை நோன்பு</a><br />047. <a href="http://thirumozi.blogspot.com/search?q=047">சங்கத்தார்க்கு ஓர் அகவல்</a><br />048. <a href="http://thirumozi.blogspot.com/2007/12/048.html">உறவில் உறையும் இறைவன்</a><br />049. <a href="http://thirumozi.blogspot.com/2007/11/49.html">குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா!</a><br />050. <a href="http://thirumozi.blogspot.com/2007/11/050.html"> உண்ணு நீர் வேட்டேன் என்று வந்தார்!</a><br /><br />051. <a href="http://thirumozi.blogspot.com/2007/11/051.html">தமிழ் நயமும் மெய்ப்பொருளும்</a><br />052. <a href="http://thirumozi.blogspot.com/2007/11/052.html">உறங்குவது போலும் சாக்காடு</a><br />053. <a href="http://thirumozi.blogspot.com/2007/10/053.html">ஆலிலை மேல் ஒரு பாலகன்</a><br />054. <a href="http://thirumozi.blogspot.com/2007/10/054.html">சிங்கப் பெருமாள் கதை</a><br />055. <a href="http://thirumozi.blogspot.com/2007/10/056.html">அவதாரங்களை அணுகுவது எப்படி?</a><br />056. <a href="http://thirumozi.blogspot.com/2007/10/56.html">உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்!</a><br />057. <a href="http://thirumozi.blogspot.com/2007/10/057.html">மணவாள மாமுனியின் கனவு</a><br />058. <a href="http://thirumozi.blogspot.com/2007/09/058.html">காதல் விளைவித்த காரமர்மேனி !!</a><br />059. <a href="http://thirumozi.blogspot.com/2007/09/059.html">வானம் வசப்படும்!!</a><br />060. <a href="http://thirumozi.blogspot.com/2007/09/60.html">அவள் தந்த பார்வை!</a><br /><br />061. <a href="http://thirumozi.blogspot.com/2007/08/061.html">உளகளவும் யானும் உளன்!</a><br />062. <a href="http://thirumozi.blogspot.com/2007/08/062.html">பெருமாள்</a><br />063. <a href="http://thirumozi.blogspot.com/2007/08/063.html"> வணங்கும் துறைகள் பல பல ஆக்கி..</a><br />064. <a href="http://thirumozi.blogspot.com/2007/08/064.html">வாலைக்குமரியும் வண்ண நிலவனும்</a><br />065. <a href="http://thirumozi.blogspot.com/2007/08/065.html">மானிடரைப் பாடாது மாதவனை ஏத்துதல்</a><br />066. <a href="http://thirumozi.blogspot.com/2007/08/066.html">ஆண்டாளும் அக்கம்மா தேவியும் </a><br />067. <a href="http://thirumozi.blogspot.com/2007/08/068_22.html"><span style="font-size:85%;">தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு</span> </a><br />068. <a href="http://thirumozi.blogspot.com/2007/08/068.html">நரகும் சொர்க்கமும்</a><br />069. <a href="http://thirumozi.blogspot.com/2007/08/069.html">பகவத் கீதையும் ஆழ்வார்களும்<br /></a>070. <a href="http://thirumozi.blogspot.com/2007/08/070.html">முல்லை திரிந்து பாலையாகுதல் போல</a><br /><br />071. <a href="http://thirumozi.blogspot.com/2007/08/071.html">அடியார் தம்மடி யார்அடி யோங்களே!!</a><br />072. <a href="http://thirumozi.blogspot.com/2007/08/072.html">பட்டினம் காப்பென்று வந்த சொல்!</a><br />073. <a href="http://thirumozi.blogspot.com/2007/08/073.html">வள்ளுவமும் வைணவமும் (பகுதி ஒன்று)</a><br />074. <a href="http://thirumozi.blogspot.com/2007/08/074.html">வள்ளுவமும் வைணவமும் (பகுதி இரண்டு)</a><br />075. <a href="http://thirumozi.blogspot.com/2007/08/075.html">வறுமையும் புலமையும்</a><br />076. <a href="http://thirumozi.blogspot.com/2007/07/076.html">கலி நீக்கம் - நிழல் வெளியும் நிஜவெளியும்</a><br />077. <a href="http://thirumozi.blogspot.com/2007/07/077.html">வாழ்வின் துயரை எதிர் கொள்வது எப்படி?</a><br />078. <a href="http://thirumozi.blogspot.com/2007/07/078.html">மாறன் திருவுள்ளமும் பொய்த்துப்போன புரட்சிகளும் </a><br />079. <a href="http://thirumozi.blogspot.com/2007/07/079.html">மயக்கும் மாலைப் பொழுதே நீ போ! போ</a><br />080. <a href="http://thirumozi.blogspot.com/2007/07/080.html">புலி புலி எனும் பூசல் தோன்ற!</a><br /><br />081. <a href="http://thirumozi.blogspot.com/2007/07/082.html">அறிவு அழிந்து மறந்து பிழைக்க ஒண்ணாதபடி!</a><br />082. <a href="http://thirumozi.blogspot.com/2007/05/082.html">பெண்மை அம்பூ இது!</a><br />083: <a href="http://thirumozi.blogspot.com/2007/05/083.html">யார் துணை கொண்டு வாழ்கிறது இவ்வுலகம்?</a><br />084. <a href="http://thirumozi.blogspot.com/2007/05/084.html">அவ்வருள் அல்லன அருளும் அல்ல!</a><br />085. <a href="http://thirumozi.blogspot.com/2007/05/085.html">கண்ணன் கள்வன்</a><br />086. <a href="http://thirumozi.blogspot.com/2007/03/86.html">கண்ணனிற் கொடியது அவன் குழலோசை!</a><br />087. <a href="http://thirumozi.blogspot.com/2007/03/087.html">மாலையும் வந்தது மாயன் வாரான்!</a><br />088. <a href="http://thirumozi.blogspot.com/2007/03/088.html">ஏறுடைப் பெருநிரை கண்ட முல்லைத் தமிழ்வளம்!</a><br />089. <a href="http://thirumozi.blogspot.com/2007/02/089.html">மீட்பர் வருவாரோ?</a><br />090. <a href="http://thirumozi.blogspot.com/2007/02/090.html">அண்டம் மோழை எழ!</a><br /><br />091. <a href="http://thirumozi.blogspot.com/2007/02/91.html">பிரபஞ்ச ஆக்கமும் பூமியைக் காத்தலும்!</a><br />092. <a href="http://thirumozi.blogspot.com/2007/02/92.html">ஊழிக்கூத்தும் மீண்டும் பிறப்பும்</a><br />093. <a href="http://thirumozi.blogspot.com/2007/01/93.html">உலகின் தோற்றமும் மழையுயிர் காத்தலும்</a><br />094. <a href="http://thirumozi.blogspot.com/2007/01/94.html">மேவி கற்பாருக்கான மாமருந்து</a><br />095. <a href="http://thirumozi.blogspot.com/2007/01/095-1.html">அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் (1)</a><br />096. <a href="http://thirumozi.blogspot.com/2007/01/096-2.html">அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் (2)</a><br />097. <a href="http://thirumozi.blogspot.com/2007/01/097-3.html">அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் (3)<br /></a>098. <a href="http://thirumozi.blogspot.com/2007/01/098.html">மச்சாவதாரமும் கருங்கடல் பெருக்கும் </a><br />099. <a href="http://thirumozi.blogspot.com/2006/12/99.html">மானமிலாப் பன்றியாம் வாழ்வு !!</a><br />100. <a href="http://thirumozi.blogspot.com/2006/12/100.html">பிணக்குறும் சமயங்களும் அருங்கலைப் பொருட்களும் </a><br /><br />101. <a href="http://thirumozi.blogspot.com/2006/12/101.html">கானல்</a><br />102. <a href="http://thirumozi.blogspot.com/2006/12/102.html">கனவில் கண்டேன் கண்ணபெருமானை!</a><br />103. <a href="http://thirumozi.blogspot.com/2006/12/103.html">தாய் நாடும் கன்றே போல்</a><br />104. <a href="http://thirumozi.blogspot.com/2006/12/104.html">கொன்றை அலங்கல் மார்வன் யார் ?</a><br />105. <a href="http://thirumozi.blogspot.com/2006/12/105.html">உயர்வற உயர்நலம் உடையவன் </a><br />106. <a href="http://thirumozi.blogspot.com/2006/12/madal-106.html">கோதை எனும் குலவிளக்கு! </a><br />107. <a href="http://thirumozi.blogspot.com/2006/12/107.html">மழைக் கண்ணா! மாலே! மணிவண்ணா!</a><br />108. <a href="http://thirumozi.blogspot.com/2006/11/108.html">ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து</a>.<br /><br />எதிரொலி : <a href="http://thirumozi.blogspot.com/2006/11/blog-post.html">பாசுர மடல் பின்னூட்டங்கள் (தமிழ்.வலை)</a>Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-11685832.post-48511891106645637432008-02-18T07:52:00.004+05:302020-05-21T16:16:13.547+05:30மடல் 000 - நாலாயிர திவ்விய பிரபந்தம் - முன்னுரை<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-alLtOdSMf8E/XsZbu4dT0-I/AAAAAAABC8w/wMvHI-pqE8Mo2W2lFN2PK_tDkG02qe4oQCK4BGAsYHg/Thiruman.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="753" data-original-width="2000" src="https://1.bp.blogspot.com/-alLtOdSMf8E/XsZbu4dT0-I/AAAAAAABC8w/wMvHI-pqE8Mo2W2lFN2PK_tDkG02qe4oQCK4BGAsYHg/s320/Thiruman.jpg" width="320" /></a></div><div><br /></div><div><br /></div><div><br /></div>இந்திய மெய்யியல் - ஒரு கண்ணோட்டம்
தொன்மையான இந்திய மெய்யியல் வரலாறை அறிந்து கொள்ளும் போது இந்திய உள்ளத்தின் பரிணாம வளர்ச்சியையும் (evolutionary history) புரிந்து கொள்ள முடிகிறது. <div><br /></div><div>முடிந்த அளவு, இந்திய மெய்யியல் ஞானிகள் மெய்யியல் புரிதலை (ஞானத்தை) எல்லோரும் சுதந்திரமாக அணுகும் வண்ணம் திறந்த புத்தகம் போல் அமைத்தது மட்டுமல்லாது, இறைவனை அடைவதற்கான வழியில் அளப்பரிய சுதந்திரத்தையும் அள்ளி வழங்கி உள்ளனர். </div><div><br /></div><div>இந்திய மதம் என்றொன்று "இந்து மதமாக" ஸ்தாபனப் படமுடியாமல் இன்றுவரை இருப்பதற்கான அடைப்படைக் காரணி இந்த பரந்த, சுதந்திர மனப்பான்மைதான்.
எப்படி மனிதர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறாக உள்ளோமோ, அதுபோல் நாம் வழிபடும் வழிகளிலும் கிளைகள் இருப்பதை நம் மூதாதையர் புரிந்து அனுமதித்து உள்ளனர். அதன் வெளிப்பாடுதான், இந்தியர்கள் வழிபடும் பல் தேவதை வழிபாடுகள் (இஷ்ட தேவதா நிஷ்டை). </div><div><br /></div><div>எப்படி ஆறுகளின் தோற்றுவாயும், வழியும் வேறு பட்டு இருந்தாலும் இறுதியில் கடல் என்ற ஒன்றில் கலக்கிறதோ அதுபோல் பல்வேறு வழிபாட்டு முறைகளும் இறைமை என்ற ஒன்றில் கலப்பதை அறிந்து, உணர்ந்திருந்தனர் நம் முன்னோர்கள்.
இருபதாம் நூற்றாண்டின் பரிணாமவியல் விதியின் படி வேற்றுமை விரிந்து இருக்கும் போதுதான் உயிர்த் தொடர்ச்சி காலத்தை வெல்கிறது. (variation is the basis of evolution). இந்திய மெய்யியல், இன்றளவும் காலத்தை வென்று நிற்பதற்கு அதன் பல நோக்கு அணுகு முறைதான் காரணம் என அறியலாம்.
மேலும் வாசிக்க <a href="http://www.subaonline.net/nakannan/articles/intro_madals.html">இங்கே சொடுக்குக!</a></div>Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-11685832.post-64970939262627479762008-02-17T07:10:00.003+05:302020-05-20T16:53:07.138+05:30மடல் 001- ஆழ்வார்களின் அறிமுகம்வைணவ சாற்றுமுறை:
<span style="color: #006600;">அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ-கடல் சூழ்ந்த
மண்ணுலகம் வாழ மணவாள மாமுனியே
இன்னுமோர் நூற்றாண்டு இரும்.</span>
தினம், தினம்: அடியார்களாகிய நாம், நம்மைக் காக்கும் அரங்கம், சடகோபன் (நம்மாழ்வார்) தந்த ஈரப் பாசுரங்கள் (கண்ணீர் பெருகி பக்தியால் அழுவதால் வரும் ஈரம்), கடல் சூழ்ந்த மண்ணுலகம், இப் பக்தியை மெய்யாக்கிக் காட்டும் ஆச்சார்யன் (இங்கு மணவாள மாமுனி) இவர்கள் வாழ்க வென்று இரைஞ்சும் பண்பாடுதான் நம் தமிழ் பண்பாடு. இது குறித்து நாம் பெருமை கொள்வோமாக!! <div><br /></div><div>-------------------------------------------------------------------------------- </div><div><br /></div><div> ஆழ்வார்கள் முதலில் தமிழகத்திற்கு அறிமுகமாகும் நிகழ்வே மனிதநேயம் மிக்க செய்தியாக அமைகிறது.
சென்னைக்கும், மாமல்லைக்கும் இடையே ஒரு குக்கிராமம். அடாது மழை பெய்து கொண்டிருக்கும் ஒர் நாள். மழைக்கு ஒதுங்கி ஒருவர் ஒரு வீட்டினுள் நுழைகிறார். வீட்டில் யாரும் இல்லை. ரேழி என்று அழைக்கப்படும் இடைப் பகுதியில் ஒண்டுகிறார். அசதியில் கொஞ்சம் படுத்து இளைப்பாறுகிறார். அப்போது இன்னொரு நபர் நுழைகிறார். ஒதுங்க இடம் இருக்குமா என வினவுகிறார். அதற்கு முதல்வர் சொல்லுகிறார், ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். நான் இருந்து கொள்கிறேன் (அதாவது உட்கார்ந்து கொள்கிறேன்) வாரும் என்கிறார். இருவர் உட்கார்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் மூன்றாவதாக ஒருவர் நுழைகிறார். கதவைத்தட்டி இருக்க இடம் கிடைக்குமா என வினவுகிறார். அன்புள்ளம் கொண்ட இந்த இருவரும், ஒருவர் கிடக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம், எனவே வாருங்கள்-மூவரும் நிற்கலாம் என அவரை உள்ளே அழைக்கின்றனர். மூவருக்கும் நிற்கத்தான் சரியாக இடம் இருக்கிறது. அப்போது இவர்கள் அறியாமல் இன்னொருவர் இடையில் புகுந்தது போல் நெருக்குவதை மூவரும் உணருகின்றனர். யார் இந்த நான்காவது ஆள் என்ற கேள்வி எழுகிறது. இரவு நேரம். சுத்தமாக வெளிச்சம் இல்லை. எப்படி காண்பது? விளக்கு ஏற்ற முயற்சி நடக்கிறது? சாதாரண விளக்கில்லை ஞான விளக்கு. ஏன்? நான்காவது ஆளை தொட்டு உணரமுடியவில்லை. அப்போது முதலில் வந்தவர் அந்தாதி தொடங்குகிறார் இப்படி. </div><div><br /></div><div><span style="color: #3333ff;">வையம் தகளியா வார்கடலே நெய்யாக </span></div><div><span style="color: #3333ff;">வெய்ய கதிரோன் விளக்காக-</span></div><div><span style="color: #3333ff;">செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் </span></div><div><span style="color: #3333ff;">சொன் மாலை
இடராழி நீங்குகவே என்று.</span> </div><div><br /></div><div> (முதல் திருவந்தாதி-பொய்கை ஆழ்வார்)<div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-2jaGKpu5LvQ/XsUR4ztwN7I/AAAAAAABCrg/f18yiM5ka9ordNkWzmQ2S-r4yP6kciIagCK4BGAsYHg/Poigai_Alvar_Tamil_Poet.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="350" data-original-width="190" height="320" src="https://1.bp.blogspot.com/-2jaGKpu5LvQ/XsUR4ztwN7I/AAAAAAABCrg/f18yiM5ka9ordNkWzmQ2S-r4yP6kciIagCK4BGAsYHg/s320/Poigai_Alvar_Tamil_Poet.jpg" /></a></div><div><br /> இப்படி பாடிய முதல் பாசுரங்கள் நூறு. அடுத்தவர் தொடர்கிறார், </div><div><br /></div><div>அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக </div><div>இன்புருகு சிந்தை இடுதிரியா-</div><div>நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் </div><div>நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்த நான் </div><div><br /></div><div>(இரண்டாவது திருவந்தாதி - பூதத்தாழ்வார்)</div><div><br /></div><div>இப்படி இவர் நு¡று பாடல்கள் பாடுகிறார். இந்த அனுபவத்தில் இவர்களுக்கு புரிந்துவிடுகிறது நான்காவதாக நிற்பது யார் என்று. அதை மூன்றாவதாக வந்தவர் விளங்கச் சொல்கிறார் இப்படி: </div><div><br /></div><div>திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் </div><div>திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்-</div><div>செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் </div><div>புரிசங்கம் கைக்கண்டேன் என்னாழி வண்ணன்பால் இன்று. </div><div><br /></div><div>(முன்றாவது திருவந்தாதி-பேயாழ்வார்)</div><div><a href="http://www.stephen-knapp.com/images/817Lakshmi.jpg"><br /><img alt="" border="0" src="http://www.stephen-knapp.com/images/817Lakshmi.jpg" style="display: block; margin: 0px auto 10px; text-align: center; width: 220px;" /></a>
இவர் பாடியது நூறு பாடல்கள். பொய்கையில் தோன்றியதாக நம்பப்படுபவர் பொய்கை ஆழ்வார். பூதம் என்பதற்கு அன்னம் என்றொரு பொருள் உண்டு. அதாவது திருமால் நாமமே உணவாகக் கொள்வதால் இவர் பூதத்தாழ்வார் ஆகிறார். (வைதீக திருமண மந்திரத்தில் கணவன் மனைவியிடத்தில் "பூத" என்று சொல்லி பழம் தரவேண்டும். மனைவி "சுபூத" என்று சொல்லி பால்தர வேண்டும். ஒருவரையொருவர் பூதம் பிசாசு என்று திட்டிக் கொள்வதாய் அர்த்தம் கொள்ளக்கூடாது) மூன்றாவது ஆள்வார் பேயாழ்வார். இதுவும் காரணப் பெயர். ஒரு காரியத்தில் பேயாய் அலைகின்றவர்களை நாம் கண்டதில்லையா? இவர் வேலை கண்ணன், நாரணன் என்று மெய்பொருள் கண்டு கொள்ள பேயாய் அலைவது. அதனால் அப்பெயர். </div><div><br /></div><div> Date: Tue, 02 Sep 1997 09:20:05 +0000</div></div>Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-11685832.post-91402243653769599542008-02-17T06:56:00.004+05:302008-12-12T11:34:01.654+05:30மடல் 002: எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்சென்ற கட்டுரையில் பார்த்த நிகழ்வு உண்மையா, புனைவா என சுமார் 1300 ஆண்டுகளுக்குப் பிறகு நிச்சயம் செய்ய இயலாது. புனைவு என்றாலும் ஏதோ காரணம் இருக்கிறது.<br /><br />இந்நிகழ்வு காட்டுவது என்ன?<br /><br />"பகிர்தல்" என்ற பண்பைப் பற்றி. அதாவது முதலில் வந்தவருக்கு கஷ்டத்தில் தங்க ஒரு இடம் கிடைக்கிறது. அவர் செளகர்யத்தை பார்த்துக்கொண்டு இருந்து விடாமல் அடுத்து வந்தவருக்கு இருக்க இடம் கொடுக்கிறார். அடுத்து வந்தவரும், "ஒண்ட வந்த பிடாரி ஊர்பிடாரியை துரத்திய கதையாக" இவரை துரத்தி விடாமல் சேர்ந்து இருந்து மூன்றாவதாக வருபவருக்கும் இடமளிக்க உதவுகிறார். மூவருக்கும் வாழ்வு என்பது "நிலையற்ற ஒட்டம்" என்றும் அதில் பகிர்தல் தரும் "இன்பமும், அனுபவமும்" நிறைவு தருவதாய் உணரும் திறனும் நிரம்ப இருப்பது தெரிகிறது.<br /><br />இப்போதைய நிலமை என்ன? இங்கிருந்து ஒருவர் வெளிநாட்டுக்கு போகிறார்கள். பெரிய வரவேற்பு இல்லாவிட்டாலும் வருபவன் பிரச்சனை என்றுதான் உள்ளூரில் இருப்பவன் காண்கிறான். வந்தவன் நிலைத்து வாழ்ந்தபின் (ஒரு தலைமுறை) புதிதாக வரும் ஆசாமியைப்பார்த்து இதே அசூசை (uncomfortable, hate, indifferent) கொள்கிறான். இருப்பதை பகிர்ந்துகொண்டு வாழும் மனப்பக்குவம் இல்லை. உலகில் அதி பணக்காரனும் அன்னாடங்காச்சியும் பக்கத்தில் பக்கத்தில்தான் வாழ்கிறார்கள். எவ்விதப் பகிர்வும் இல்லாததால் ஒருவருக்கு சுவர்க்கமாக இருக்கும் வாழ்வு மற்றவருக்கு நரகமாக இருக்கிறது.<br />"<span style="color:#ff6666;">எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்</span>" என்று பாடிய கண்ணதாசன் வேறொரு பாடலில்,"<span style="color:#ff6666;">இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா, உனது எனது என்பதெல்லாம் இடையில் வந்த பந்தமடா</span>" என்பான். எல்லோரும் பகிர்ந்து வாழ உலகில் அத்தனை வளங்களும் (resources), தொழில் வளர்ச்சியும் (technology) இருந்தும் - அமெரிக்காவில் அதிக உணவை கடலில் கொட்டுகிறார்கள்; எதியோப்பியாவில் பட்டினியில் சாகிறான் மனிதன். நாயினும் கீழான வாழ்வையே மூன்றாம் உலக நாடுகளில் பெரும்பாலான மக்கள் வாழ வேண்டி உள்ளது.<br /><br />எங்கு மனிதநேயம் பூரணமாகி பகிர்தலும், அன்பும் நிரம்பி வழிகிறதோ அங்கு தன்னிச்சையாக<br />(அதாவது அழைக்காமலே) இறைவன் வந்து சேர்கிறான். மூன்று ஆழ்வார்களும் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாமென கூடியவுடனே முண்டி அடித்துக் கொண்டு தானும் உள்ளே புகுந்து விடுகிறான் இறைவன் (என் "உள்ளம் நிறையப்" புகுந்தான், என்பார் நம்மாழ்வார் ஒரு இடத்தில்) இப்பாசுரங்கள் கி.பி. எழாம் நூற்றாண்டில் மாமல்ல பல்லவன் ஆண்டு கொண்டு இருக்கும் காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள் (குரு பரம்பரை கதைப்படி கி.மு. நாலாயிரத்தை தாண்டி விடுகிறது). இத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவர்கள் தமிழ் இன்றும் வாசித்து புரிந்து கொள்ளும் படி இளமையாக இருக்கிறது. இது தமிழின் சிறப்பு.<br /><br /><a href="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R7ePJiuBcqI/AAAAAAAAC70/C5ZlP2Dl8HU/s1600-h/venkateswara-consort.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5167756491532366498" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R7ePJiuBcqI/AAAAAAAAC70/C5ZlP2Dl8HU/s320/venkateswara-consort.jpg" border="0" /></a><br /><br />"<span style="color:#3366ff;">திருக்கண்டேன்</span>" என்று தொடங்கும் பாசுரத்தில் "<span style="color:#3366ff;">பொன்மேனி கண்டேன்</span>" என்கிறார் ஆழ்வார்.பொன்னார் மேனியன், மாதர் பிறையான், அலகில் சோதியன் - கண்ணன் அன்று! அது சிவன். இருப்பினும் பேயாழ்வார் திருமாலை பொன்னனாகக்காண்கிறார். காரணம் முதல் வரியில் இருக்கிறது. ஆழ்வார் முதலில் காண்பது திருமகள். அதான் "திருக்கண்டேன்" என்று<br />ஆரம்பிக்கிறார். திருமகள் சொர்ணம் போல் மின்னுபவள். அவள் ஜொலிப்பு திருமால் உடம்பில் அப்படி "டால்" அடிக்கிறது!<br /><br />Date: Tue, 02 Sep 1997 12:28:41 +0000Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-11685832.post-60923866314581496562008-02-16T04:56:00.004+05:302020-05-25T13:30:16.672+05:30மடல் 003: பாயிரம் வாயிலாக தமிழ் மறுமலர்ச்சிதொன்மையான இந்திய மதங்கள் அனைத்திலும் அடிப்படையாக அமைவது<br />மனிதனுக்கும்,பிரபஞ்சத்திற்கும் (cosmos) உள்ள உறவு பற்றிய தேடுதல். இத்தேடுதல் தந்த தரிசனங்கள்தான் இந்திய சமயம் சார்ந்த தத்துவங்கள்.பண்டைத்தமிழர்கள் உலகை பூரண நோக்கோடு பார்த்தனர் (holistic way) . பிரம்மாண்டமாக சிந்தித்தனர்.<br /><br />பொய்கையின் முதல் பவாவைப்பாருங்கள். உலகை ஒரு அகல் (விளக்காகக்) கொண்டு, வார் கடலை நெய்யாக இட்டு, வெய்ய கதிரோனை விளக்காக வைத்து பிரபஞ்ச கர்த்தாவைப் பார்க்கிறார். "அப்பாலுக்கு அப்பாலாய்" உள்ள இறைமையை அப்படிப் பார்த்தால்தான் தெரியும் போலும்! இல்லை அவன் பிரம்மாண்டத்தை உணர, அப்படியொரு பெரிய விளக்கு வேண்டும் போலுள்ளது! இவர் நோக்கில் அறிவு உரத்த சிந்தனை (அதாவது ஞான மார்க்கம்) இருக்கிறது.<br /><br /><a href="http://www.nasa.gov/images/content/153533main_image_feature_623_ys_4.jpg"><img alt="" border="0" src="http://www.nasa.gov/images/content/153533main_image_feature_623_ys_4.jpg" style="display: block; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /></a><br />பூதத்தார் பிரபஞ்ச நோக்கிலிருந்து அப்படியே உள்ளுக்கு திரும்புகிறார். அன்புதான் அகல் (விளக்கு) என்கிறார். வீட்டுக்கு அஸ்திவாரம் போல் வாழ்வுக்கு அடிப்படை அன்பு என்கிறார். அடுத்து ஆர்வம் வேண்டும். ஆர்வம் இல்லையேல் வாழ்வு சலிப்புத் தட்டிவிடுகிறது. எனவே ஆர்வம்தான் நெய் என்கிறார். சிந்தை இடுதிரி என்கிறார். இவர் அறிவை ஒதுக்கவில்லை. சிந்தை தெளிவாய் இருந்தால்தான் தேடுதல் வசப்படும். நனைந்த திரியோ, ஜீன்ஸ் (jeans) துணியோ போல் திரி இருந்தால் விளக்கு எரியாது. நல்ல பஞ்சுத் திரி வேண்டும், சிந்தையில் நோக்கு இருக்க வேண்டும். அப்போது வானம் வசப்படும்!<br /><br /><a href="http://www.sxc.hu/pic/m/a/as/asifthebes/903726_indian_lamp_called_diya.jpg"><img alt="" border="0" src="http://www.sxc.hu/pic/m/a/as/asifthebes/903726_indian_lamp_called_diya.jpg" style="display: block; margin: 0px auto 10px; text-align: center; width: 200px;" /></a><br />பேயாழ்வார் பக்திதான் முக்தி வழி என்கிறார். இப்பாசுரங்களை முன் அறியாத ஆதி சங்கரனும் ஞான வழி சென்ற பின் ஆழ்வார்களைப் போல்<br /><br /><span style="color: #33cc00; font-size: 85%;">"பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம்,<br />பஜ கோவிந்தம் மூடமத"<br /></span><br />என்கிறார்.<br /><br />பக்தியின் ஊற்றுக்கண்னைக் கண்டவர்கள் முதல் மூவர். இவர்கள் சமகாலத்தவர்கள். புதிய மதங்களான சமணம், பெளத்தம் என்பவை தென் இந்தியாவில் பரவி, செல்வாக்கு பெற்ற காலமான கி.பி. 5ம் நு¡ற்றாண்டின் பிற்பகுதியில்தான் பல்லவர்களின் ஆதிக்கமும் பரவத்தொடங்குகிறது. "நகரேஷு காஞ்சி" என காஞ்சி பெளத்த தலைமைப் பீடம் ஆகிறது. காஞ்சி மன்னின் புதல்வனொருவன் தூர கிழக்கு நாடுகளுக்கு பெளத்தத்தை கொண்டு செல்லுகிறான். அவர் ஆரம்பித்து வைத்து தான் "ஜென் மதம்" (Zen) ஜப்பானில் பரவுகிறது. இவரை "தாருமா" (Daruma) என ஜப்பானியர் அழைத்து புத்த கோவில்களில் சிலை வைத்து கும்பிடுகிறார்கள்.<br /><br />வேற்று மதங்கள் செல்வாக்கு பெறும் போது பழமையானநம்பிக்கைகள், மேலும் வலுப் பெறுகின்றன. புராணங்கள் இயற்றப்படுகின்றன. இராம காதை பிரபலமாகிறது. இப்போது மசூதியை இடித்து இராமர் கோவில் கட்டும் மூட ஜனங்களுக்கு(வட இந்தியர்களுக்கு) இராமன் இன்னும் கடவுளாகவே தெரிய ஆரம்பிக்காத நாட்கள். இராம காதை பிரபலமாக்கப்பட்டு தெற்கேயிருந்து வடக்கே போகிறது. இது தேவையான ஒன்று அக்காலக்கட்டத்தில். சமண, பெளத்த மதங்கள் ஒழுங்கை, வாய்மையை, அறனை வலியுறுத்துகின்றன. இராமன் இவையெல்லாம் கொண்ட உத்தம புத்திரன்.<br /><br />முதல் மூவர் பாடல்களில் தென்படும் அவதாரங்கள் கண்ணன், இராமன், வராகன், வாமனன் இவையே.<br /><br />பேயாழ்வார் முதல் முறையாக "ஸ்ரீ" என்ற சமிஸ்கிருத பதத்திற்கு "திரு" என்ற தமிழ் சொல்லை பயன்படுத்துகிறார். "திரு" வை திருமாலுடன் இணைப்பதில் பெரும் தத்துவ வெற்றி அடங்கி இருக்கிறது.<br /><br /><a href="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/R7YieSuBcpI/AAAAAAAAC7s/3h4tGUy1plI/s1600-h/lakshmi_800x600.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5167355526270513810" src="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/R7YieSuBcpI/AAAAAAAAC7s/3h4tGUy1plI/s320/lakshmi_800x600.jpg" style="display: block; margin: 0px auto 10px; text-align: center;" /></a><br /><br /><br />வேதகாலத்து பூஜை முறைகளில் "ஸ்ரீ" , லட்சுமியாக பஜிக்கப் படுகிறாள். ஆழ்வார்கள் இவளை திருமாலின் நெஞ்சில் வைத்து அவளின் முழு காருண்யத்தை திருமால் பக்தர்களுக்கு தர வைக்கின்றனர். காருண்யமிக்க தாள்களை சரண் அடைவதில் தராதரம் வெண்டியதில்லை. அவள் எல்லோரையும் ஒரு தாயைப் போல் இரட்சிப்பாள். அவைதீக மதங்களான (அதாவது வேதத்தை ஒத்துக் கொள்ளாத மதங்கள். கடவுள் என்ற கருத்தில் நம்பிக்கை வைக்காத மதங்கள்) சமணம், பெளத்தம் இவை அறனை வெகுவாக வலியுறுத்தின. அறவழிக் கருத்துக்களை எல்லோருக்கும் பாடம் சொல்லித் தந்தனர். அறவழி நில்லேல் வேறு காப்பு இல்லை என்கின்ற நிலை. ஆழ்வார்கள் "திரு" வைக்காட்டி கதி அற்றாருக்கும் புகலிடம் உண்டு என்கின்றனர். நீ புத்திமானாக இருந்தாலும், மூடனாக இருந்தாலும் பக்தி செய்தால் இவள் கடைக்கண் அருளுக்கு பாக்கியமாவீர்கள் என்கின்றனர். இப் பக்தி வழி விரைவில் பாமர ஜனங்களிடையே செல்வாக்கு பெறுகிறது.<br /><br />அவைதீக மதங்கள் வேதத்தை ஒத்துக் கொள்ளாததால் சாதிப் பிரிவினை என்ற பாகுபாட்டையும் வலியுறுத்தவில்லை. வேதத்தை ஒத்துக் கொள்ளும் ஆழ்வார்கள் இரண்டுமுக்கிய மாற்று வழிகளைக் காண்பிக்கின்றனர்.<br /><br />இது நம் சரித்திரத்தில் மிகவும் முக்கியமான திருப்பு முனை.<br /><br />1. ஆழ்வார்கள் கண்ணனின் அடியார்க்கு சாதி அவசியமில்லை என்றனர். அதாவது பக்தி ஒன்றுதான் வழி என்றனர். இது குறித்த தொண்டரடிப்பொடியின் அறை கூவலை பிறகு சொல்கிறேன்.<br /><br />2. இரண்டாவது மாற்று தமிழ் வேதத்தை செய்விப்பது. சமிஸ்கிருத வேதத்தைச் சொல்ல உரிமை உள்ளவர்கள் அந்தணர்கள் மட்டுமே என்று சொல்லும் வைதீக சாதீயத்திற்கு மறுப்பாக திராவிட வேதமாகிய திவ்யப் பிரபந்தங்களை அனைவரும் சொல்லலாம் என்று செய்தனர்.<br /><br />இது அந்தக்காலம் தொட்டு இக்காலம் வரை ஒரு புரட்சிதான். இதற்கு மேலான தனித்தமிழ்<br />ஆர்வத்தை நாம் எங்கும் காண இயலாது. செய்வித்தவர்கள் ஆழ்வார்கள்.<br /><br />பக்தி இயக்கத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் பெளத்தம் செழித்த காஞ்சிக்கு அருகில் தோன்றியது<br />தற்செயலான நிகழ்வு இல்லை என்றுதான் தோன்றுகிறது.<div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen="" class="BLOG_video_class" height="266" src="https://www.youtube.com/embed/N6cKpAd9rJs" width="320" youtube-src-id="N6cKpAd9rJs"></iframe></div><div><br /><br />Date: Wed, 03 Sep 1997 15:45:49 +0000</div>Dr.N.Kannanhttp://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.com14