<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-11685832</id><updated>2012-02-02T04:05:52.105+09:00</updated><category term='childhood'/><category term='buddhism'/><category term='earth'/><category term='nachiar tirumozi'/><category term='black god'/><category term='biblical story in tamil poetry'/><category term='melancholy'/><category term='dalit'/><category term='origin of varnasrama'/><category term='narasimha'/><category term='ancient poetry found'/><category term='tiruvallikeni'/><category term='Sri Vaishnaviam'/><category term='nammalvar'/><category term='desikan'/><category term='alwartirunagari'/><category term='union'/><category term='barathi'/><category term='black sea'/><category term='poykai'/><category term='symbolism'/><category term='uzi'/><category term='koyil'/><category term='virtual'/><category term='hubble'/><category term='vaishnava literature'/><category term='pUtham'/><category term='Tirukural'/><category term='vedantam'/><category term='project madurai'/><category term='birth of universe'/><category term='black hole'/><category term='Govardhana'/><category term='tirumalai'/><category term='tamil'/><category term='intelligent creationism'/><category term='tiruvaimozhi'/><category term='ஆண்டாள்'/><category term='information'/><category term='vehkai'/><category term='amalanathipiran'/><category term='acharya'/><category term='mind body continum'/><category term='rain'/><category term='crosstalk'/><category term='lallaby on Andal'/><category term='andal'/><category term='parthasarathi'/><category term='reformist'/><category term='water cycle'/><category term='indonesia'/><category term='sanskrit'/><category term='Vishnu'/><category term='Turukural'/><category term='born free'/><category term='creation according to tiruvaimozhi'/><category term='creation myths'/><category term='Lakshmi'/><category term='magic'/><category term='tiruppavai'/><category term='matsya avatar'/><category term='surrender'/><category term='birth of universe in tamil poetry'/><category term='mystic tamil prabandam'/><category term='inspiration'/><category term='creativity'/><category term='feministic liberalism in Tamil religion'/><category term='portrayal of motherhood in tamil poetry'/><category term='vedanta'/><category term='meera'/><category term='tamil literature'/><category term='religious poetry'/><category term='yoga'/><category term='antiquity of Indian science'/><category term='bakthi'/><category term='religious hate'/><category term='Arya Dravida divide'/><category term='tamil religious pschycology'/><category term='muthal mUvar'/><category term='kurukshetra'/><category term='manipravalam'/><category term='vedantha'/><category term='Kingdom of heaven dawns on earth'/><category term='pEy'/><category term='darwinism in tamil poetry'/><category term='death of universe'/><category term='islam'/><category term='effect of prayer'/><category term='changing perspective'/><category term='mangala sasanam'/><category term='kundalini'/><category term='indus valley'/><category term='cosmology of tamils'/><category term='discrimination'/><category term='Vaishnavism'/><category term='tiruppanazvar'/><category term='sociology of vaishnavism'/><category term='visaka hari'/><category term='Heaven and Hell'/><category term='spiritual enquiry'/><category term='literature'/><category term='tamil commentary'/><category term='pasuram'/><category term='cycle of creation'/><category term='siddhadanta'/><category term='Buddha'/><category term='durga'/><category term='divine'/><category term='tamils'/><category term='index'/><category term='nathamuni'/><category term='pilgrimage'/><category term='creative design'/><category term='origin of matter'/><category term='metaphor'/><category term='rama'/><category term='Lucid dreaming'/><category term='sivavakiayar'/><category term='senses'/><category term='kamban'/><category term='story narration'/><category term='freedom'/><category term='tamil landscapes'/><category term='nanocosm of Indian mysticism'/><category term='paripadal'/><category term='palm leaf manuscripts'/><category term='Siva Vaishnava Unity'/><category term='tirumazicai'/><category term='narasimha mehta'/><category term='Poetry and Poverty'/><category term='Jesus'/><category term='review'/><category term='periyazvar'/><category term='catacalism'/><category term='islamic fundamentalism'/><category term='barathidasan'/><category term='peyazvar'/><category term='prapathi'/><category term='pavai nonbu'/><category term='Shiva'/><category term='nAmungan tiruvanthathi'/><category term='alwars'/><category term='dasavatar'/><category term='Saivism'/><category term='quantum physics'/><category term='pralaya'/><category term='language'/><category term='appar'/><category term='cosmic events'/><category term='divya prabandam'/><category term='Dharma'/><category term='cosmic views of andal'/><category term='hindu analysis'/><category term='tolkappiam'/><category term='mysticism'/><category term='tirukachi nambi'/><category term='churn the milky way'/><category term='short story'/><category term='christianity and Vaishnavism'/><category term='tirupUvaNam'/><category term='non-polarity'/><category term='thondaradipodi'/><category term='Philosophical'/><category term='dravida'/><category term='war of faith'/><category term='bubble theory'/><category term='literary criticism'/><category term='singularity'/><category term='ancient gegraphical understanding of tamils'/><category term='tirumangai'/><category term='kanikannan'/><category term='tamil science'/><category term='Baghavad Gita'/><category term='tamil wisdom'/><category term='mystic tamils'/><category term='mind'/><category term='ancient indian scientific principles'/><category term='Andal and Akkammadevi'/><category term='tamil vedam'/><category term='வாரணமாயிரம்'/><category term='banasura'/><category term='modern rendering of alwars'/><category term='Sankara'/><category term='advita'/><category term='origin of earth'/><category term='Bhakti'/><category term='noah&apos;s arc in tamil poetry'/><category term='Tamil dream'/><category term='social injustice'/><category term='weight of soul'/><category term='signature'/><category term='Sri Varaha-Avatara'/><category term='Parapathi and Matthew'/><category term='integrated religious outlook'/><category term='Ramayana'/><category term='agam poetry'/><category term='tamil religious landscape'/><category term='evolution'/><category term='meditation'/><category term='knowledge of the sacred'/><category term='and Scientific Perspectives of Tiruvaimozhi'/><category term='sub-species'/><category term='கனா'/><category term='is evolution true? anti-evolution'/><category term='krishna consciousness'/><category term='mirage'/><category term='musical'/><category term='ramanuja'/><category term='Sri'/><category term='krishna'/><category term='sexual expression'/><category term='antaryami'/><category term='commentary'/><category term='modern poetry'/><category term='The Buddha of Bamiyan'/><category term='female saint'/><category term='supernova'/><category term='sangam'/><category term='dreams'/><category term='religious harmony'/><category term='Destruction'/><category term='tiruchandavirutham'/><category term='hindu mythology'/><category term='definition of God'/><category term='poetry'/><category term='sringara rasam'/><category term='periya tirumozhi'/><category term='love poems'/><category term='super sonic waves in annihilation of universe'/><category term='evolutionaru theory in tamil poetry'/><category term='pasalai'/><category term='revolution'/><category term='iidu commentary'/><category term='Jati'/><category term='Theological'/><title type='text'>ஆழ்வார்க்கடியான்</title><subtitle type='html'>கண்ணனமுது படைக்கும் ஆழ்வார் சொல்லமுது!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>118</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-3461077961729914770</id><published>2010-07-18T08:32:00.006+09:00</published><updated>2010-07-18T10:30:58.497+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kingdom of heaven dawns on earth'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='parthasarathi'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tiruvaimozhi'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tiruvallikeni'/><title type='text'>அருளாட்சியின் அருமை பெருமைகள்</title><content type='html'>&lt;a href="http://www.jcf.org/"&gt;ஜோசப் கேம்பல்&lt;/a&gt; தொன்மறைகளில் பொதிந்துள்ள உருவகப் பேச்சை அதன் உள்ள பொருள் தெளியும் படி சொல்லுவார். இது அவர் இந்தியவியல் கற்றுக்கொண்ட பின் தீவிரமானது. பிறப்பால் ஐரீஷ் கத்தோலிக்கர் என்பதால் அவருக்கு விவிலியம் அத்துபடி. ஒருமுறை ஏசுவின் வாழ்வின் நடந்த நிகழ்வொன்றைச் சொல்லிக்கொண்டு வந்தார். ஏசுவிடம் சீடர்கள் வந்து,’ஐயா! பரமபிதாவின் அருளாட்சி பூமியில் நடக்குமென்று சொன்னீர்களே! எங்கே?’ என்றனராம். ஏசு பதிலாக, ‘மூடர்களே! அவனது அருளாட்சியில்தான் இத்தனை காரியங்களும் நடந்து வருகின்றன. ஏன் உங்கள் கண்களுக்கு அது தெரியவில்லையா?’ என்றாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் நம் கண்களுக்குத் தெரியவில்லை என்பதை விளக்கப் புக்கால் ஆன்மீகம் விரியும். எளிய பதில் ‘மாயை நம் கண்ணை மறைக்கிறது’ என்பதுதான். அது என்ன ‘மாயை’ என்று கேள்வி வரும், பின் அப்படியே தத்துவ விசாரம் விரியும்! அது நல்லதுதான். கேள்விகள் உவப்பானவை. நல்ல கேள்விகள் உவப்பானவை. முடிச்சுப்போடும் கேள்விகள் கேட்டு செக்குமாடு மாதிரி ஒரே இடத்தில் நின்று கொண்டு இருக்கக்கூடாது. எல்லாக் கேள்விகளுக்கும் விடை அக்கேள்வியிலேயே உண்டு என்பார் ஜே.கிருஷ்ணமூர்த்தி.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு பேச்சும் எதற்கு என்றால், ஒரு பெரியவர் இருக்கிறார் அவரைக் காண்பதே அலாதி ஆனந்தம். ஆனால், நமக்கோ நேரமில்லை. தெருவில் போய்க்கொண்டு இருக்கும் போது போக்குவரத்தை நிறுத்தி அவர் வந்து எதிர் நின்றால் எப்படி இருக்கும்? நம் பயணம் தடை பட்டாலும், நாம் கண்டு ஆனந்திக்க வேண்டுமென்ற ஆவல் நிறைவேறி விடுகிறது இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;அது போல்தான் பார்த்தசாரதி செய்தான். திருவல்லிக்கேணியில் அக்காவைப் பார்க்கப் போய் கொண்டு இருந்தேன். கோயிலுக்குப் போக நேரமில்லை. கோயில் பக்கம் வந்தவுடன் கார் மேலே போகாது நின்றுவிட்டது. ‘சரிதான், பெருமாள் புறப்பாடு போலும்’ என நினைத்து இறங்கி நின்றால் ஜில், ஜில்லென்று குதிரை வாகனத்தில் அவரே வந்து நிற்கிறார். இதைத்தான் ‘அருளாட்சி’ என்கிறார் ஏசு. நமக்கோ நேரமில்லை. அவரும் ரொம்ப பிசியான ஆசாமிதான். ஆனாலும் நமக்காக நேரம் ஒதுக்கிக்கொண்டு வந்து நிற்கிறார் எனில் அதை அருள் என்று போற்றுவதுதானே சரி.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, அவர் உனக்கு மட்டும் வந்தார் என்று எப்படிச் சொல்ல? என்று கேட்கலாம். உண்மைதான் அவர் எல்லோருக்காகவும்தான் வருகிறார். ஆனால், எனக்குத்தான் அவர் என்னைப் பார்க்க வந்ததாகத் தோன்றுகிறது. கூடவே ஒரு அம்மாள். பாவம், அவளுக்கு என்ன அவசரமோ! இங்கும், அங்கும் நெளிந்து பெருமாள் கண்ணிலிருந்து படாமல் ஓடிவிட முயன்று கொண்டிருந்தாள். ஆனால் முடியவில்லை. வழியே இல்லை. கோபத்துடன் அவள் பெருமாள் இருப்பதையே கண்டு கொள்ளாமல் திரும்பி நடந்துவிட்டாள். அவளைப் பொறுத்தவரை அங்கு நடப்பது ‘அருளாட்சி’ இல்லை, வெறுமே போக்குவரத்து தொந்தரவு. அப்படியும் காணலாம்தான். நம் கண்ணில்தான் இருக்கிறது பார்வை. எனவேதான் மாணிக்கவாசகர் மிகச்சாதுர்யமாக, ‘அவன் அருளால் அவன் தாள் வணங்கி’ என்றொரு சொற்றொடர் போடுகிறார். அவன் நம்மைப் பார்க்க வருகிறான் என்று உணர வைப்பதும் அவனே. மாயையைக் கண்ணில் கட்டி விரட்டி விடுபவனும் அவனே. எனவேதான் நம்மாழ்வார் வைகுந்தம் போகிற வரைக்கும் தன் இயலாமை குறித்து வருந்தி, என்னை கடைசி நேரத்தில் ஏமாற்றிவிடாதே என்று புலம்புகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="blue"&gt;மாயம்செய் யேலென்னை உன்திரு மார்வத்து மாலைநங்கை &lt;br /&gt;வாசம்செய் பூங்குழலாள் திருவாணை நின்னாணை கண்டாய் &lt;br /&gt;நேசம்செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே &lt;br /&gt;கூசம்செய் யாதுகொண் டாயென்னைக் கூவிச்கொள் ளாய்வந்தந்தோ.&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது கடைசிப் பத்து. அப்போதும் சந்தேகம்! ஏனெனில் விஷ்ணு மாயை என்பது காட்டமானது. பெரும் தவமிருந்து மனதைக் கட்டியதாய் நம்பி இருந்த ஒரு பெரும் முனிவருக்கு இறுதிக்காலத்தில் இறைவன் நினைவு வராமல் ஒரு மானின் மீது ஆசை வர, அவர் மானாகப் பிறந்ததாக ஒரு கதை சொல்வார்கள். இப்படியெல்லாம் செய்யக் கூடியவர்தான். இதனால்தான் பார்த்தார் இராமானுஜர், ‘நீ! ஏண்டா ஏதோ உன் சாமர்த்தியத்தால் சாதித்துவிடுவது போல் அலட்டிக் கொள்கிறாய்? பேசாமல், நிர்கதி என்று சொல்லி அவன் காலில் விழுந்துவிடு! பின் உன் நன்மை, தீமை எல்லாம் அவன் பழியாகிவிடும்’ என்று சொல்லிப் போந்தார். இராமானுஜ தரிசனத்தில் பரம சௌக்கியமுண்டு. ஏனென்று கேட்கிறீர்களா? உலகில் இதுவரை நீங்கள் பார்த்ததில், எங்காவது குட்டி/குழந்தை தன் முயற்சியில் தாயைப் பேணியதுண்டோ? தாய்தான் குட்டியை/குழந்தையைப் பேணுகிறாள். ஏனெனில் அவளுக்குத்தான் தன் குழந்தை மீது அக்கறை! (குரங்கு கட்டிக் கொள்கிறதே என்று கேள்வி வரும். அங்கும் பால் நினைந்தூட்டுவதும், குட்டியின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிப்பதும் தாய்தான். அது பிள்ளைக்கும் தெரியும். குட்டி இறந்து போனபின் அக்குட்டியை வைத்துக் கொண்டு அல்லாடும் ஆவணங்களெல்லாம் உண்டு. அப்போது குட்டி கட்டிக் கொள்ளவில்லை. தாய்தான் யாரையும் அண்டவிடாமல் காக்கிறாள் (குட்டி இறந்துவிட்ட பின்னும்))&lt;br /&gt;&lt;br /&gt;எனவேதான் சொன்னேன், ‘பார்த்தசாரதி என்னைப் பார்க்க வந்தான்!’ என்று. ஏன் வந்தான்? அவனை ஸ்ரீரங்கத்தில் காண வேண்டுமென்று ஆசை. மலை வையாவூரில் காண வேண்டுமென்று ஆசை, மதுராந்தகத்தில் காண வேண்டுமென்று ஆசை. ஆசை, ஆசை கொள்ளை ஆசை! ஆனால் செம்மொழி மாநாடு, தமிழ் மரபு அறக்கட்டளை வேலைகள் என் நேரத்தை முழுமையாய் அபகரித்துவிட்டன. இந்தக் கையறு நிலையில், என் மாயை என்னைக் கட்டிப் போட்டாலும் அம்மாயையைக் கிழித்துக் கொண்டு அவன் அருளாசி வருவது எவ்வளவு சிறப்பு? சென்னை வாழ்வில்,’சாமியாவது, பூதமாவது’ என்று வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. இத்தனை அவசரத்திலும், அவன் பல்லக்கு வைத்துக் கொண்டு நம்மைக் காண வருகிறான் என்பதுதான் சிறப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;எப்படி வருகிறான்? நான் மதுரைவாசி. எங்களுக்கு உற்ற துணை திருமால் இரும் சோலை அப்பன். அவனோ கள்ளழகன். அக்காட்சியில் காலம் கழித்தவர்கள். எனவே சென்னையில் வந்து காட்சி கொடுக்கும் போதும் அவன் பார்த்தசாரதியாக வராமல் கையில் சாட்டையுடன் குதிரை மீதேறி கள்ளழகர் ஆற்றில் இறங்குவது போல் வருகிறான். அது அவன்தானா? என்று சந்தேகம் வருமானால், குதிரைக்கடியில் ‘கருப்பணசாமி’ (விஷ்ணு பூதம்)கையில் அரிவாளுடன் நிற்கிறார். பிறகென்ன சந்தேகம்? நமக்கு எங்கே சந்தேகம் போகிறது? அக்காவைப் பார்த்து உலவளாவிய பின்னும் அவர் விடுவதாயில்லை. வாசலில் புறப்பாடு என்று வந்து நின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று ஏதோ ஊசலாம். திருமங்கை ஆழ்வார் பெரிய திருடனாம். வழியில் போகும் பெருமாளிடம் எல்லாவற்றையும் கொள்ளையிடுவதாக நாடகம். பெருமாள் துரத்த, திருமங்கை ஓட. பெருமாள் கொஞ்சம் இளைப்பாறும் போது பட்டியியல் இடுகிறார்கள். என்னென்ன திருடிக்கொண்டு போயிருக்கிறாரென்று. உண்மையில் அங்கு பெரிய கள்வன் பெருமாள்தான். ஏனெனில் கன்னம் போடுபவனின் உள்ளதைக் கவர வந்துள்ள கள்வன் இவர்தான். அதுதான் கடைசியில் நடக்கிறது. இது அசடு, கலியன்! எல்லாம் திருடிவிட்டதாய் எண்ணிக்கொண்டு கடைசியில் பார்த்தால் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறது. கோஷ்டி பலமாக வாடினேன், வாடி வதங்கினேன்!! என்று சாற்றுகிறது. அதுதானே உண்மை. துயர் இடும் பெரும் பையில் விழுந்தவுடனே நம் வாடுதல் ஆரம்பித்துவிடவில்லையோ? இப்படியெல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கையில் வந்தார் ஒரு பாகவதர். நம் &lt;a href="http://groups.google.com/group/mintamil/msg/41f5964efb79ade3"&gt;திருமலை விஞ்சாமூர் வேங்கடேசன் &lt;/a&gt;எனும் மின்தமிழ் அன்பர். அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது ஏதேட்சையாக அவரும் சொன்னார், ‘உம்மைப் பார்க்க பெருமாள் வந்திருக்கார் ஓய்!’ என்று. &lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் சம்பிரதாயமாகச் சொல்லும் வார்த்தை என்றுதான் இதுவரை எண்ணிவந்தேன். ஆனால் அருளாட்சியின் பூடக உலகில் இம்மாதிரி நிகழ்வுகளை சம்பிரதாயமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. மிகவும் துல்லியமான தனிச்சேதி என்றே கொள்கின்றனர். இதை விளக்க ஸ்ரீரங்கம் முரளி பட்டரின் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்று. அவரிடம் யாரோ அங்கிருக்கும் சில சம்பிரதாயங்களை விளக்கக் கேட்க இவரும் ஒரு புதுப்பொருள் சொல்ல, பின்னால் அவருக்கே சந்தேகம் வந்துவிட்டது. தாம் சொன்னது சரியா? தவறா? என்று. அங்கு வந்த கிருஷ்ணப்பிரேமி ஸ்வாமிகளிடம் அவர் கேட்க, ஸ்வாமிகள் நீ எங்கிருந்து இதைச் சொன்னாய்? என்று கேட்டிருக்கிறார். சந்நிதியில் என்றிருக்கிறார் முரளி பட்டர். பின் என்ன சந்தேகம்? பேசியது நீ அல்ல, அவன் என்று விளக்கியிருக்கிறார். ஸ்ரீரங்க வரலாற்றில் இப்படி அர்ச்சகர் மூலமாக அவனிட்ட கட்டளைகள்தான் எத்தனை? அவன் நம்முடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறான். ஆனால் நமக்குத்தான் ‘அவன்’ பேசுகிறான் என்று புரிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அர்ச்சகர் என்றவுடன் இன்னொரு சம்பவம். என் பெண் ஸ்வேதாவிற்கு ஆண்டாள்தான், ‘கோயில் ஆழ்வான்’ என்று பாட்டி சொல்லிவிட்டார்கள். அவளுக்கு ஆண்டாள் மீது தனிப்பிரியம். பொதுவாகவே அவளுக்கு அம்பாள் கிருபை என்றும் உண்டு. அம்மூர்த்திகளே அவளைக் கவர்கின்றன. நியூயார்க்கில் (பிள்ளையார் கோயில்) நான் கிருஷ்ணன் அழகில் லயித்திருக்க இது சரஸ்வதி சந்நிதிமுன் அழுது கொண்டு நிற்கிறது! அப்படித்தான் அவள் ஸ்ரீரங்கம் ஆண்டாள் சந்நிதிக்குள் நுழைந்த நிமிடத்திலிருந்து ஆழி மழைக் கண்ணீர் விடத்தொடங்கிவிட்டாள். பாவம் அர்ச்சகர்! ஏதோ குழந்தைக்கு சோகமென்று விசாரித்து இருக்கிறார். இவளுக்கென்ன சோகம்? ஆண்டாளின் அருளாட்சியின் மழையில் நனையும் போது கண்கள் தானாக தாரை வார்க்கின்றன. துன்பம் மட்டும் கண்ணீர் வரவழைப்பதில்லை ஆனந்தமும் கண்ணீரைத்தான் வரவழைக்கிறது என்று அவருக்கு இவளால் புரிய வைக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஆனந்த பாஷ்பம் செய்வது அடியார் பழக்கம். இதுவொரு பாகவத பாவம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="blue"&gt;அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் &lt;br /&gt;   பாடி அலற்றுவன், &lt;br /&gt;தழுவல் வினையால் பக்கம் நோக்கி &lt;br /&gt;   நாணிக் கவிழ்ந்திருப்பன், &lt;br /&gt;செழுவொண் பழனக் குடந்தைக் கிடந்தாய். &lt;br /&gt;   செந்தா மரைக்கண்ணா, &lt;br /&gt;தொழுவன் னேனை யுன்தாள் சேரும் &lt;br /&gt;   வகையே சூழ்கண்டாய். 5.8.5 &lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தசபாவங்களுண்டு என்று பாகவதமும் சொல்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;செம்மொழி மாநாட்டில் நண்பர் அண்ணா கண்ணன் தன் அன்னையை அறிமுகப்படுத்தினார். ஆழ்வார்கள் மீதான என் காதலை அவரிடம் சொன்னார். நானும் குலசேகர ஆழ்வாரின்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="blue"&gt;வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால் &lt;br /&gt;மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால் &lt;br /&gt;மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ &lt;br /&gt;ஆளா வுனதருளே பார்ப்ப னடியேனே 5.4 &lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனும் பாடலைப் பற்றிச் சொல்ல அவர் கண்கள் பனித்தன.பின்னொரு சமயம் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் திருவேங்கடமணியுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது அவரது தாயார்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="blue"&gt;கற்பகமே விழிக் கருணை பொழிந்திடும் கமலக் கண்ணழகும் &lt;br /&gt;காரிசுதன் கழல் சூடிய முடியும் ககனச் சிகை முடியும் &lt;br /&gt;எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத் துளதால் &lt;br /&gt;இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிரே! &lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்லி கண்ணீர் உகப்பர் என்று சொன்னார். அது என்ன? ஒன்று சொன்னார் போல், வைணவர்களுக்கு அடியார் பெயர் சொன்னால், ஆண்டவன் பெயர் சொன்னால் பொல, பொலவென்று கண்ணீர் வந்துவிடுகிறது? இப்படியானதொரு மனப்பக்குவத்தை எப்படி நம் பெரியோர் தமிழரிடம் உண்டாக்கினர்? அதுவும் செந்தரமாக்கப்பட்ட செவ்வியல் பதிப்பு போல் சாதி வேறுபாடு இல்லாமல், வைஷ்ணவனுக்கோர் லட்சணம் இது என்பது போல். புதுவையில் கி.ராவுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது வேடிக்கையாகச் சொன்னார், ‘இவனுகளுக்கு ரொம்ப அகந்தை ஓய்! தானொரு வைஷ்ணவனென்று! அது போகாதவரை உங்களுக்கு வைகுந்தம் இல்லை! என்று நான் சொல்வதுண்டு’ என்றார். அப்பேச்சின் ஊடாக வெளிப்படுவதும் இந்தக் கர்வமே! அதுவொரு தேவையான திமிர் போல்தான் எனக்கென்னமோ படுகிறது! திருவல்லிக்கேணியில் தெற்கு ரத வீதியில் நடந்த பெருமாள் புறப்பாடும், பெருமாளைத் தூக்கித் திணவெடுத்த வைணவர்களின் தோள் புடைப்பும், இடைவேளையில் கம்பத்திற்குக் கம்பம் ஓடி விளையாடும் சிறார்களின்ன் குதூகலமும், நடு இரவைத்தொட்டு விட்டது என்பது கூட மறந்த நிலையில் அங்கிருந்த ஆனந்தமும், இன்று இப்போது கொரியாவிலிருந்து எண்ணும்போது ஏதோ இன்பக்கனா போல் தோன்றுகிறது. பூகோள வைகுந்தம் என்பது என்னவென்று அன்று ஸ்ரீரங்கத்தில் உணர்ந்தேன். பிறிதொரு சமயம் திருவல்லிக்கேணியில் உணர்ந்தேன். ஏசு பேசுகின்ற அருளாட்சி இதுதான் என்று திரும்பச் சொல்ல வேண்டுமோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-3461077961729914770?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/3461077961729914770/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=3461077961729914770' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/3461077961729914770'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/3461077961729914770'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2010/07/blog-post.html' title='அருளாட்சியின் அருமை பெருமைகள்'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-3748224380082842738</id><published>2010-05-16T13:53:00.004+09:00</published><updated>2010-05-16T17:48:36.528+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='musical'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='visaka hari'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='story narration'/><title type='text'>பாகம் 2: 006 பக்தவத்சலம் அச்சுதம்!</title><content type='html'>பிறந்தால் கலி காலத்தில் பிறக்கவேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;என்ன மாற்றி சொல்லிவிட்டேன் என்று சந்தேகமா? இல்லை நிச்சயமாக, கலிதான் மிக புண்ணிய யுகம். இந்த யுகத்தில் பிறந்த நாம் பாக்யசாலிகள்! ஏனப்படி? நம்மாழ்வாரைக் கேட்போம். கலியில் என்ன விசேஷமென்று!!&lt;br /&gt;&lt;br /&gt;பொலிக பொலிக பொலிக! &lt;br /&gt;  போயிற்று வல் உயிர்ச் சாபம், &lt;br /&gt;நலியும் நரகமும் நைந்த நமனுக்கு &lt;br /&gt;  இங்கு யாது ஒன்றும் இல்லை, &lt;br /&gt;கலியும் கெடும் கண்டு கொண்மின்! &lt;br /&gt;  கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல், &lt;br /&gt;மலியப் புகுந்து இசை பாடி ஆடி &lt;br /&gt;   உழிதரக் கண்டோ ம். 5.2.1&lt;br /&gt;&lt;br /&gt;சர்வ நிச்சயமாகச் சொல்லிவிட்டார் சடகோபன். இப்பாசுரத்தின் ஒவ்வொரு சொல்லும் உயிர் பெற்று வலம் வருவதை உணர்வுடையோர் உணர்ந்து உய்வர். முதலில் கலியில்தான் எண்ணிரந்த பாகவதர்கள் உலவுகின்றனர். கலியில்தான் எங்கும் நாம கீர்த்தனம். கலியில்தான் மின்வெளி இணையம். கலியில்தான் யூடுயூப் வீடியோ. கலியில்தான் உட்கார்ந்த இடத்திலிருந்து அதி உத்தமமான, அற்புதமான நிகழ்ச்சிகளை பைசா செலவில்லாமல் கண்டு களிக்க முடிகிறது. கலியில்தான் “கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல் மலியப் புகுந்து இசை பாடி, ஆடி உழிதரக்’காண்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தகையை உழிதரும் நிகழ்வுதான் விசாகா ஹரியின் பிரகலாத விஜயம் எனும் இந்த நிகழ்ச்சி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/S-9-ZhoD7ZI/AAAAAAAAIfw/qZzeuroyVX4/s1600/Visaka03.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 297px;" src="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/S-9-ZhoD7ZI/AAAAAAAAIfw/qZzeuroyVX4/s400/Visaka03.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5471731049266670994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கையில் நிறைய நேரம் வைத்துக் கொண்டு ஒரு சுதந்திரமான மனநிலையில் பிரகலாதன் கதை கேட்க உட்காருங்கள். 18 பாகங்கள் கொண்ட இந்த இசை நாடகம் சுமார் 3 மணி நேரம் ஓடுகிறது!!&lt;br /&gt;&lt;br /&gt;விசாகா ஹரியின் கதை மிக விசேஷமானது! ஏனெனில் தியாகராஜய்யரின் பாடல்களில் இவருக்கிருக்கும் பாடாந்தரம் மலைக்க வைக்கிறது. கதை சொல்லிக் கொண்டு வரும் போதே, ஒரு சொல்! அதை உரக்கச் சொல்லி, தியாகய்யரின் கீர்த்தனைகளின் இடையில் வரும் அச்சொல்லுடன் கீர்த்தனத்தை ஆரம்பித்து பின் முழுக்கீர்த்தனைக்கும் வரும் அழகு இருக்கிறதே! அடடா! இவ்வளவிற்கும் பரனூர் அண்ணா போலவோ, விசாகாவின் கணவர் ஹரிஜீ போலவோ இவர் ஹரிகதா குடும்பத்தில் பிறந்து சிக்ஷை பெற்றவர் அல்லர். ஹரி உபன்யாசம் பண்ணும் போது அப்படி கடல் மடை திறந்தார் போல் கொட்டுகிறது என்றால், அது ‘குலத்தொழில் கல்லாமல் பாகம்படும்’ எனும் சங்கப்பழமொழிக்கு எடுத்துக்காட்டு. ஆனால் விசாகா குழந்தை முதல் கிருஷ்ணப்பிரேமி அண்ணாவின் கதை கேட்டு வளர்ந்த ஒரு தேர்ந்த ரசிகை! கதை கேட்டுக் கேட்டு இவரும் ஒரு உபன்யாசர் ஆகிவிட்டார் என்பதுதான் ஆச்சர்யம்.ஒருவேளை அண்ணா அடிக்கடி சொல்வது போல் பகவத் விஷயம் சொல்வதற்கு ஆள் போதாது. இன்னும் நிறையப் பேர் வர வேண்டும்! என்பதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு இவர் களத்தில் புகுந்தாரோ என்னவோ! ஆனால் பகவத் விஷய விநியோகம் என்பதை நூதனமாகச் செய்கிறார் என்பது உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_eySWrbVwCy4/S--ACoHOs_I/AAAAAAAAIf4/ch_wtftoVkY/s1600/Visaka02.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 303px;" src="http://2.bp.blogspot.com/_eySWrbVwCy4/S--ACoHOs_I/AAAAAAAAIf4/ch_wtftoVkY/s400/Visaka02.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5471732854894277618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரனூர் பெரியவருக்கும், ஹரிஜிக்கும் நம் விசாகா ஹரிக்கும் ஒரு பெரிய வித்யாசமுண்டு. அது என்னவெனில் விசாகாவினுடையது ஒரு இசை நாடகம். அவரின் தேனினும் இனிய குரலில் மும்மூர்த்திகளின் கீர்த்தனைகள், மீரா பஜன், நாலாயிர திவ்யப்பிரபந்தம், பிரேமிகாகீதம், பாரதி பாடல்கள் என்று கேட்டு ஆனந்திப்பது ஒரு தனி அனுபவம். இசைக்கு நம்மை மேல் நிலைக்கு இட்டுச் செல்லும் சக்தியுண்டு. பக்தியுடன் பாடும் பாடல்கள் கல் நெஞ்சரையும் உருக்க வல்லது. கீழ்படிகளில் இருக்கும் நமது சக்கர நிலையை மேற்படிகளுக்கு இட்டுச் செல்லும் உந்துதல் இசைக்கு உண்டு. இசை உணர்வின் ஊடாகப் பாயும் அமுதம். இறைவனைப் பற்றிப் பேசும் திருமங்கையாழ்வார், ‘உணர்வெனும் பெரும்பதம்’ என்கிறார். உணர்வு உள்ளவன்தான் மனிதன். அந்த உணர்வின் வழியைச் சுத்தம் செய்து தெய்வீக அனுபவம் அதில் மண்டச்செய்ய வல்லது இசை. இந்த அரிய வழிமுறைக் கையாண்டு நம்மை உய்விக்கப் பிறந்திருப்பவர் விசாகா!!&lt;br /&gt;&lt;br /&gt;நாமும் குழந்தையிலிருந்து கீர்த்தனங்கள் கேட்டு வருகிறோம். ஆனால் எந்தக் கீர்த்தனம் எச்சூழலில் எப்படி பாடப்பட்டது என்று நாம் அறிவதில்லை. மேலும் எல்லாப் பாடகர்களும் பக்தி சிரத்தையோடு பாடுகிறார்கள் என்று சொல்ல முடியாது. சில பேர் வெறும் வித்வத்துவத்தைக் காட்ட நீட்டி முழக்கி பாடும் போது வெறும் இசை நுணுக்கம் மனதில் நிற்குமே தவிர அப்பாடல் தர வேண்டிய உணர்வெனும் பெரும் பக்தி வந்து சேராமல் போய்விட வாய்ப்புள்ளது. ஆனால், இந்திய சநாதன தர்மத்தில் அத்தனை சாதனைகளும் ஒரு திக்கு நோக்கியே பாய வேண்டும் என்பது விதி. ‘யாழின் இசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!’ என்பது திருவாய்மொழி. நம் செவி இருப்பதின் பயன் நாரண கீதம் கேட்பதுதான், வாய் இருப்பதின் பயன் நாரண நாமம் சொல்வதுதான், கண் இருப்பதின் பயன் நாரண ஸ்வரூபத்தை உள்வாங்குவதுதான், அறிவு இருப்பதின் பயன் ஹரி எனும் பேருண்மையை அறிந்து கொள்ளுதல்தான். இப்படி, இப்பிறவியின் பயனே ஹரிகதை கேட்டு அவர் பாதார விந்தங்களில் சரண் புகுவதுதான். அப்படி இருக்கும் போது விசாகாவின் ஒவ்வொரு நிகழ்வும் மிக எளிதாக நம்மை இத்திக்கு நோக்கி இட்டுச் செல்வது நாம் செய்த பாக்யம் இல்லையா? இதைச் சொல்லும் போதே விசாகா ஹரி எடுத்துக் கொள்ளும் ஆர்வம், சுயமுனைப்பு, கடும் உழைப்பு இவை நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. மூன்று மணி நேரம் உபன்யாசம் செய்வதே கஷ்ட. ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரு மணி நேரத்திற்கு மேல் பேச மாட்டார். பாவம் விசாகா, ஒரு வாய் நீர் கூட அருந்தாமல் கதையும், தெள்ளிய குரலில் பாடவும் செய்வது வியப்பை அதிகரிக்கிறது. ஏனெனில் சும்மா வருடம் ஒருமுறை சீசனில் பாடுபவர் கூட தம் குரல் கெட்டுவிடும் என்பதில் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பர். அதிகம் பேசினால் தொண்டை வரண்டு சாரீரம் கெட்டுவிடும் என்பதொரு வழக்கு. ஆனால் விசாகா, அதையெல்லாம் பொருட்படுத்தாது, கதையும், சங்கீர்த்தனமும் செய்வது பரோபகாரம். நிச்சயமாக அண்ணாவின் பரிபூரண ஆசி கிட்டியிருப்பது தெரிகிறது. சில நேரம் தோன்றும், பாவம் குழந்தை! இப்படி நா வறண்டு போகும் படி கதை சொல்கிறதே! உடையவருக்கு வடுக நம்பி கிடைத்தது போல் இவருக்கு யாராவது ஒருவர் கிடைத்து அவ்வப்போது இவரைக் கவனித்துக் கொண்டால் எப்படியிருக்கும்? என்று தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதில் இன்னொரு உண்மை இருப்பதையும் அறியலாம்.எனக்கு கதை கேட்க நேரமில்லை என்று சொல்லி அவசரப்படுபவர் எதை இழக்கிறார் என்று தெரிந்து கொள்ளவில்லை. கதை ஏன் நம்மை ஈர்க்கிறது. நமது பரிணாமமே கதை கேட்டு உய்வுற்ற பரிணாமம். கல்வி, கேள்விகள்தான் நம்மை இந்நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. மேலும் இறைவன் எனும் பூரணத்துவத்தைப் பற்றி நாம் கேட்கக் கேட்க அந்த உயர்ந்த குணங்கள் மெல்ல, மெல்ல நம்மில் படிகின்றன. எத்தனையோ கதைகள் இருக்க, ஹரிகதா என்பதை மட்டும் சிறப்பாக எடுத்து இந்திய மரபு வளர்த்தெடுத்து இருப்பது ஏன்? ஏனெனில், மும்மூர்த்திகளில் ஒருவராகவும், அவர்களுக்கு மேலாலானவராகவும் உள்ள நாரணன் சாத்வ குண பரிபாலனம். சத்வ உணவு, சத்வ நடத்தை, சத்வ அறிவு இதுவே நாம் அடைய வேண்டிய உயர் நிலை. ‘எங்கும் உளன் கண்ணன்’ எனும் உயர் அறிவு வாய்த்திட வேண்டும். ‘உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான்’ என்று கண்ணீர் விட வேண்டும். அதுவே சாத்வீக குணம். அதுவே உயர் அறிவு. இதை எட்ட வேண்டுமெனில் நாம் ஹரிகதை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அயர்வில்லாமல்.&lt;br /&gt;&lt;br /&gt;தியாகய்யர் மூன்று நாடகங்கள் செய்திருக்கிறாராம். அதில் இரண்டுதான் இப்போது கிடைத்திருக்கின்றன. 300 ஆண்டுகளுக்குள் நாம் இதைத் தொலைத்திருக்கிறோம் எனும் போது நமது அஜாக்ரதையை என்ன சொல்லித் திட்டுவது? கிடைத்திருக்கும் இரண்டு நாடகங்களிலும் முத்து, முத்தான கீர்த்தனங்கள். ஒவ்வொன்றாய் விசாகா எடுத்துக்காட்டும் போது மெய்சிலிர்க்கிறது! அடடா! இந்தக் கீர்த்தனை இந்தச் சூழலில் இன்ன அர்த்தத்தில் பாடப்பெற்றதா? அடடா! இப்படித்தான் ஆக்கியோன் அனுபவித்து இருப்பானோ? என்று நம்மைக் காலம், வெளியை உடைத்து வேறொரு அனுபவ உலகிற்கு இட்டுச் செல்லும் வல்லமை விசாகா ஹரியின் இசை நாடகத்திற்கு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை போன்ற முகம். கண்ணைக் கண்ணை உருட்டிக் கொண்டு குழி விழ இவர் சொல்லும் கதை யாரைத்தான் மயக்காது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="480" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/U2CuYfgQM3I&amp;hl=en_US&amp;fs=1&amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/U2CuYfgQM3I&amp;hl=en_US&amp;fs=1&amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரகலாத பக்த விஜயம் ஏன் கேட்க வேண்டும்? கேட்ட கதைதானே? அப்படி எண்ணக்கூடாது. சொல்லுபவர் சொல்லின் சொல்லாத பொருள் எல்லாம் சொலபத்தில் புலப்படும்! பிரகலாதன் தீனன். குழந்தை. பெரிய பராக்கிரமன் அல்லன். இவனுக்கு அருள் செய்ய ஒரு அவதாரம் என்றால் அது நாரணன் தீன தயாளன் என்பதைக் காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரகலாதன் அசுரன். நீச்ச குலத்தில் பிறந்தவன். ஆனால் இறைவன் குலம் பார்த்தா அருள் செய்கிறான்? இல்லையே! ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது அவன் வாக்கன்றோ!&lt;br /&gt;&lt;br /&gt;பிரகலாதன் அறிவுஜீவியல்ல. கற்றல் என்பது நடப்பதற்கு முன் உள்ள பள்ளிப் பாலகன். எனவே அவன் ஞானத்திற்கு மயங்கி இறைவன் வரவில்லை. அவன் எளிமை கருதி வருகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பிரகலாதன் எனும் உருவகம் எதைச் சுட்டுகிறது என்று மேலும், மேலும் ஆராயப்புகின், அந்த உருவகம் வேறு யாரையும் சுட்டவில்லை, அது நம்மைத்தான் சுட்டுகிறது என்று புரியும். நமக்கு என்ன அறிவு இருக்கிறது என்று பீற்றிக் கொள்ளமுடியும்? நமக்கு என்ன பராக்கிரமம் இருக்கிறது என்று மார் தட்ட முடியும்? அட! நமக்கு என்னதான் பெரிய குலம் இருக்கிறதென்று பறை சாற்ற முடியும்? ஒன்றும் கிடையாது. ஆயினும் தாய் முகம் பார்த்து ஏங்கும் குழந்தை போல், ஒரு பாலகனாக நாம் சக்தியற்று, திறனற்று, வலுவற்று நிற்கும் நிலையை பிரகாலத சரிதம் நம் முன் காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பிரகலாதனுக்கு எவ்வளவு பெரிய பேறு கிட்டியது? பாகவ சக்ரவர்த்தி என்ற பட்டம், படைத்தவனால் கொடுக்கப்பட்டிருக்கிறது!! பிரகலாத சரிதம் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். இதனால்தான் இச்சரிதம் இத்தனை நூற்றாண்டுகளாக பல்வேறு ஞானிகளால், இசைக்கலைஞர்களால், பௌராணிகர்களால் மீண்டும், மீண்டும் சொல்லப்பட்டு வந்திருக்கிறது!அந்தப்பெரிய பொக்கிஷத்தை சரளமாகக் கையாண்டு நமக்கு நம்பிக்கை தர வந்திருக்கும் இசை நட்சத்திரம் விசாகா ஹரி. நம்மாழ்வார் பாடிய ‘பொலிக! பொலிக! பொலிக! போயிற்று வல்லுயிர் சாபம்! என்பதுதான் எவ்வளவு உண்மை!&lt;br /&gt;&lt;br /&gt;எங்கும்முளன்கண்ண னென்றமகனைக்காய்ந்து, &lt;br /&gt;இங்கில்லையால் என் றிரணியன் தூண்புடைப்ப, &lt;br /&gt;அங்கப்பொழுதே அவன்வீயத்தோன்றிய, என் &lt;br /&gt;சிங்கப்பிரான்பெருமை யாராயும்சீர்மைத்தே. 2.8.9&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-3748224380082842738?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/3748224380082842738/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=3748224380082842738' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/3748224380082842738'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/3748224380082842738'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2010/05/share-this-video.html' title='பாகம் 2: 006 பக்தவத்சலம் அச்சுதம்!'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/S-9-ZhoD7ZI/AAAAAAAAIfw/qZzeuroyVX4/s72-c/Visaka03.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-8325472428976167502</id><published>2009-05-17T10:35:00.003+09:00</published><updated>2009-05-17T13:13:56.400+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='mysticism'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='crosstalk'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nammalvar'/><title type='text'>பாகம் 2: 005 கற்கும் கல்வி செய்வேனும் யானே!</title><content type='html'>அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் மேலைக் கலாச்சாரத்தில் மிகப்பெரிய பிளவு இருக்கிறது. அது கீழைக்கலாச்சாரத்தில் இல்லை. ஏனெனில் இந்திய மரபில் இறைவனை உணர்தல் என்பது அறிவின் பாற்பட்டே உள்ளது. இதை ஞான மார்க்கம் என்பர். அறிவியலில் எத்தகை நுண்ணிய, தீர்க்கமான பார்வைகளுண்டோ, அவையனைத்தும் ஞானமார்க்கத்திலும் உண்டு. எனவே இங்கு அறிவியல், மெய்யியல் என்பது பிரித்துக்காணமுடியாத ஒரு பெரும் பரப்பாய் உள்ளது. இந்த வசதி ஒரு மேலைத்திய விஞ்ஞானிக்கு இல்லை. டார்வின் தன் கோட்பாட்டை முன் வைத்த போது கிறிஸ்தவ தத்துவம் (christian doctrines) அதற்குத்தடையாக இருந்தது. விவிலிய முதல் ஏற்பாட்டின்படி, இறைவன் மனிதனைப்படைத்தது 5000 வருடங்களுக்கு முந்தி என்று இருக்கிறது. எகிப்திய கலாச்சாரம் கோலோட்சிய காலங்கள் அவை! அதே நேரத்தில், இந்தியப்பாரம்பரியத்தில் எழுதப்பட்ட ஒரு நூல் உயிர்கள் தோன்றி நூற்றுத்தொண்ணூத்தாறு கோடியே, எண்பத்தைந்து லட்சத்து, மூவாயிரத்து நூற்று ஒன்பது வருடங்கள் ஆகின்றன என்று சொல்கிறது. அதாவது, ஏறக்குறைய 2 பில்லியன் வருடங்கள் (1,968,503,109). இது நவீன அறிவியல் பார்வையுடன் ஒத்துப்போவதாக உள்ளது. (நூல்: ஸ்ரீமத்விகனஸோத்பத்தி சரித்ரம், தஞ்சை சர்ஸ்வதி மகால் வெளியீடு, 1997. ஆசிரியர் எஸ்.சுதர்சனன்)&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சர்யம் என்னவெனில் இப்போதுள்ள நவீன வேதிம, இயற்பியல் உபகரணங்கள் இல்லாமல் இவர்களால் எப்படி? இப்படியானதொரு காலக்கணக்கைச் சொல்லமுடிந்தது? அப்படியெனில், பிரபஞ்சத்தில் மறைபொருளாய் இருக்கும் தரவுக்கிடங்கை (database) அணுகும் ஆய்வுமுறை இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அந்தக்கல்வி முறை என்ன? அது இப்போதும் சாத்தியப்படுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியொரு கேள்வி கேட்டோமெனில் நமது பனுவல்களை கொஞ்சம் வெட்கமின்றி, கூச்சமின்றி அணுகும் வாய்ப்புக்கிடைக்கிறது. நவீன உலகில், விஞ்ஞானி, விஞ்ஞானம் பேசுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆன்மீகவியலர் ஆன்மீகம் பேசுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இரண்டிற்குமான ஊடுபாயல் (crosstalk) இருக்கக்கூடாது என்ற எழுதாத சட்டமொன்றுள்ளது. அதனால் பலருக்கு இம்மாதிரி விஷயங்களைப் பேசுவதில் கூச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;விஞ்ஞானிகளிடமே கூட இது பற்றியெல்லாம் பேசுவது கூச்சமளிக்கும் செயலே. உதாரணமாக, Till Kekule என்பவர் பென்ஜீன் மூலக்கூறு கண்டு சொன்ன வரலாறு, இன்றும் அறிவியல் உலகில் விவாததிற்கு உள்ளாகும் பொருள்:&lt;br /&gt;&lt;br /&gt;"...I turned my chair toward the fire place and sank into a doze. Again the atoms were flitting before my eyes. Smaller groups now kept modestly in the background. My mind's eye sharpened by repeated visions of a similar sort, now distinguished larger structures of varying forms. Long rows frequently rose together, all in movement, winding and turning like serpents; and see! what was that? One of the serpents seized its own tail and the form whirled mockingly before my eyes. I came awake like a flash of lightning. This time also I spent the remainder of the night working out the consequences of the hypothesis."&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, இதை நம்மொழியில் சொல்வதானால் `அருளிச்செயல்`. அதாவது, பிரபஞ்ச ஆக்கம், நிர்மாணித்தல், காத்தல், அழித்தல் சம்மந்தமான எல்லா சேதிகளும் எங்கோ ஒரு மாகணினியில் (super computer), ஒரு சேவியில் (Server) உள்ளது. அதை அணுகுவதற்கான access code சிலருக்குத் தெரிகிறது. பலருக்குத்தெரிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனிப்படி சொல்ல வேண்டியுள்ளது எனில், ஒரு உயிர் உருவாகும் போது, ஆண் அணுவும், பெண் அணுவும் சேர்ந்தவுடன், ஒரு மாபெரும் transcription of code நடக்கிறது! அதாவது, உலகில் காணும் எல்லா உயிரினங்களின் வாழ்வியல் சேதி DNA, RNA எனும் மூலக்குறில் குறிமவடிவில் (encoded, enscription) உள்ளது. இருபால் உயிரினங்களின் தோற்றம் இம்மூலக்கூறு சேர்க்கையிலும், இக்குறிம மொழிபெயர்பிலும் அமைந்துள்ளது. இது அனைத்திற்கும் பொது. ஆயினும், ஒரு யானை யானையாகவும், ஒரு மனிதன் மனிதனாகவும் மாறுவது விந்தை. அது மட்டுமல்ல, முதல் சேர்க்கையில் முட்டையும், விந்துவும்தான் சேர்கின்றன. அந்நிலையில் ஒரு மாறுபடாத (undifferentiated) கரு, மெல்ல, மெல்ல ஒவ்வொரு உறுப்பாக மாறுபடுவதும் விந்தையே! அறிவியல் இது, இது, இன்னின்ன முறையில் மாறுபடுகிறது என்றளவில் சொல்லி நிறுத்திக்கொள்கிறது. ஏன்? எப்படி எனும் கேள்விகளுக்கு விடையில்லை. ஏன் ஒரு செல் பல்வேறாக பெருகுகிறது? எப்படி ஒன்றே பல்வேறு வடிவங்களை ஏற்றுக் கொள்கிறது? பல்வேறு வடிவங்கள் ஏற்றுக்கொண்டபின் இதயம், இதயமாகவும், கல்லீரல், கல்லீரலாகவும் தொடந்து செயல்பட ஆணையிடுவது யார்? எதன் கட்டளையில், இவை கட்டுப்பட்டு செயல்படுகின்றன? மேல் தோல் கிழிந்தால் ஒட்டிக்கொள்கிறது, சில நேரம் முறிந்த எலும்பு கூட ஒட்டிக்கொள்கிறது. ஆனால் நரம்பு முறிந்தால் மீண்டும் வளருவதில்லை (regeneration). ஏன்? மூளையில் கூட, பாதிக்கப்பட்ட பகுதிகளின் செயல்களை பிற பாகங்கள் ஏற்று நடத்துகின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/cp2y6Lkq7lY&amp;amp;hl=" fs="1" width="425" height="344" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="always"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூளை இயங்கும் விதமே இவ்வித ஆச்சர்யத்திற்குரியதுதான். மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பற்றிய ஒரு வீடியோயை என் கவனத்திற்கு ஒரு அன்பர் கொண்டுவந்தார். இதில் ரெக்ஸ் எனும் சிறுவன் மூளை குன்றிய நிலையில் இசையின் நுணுக்களை மிக எளிதாக அறிந்திருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். இந்த வீடியோவில் மூன்று சிறுவர்/சிறுமிகளின் வாழ்வு காட்டப்படுகிறது. தமிழகத்தில் இதை musical prodigy என்பார்கள். பாலமுரளி கிருஷ்ணா இம்மாதிரி வரம் பெற்றவர். ஆனாலும், இவர்கள் போல் அல்லாமல் உடல் ஊனமுற்ற நிலையிலும் இப்படி வரம் பெற்று வாழ்வது சிறப்பு இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" src="http://cnettv.cnet.com/av/video/cbsnews/player-dest.swf" width="425" height="324" type="application/x-shockwave-flash" flashvars="linkUrl=http://www.cbsnews.com/video/watch/?id=2294559n&amp;amp;releaseURL=http://cnettv.cnet.com/av/video/cbsnews/player-dest.swf&amp;amp;videoId=50062177&amp;amp;edid=2121&amp;amp;vert=News&amp;amp;autoPlayVid=false&amp;amp;name=cbsPlayer&amp;amp;allowScriptAccess=always&amp;amp;wmode=transparent&amp;amp;embedded=y&amp;amp;scale=noscale&amp;amp;rv=n&amp;amp;salign=tl" allowfullscreen="true"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.cbs.com/"&gt;Watch CBS Videos Online&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இக்குழந்தைகளுக்கு இந்த வரம் எப்படி அமையப்பெறுகிறது? மூளை என்பதுதான் என்ன? அது சேதிகளை எப்படி சேகரிக்கிறது? எங்கு, எப்படி சேர்த்து வைக்கிறது? எப்படிப் புரிந்து கொள்கிறது? புரிந்துகொள்வது யார்? மூளை மட்டும்தானா? இசை கேட்கும் போது உடலில் புல்லரிப்பு ஏன் வருவானேன்? மூளை மட்டும் அனுபவிப்பதாகத் தெரியவில்லையே! நம்மாழ்வார் சொல்வது போல் உடலெங்கும் கரந்து பரவியிருக்கும் உயிர் அல்லவோ இசையை அனுபவிக்கிறது? இந்த இசை அனுபவம், ஒருவருக்கு மட்டும் சொந்தமா? இல்லையே! எல்லோரும் அனுபவிக்கிறோமே! மனிதர்கள் மட்டுமா? பல்வேறு விலங்குகளும், ஏன் தாவரங்கள் கூட அனுபவிக்கின்றனவே! தாவரங்களுக்கு மூளையுண்டா? கேள்விகள்தான் நிற்கின்றன. பெரிய விஞ்ஞானி Stephen Hawking. ஐன்ஸ்டைனுக்கு அடுத்து என்கிறார்கள். அவரால் பேசக்கூட முடியவில்லை. அவர் மிகவும் ஆச்சர்யமான வகையில் பிரபஞ்ச உண்மைகள் பற்றிச் சொல்கிறார் (கணினியின் உதவியுடன்). இதைப்பற்றி கொஞ்சம் யோசிக்கும் போது மூளைதான் எல்லாம் என்று எப்படிச் சொல்ல முடியும்? மூளைச்சாவு (brain death) என்பதையே உயிரின் கடைசி நிலை என்று இப்போது கணக்கிடுகிறோம். மூளை ஒரு பொறி போலும். உடற்பொறியின் சாவி அங்குள்ளது போலும். மூளை எனும் சாவி கெட்டுப்போனவுடன் உயிரியக்கம் நின்று விடுகிறது. அதுவரை அதை இயக்கியது யார் எனும் கேள்வியுடன்!&lt;br /&gt;&lt;br /&gt;எதற்குச் சொல்ல வருகிறேன் எனில், ஆன்மீகப்பேச்சில்தான் mysticism இருக்கிறது என்றில்லை. அறிவியலிலும் mysticism உண்டு. நிறைய உதாரணங்கள் தேடி எடுக்க முடியும். நாம் இங்கு அறிவியலை mystify செய்ய வரவில்லை. பிரபஞ்ச அமைப்பே, பெரிய பிரம்மிப்பாய் உள்ளது! அதன் படி நிலைகளை, அது செயல்படும் விதத்தை என்று நாம் அறியப்போகிறோம்? எப்படி அறியப்போகிறோம்?&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் ஒருவழி. முன்பு சொன்னது போல், அறிவியல் என்பது வேதாந்த மார்க்கமே. இங்கு எந்த முரணுமில்லை. பேச்சு முறைகள், அணுகுமுறைகள், பரிபாஷைகள் கொஞ்சம் மாறுபடும். ஆனால் பேதமற்ற நெஞ்சுடன் பார்க்கப் பழகினால் நம்மாழ்வாரகட்டும், Stephen Hawking ஆகட்டும், இவர்கள் பேசுவது பொது உண்மை பற்றியே என்பது புலப்படும். அந்த உண்மையைக் கண்டறியும் ஆர்வத்தில், இந்திய அணுகுமுறை என்ன? இதன் நோக்கு என்ன என்று கொஞ்சம் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிப்படியாக ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;யானேயென்னை அறியகிலாதே,&lt;br /&gt;யானேயென்தனதே யென்றிருந்தேன்,&lt;br /&gt;யானேநீயென் னுடைமையும்நீயே,&lt;br /&gt;வானேயேத்து மெம்வானவரேறே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் யார் என்று இது நாள் வரை அறிந்திலேன். நான் என்பது இந்த உடலும், அதன் இச்சைகளும், அதன் முரண்பாடுகளும் என்றிருந்தேன். ஆனால், ஒரு இனிய பொழுதில் நீ வந்து நான் என்பது நீயே என்று காட்டினாய். நான் உன் உடைமை என்றும் காட்டினாய். இனி, இக்கேள்விக்குள் எப்படிச் செல்வது என்பதையும் நீயே வந்து காட்டியருள வேண்டும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-8325472428976167502?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/8325472428976167502/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=8325472428976167502' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/8325472428976167502'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/8325472428976167502'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2009/05/2-005.html' title='பாகம் 2: 005 கற்கும் கல்வி செய்வேனும் யானே!'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-7704389312369129956</id><published>2009-05-16T20:08:00.005+09:00</published><updated>2009-05-17T13:04:31.100+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='siddhadanta'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tiruvaimozhi'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='vedanta'/><title type='text'>பாகம் 2: 004 இந்தியப் பரிணாம நோக்கு</title><content type='html'>அறிவியலை விஞ்ஞானிகளிடம் விட்டு, ஆன்மீகத்தை ஆச்சார்யர்களிடம் விட்டு, விட்டு நம்ம வேலையை பார்த்துக்கொண்டிராமல் ஈதென்ன விசாரம் என்று வினவலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;காரணமிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விஞ்ஞானி என்பவன் எங்கோ தேவலோகத்திலிருந்து பிறந்தவன் அல்ல. அவனும் இச்சமூகம் உருவாக்கிய ஒரு பிரஜைதான். இச்சமூகத்தின் சிந்தனைக் குழம்பில் ஊறிய ஒரு துளிதான். அவனை மற்றோரிடமிருந்து பிரிப்பது, அவன், அறிவு, அவன் நெறியான செயல்பாடு, திறந்த போக்கு போன்றவை. அறிவியல் என்பதும் இச்சமூகத்தின் ஒரு நிருவனம்தான். அதன் சிறப்பு அதன் அணுகுமுறைதான். அதாவது research methodology.&lt;br /&gt;&lt;br /&gt;விஞ்ஞானிக்கும், மெய்ஞானிக்கும் பொதுவாய் இருப்பது அறிவு (ஞானம்). அங்கிருந்துதான் இருவருக்குமே inspiration என்பது வருகிறது. மேலும், அறிவியல், தத்துவத்தின் கட்டுமானத்திலேயே தன் செயல்பாட்டை அமைத்துக்கொள்கிறது. நல்ல அறிவியல் வர நல்ல தத்துவக் கோட்பாடுகள் அவசியம். இந்த இடத்தில் தத்துவ ஞானி உயர் இடத்தில் உள்ளான். முனைவர் என்பதை ஆங்கிலத்தில் doctor of philosophy என்கிறோம். Doctor of Biochemistry என்றோ doctor of Cosmology என்றோ சொல்வதில்லை. எனவே தத்துவமே அறிவின் உயர்பீடம்.&lt;br /&gt;&lt;br /&gt;மெய்ஞானவியலை தத்துவங்கள் என்றுதான் சொல்கிறோம். நாம் உருவகப்படுத்திப்பார்க்கும் அனைத்துக் கடவுளரும் அடிப்படையில் தத்துவங்களே. மும்மூர்த்திகள் பிரபஞ்சத்தின் மூன்று குணங்களைச் சொல்ல வந்தது. சாத்வீகம் - விஷ்ணு, தமஸ் - சிவன், ரஜோ - பிரம்மா. மேலும் இப்படி விளக்குவார்கள். எனவே அறிவியலில் research methodology இருப்பது போல் மெய்யியலில் வேதாந்தம், சித்தாந்தம் என்ற research methodology உண்டு. அங்கும் எதையும் தீர விசாரிக்காமல் ஏற்றுக்கொள்வதில்லை. அசட்டுத்தனமான தி.க பிரச்சாரங்கள் சமூகத்திலுள்ள மூடநம்பிக்கைகளைக் கேலி செய்ய வந்தன. அதன் பின்னுள்ள தத்துவங்கள் விளக்கப்படும் போது அவை கேலிக்குரியவை அல்ல என்பது புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;விஞ்ஞானிகளுக்கும், மெய்ஞானிகளுக்கும் வாழ்வும், இயற்கையுமே பரிசோதனைக் கூடமாக, ஆய்வு பொருளாக, கற்பக தருவாக அமைகின்றன. டார்வின் H.M.S Beagle எனும் கப்பலில் பயணப்பட்ட போது கலப்பகஸ் தீவுக்கூட்டகளில் உயிரியல் பரிமாணத்திற்கான வித்து கிடைத்தது. 20 வருடங்கள் தன் கொள்கையை வெளியிடாமல் ஊறப்போட்டிருந்தார். குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று அவர் வாழ்ந்த எலிசபெத் அரசாட்சி காலத்தில் சொல்லமுடியவில்லை. ஆயினும் சொல்ல வேண்டிய நிர்பந்தம் எப்போது ஏற்பட்டது எனில் Alfred Russel Wallace எனும் இன்னொரு ஆங்கிலேயர் (ஆஸ்திரேலியர்) மலேரியக் காய்ச்சலில் நோவுற்ற போது கனவுபோல் பரிணாமக் கோட்பாடு அவருக்குத்தோன்ற அவர் இது குறித்து முதல் கட்டுரை வடித்துவிட்டார். ஆக, பரிணாமவியலும் ஒருவகையில் அருளிச்செயலே!&lt;br /&gt;&lt;br /&gt;ஆழ்வார்களுக்கு பூரண அருளால் இது போன்ற பல்வேறு கோட்பாடுகள் தோன்ற அவைகளை பாசுரங்களாக வடித்து வைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு முறையிலும், அடிப்படையாக இயற்கையே ஆசானாக உள்ளது. உதாரணமாக வேதாந்த முறையில் ஈஸ்வரனைப் பற்றி விளக்க வரும் போது ஆதிசங்கர பகவத் பாதாள், நம்மை வைத்தே (அதாவது ஜீவனை வைத்தே) விளங்கச் சொல்வார். இப்படி, கண்களுக்குப் புலனாகும் பரு உலகையும்,உயிர்களையும் முதலில்சுட்டிக்காட்டி, அதற்கு ஆதாரம் எது என்பதை உணர்த்துவது உபநிஷத்தின் வழி (நன்றி தேவ்). இதைச் “சாகா சந்த்ர ந்யாயம்” என்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை எளிதாக விளக்கும் பாடல்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;தாலத்தின் மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டுவார்போல்&lt;br /&gt;ஆலத்தின் உடுக்கள் காட்டி அருந்ததி காட்டுவார்போல்&lt;br /&gt;தூலத்தை முன்புகாட்டிச் சூக்கும சொரூபமான&lt;br /&gt;மூலத்தைப் பின்புகாட்ட முனிவரர் தொடங்கினாரே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(கைவல்ய நவநீதம்) (நன்றி. &lt;a href="http://groups.google.com/group/minTamil"&gt;மின்தமிழ்&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;எனவே ஸ்தூல உடம்பைக்காட்டி, அதன் சூட்சுமங்களை விளங்கச் செய்து சூக்கும சொரூபமான மூலத்தைக்காட்டுவது நமது சம்பிரதாயம். எனவே மெய்ஞானிகளுக்கும் முறையான methodology உண்டு. இந்த முறையை hermeneutic science என்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை&lt;br /&gt;படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்&lt;br /&gt;உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்&lt;br /&gt;சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக உடலில் உயிர் எங்குள்ளது? என்று கேட்டால் எதைக் காட்டுவது? கையில் உள்ளதா? மூக்கில் உள்ளதா? இல்லை மூளையில் மட்டும் உள்ளதா? எங்குள்ளது. அது உடல்மிசை கரந்தெங்கும் பரவி இருக்கிறது. அது போல், விசும்பு, வெளி, நீர், நிலம், எரி எனும் ஐம்பூதங்களில் படர் பொருளாக உள்ளான் இறைவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை எந்த methodology கொண்டு அறிவது? என்று கேட்போருக்கும் நம்மாழ்வார் பதில் சொல்கிறார், உளன்! யார் உளன்? உடம்பில் உயிர் எப்படிக் கரந்து பரவியுள்ளதோ, அது போல் இறைவன் பிரபஞ்சத்தில் உளன்! இதை, எதைக்கொண்டு அறிவது?&lt;br /&gt;&lt;br /&gt;உளன்! சுடர்மிகு சுருதியுள்!!&lt;br /&gt;&lt;br /&gt;அவன் சுருதி எனப்படும் வேதத்தின் உள்ளே methodologyயாக உள்ளான். வேதம் நன்கு கற்கும் போது அவன் இருப்பு வெளிப்படும். சரி, வேதமறியாத நம் போன்றோருக்கு கதி? சுவாமி வேதாந்த தேசிகர் சுட்டியது போல், திருவாய்மொழியே நமக்கு வேதம். இதில் இல்லாத கருத்து இல்லை. இதில் புரியாத விளக்கமில்லை! எனவே, சுடர்மிகு சுருதியான திருவாய்மொழியில் “அவன் உளன்”.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகா! அதனால்தான், திருவாய்மொழி கொண்டு உலகைக்காண முயல்கிறோம். இறைவனை வேறு எங்கும் தேடவேண்டாம், “உளன்! சுடர்மிகு சுருதியுள்”. அவன் எழுத்தாகவே உள்ளான். அவன் பிரதியாகவே (text) உள்ளான். அவன் அணுகுமுறையாகவே உள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மேல் வேறென்ன காரணம் வேண்டும்? மெய்ஞான வழியில் விஞ்ஞான உண்மைகளுக்கு பின்புலம் காட்ட? (தொடர்வோம்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-7704389312369129956?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/7704389312369129956/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=7704389312369129956' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/7704389312369129956'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/7704389312369129956'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2009/05/2-004.html' title='பாகம் 2: 004 இந்தியப் பரிணாம நோக்கு'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-7837940437236122276</id><published>2009-05-15T20:26:00.005+09:00</published><updated>2009-05-15T22:15:36.776+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='integrated religious outlook'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='is evolution true? anti-evolution'/><title type='text'>பாகம் 2: 003 பரிணாமம் உண்மையா?</title><content type='html'>நாத்திகம் எனக்கு இயற்கையாக வந்ததொன்றில்லை. புகுத்தப்பட்ட ஒன்று. முதல் நிலையில் திராவிட கழகம் அப்பழியை ஏற்கிறது. வீட்டைவிட்டு வெளியேறினால் சண்முகப்பட்டர் வீடு. அவர் வீட்டுச் சுவரிலேயே எழுத்திருப்பான், `கடவுளை நம்புகிறவன் முட்டாள்! கடவுள் இல்லவே இல்லை` என்று. பாவம் அவரும் வெள்ளையடிக்க, அடிக்க, இவனும் அழுத்தமாக எழுதிவைப்பான். ஒருநிலையில் `இது கடவுளுக்கே வெளிச்சமென அவரும் விட்டுவிட்டார். பள்ளி செல்லும் இளம் வயதில் இது உறுத்தியது. ஆயினும், தெருவில் உள்ள எல்லோரும், ஏன்? ஊரிலுள்ள எல்லோரும் கோயிலுக்கு வருவதாலும், பள்ளி மாணவர்கள் எல்லோரும் ஏறக்குறைய திருநீறு அணிந்து வருவதாலும், தி.கவின் இக்கூற்று என்னை அதிகம் பாதிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய மனக்குழப்பம் வந்தது அமெரிக்கன் கல்லூரியில்தான். உயிரியல் எடுத்ததுதான் வம்பு. அமெரிக்கன் கல்லூரி கிறிஸ்தவக்கல்லூரி, கல்லூரிக்குள்ளே தேவாலயமுண்டு. ஆனால், உயிரியல் பேராசிரியர் ஜே.சி.பி.ஆபிரஹாம் மட்டும் நாத்திகராகவே இச்சூழலில் இருந்தார். அவர் உயிரியல் பாடமெடுக்கும் முறை அங்கு பிரசித்தம். அவ்வளவு நல்ல ஆசிரியர், ஆனால் கடவுள் வேண்டாம் என்றிருந்தார். கல்லூரிக்காலங்களில் இயல்பாக இருக்கும் மத, மதப்பு, இளமை, எதிர்க்கும் குணம் எல்லாம் சேர்ந்து அவர் சொல்வதை நம்ப வைத்தது. அதிலும் எனக்கு உயிரியல் பரிணாமம் (evolutionary biology)என்பது இயல்பாகவே பிடித்த பாடம். அதில் விற்பன்னர் ஜே.சி.பிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் படித்த காலங்களில் பரிணாமவியலார் (evolutionist)என்றாலே கடவுள் வேண்டாம் என்று சொல்லுவோர் என்றிருந்தது. எனவே உயிரியல் விந்தைகள் எல்லாம், இயற்கை தானாக உருவாக்கியதே என்று சொல்லித்தந்தனர். எவ்வளவு, நம்பமுடியாத உயிரியல் எடுப்பும் (biological adaptation) நெடிய காலக்கெடுவில் தானாக சாத்தியப்படக்கூடியதே! என்று நம்பினர் இவர்கள். அது உண்மையாகவே இருக்கலாம். இயற்கைத்தேர்வு எனும் முறை நெடிய காலக்கணக்கில் கசடுகளைக் கழித்து, உயர்வானவற்றை தக்கவைக்கும் தன்மையதே. ஆயினும், இதற்காக பிரபஞ்ச காரணி என்ற ஒன்று தேவையே இல்லை என்று சொல்வதை என்னால் இப்போது கேள்வி கேட்கமுடிகிறது. அப்போது அந்த முதிர்ச்சியும், தெளிவுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமில்லை, அப்போது, இயற்கையை ஆராய்வதற்கு இப்போதுள்ள வசதிகளும் இல்லை. நவீன தொழில்நுட்பம் வழங்கியிருக்கும் அளப்பரிய வசதியால் இயற்கையின் சந்து, பொந்திற்குளெல்லாம் புகுந்து படமெடுக்க முடிகிறது. மிகவும் கொடூரமான விலங்குகள் என்று நம்பியிருந்த விலங்குகளெல்லாம் ‘இதயம்’ உடைய (ih love &amp;amp; compassion) விலங்குகளே. அன்பு காட்டினால், பிரதி அன்பு செய்யக்கூடியவையே என்பதை நவீன உயிரியல் ஆவணமாக்கிக் காட்டியிருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக சிங்கம், புலி, ஓநாய், கழுதைப்புலி, சிறுத்தை இவையெல்லாம் வீட்டு நாய் போல் பழகுவதைக் காணக்கூடியதாக உள்ளது. அவற்றின் குடும்ப வாழ்வை நோக்கினால், தாய்மை என்பதைப் பூரணமாகக் காணமுடிகிறது. குடும்ப வாஞ்சை என்பதில் மனிதருக்கு எவ்விதத்திலும் அவை சளைத்தவை இல்லை என்று தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பின் ஏன் இந்த, Survival of the fittest மற்றும் Wildlife is full of killing and violence என்ற ஒரு அபிப்பிராயம்? காரணம் விலங்குகள் வேட்டையாடுவதை மனிதன் காணும் போது அது கொடூரமாக இவனுக்குத் தோன்றுகிறது. ஆனால், கொடிய விலங்குகள் என்று பெயர் பெற்றுவிட்ட விலங்குகள் இரை தேடுவது என்பது சாதாரண விஷயமில்லை. 10 முயற்சியில் ஒரு முயற்சிதான் பலிக்குமாம். அவை பல வாரங்கள் பட்டினி கிடக்கும் நிலமையுமுண்டு. எனவே, இப்போதெல்லாம், படமெடுக்கும் போது, அப்பாவியான மான் குட்டியை ஒரு சிறுத்தை கொல்கிறது என்றால் படமெடுப்பவர் தடுப்பதில்லை. ஏனெனில் அங்கு, நாலு சிறுத்தை குட்டிகள் தாய் கொண்டுவரும் உணவிற்காக ஏங்கி நிற்கின்றன. உண்மையில் சாகபட்சிணிகளைவிட, சிறுத்தை, புலிக்குட்டிகள் உயிர்பிழைத்து பெரியவைகள் ஆவது துர்லபம் என்று ஆய்வுகள் சுட்டுகின்றன. எனவே அங்கு நடப்பது எதுவும் கொடுமையானதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, இவைகளைப்படமெடுக்கும் போதுதான் தெரிகிறது, நமக்கும் அவைகளுக்கும் எவ்வளவு ஒற்றுமைகள் உள்ளன என்று. யானையைப் பலவருடங்களாக ஆவணப்படுத்தும் ஆய்வாளர் சொல்கிறார், ஒவ்வொரு யானையும் ஒருவிதம். கூச்சமான யானைகளுண்டு, சவுடால் யானைகளுண்டு, முரட்டு யானைகளுண்டு. இப்படி, எத்தனை குணங்களை நம்முள் காணமுடியுமோ அத்தனையும் அங்குண்டு. உண்மையில் அங்கிருந்துதான் நமக்கு, வழி, வழியாய் வந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையில் பிறக்கும் போதே யார் நண்பன், யார் எதிரி என்று தெரிந்துவிடுகிறது. ஒரு யானைக்குட்டி ஒரு மானை, பகைவன் என்று கருதுவதில்லை. ஒரு மான், வரிக்குதிரையை எதிரி எனக்காண்பதில்லை. ஆனால், குள்ள நரியானாலும் அது பகைவன் என்று தெரிந்துவிடுகிறது. அதன் பல்லைப் பார்த்தா தெரிகிறது? இல்லை! உள்ளுணர்வு. அது என்ன உள்ளுணர்வு?&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியாவில் ஏதோவொரு அநாமத்தான கடற்கரையில் முட்டை வைத்து, குஞ்சு பொறித்துவிட்டால், இந்தக்குஞ்சு பெரிதாகி உலகில் எங்கிருந்தாலும் அதே கடற்கரைக்கு வந்து முட்டை இடுகிறது. முட்டைக்குள் இருக்கும் கருவிற்கு யார் சொல்லித்தந்தது? சாலமன் மீன் வருடாவருடம் சொல்லொணா இடர்களைத்தாண்டி, எதிர்நீச்சல் போட்டு கடலிலிருந்து, ஆற்றுக்கு வந்து, மலையருவி தாண்டி, எங்கு முட்டை பொறித்ததோ அதே குட்டைக்கு வந்து முட்டை பொறித்து சாகிறது. ஆம், முட்டை பொறித்தவுடன் அதுவரை உயிரைப்பிடித்துக் காத்திருந்த ஏதோவொரு வலு, போய் விடுகிறது. பட்டென மல்லாக்க செத்து மிதக்கிறது? என்ன அதிசயம்? என்ன ஒழுங்கு?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உயிரியல் ஒழுங்கு, பிற பிரபஞ்ச ஒழுங்கிலிருந்து மாறுபட்டிருக்கிறதா? எல்லாமே ஒரு ஒழுங்கில் ஊழி, ஊழியாக செயல்பட்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்தார்கள். உயிரியல் பரிணாமம் என்பது ஒரு செல் உயிரியிலிருந்து பல செல் உயிரிக்கு வளர்ச்சியடைதல் என்று. ஓரரறிவுப் பிராணியிலிருந்து, ஆறறறிவுப் பிராணியாக மாறுவது பரிணாமமென்று. இத்தனை நாள் நம்பியிருந்தேன், ஆழ்வார்களை அறியும் வரை!&lt;br /&gt;&lt;br /&gt;முட்டை ஒரு செல்தான். கருவுறுதல் என்பதைப் போன்றதொரு மந்திரச்செயல் உலகில் வேறேதுமில்லை. நேற்று யானை கருவுறுதலைப்பற்றிய படம் பார்த்தேன். நம்மைப் போல் கட்டிப் புரண்டு கலவி செய்ய யானையால் முடியாது. தாட்டியான உடம்பு. எனவே யானைக் கலவி என்பது சில விநாடிகளில் முடிந்துவிடுகிறது. ஆனால் 500 மிலிலிட்டர் விந்துவைப்பாய்ச்சுகிறது யானை. இதில் மனித விந்தணு போல் 10 மடங்கு அதிகம் விந்துக்கள் உள்ளன. ஆயினும் அவை மனித உடலைப் போலல்லாமல் யானையின் உடலுக்குள் சென்று கருவுறச்செய்வதற்குள், மிகக்கடினமான பாதைகளை, தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளது. இத்தனை கோடி விந்துவில் கடைசியில் ஒரேயொரு விந்து குட்டியானை உருவாகக் காரணமாகிறது. கருவுற்ற பின் 22 மாதங்கள் கர்பவாசம்! அப்பாடா! என்றிருக்கிறது. இதைவிட பெரிய விந்தை என்னவுள்ளது?&lt;br /&gt;&lt;br /&gt;அறிவு என்பது பெரிய காவியம் பாடுவதில் மட்டும் உள்ளதா?&lt;br /&gt;அறிவு என்பது பெரிய பாலம் கட்டுவதில் மட்டும் உள்ளதா?&lt;br /&gt;அறிவு என்பது அணுகுண்டு செய்து பல்லாயிரம் மக்களை மாய்ப்பதில் மட்டுமுள்ளதா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆராய்ந்து பார்த்தால் அறிவு என்பது பூரணமாக எங்கும் வியாபித்து இருப்பதே உண்மை. அது ஒரு கொசுவின் உடம்பில் சைதன்யமாக இருப்பது அதிசயம். அதே அறிவு ஒரு டைனோசார் உடம்பில் வாழ்ந்தது அதிசயம். ஒரு செல் பாக்டீரியாவிற்கு அறிவில்லையா என்ன? எங்கில்லை அறிவு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு உயிரும் தத்தம் விதிவகை பிரபஞ்ச ஒழுங்கில் செயல்பட்டு வருகின்றன. யானை, யானையாகவே வாழ்கிறது. கழுதைப்புலி போல் கடித்துக் கொதறுவது இல்லை. அது, அதற்கு ஒரு தர்மம். புலி கொல்லும் போது, பிராண வேதனை அதிகமில்லாமல் குரல்வளைக் காற்றை ஒரே கடியில் வாங்கிக் கொல்கிறது. ஆனால் கழுதைப்புலி கிடைத்த இடத்தில் கடித்துக்கொதறுகிறது. சாகும் மான் பாதி உடல் போன பின்னும் மிரண்டு தவிக்கிறது. சிங்கம் ஒரே அடியாக பிடறியில் அறைந்து ஒரு நொடியில் கொன்று விடுகிறது. ஆனால், குழவி ஒரு புழுவை உயிருடன் பிடித்து, அதை ஒரு ஊசி போட்டு அப்படியே பதப்படுத்தி, தன் குஞ்சு பொறித்தவுடன் சுடச்சுட சாப்பிடும்படி செய்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கெல்லாம் பாடம் சொல்லிக்கொடுத்தது யார்? இவ்வளவு சூட்சுமம் உள்ளே எப்படிப் போனது?&lt;br /&gt;&lt;br /&gt;பரிணாமம் என்ற கொள்கையே உண்மையா? என்ற கேள்வி வந்துவிட்டது இப்போது! இத்தனை நாள் நான் எழுதிவந்த மடல்களில் சொல்லிய பரிணாமம் உண்மையா? நான் படித்த பாடம் உண்மையா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை! என்று தோன்றுகிறது. அறிவு பூரணமாக எங்கும், எப்போதுமுள்ளது. அது எடுக்கும் உயிர் நிலைக்கு ஏற்றவாறு பல்வேறுவகையில் தன்னை வெளிக்காட்டிக்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அவரவர்தமதமது அறிவறிவகைவகை&lt;br /&gt;அவரவரிறையவர் எனவடியடைவர்கள்&lt;br /&gt;அவரவரிறையவர் குறைவிலரிறையவர்&lt;br /&gt;அவரவர்விதிவழி அடையநின்றனரே&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;எனும் திருவாய்மொழி ஏதோ நமக்குச் சொல்லியது போல் படுகிறது. ஆனால், இதையொரு பிரபஞ்ச விதிபோல் சொல்லிச்செல்கிறான் மாறன் சடகோபன். ஒவ்வொரு உயிரியும் தத்தமது அறிவு வகையென ஒரே பிரபஞ்ச அறிவைப் பிரதிபாலிக்கிறது. அறிவு வகையாக நிற்கும் போது அவையவைக்கு இட்ட கட்டளையைச் செய்து முடிக்கின்றன. முதலையாகப் பிறந்தால் கடித்துக்குதறுவதில் தவறில்லை. அது, அதன் சுயதர்மம். ஆனால், மனிதனாகப் பிறந்துவிட்டு அவனுக்கு இட்ட விதியை அறியாமல் விலங்கு போல் வாழ்வது தவறு. வேடிக்கையாகச் சொல்லுவார்கள், எறும்பாகப் பிறந்துவிட்டால் எறும்புக்கடவுளுண்டு என்று. அவரவர் இறையவர், குறைவிலர். ஆயினும் இவையெல்லாம் கடைசியில் அடைகின்ற ஒரு பாதம் இறைவன் ஒருவன்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனப்படி சொல்ல வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா உயிர்களின் அடிநாதமாக தழுவல், கூடல், கலத்தல், உயிர்த்தல், என்று இருக்கிறது. இவையாவும் செய்யும் போது அன்பு ஒன்றே பிரதானமாக இருக்கிறது. வாழ்வு அனைத்துமே அந்த ஒரு கணத்திற்குத்தான். அப்போது காணும் இன்பம் பல்வேறாகப் பேசபடுகிறது. வாலை இன்பம். தந்திரம் என்று. மனித வாழ்வு என்று வரும் போது தனியாக இருந்து போகக்கூட்டு இல்லாமலே இதை அடையவும் முடிகிறது. அதை யோகம், சமாதி, சத்தோரி என்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எபடிச் சொன்னாலும், எல்லா இயக்கத்திற்கும் ஆதாரமாக உள்ளது, அன்பு ஒன்றுதான். இதைக் கண்டு பிடித்துவிட்டனர் நம் முன்னோர்கள்.&lt;br /&gt;&lt;pre&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சூதனாய்க் கள்வ னாகித்&lt;br /&gt;   தூர்த்தரோ டிசைந்த காலம்,&lt;br /&gt;மாதரார் கயற்க ணென்னும்&lt;br /&gt;   வலையுள்பட் டழுந்து வேனை,&lt;br /&gt;போதரே யென்று சொல்லிப்&lt;br /&gt;   புந்தியில் புகுந்து, தன்பால்&lt;br /&gt;ஆதரம் பெருக வைத்த&lt;br /&gt;   அழகனூ ரரங்க மன்றே?&lt;/span&gt; &lt;/pre&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு வேறொரு வாசிப்பு கொடுத்துப் பாருங்கள். சூதனாய், கள்வனாய் என்பதை பல்வேறு பிறவி என்று கொண்டால், பல்வேறு வகையான உயிர் வலையில் பட்டிருந்த போதும், அவன் புந்தியில் புகுந்து, தன்பால் ஆதரம் பெருக வைத்துக்கொண்டுதான் இருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;விலங்கிற்கு மனது இல்லையென்று யார் சொன்னது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;நரகும் சுவர்க்கமும் நாண்மலராள் கோனைப்&lt;br /&gt;பிரிவும் பிரியாமையுமாய்த் - துரிசற்றுச்&lt;br /&gt;சாதகம் போல் நாதன் தனருளே பார்த்திருத்தல்&lt;br /&gt;கோதில் அடியார் குணம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்பது நமக்குச் சொன்னது? என்று எப்படிக் கொள்வது. பெரும்பாலான விலங்கு வாழ்வு அவனிட்ட வழக்காய், அவனருள் வேண்டித்தானே! இருக்கிறது திறந்த வெளியில், உண்ணக்காத்திருக்கும் விலங்கின்றும் காத்து ஒரு மான் குட்டிக்குப் பிரசவம் பார்ப்பது யார்? குட்டிக்கு பிறந்தவுடனே தத்தி, தத்தி நடக்கப்பண்ணுவது யார்? இயற்கையில் காணும் அத்தனை விலங்கியல் தந்திரங்களையும், சூட்சுமங்களையும் கற்றுக் கொடுப்பது யார? புலிக்கு கடிக்கத்தெரியுமென்றால் மானுக்கு ஓடத்தெரியும். சிங்கத்திற்கு அடிக்கத்தெரியுமென்றால் முள்ளம் பன்றிக்கு அடிக்கவிடாமல் தடுக்கத்தெரியும். கிட்ட வந்தால் ஒரு ஓட்டிற்குள் நுழைந்து கொள்ளும் தந்திரம் நத்தைக்கும், ஆமைக்கும் சொல்லித்தந்தது யார்? அவை யாரிட்ட வழக்கிற்கு வாழ்கின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;அரங்கன் கோயிலில் ஒரு சிற்பி. செதுக்கிக்கொண்டிருக்கும் போது, உளி பட்டு, கல் சிதற, உள்ளிருந்து சிறு தேரை தாவி ஓடியது. அது கண்ட சிற்பி, அப்படியே விட்டான் வேலையை! கல்லினுள் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும் வாழ்வளித்து காக்கும் ரங்கன் இனி என்னையும் ரக்ஷிக்கட்டுமென்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;”துரிசற்றுச் சாதகம்போல் நாதன் தனதருளே பார்த்திருக்கும் கோது இல் அடியார் குணம்".&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;என்பது இதுதான். நம்மைச் சூழ்ந்து அவனுள்ளான். அவனுள் ஐக்கியத்தின் ஐக்கியமாய் நாமுள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இன்று, இப்பொழுதே போகட்டும் வல்லுயிர் சாபங்கள்! கலி கெடட்டும். அவை நைந்து போன நமனுக்கு. நமக்கில்லை என்று உழிகொண்டு வாழ்வோம். வாழ்க! வாழ்க!!&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-7837940437236122276?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/7837940437236122276/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=7837940437236122276' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/7837940437236122276'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/7837940437236122276'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2009/05/blog-post.html' title='பாகம் 2: 003 பரிணாமம் உண்மையா?'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-3547556297140079244</id><published>2009-03-13T16:36:00.007+09:00</published><updated>2009-05-15T22:12:42.744+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='periyazvar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='childhood'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='magic'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nammalvar'/><title type='text'>பாகம் 2: 002 மந்திரமாவது வாழ்வு!</title><content type='html'>Mr Magorium's Wonder Emporium எனும் படம் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழுள்ள சுட்டியில் படத்தின் முழுவிவரம் காணலாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.magorium.com/"&gt;http://www.magorium.com/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் Dustin Hoffman நடித்திருக்கிறார். குடும்பத்துடன் காணவேண்டிய படம். படத்தின் கதை எளிது.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைப்பருவத்தில் கண்ணில் தெரியும் மாந்தீரகத்தை சாகும்வரை தக்க வைத்துக்கொள்! என்பதே கதைக்கரு!&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைப்பருவம் அவ்வளவு ஆச்சர்யமான பருவம். உலகமே ஒரு மாய உலகமாக. அதீத நிகழ்வுகளை மிகச் சாதரணமாகக் கொள்ளும் பருவம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் போகப்போக மனிதன் சமூகத்தால் மாற்றப்படுகிறான். மிக அழுத்தமான ஆளாக, பகுத்தறிவுப் பகலவனாக மாறிவிடுகிறான். அத்தோடு அவனது கனவுகள், கற்பனைகள், மாயாஜாலங்கள் சமாதியாகிவிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், மனிதன் குழைந்தப் பருவத்திற்கு ஏங்காத பொழுதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெர்மனியில் குழந்தைப்பருவத்தை சிறப்பிக்கும் வகையில் 6-7 வயதுவரை பள்ளி செல்ல வேண்டிய அவசியமில்லை! கட்டாயமாக ரைம்ஸ் சொல்லி, 2ம் கிளாஸ் பாடத்தை கீழ்கிண்டர்கார்டனில் படித்துக்குடிக்க வேண்டியதில்லை! ஏன்? அப்பருவம், எப்பளுவுமில்லாமல், சுதந்திரமாக, தான் காணும் ஒரு மாய உலகில் சஞ்சரிக்கும் பருவம். அது போனால் வாராது என்பதால்தான். எனவே குழந்தைப்பருவத்தை பள்ளியெனும் சிறையில் அடைக்காமல் ஜெர்மனியில் நீட்டித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை நம்மவர் புரிந்து கொண்டுள்ளனரா? நிச்சயமாக. கண்ணன் எனும் கதாபாத்திரமே குழந்தைப்பருவத்தின் மாந்தீரீகத்தன்மையை தக்கவைக்க வந்ததுதான். கண்ணனின் பாலலீலைகளில் மயங்காத கவிகளுண்டோ? காவியுடையுடுத்தி, கடும் விரதமிருக்கும் சங்கரர்கூட கிருஷ்ணலீலையில் ஈடுபடுகிறார். காஞ்சிப்பெரியர், "பகவான் எப்படி மகிழ்வாக கோகுலத்தில் ஆடுகிறான்! நாம் அழுவதற்குப் பிறந்தவர்கள்" என்பது போல் பேசியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர்களுக்கு இயல்பாகவே மென்மையான உள்ளம் என்பதால் கிருஷ்ணலீலை சுவைக்கிறது. விஞ்ஞானிகளுக்கோ ஆர்வத்தின் காரணமாக குழந்தை மனம் வந்துவிடுகிறது. அவர்களைக் "குழந்தை போன்ற முதியவர்கள்" என்றுதான் மேலை உலகில் அழைக்கின்றனர். கவிஞர் வேர்ட்ஸ் வொர்த் (William Wordsworth ) ஒருநிலை போய் child is the father of man என்று சொல்லிவிடுகிறார். அது என்ன? என்று ஆழ்வார்களைக் கேட்டால்தான் தெரியும்!&lt;br /&gt;&lt;br /&gt;வால்ட் டிஸ்னி குழந்தை உலகை சினிமாவில் தக்க வைக்க என்றே பிறந்தவர். இக்கருத்தை வைத்து எத்தனை அற்புதமான படங்கள் வந்துவிட்டன!&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணனின் பாலலீலைகள் 10 வயதிற்குள் அது முடிந்துவிடுகின்றன. கண்ணன் கோகுலத்தை விட்டு போனபின் அவனும் ஏங்குகிறான் அப்பருவத்திற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;தத்துவ சாரமாக, வாழ்வின் நிலையாமை குறித்து, மூப்பு குறித்து, பிணி குறித்து, இடும்பை இடும் பை குறித்து, பரத்துவம் குறித்து எல்லாம் பேசினாலும், ஆழ்வார்களுக்கு பிகவும் பிடித்தமான சப்ஜெக்ட் கிருஷ்ண லீலைதான். ஏனப்படி? அங்குதான் வாழ்வின் ரகசியமே அடங்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இலனது வுடையனி தெனநினை வரியவன்&lt;br /&gt;நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்&lt;br /&gt;புலனொடு புலனலன், ஒழிவிலன், பரந்த அந்&lt;br /&gt;நலனுடை யொருவனை நணுகினம் நாமே&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;என்கிறார் திருக்குருகூர் ஞானதேசிகன். ஏதாவது புரிகிறதா? ஈடு இல்லையெனில் ஒன்றும் புரியாது. இறைவனைப்பற்றி சொல்லும்கால், 'அதனை உடையவன், இது இல்லாதவன்' என்று இருதன்மையாலும் நினைக்க முடியாதன். நிலம், விசும்பு எனும் எப்பரப்பிலும் உள்ளவன், உருவமுடையவன், அருவமானவன்,புலனொடு புலனாக உள்ளவன், ஆயினும் புலன் வழி இடர்களைச் சாராமல் இருப்பவன். இப்படிப்பரந்த நலன்களையுடைய ஒருவனை நாம் நம் வழித்துணைவனாகப் பெற்றோமே! என்கிறார். முதல் பத்து முழுவதும் இப்படி ஒரே ஞானதத்துவங்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மூன்றாம் பத்து வருவதற்குள் பத்துடை அடியர்க்கு எளியவன் என்று கண்ணன் ஆப்புண்ட கதைக்குப்போய்விடுவார். பரம்பொருளை ஆப்பிடமுடியுமோ? யசோதையால் தாம்புக்கயிற்றை வைத்து கட்டிட முடியுமோ? ஆனால், அப்பருவத்தில்தான் அவ்வளவு எளிமை! அத்திறம் கண்டு மயங்கி நிற்கிறார் நம்மாழ்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறா&lt;br /&gt;மழலைமுற்றாதஇளஞ்சொல்லால் உன்னைக்கூவுகின்றான்&lt;br /&gt;குழகன்சிரீதரன் கூவக்கூவநீபோதியேல்&lt;br /&gt;புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நம்ம பட்டர்பிரான் கண்ணனை மடியில் வைத்துக்கொண்டு 'மம்மு' சாதித்துக்கொண்டிருக்கிறார். திடீரென்று குழந்தை நிலாவைப்பார்த்து இதைக் கொண்டு வா! என்கிறது. ஏதோ வீட்டில் விளையாடும் 'சொப்பு' என்பது போல்! கேட்பவன் யார்? தெய்வீகக்குழந்தை! குழகன், சிரீதரன்!! கூவினால் வந்து சேர் என்கிறார் பட்டர்பிரான். எல்லாம் சாத்தியமே! ஈதெல்லாம் அவன் லீலாவிபூதிதானே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;பாலகனென்று பரிபவம்செய்யேல் பண்டொருநாள்&lt;br /&gt;ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன்&lt;br /&gt;மேலெழப்பாய்ந்து பிடித்துக்கொள்ளும்வெகுளுமேல்&lt;br /&gt;மாலைமதியாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இவனை வெறும் பாலகனென்று பரிபாவம் செய்யாதே மாமதீ! இவன் பண்டொருநாள் உன்னையும், என்னையும், சகலலோகங்களையும் ஆலிலைச் சிறுவனாக இருந்து விழுங்கியன். எனவே மரியாதையாக நீயே கீழே வந்து விளையாடு என்கிறார். ஏன் முடியாதா? என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;உண்டா யுலகேழ் முன்னமே,&lt;br /&gt;உமிழ்ந்து மாயை யால்புக்கு&lt;br /&gt;உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர்&lt;br /&gt;உவலை யாக்கை நிலையெய்தி&lt;br /&gt;மண்டான் சோர்ந்த துண்டேலும்&lt;br /&gt;மனிசர்க் காகும் பீர் சிறிதும்&lt;br /&gt;அண்டா வண்ணம் மண்கரைய&lt;br /&gt;நெய்யூண் மருந்தோ? மாயோனே. 1.5.8&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இவன் ஏன் கோகுலத்தில் வந்து நின்று வெண்ணெய் உண்டான் என்பதற்கு நம்மாழ்வார் ஒரு புதுக்கதை சொல்கிறார். இவன் முன்பு உலகமெல்லாம் உண்டவன். அப்போது வயிற்றில் நிறைய மண் தங்கிப்போய் சோகை பிடித்துவிட்டது. அதைப்போக்க சிறு மானுடராய் பிறந்து வெண்ணெய் உண்டு நோய் போக்கிக்கொண்டானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு பேசமுடிகிறது பாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;மாயையை, மாயையால்தான் நீக்க முடியும். நாரண மூர்த்தி மாய வலையை விரித்து லீலாவிபூதியை உருவாக்கினால், நாமும் மாயையை உண்மை என்று நம்பி ஆனந்தித்து, குதூகலித்து மகிழும் போது 'மாயைக்கே' சந்தேகம் வந்துவிடுகிறது ;-)&lt;br /&gt;&lt;br /&gt;கஷ்டப்பட்டு தவமிருந்து, உடலை வருத்தி, உலகே மாயம் என்று காண்பதற்குப்பதில், பசித்த போது புசித்து, வேர்த்த போது குளித்து, உலக வாழ்வை அதன் போக்கில் ஆனந்திக்கும் போது அவனின் மாயாவிபூதியை உள்ளபடி அனுபவித்ததாகிறது! பிறகென்ன? இறைவனை அனுபவிக்கத்தானே பிறப்பு?&lt;br /&gt;&lt;br /&gt;காணும் காட்சியெல்லாம் மந்திரம், செய்யும் செய்கையெல்லாம் மந்திரம், பேசும் பேச்செல்லாம் மந்திரம், இப்படி எழுதி வீசி கணினித்திரையில் வாசிப்பதும் மந்திரம்!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/H-Vz9EvAQhI&amp;amp;hl=" width="425" height="344" type="application/x-shockwave-flash" fs="1" allowfullscreen="true" allowscriptaccess="always"&gt;&lt;/embed&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-3547556297140079244?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/3547556297140079244/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=3547556297140079244' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/3547556297140079244'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/3547556297140079244'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2009/03/blog-post.html' title='பாகம் 2: 002 மந்திரமாவது வாழ்வு!'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-5958569605541984925</id><published>2009-02-22T12:54:00.003+09:00</published><updated>2009-02-22T13:08:44.598+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nachiar tirumozi'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nammalvar'/><title type='text'>பாகம் 2: 001: குற்றம் நீங்கின வேதங்களே!</title><content type='html'>&lt;div align="left"&gt;நம்மாழ்வாரை இவ்வளவு கொண்டாடக் காரணமென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு துறை சார்ந்தோர் ஒவ்வொரு கருத்துச் சொல்வர். அரங்கனார் (ஸ்ரீரங்கம் மோகன ரங்கன்) ஒரு பெரிய கட்டுரையே எழுதிக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மாழ்வார் ஓரு தொன்மையான மரபை நமக்கு மீட்டுத்தந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;ஒரு புதிய பாதையை காட்டி அருளியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;நம் எல்லோருக்கும் எக்காலத்திலும் உற்ற தோழனாய்/தோழியாய் இருக்கும் வண்ணம் பாமாலையில் உறைந்து காட்டியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;நம்மாழ்வாருக்கு 'வெறும்' நாமத்தைச் சார்த்திவிட்டு ஒதுக்கிவிடாமல் அவரது பனுவல்களை தமிழராகிய நாம் ரசித்து, உய்த்துணரப் பழக வேண்டும். அதற்கு இத்தொடர் உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#000066;"&gt;மனையும் பெருஞ்செல் வமுமக்க ளுமற்றை வாழ்வுந் தன்னை&lt;br /&gt;நினையும் பதமென நின்றபி ரான்குரு கூர்நிமலன்&lt;br /&gt;புனையுந் தமிழ்க்கவி யால் இருள் நீங்கிப் பொருள்விளங்கி&lt;br /&gt;வினையுந் திரிவுற் றனகுற்ற நீங்கின வேதங்களே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;em&gt;குடும்பம், சொத்து, பந்தம் இவையே வாழ்வென இருக்கும் நமக்கு, குற்றமற்ற நம்மாழ்வார் பாதங்கள் கிடைக்கப்பெற்ற பின், அவரது இன்சுவை தமிழ் கவியால் நம் வினைகள் யாவும் விலகி, வாழ்வின் பொருள் விளங்கி, இதுவறை செய்திருந்த குற்றங்கள் எல்லாம் நீக்கப்பெற்று வளம் பெற்றன வேதம் புதிதெனும் அவன் வாக்கால்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கடைசி வரியை எப்படிப் பொருள் கொள்ளலாமென யோசித்தேன்?  நம் குற்றங்களை அவன் வேதங்கள் நீக்கினவா? இல்லை, அவன் இன்கவியால் வேதங்கள் தம்மிடமிருந்த குற்றங்களை நீக்கினவா? நினைக்கக்கூட பயமாக இருந்தது! வேதத்தில் குற்றமா? இருக்காதுதான். ஆயினும், இந்த அரங்கத்து &lt;span style="color:#cc33cc;"&gt;'தாமரைப் புரட்சியை'&lt;/span&gt; கண்ணுறும் போது அப்படியொரு பொருள் பூடகமாக உள்ளுரைவது போல் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திருக்குறளை புகழ்ந்து எழுந்த திருவள்ளுவ மாலையில் ஒரு பா. வெள்ளி வீதியார் என்பவர் எழுதியிருக்கிறார். அது அப்படியே திருவாய்மொழிக்குப் பொருந்துவதுதான் ஆச்சர்யம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#006600;"&gt;'செய்யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த&lt;br /&gt;பொய்யா மொழிக்கும் பொருளொன்றே--செய்யா&lt;br /&gt;அதற்குரிய ரந்தணரே யாராயி னேனை&lt;br /&gt;யிதற்குரிய ரல்லாதா ரில்.'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;em&gt;அதாவது, செய்யா மொழி (எழுதாக்கிளவி) என்று சொல்லப்படும் வேதத்தின் பொருளும், திருவள்ளுவர் செய்த பொய்யா மொழியும் பொருளால் ஒன்றே. ஆயின், செய்யாமொழி (வேதம்) அந்தணர்க்கு என்றாகிப்போனது. இக்குறை தீர்க்க வள்ளுவனின் புதிய வேதம் எல்லோர்க்கும் என்றாகிப்போனது.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;மிக அழகான பாடல். நம் மண்ணில் 50களில் உருவான கலாச்சார புரட்சியால் வள்ளுவனை சுத்தப்படுத்த முயன்றாலும் (sterilize him from social stigma), தமிழ் மரபு திருக்குறளை வேதம் என்றே சொல்கிறது. At least, அவர் காலத்தவர்கள் அப்படித்தான் கண்டனர் என்று தெரிகிறது. &lt;span style="color:#cc0000;"&gt;'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'&lt;/span&gt; என்று வள்ளுவன் வேதத்தைப் பொதுமைப்படுத்தியிருப்பது தெரிகிறது. ஆனால், மிகச்சாமர்த்தியமாக, வேதம் என்று சொல்லிவிட்டால் பிற மதத்தினர், பிற சாதியினர் (குறிப்பாக அந்தணர்கள்) மிரண்டு விடுவர் என்றெண்ணி வள்ளுவன் அதை எப்பெயரிட்டும் அழைக்காமல், மற்றோரும் எப்பெயரிட்டும் அழைக்கமுடியாமல் ஒரு பெரும் காரியம் செய்துவிட்டான். ஏனப்படி செய்தான்? என்று யோசித்தால், அப்படிச் செய்தால்தான் வேதக்கருத்துக்கள் மக்களை எவ்வித filters ம் இல்லாமல் சென்றடையும் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கிறது. கருத்து போவது முக்கியமா? இல்லை அதை எடுத்துச் செல்லும் பாத்திரம் முக்கியமா? என்ற கேள்வி வந்தால், கருத்திற்கே முதலிடம் கொடுத்தனர் சான்றோர். எல்லோரும் திருக்குறளைச் சொல்லுகின்றனர். ஆத்திகமோ, நாத்திகமோ. எப்படியோ வேதக்கருத்துக்கள் மக்களிடம் சென்றால் சரி, என்று சொல்லவருகிறார் வெள்ளிவீதியார் எனும் சங்கப்புலவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல், பல நூற்றாண்டுகளுக்குப்பின் மீண்டும் வேதம் புதிது செய்ய வேண்டிய காலம் நம்மாழ்வார் காலம். இவரும் வள்ளுவர் போல், வேதத்தின் சாரத்தை அப்படியே தமிழ்ப்பாவில் வடிக்கிறார். வடித்து அதை அந்தணர்க்கு மட்டுமின்றி எல்லோருக்கும் விநியோகம் செய்கிறார். இவரின் உளக்கிடக்கை(ஆசார்ய ஹ்ருதயம்) அறிந்த வைணவப் பெரியோர்கள் இதையே கோயில் மொழியாக்கி, எல்லோரும் அறிவும் வண்ணம் செய்துவிட்டுப் போயினர். ஆயினும் காலப்போக்கில் இதுவும் அந்தணர்மாட்டே நின்று போனது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே மீண்டும், அதை எடுத்து எல்லோருக்கும் விநியோகம் செய்ய &lt;a href="http://groups.google.com/group/minTamil/"&gt;மின்தமிழ்&lt;/a&gt; முயல்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;சரி, வேதத்தில் குறை என்ன? கேள்வியை தி.க, தி.மு.காவிடம் கொடுத்தால் பேசுவர், பேசுவர் அவ்வளவு பேசுவர். அவ்வளவு குறைகளை எடுத்துச் சொல்வர். சரி, இதை நமது ஆச்சார்ய சீலர்கள் உணரவில்லையா? என்றால். ஆம்! அவர்களும் உணர்ந்துள்ளனர். நான் முன்பு எழுதியது போல், வேதம் என்பது காலம்கடந்து நிற்கிறது. மனித பரிணாமத்தில், தோற்றமுற்ற காலங்களில் அக்காலக்கட்டத்திற்கு தேவையான விதிமுறைகளைச் சொல்லிச் சென்றது. ஆயின், காலம் மாற, மாற பழைய கணக்குகள் பொருந்துவதில்லை. எனவே அவற்றைக்களைய வேண்டியது அவசியமே. இதை அறிந்துதான் பட்டபிரான், வல்லப பாண்டியனுக்கு பரஞானம் காட்டிய போது எல்லா வேதங்களையும் எடுத்துரைக்கவில்லை. கழிப்பதைக்கழித்து, ஏற்பதை ஏற்று, "வேண்டிய ஓதங்கள் ஓதி, விரைவில் கிழி அறுத்தான்" என்று சொல்கிறது சரித்திரம். எனவே, எப்படி திருக்குறள் குற்றமற்று நிற்கிறதோ, அதே போல், திருவாய்மொழியும் குற்றமற்று நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியெனில் "குற்றம் நீங்கின வேதங்களே" என்று சொல்லலாம் அல்லவா!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-5958569605541984925?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/5958569605541984925/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=5958569605541984925' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/5958569605541984925'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/5958569605541984925'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2009/02/2-001.html' title='பாகம் 2: 001: குற்றம் நீங்கின வேதங்களே!'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-7467975217868110993</id><published>2008-02-20T14:46:00.007+09:00</published><updated>2008-06-14T15:39:31.681+09:00</updated><title type='text'>பாசுர மடல் - நுழை வாயில்</title><content type='html'>&lt;strong&gt;பாசுர மடல்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;000. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/02/000.html"&gt;நாலாயிர திவ்விய பிரபந்தம் - முன்னுரை &lt;/a&gt;&lt;br /&gt;001. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/02/001.html"&gt;ஆழ்வார்களின் அறிமுகம்&lt;/a&gt;&lt;br /&gt;002. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/02/002.html"&gt;எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்&lt;/a&gt;&lt;br /&gt;003. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/02/003.html"&gt;பாயிரம் வாயிலாகத் தமிழ் மறுமலர்ச்சி&lt;/a&gt;&lt;br /&gt;004. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/02/004.html"&gt;ஆழ்வார்கள் அனுபவித்த இறைமை&lt;/a&gt;&lt;br /&gt;005. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/02/005.html"&gt;காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ&lt;/a&gt;&lt;br /&gt;006. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/02/006.html"&gt;விதையாக நற்றமிழை வித்திட்டாய்&lt;/a&gt;&lt;br /&gt;007. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/02/007.html"&gt;சொல்லினில் சுருங்க நின் குணங்கள் சொல்ல யார் வல்லரே?&lt;/a&gt;&lt;br /&gt;008. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/02/008.html"&gt;அதீத காதலும் பக்தி இலக்கியமும்&lt;/a&gt;&lt;br /&gt;009. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/02/009.html"&gt;சாதிகள் இல்லையடி பாப்பா!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;010. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/02/010.html"&gt;என் அமுதினைக் கண்ட கண்கள்&lt;/a&gt;&lt;br /&gt;011. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/02/011.html"&gt;வேதம் தமிழ் செய்த மாறன்&lt;/a&gt;&lt;br /&gt;012. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/02/012.html"&gt;இதத்தாய் இராமானுசன்!&lt;/a&gt;&lt;br /&gt;013. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/02/blog-post.html"&gt;பாசுர வரலாறும் தமிழ் வரலாறும்&lt;/a&gt;&lt;br /&gt;014. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/02/014.html"&gt;பற்றுடை அடியவர்க்கு எளியவன்&lt;/a&gt;&lt;br /&gt;015. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/02/015.html"&gt;திருமழிசை என்ற அதிசயம்&lt;/a&gt;&lt;br /&gt;016. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/02/016.html"&gt;பை நாகப் பாயை சுருட்டிக் கொள்!&lt;/a&gt;&lt;br /&gt;017. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/02/018_02.html"&gt;வைணவ பரிபாஷையும் பக்தி செய்தலும்&lt;/a&gt;&lt;br /&gt;018. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/02/018.html"&gt;ஆழி மழைக் கண்ணா!&lt;/a&gt;&lt;br /&gt;019. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/019.html"&gt;ஊமையின் கனவு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;020. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/021_30.html"&gt;கண்ணனுக்கே  ஆமது காமம்!&lt;/a&gt;&lt;br /&gt;021. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/021.html"&gt;சின்னஞ்சிறு கிளியே!&lt;/a&gt;&lt;br /&gt;022. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/022.html"&gt;செய்ய தாமரைக் கண்ணினாய்!&lt;/a&gt;&lt;br /&gt;023. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/023.html"&gt;செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா!&lt;/a&gt;&lt;br /&gt;024. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/024.html"&gt;வாழ்வு நிலையே கண்ணம்மா!&lt;/a&gt;&lt;br /&gt;025. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/025.html"&gt;வேங்கடவற்கு என்னை விதி&lt;/a&gt;&lt;br /&gt;026. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/026.html"&gt;படைப்பிலக்கியமும் சுதந்திரமும்&lt;/a&gt;&lt;br /&gt;027. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/027.html"&gt;சில்லென்று அழையேல்!&lt;/a&gt;&lt;br /&gt;028. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/028.html"&gt;விண்ணீல மேலாப்பு!&lt;/a&gt;&lt;br /&gt;029. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/029.html"&gt;நின்மலா! நெடியாய்!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;030. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/030.html"&gt;எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே!&lt;/a&gt;&lt;br /&gt;031. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/031.html"&gt;என் சரண் என் கண்ணன்&lt;/a&gt;&lt;br /&gt;032. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/032.html"&gt; கலியும் கெடும் கண்டு கொண்மின்!&lt;/a&gt;&lt;br /&gt;033. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/033.html"&gt;ஆற்று நீர்வழிப் படூஉம் புணை போல் ஆருயிர்!&lt;/a&gt;&lt;br /&gt;034. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/034.html"&gt;இன்னுமோர் நூற்றாண்டு இரும்!!&lt;/a&gt;&lt;br /&gt;035. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/035.html"&gt;கண்ணுக்கினிய கருமுகில் வண்ணன் நாமமே!!&lt;/a&gt;&lt;br /&gt;036. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/036.html"&gt;கற்றினம் மேய்ந்த எந்தை கழனினை பணிமின் நீரே!&lt;/a&gt;&lt;br /&gt;037. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/037.html"&gt;நீராய் அலைந்து கரையன&lt;/a&gt;&lt;br /&gt;038. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/038.html"&gt;அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்!&lt;/a&gt;&lt;br /&gt;039. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/039.html"&gt;செத்ததன் வயிற்றில் சின்னது பிறந்தால்?&lt;/a&gt;&lt;br /&gt;040. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/041_06.html"&gt;காற்று வெளியிடைக் கண்ணம்மா!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;041. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/041.html"&gt;காதல்(பக்தி)? களவு? கற்பு&lt;/a&gt;&lt;br /&gt;042. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/042.html"&gt;கல்யாணக் கனவுகள்&lt;/a&gt;&lt;br /&gt;043. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/043.html"&gt;அறிவின் பயனே! அரிஏறே!!&lt;/a&gt;&lt;br /&gt;044. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/044.html"&gt;கனவிடை தோய்தல்&lt;/a&gt;&lt;br /&gt;045. &lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/045.html"&gt;பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே!&lt;/a&gt;&lt;br /&gt;046.&lt;a href="http://thirumozi.blogspot.com/2008/01/046.html"&gt;பாவை நோன்பு&lt;/a&gt;&lt;br /&gt;047. &lt;a href="http://thirumozi.blogspot.com/search?q=047"&gt;சங்கத்தார்க்கு ஓர் அகவல்&lt;/a&gt;&lt;br /&gt;048. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/12/048.html"&gt;உறவில் உறையும் இறைவன்&lt;/a&gt;&lt;br /&gt;049. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/11/49.html"&gt;குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா!&lt;/a&gt;&lt;br /&gt;050. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/11/050.html"&gt; உண்ணு நீர் வேட்டேன் என்று வந்தார்!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;051. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/11/051.html"&gt;தமிழ் நயமும் மெய்ப்பொருளும்&lt;/a&gt;&lt;br /&gt;052. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/11/052.html"&gt;உறங்குவது போலும் சாக்காடு&lt;/a&gt;&lt;br /&gt;053. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/10/053.html"&gt;ஆலிலை மேல் ஒரு பாலகன்&lt;/a&gt;&lt;br /&gt;054. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/10/054.html"&gt;சிங்கப் பெருமாள் கதை&lt;/a&gt;&lt;br /&gt;055. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/10/056.html"&gt;அவதாரங்களை அணுகுவது எப்படி?&lt;/a&gt;&lt;br /&gt;056. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/10/56.html"&gt;உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்!&lt;/a&gt;&lt;br /&gt;057. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/10/057.html"&gt;மணவாள மாமுனியின் கனவு&lt;/a&gt;&lt;br /&gt;058. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/09/058.html"&gt;காதல் விளைவித்த காரமர்மேனி !!&lt;/a&gt;&lt;br /&gt;059. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/09/059.html"&gt;வானம் வசப்படும்!!&lt;/a&gt;&lt;br /&gt;060. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/09/60.html"&gt;அவள் தந்த பார்வை!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;061. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/08/061.html"&gt;உளகளவும் யானும் உளன்!&lt;/a&gt;&lt;br /&gt;062. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/08/062.html"&gt;பெருமாள்&lt;/a&gt;&lt;br /&gt;063. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/08/063.html"&gt; வணங்கும் துறைகள் பல பல ஆக்கி..&lt;/a&gt;&lt;br /&gt;064. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/08/064.html"&gt;வாலைக்குமரியும் வண்ண நிலவனும்&lt;/a&gt;&lt;br /&gt;065. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/08/065.html"&gt;மானிடரைப் பாடாது மாதவனை ஏத்துதல்&lt;/a&gt;&lt;br /&gt;066. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/08/066.html"&gt;ஆண்டாளும் அக்கம்மா தேவியும் &lt;/a&gt;&lt;br /&gt;067. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/08/068_22.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு&lt;/span&gt; &lt;/a&gt;&lt;br /&gt;068. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/08/068.html"&gt;நரகும் சொர்க்கமும்&lt;/a&gt;&lt;br /&gt;069. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/08/069.html"&gt;பகவத் கீதையும் ஆழ்வார்களும்&lt;br /&gt;&lt;/a&gt;070. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/08/070.html"&gt;முல்லை திரிந்து பாலையாகுதல் போல&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;071. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/08/071.html"&gt;அடியார் தம்மடி யார்அடி யோங்களே!!&lt;/a&gt;&lt;br /&gt;072. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/08/072.html"&gt;பட்டினம் காப்பென்று வந்த சொல்!&lt;/a&gt;&lt;br /&gt;073. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/08/073.html"&gt;வள்ளுவமும் வைணவமும் (பகுதி ஒன்று)&lt;/a&gt;&lt;br /&gt;074. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/08/074.html"&gt;வள்ளுவமும் வைணவமும் (பகுதி இரண்டு)&lt;/a&gt;&lt;br /&gt;075. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/08/075.html"&gt;வறுமையும் புலமையும்&lt;/a&gt;&lt;br /&gt;076. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/07/076.html"&gt;கலி நீக்கம் - நிழல் வெளியும் நிஜவெளியும்&lt;/a&gt;&lt;br /&gt;077. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/07/077.html"&gt;வாழ்வின் துயரை எதிர் கொள்வது எப்படி?&lt;/a&gt;&lt;br /&gt;078. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/07/078.html"&gt;மாறன் திருவுள்ளமும் பொய்த்துப்போன புரட்சிகளும் &lt;/a&gt;&lt;br /&gt;079. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/07/079.html"&gt;மயக்கும் மாலைப் பொழுதே நீ போ! போ&lt;/a&gt;&lt;br /&gt;080. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/07/080.html"&gt;புலி புலி எனும் பூசல் தோன்ற!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;081. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/07/082.html"&gt;அறிவு அழிந்து மறந்து பிழைக்க ஒண்ணாதபடி!&lt;/a&gt;&lt;br /&gt;082. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/05/082.html"&gt;பெண்மை அம்பூ இது!&lt;/a&gt;&lt;br /&gt;083: &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/05/083.html"&gt;யார் துணை கொண்டு வாழ்கிறது இவ்வுலகம்?&lt;/a&gt;&lt;br /&gt;084. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/05/084.html"&gt;அவ்வருள் அல்லன அருளும் அல்ல!&lt;/a&gt;&lt;br /&gt;085. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/05/085.html"&gt;கண்ணன் கள்வன்&lt;/a&gt;&lt;br /&gt;086. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/03/86.html"&gt;கண்ணனிற் கொடியது அவன் குழலோசை!&lt;/a&gt;&lt;br /&gt;087. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/03/087.html"&gt;மாலையும் வந்தது மாயன் வாரான்!&lt;/a&gt;&lt;br /&gt;088. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/03/088.html"&gt;ஏறுடைப் பெருநிரை கண்ட முல்லைத் தமிழ்வளம்!&lt;/a&gt;&lt;br /&gt;089. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/02/089.html"&gt;மீட்பர் வருவாரோ?&lt;/a&gt;&lt;br /&gt;090. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/02/090.html"&gt;அண்டம் மோழை எழ!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;091. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/02/91.html"&gt;பிரபஞ்ச ஆக்கமும் பூமியைக் காத்தலும்!&lt;/a&gt;&lt;br /&gt;092. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/02/92.html"&gt;ஊழிக்கூத்தும் மீண்டும் பிறப்பும்&lt;/a&gt;&lt;br /&gt;093. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/01/93.html"&gt;உலகின் தோற்றமும் மழையுயிர் காத்தலும்&lt;/a&gt;&lt;br /&gt;094. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/01/94.html"&gt;மேவி கற்பாருக்கான மாமருந்து&lt;/a&gt;&lt;br /&gt;095. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/01/095-1.html"&gt;அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் (1)&lt;/a&gt;&lt;br /&gt;096. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/01/096-2.html"&gt;அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் (2)&lt;/a&gt;&lt;br /&gt;097. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/01/097-3.html"&gt;அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் (3)&lt;br /&gt;&lt;/a&gt;098. &lt;a href="http://thirumozi.blogspot.com/2007/01/098.html"&gt;மச்சாவதாரமும் கருங்கடல் பெருக்கும் &lt;/a&gt;&lt;br /&gt;099. &lt;a href="http://thirumozi.blogspot.com/2006/12/99.html"&gt;மானமிலாப் பன்றியாம் வாழ்வு !!&lt;/a&gt;&lt;br /&gt;100. &lt;a href="http://thirumozi.blogspot.com/2006/12/100.html"&gt;பிணக்குறும் சமயங்களும் அருங்கலைப் பொருட்களும் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;101. &lt;a href="http://thirumozi.blogspot.com/2006/12/101.html"&gt;கானல்&lt;/a&gt;&lt;br /&gt;102. &lt;a href="http://thirumozi.blogspot.com/2006/12/102.html"&gt;கனவில் கண்டேன் கண்ணபெருமானை!&lt;/a&gt;&lt;br /&gt;103. &lt;a href="http://thirumozi.blogspot.com/2006/12/103.html"&gt;தாய் நாடும் கன்றே போல்&lt;/a&gt;&lt;br /&gt;104. &lt;a href="http://thirumozi.blogspot.com/2006/12/104.html"&gt;கொன்றை அலங்கல் மார்வன் யார் ?&lt;/a&gt;&lt;br /&gt;105. &lt;a href="http://thirumozi.blogspot.com/2006/12/105.html"&gt;உயர்வற உயர்நலம் உடையவன் &lt;/a&gt;&lt;br /&gt;106. &lt;a href="http://thirumozi.blogspot.com/2006/12/madal-106.html"&gt;கோதை எனும் குலவிளக்கு! &lt;/a&gt;&lt;br /&gt;107. &lt;a href="http://thirumozi.blogspot.com/2006/12/107.html"&gt;மழைக் கண்ணா! மாலே! மணிவண்ணா!&lt;/a&gt;&lt;br /&gt;108. &lt;a href="http://thirumozi.blogspot.com/2006/11/108.html"&gt;ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரொலி : &lt;a href="http://thirumozi.blogspot.com/2006/11/blog-post.html"&gt;பாசுர மடல் பின்னூட்டங்கள் (தமிழ்.வலை)&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-7467975217868110993?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/7467975217868110993/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=7467975217868110993' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/7467975217868110993'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/7467975217868110993'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2008/02/blog-post_20.html' title='பாசுர மடல் - நுழை வாயில்'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-4851189110664563743</id><published>2008-02-18T11:22:00.004+09:00</published><updated>2010-05-07T10:16:48.304+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='alwars'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sri Vaishnaviam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='review'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='pasuram'/><title type='text'>மடல் 000 - நாலாயிர திவ்விய பிரபந்தம் - முன்னுரை</title><content type='html'>இந்திய மெய்யியல் - ஒரு கண்ணோட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;தொன்மையான இந்திய மெய்யியல் வரலாறை அறிந்து கொள்ளும் போது இந்திய உள்ளத்தின் பரிணாம வளர்ச்சியையும் (evolutionary history) புரிந்து கொள்ள முடிகிறது. முடிந்த அளவு, இந்திய மெய்யியல் ஞானிகள் மெய்யியல் புரிதலை (ஞானத்தை) எல்லோரும் சுதந்திரமாக அணுகும் வண்ணம் திறந்த புத்தகம் போல் அமைத்தது மட்டுமல்லாது, இறைவனை அடைவதற்கான வழியில் அளப்பரிய சுதந்திரத்தையும் அள்ளி வழங்கி உள்ளனர். இந்திய மதம் என்றொன்று "இந்து மதமாக" ஸ்தாபனப் படமுடியாமல் இன்றுவரை இருப்பதற்கான அடைப்படைக் காரணி இந்த பரந்த, சுதந்திர மனப்பான்மைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி மனிதர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறாக உள்ளோமோ, அதுபோல் நாம் வழிபடும் வழிகளிலும் கிளைகள் இருப்பதை நம் மூதாதையர் புரிந்து அனுமதித்து உள்ளனர். அதன் வெளிப்பாடுதான், இந்தியர்கள் வழிபடும் பல் தேவதை வழிபாடுகள் (இஷ்ட தேவதா நிஷ்டை). எப்படி ஆறுகளின் தோற்றுவாயும், வழியும் வேறு பட்டு இருந்தாலும் இறுதியில் கடல் என்ற ஒன்றில் கலக்கிறதோ அதுபோல் பல்வேறு வழிபாட்டு முறைகளும் இறைமை என்ற ஒன்றில் கலப்பதை அறிந்து, உணர்ந்திருந்தனர் நம் முன்னோர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இருபதாம் நூற்றாண்டின் பரிணாமவியல் விதியின் படி வேற்றுமை விரிந்து இருக்கும் போதுதான் உயிர்த் தொடர்ச்சி காலத்தை வெல்கிறது. (variation is the basis of evolution). இந்திய மெய்யியல், இன்றளவும் காலத்தை வென்று நிற்பதற்கு அதன் பல நோக்கு அணுகு முறைதான் காரணம் என அறியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் வாசிக்க &lt;a href="http://www.subaonline.net/nakannan/articles/intro_madals.html"&gt;இங்கே சொடுக்குக!&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-4851189110664563743?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/4851189110664563743/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=4851189110664563743' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/4851189110664563743'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/4851189110664563743'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2008/02/000.html' title='மடல் 000 - நாலாயிர திவ்விய பிரபந்தம் - முன்னுரை'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-6497093926262747976</id><published>2008-02-17T10:40:00.003+09:00</published><updated>2008-02-17T10:57:19.702+09:00</updated><title type='text'>மடல் 001- ஆழ்வார்களின் அறிமுகம்</title><content type='html'>வைணவ சாற்றுமுறை:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ&lt;br /&gt;சடகோபன் தண் தமிழ் நூல் வாழ-கடல் சூழ்ந்த&lt;br /&gt;மண்ணுலகம் வாழ மணவாள மாமுனியே&lt;br /&gt;இன்னுமோர் நூற்றாண்டு இரும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தினம், தினம்: அடியார்களாகிய நாம், நம்மைக் காக்கும் அரங்கம், சடகோபன் (நம்மாழ்வார்) தந்த ஈரப் பாசுரங்கள் (கண்ணீர் பெருகி பக்தியால் அழுவதால் வரும் ஈரம்), கடல் சூழ்ந்த மண்ணுலகம், இப் பக்தியை மெய்யாக்கிக் காட்டும் ஆச்சார்யன் (இங்கு மணவாள மாமுனி) இவர்கள் வாழ்க வென்று இரைஞ்சும் பண்பாடுதான் நம் தமிழ் பண்பாடு. இது குறித்து நாம் பெருமை கொள்வோமாக!!&lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;ஆழ்வார்கள் முதலில் தமிழகத்திற்கு அறிமுகமாகும் நிகழ்வே மனிதநேயம் மிக்க செய்தியாக அமைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னைக்கும், மாமல்லைக்கும் இடையே ஒரு குக்கிராமம். அடாது மழை பெய்து கொண்டிருக்கும் ஒர் நாள். மழைக்கு ஒதுங்கி ஒருவர் ஒரு வீட்டினுள் நுழைகிறார். வீட்டில் யாரும் இல்லை. ரேழி என்று அழைக்கப்படும் இடைப் பகுதியில் ஒண்டுகிறார். அசதியில் கொஞ்சம் படுத்து இளைப்பாறுகிறார். அப்போது இன்னொரு நபர் நுழைகிறார். ஒதுங்க இடம் இருக்குமா என வினவுகிறார். அதற்கு முதல்வர் சொல்லுகிறார், ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். நான் இருந்து கொள்கிறேன் (அதாவது உட்கார்ந்து கொள்கிறேன்) வாரும் என்கிறார். இருவர் உட்கார்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் மூன்றாவதாக ஒருவர் நுழைகிறார். கதவைத்தட்டி இருக்க இடம் கிடைக்குமா என வினவுகிறார். அன்புள்ளம் கொண்ட இந்த இருவரும், ஒருவர் கிடக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம், எனவே வாருங்கள்-மூவரும் நிற்கலாம் என அவரை உள்ளே அழைக்கின்றனர். மூவருக்கும் நிற்கத்தான் சரியாக இடம் இருக்கிறது. அப்போது இவர்கள் அறியாமல் இன்னொருவர் இடையில் புகுந்தது போல் நெருக்குவதை மூவரும் உணருகின்றனர். யார் இந்த நான்காவது ஆள் என்ற கேள்வி எழுகிறது. இரவு நேரம். சுத்தமாக வெளிச்சம் இல்லை. எப்படி காண்பது? விளக்கு ஏற்ற முயற்சி நடக்கிறது? சாதாரண விளக்கில்லை ஞான விளக்கு. ஏன்? நான்காவது ஆளை தொட்டு உணரமுடியவில்லை. அப்போது முதலில் வந்தவர் அந்தாதி தொடங்குகிறார் இப்படி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வையம் தகளியா வார்கடலே நெய்யாக&lt;br /&gt;வெய்ய கதிரோன் விளக்காக-செய்ய&lt;br /&gt;சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொன் மாலை&lt;br /&gt;இடராழி நீங்குகவே என்று.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(முதல் திருவந்தாதி-பொய்கை ஆழ்வார்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://veimages.gsfc.nasa.gov/2429/globe_east_540.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 220px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://veimages.gsfc.nasa.gov/2429/globe_east_540.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பாடிய முதல் பாசுரங்கள் நூறு. அடுத்தவர் தொடர்கிறார்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக&lt;br /&gt;இன்புருகு சிந்தை இடுதிரியா-நன்புருகி&lt;br /&gt;ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு&lt;br /&gt;ஞானத் தமிழ்புரிந்த நான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(இரண்டாவது திருவந்தாதி - பூதத்தாழ்வார்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.worldwideflood.com/ark/technology/oil_lamp_open_lit.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.worldwideflood.com/ark/technology/oil_lamp_open_lit.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இவர் நு¡று பாடல்கள் பாடுகிறார். இந்த அனுபவத்தில் இவர்களுக்கு புரிந்துவிடுகிறது&lt;br /&gt;நான்காவதாக நிற்பது யார் என்று. அதை மூன்றாவதாக வந்தவர் விளங்கச் சொல்கிறார் இப்படி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்&lt;br /&gt;அருக்கன் அணிநிறமும் கண்டேன்-செருக்கிளரும்&lt;br /&gt;பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்&lt;br /&gt;என்னாழி வண்ணன்பால் இன்று.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(முன்றாவது திருவந்தாதி-பேயாழ்வார்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.stephen-knapp.com/images/817Lakshmi.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 220px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.stephen-knapp.com/images/817Lakshmi.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இவர் பாடியது நூறு பாடல்கள். பொய்கையில் தோன்றியதாக நம்பப்படுபவர் பொய்கை ஆழ்வார். பூதம் என்பதற்கு அன்னம் என்றொரு பொருள் உண்டு. அதாவது திருமால் நாமமே உணவாகக் கொள்வதால் இவர் பூதத்தாழ்வார் ஆகிறார். (வைதீக திருமண மந்திரத்தில் கணவன் மனைவியிடத்தில் "பூத" என்று சொல்லி பழம் தரவேண்டும். மனைவி "சுபூத" என்று சொல்லி பால்தர வேண்டும். ஒருவரையொருவர் பூதம் பிசாசு என்று திட்டிக் கொள்வதாய் அர்த்தம் கொள்ளக்கூடாது) மூன்றாவது ஆள்வார் பேயாழ்வார். இதுவும் காரணப் பெயர். ஒரு காரியத்தில் பேயாய் அலைகின்றவர்களை நாம் கண்டதில்லையா? இவர் வேலை கண்ணன், நாரணன் என்று மெய்பொருள் கண்டு கொள்ள பேயாய் அலைவது. அதனால் அப்பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;Date: Tue, 02 Sep 1997 09:20:05 +0000&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-6497093926262747976?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/6497093926262747976/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=6497093926262747976' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/6497093926262747976'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/6497093926262747976'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2008/02/001.html' title='மடல் 001- ஆழ்வார்களின் அறிமுகம்'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-9140224365376959954</id><published>2008-02-17T10:26:00.004+09:00</published><updated>2008-12-12T15:04:01.654+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='muthal mUvar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='pUtham'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='poykai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='pEy'/><title type='text'>மடல் 002: எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்</title><content type='html'>சென்ற கட்டுரையில் பார்த்த நிகழ்வு உண்மையா, புனைவா என சுமார் 1300 ஆண்டுகளுக்குப் பிறகு நிச்சயம் செய்ய இயலாது. புனைவு என்றாலும் ஏதோ காரணம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வு காட்டுவது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;"பகிர்தல்" என்ற பண்பைப் பற்றி. அதாவது முதலில் வந்தவருக்கு கஷ்டத்தில் தங்க ஒரு இடம் கிடைக்கிறது. அவர் செளகர்யத்தை பார்த்துக்கொண்டு இருந்து விடாமல் அடுத்து வந்தவருக்கு இருக்க இடம் கொடுக்கிறார். அடுத்து வந்தவரும், "ஒண்ட வந்த பிடாரி ஊர்பிடாரியை துரத்திய கதையாக" இவரை துரத்தி விடாமல் சேர்ந்து இருந்து மூன்றாவதாக வருபவருக்கும் இடமளிக்க உதவுகிறார். மூவருக்கும் வாழ்வு என்பது "நிலையற்ற ஒட்டம்" என்றும் அதில் பகிர்தல் தரும் "இன்பமும், அனுபவமும்" நிறைவு தருவதாய் உணரும் திறனும் நிரம்ப இருப்பது தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைய நிலமை என்ன? இங்கிருந்து ஒருவர் வெளிநாட்டுக்கு போகிறார்கள். பெரிய வரவேற்பு இல்லாவிட்டாலும் வருபவன் பிரச்சனை என்றுதான் உள்ளூரில் இருப்பவன் காண்கிறான். வந்தவன் நிலைத்து வாழ்ந்தபின் (ஒரு தலைமுறை) புதிதாக வரும் ஆசாமியைப்பார்த்து இதே அசூசை (uncomfortable, hate, indifferent) கொள்கிறான். இருப்பதை பகிர்ந்துகொண்டு வாழும் மனப்பக்குவம் இல்லை. உலகில் அதி பணக்காரனும் அன்னாடங்காச்சியும் பக்கத்தில் பக்கத்தில்தான் வாழ்கிறார்கள். எவ்விதப் பகிர்வும் இல்லாததால் ஒருவருக்கு சுவர்க்கமாக இருக்கும் வாழ்வு மற்றவருக்கு நரகமாக இருக்கிறது.&lt;br /&gt;"&lt;span style="color:#ff6666;"&gt;எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்&lt;/span&gt;" என்று பாடிய கண்ணதாசன் வேறொரு பாடலில்,"&lt;span style="color:#ff6666;"&gt;இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா, உனது எனது என்பதெல்லாம் இடையில் வந்த பந்தமடா&lt;/span&gt;" என்பான். எல்லோரும் பகிர்ந்து வாழ உலகில் அத்தனை வளங்களும் (resources), தொழில் வளர்ச்சியும் (technology) இருந்தும் - அமெரிக்காவில் அதிக உணவை கடலில் கொட்டுகிறார்கள்; எதியோப்பியாவில் பட்டினியில் சாகிறான் மனிதன். நாயினும் கீழான வாழ்வையே மூன்றாம் உலக நாடுகளில் பெரும்பாலான மக்கள் வாழ வேண்டி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கு மனிதநேயம் பூரணமாகி பகிர்தலும், அன்பும் நிரம்பி வழிகிறதோ அங்கு தன்னிச்சையாக&lt;br /&gt;(அதாவது அழைக்காமலே)  இறைவன் வந்து சேர்கிறான். மூன்று ஆழ்வார்களும் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாமென கூடியவுடனே முண்டி அடித்துக் கொண்டு தானும் உள்ளே புகுந்து விடுகிறான் இறைவன் (என் "உள்ளம் நிறையப்" புகுந்தான், என்பார் நம்மாழ்வார் ஒரு இடத்தில்) இப்பாசுரங்கள் கி.பி. எழாம் நூற்றாண்டில் மாமல்ல பல்லவன் ஆண்டு கொண்டு இருக்கும் காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள் (குரு பரம்பரை கதைப்படி கி.மு. நாலாயிரத்தை தாண்டி விடுகிறது). இத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவர்கள் தமிழ் இன்றும் வாசித்து புரிந்து கொள்ளும் படி இளமையாக இருக்கிறது. இது தமிழின் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R7ePJiuBcqI/AAAAAAAAC70/C5ZlP2Dl8HU/s1600-h/venkateswara-consort.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5167756491532366498" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R7ePJiuBcqI/AAAAAAAAC70/C5ZlP2Dl8HU/s320/venkateswara-consort.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;span style="color:#3366ff;"&gt;திருக்கண்டேன்&lt;/span&gt;" என்று தொடங்கும் பாசுரத்தில் "&lt;span style="color:#3366ff;"&gt;பொன்மேனி கண்டேன்&lt;/span&gt;" என்கிறார் ஆழ்வார்.பொன்னார் மேனியன், மாதர் பிறையான், அலகில் சோதியன் - கண்ணன் அன்று! அது சிவன். இருப்பினும் பேயாழ்வார் திருமாலை பொன்னனாகக்காண்கிறார். காரணம் முதல் வரியில் இருக்கிறது. ஆழ்வார் முதலில் காண்பது திருமகள். அதான் "திருக்கண்டேன்" என்று&lt;br /&gt;ஆரம்பிக்கிறார். திருமகள் சொர்ணம் போல் மின்னுபவள். அவள் ஜொலிப்பு திருமால் உடம்பில் அப்படி "டால்" அடிக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;Date: Tue, 02 Sep 1997 12:28:41 +0000&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-9140224365376959954?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/9140224365376959954/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=9140224365376959954' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/9140224365376959954'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/9140224365376959954'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2008/02/002.html' title='மடல் 002: எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R7ePJiuBcqI/AAAAAAAAC70/C5ZlP2Dl8HU/s72-c/venkateswara-consort.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-6092386631458149656</id><published>2008-02-16T08:26:00.004+09:00</published><updated>2008-12-12T15:04:01.882+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Lakshmi'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamil'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Ramayana'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamil vedam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sri'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Dharma'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Jati'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sankara'/><title type='text'>மடல் 003: பாயிரம் வாயிலாக தமிழ் மறுமலர்ச்சி</title><content type='html'>தொன்மையான இந்திய மதங்கள் அனைத்திலும் அடிப்படையாக அமைவது&lt;br /&gt;மனிதனுக்கும்,பிரபஞ்சத்திற்கும் (cosmos) உள்ள உறவு பற்றிய தேடுதல். இத்தேடுதல் தந்த தரிசனங்கள்தான் இந்திய சமயம் சார்ந்த தத்துவங்கள்.பண்டைத்தமிழர்கள் உலகை பூரண நோக்கோடு பார்த்தனர் (holistic way) . பிரம்மாண்டமாக சிந்தித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பொய்கையின் முதல் பவாவைப்பாருங்கள். உலகை ஒரு அகல் (விளக்காகக்) கொண்டு, வார் கடலை நெய்யாக இட்டு, வெய்ய கதிரோனை விளக்காக வைத்து பிரபஞ்ச கர்த்தாவைப் பார்க்கிறார். "அப்பாலுக்கு அப்பாலாய்" உள்ள இறைமையை அப்படிப் பார்த்தால்தான் தெரியும் போலும்! இல்லை அவன் பிரம்மாண்டத்தை உணர, அப்படியொரு பெரிய விளக்கு வேண்டும் போலுள்ளது! இவர் நோக்கில் அறிவு உரத்த சிந்தனை (அதாவது ஞான மார்க்கம்) இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.nasa.gov/images/content/153533main_image_feature_623_ys_4.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.nasa.gov/images/content/153533main_image_feature_623_ys_4.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூதத்தார் பிரபஞ்ச நோக்கிலிருந்து அப்படியே உள்ளுக்கு திரும்புகிறார். அன்புதான் அகல் (விளக்கு) என்கிறார். வீட்டுக்கு அஸ்திவாரம் போல் வாழ்வுக்கு அடிப்படை அன்பு என்கிறார். அடுத்து ஆர்வம் வேண்டும். ஆர்வம் இல்லையேல் வாழ்வு சலிப்புத் தட்டிவிடுகிறது. எனவே ஆர்வம்தான் நெய் என்கிறார். சிந்தை இடுதிரி என்கிறார். இவர் அறிவை ஒதுக்கவில்லை. சிந்தை தெளிவாய் இருந்தால்தான் தேடுதல் வசப்படும். நனைந்த திரியோ, ஜீன்ஸ் (jeans) துணியோ போல் திரி இருந்தால் விளக்கு எரியாது. நல்ல பஞ்சுத் திரி வேண்டும், சிந்தையில் நோக்கு இருக்க வேண்டும். அப்போது வானம் வசப்படும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.sxc.hu/pic/m/a/as/asifthebes/903726_indian_lamp_called_diya.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.sxc.hu/pic/m/a/as/asifthebes/903726_indian_lamp_called_diya.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேயாழ்வார் பக்திதான் முக்தி வழி என்கிறார். இப்பாசுரங்களை முன் அறியாத ஆதி சங்கரனும் ஞான வழி சென்ற பின் ஆழ்வார்களைப் போல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#33cc00;"&gt;"பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம்,&lt;br /&gt;பஜ கோவிந்தம் மூடமத"&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்தியின் ஊற்றுக்கண்னைக் கண்டவர்கள் முதல் மூவர். இவர்கள் சமகாலத்தவர்கள். புதிய மதங்களான சமணம், பெளத்தம் என்பவை தென் இந்தியாவில் பரவி, செல்வாக்கு பெற்ற காலமான கி.பி. 5ம் நு¡ற்றாண்டின் பிற்பகுதியில்தான் பல்லவர்களின் ஆதிக்கமும் பரவத்தொடங்குகிறது. "நகரேஷு காஞ்சி" என காஞ்சி பெளத்த தலைமைப் பீடம் ஆகிறது. காஞ்சி மன்னின் புதல்வனொருவன் தூர கிழக்கு நாடுகளுக்கு பெளத்தத்தை கொண்டு செல்லுகிறான். அவர் ஆரம்பித்து வைத்து தான் "ஜென் மதம்" (Zen) ஜப்பானில் பரவுகிறது. இவரை "தாருமா" (Daruma) என ஜப்பானியர் அழைத்து புத்த கோவில்களில் சிலை வைத்து கும்பிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வேற்று மதங்கள் செல்வாக்கு பெறும் போது பழமையானநம்பிக்கைகள், மேலும் வலுப் பெறுகின்றன. புராணங்கள் இயற்றப்படுகின்றன. இராம காதை பிரபலமாகிறது. இப்போது மசூதியை இடித்து இராமர் கோவில் கட்டும் மூட ஜனங்களுக்கு(வட இந்தியர்களுக்கு) இராமன் இன்னும் கடவுளாகவே தெரிய ஆரம்பிக்காத நாட்கள். இராம காதை பிரபலமாக்கப்பட்டு தெற்கேயிருந்து வடக்கே போகிறது. இது தேவையான ஒன்று அக்காலக்கட்டத்தில். சமண, பெளத்த மதங்கள் ஒழுங்கை, வாய்மையை, அறனை வலியுறுத்துகின்றன. இராமன் இவையெல்லாம் கொண்ட உத்தம புத்திரன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் மூவர் பாடல்களில் தென்படும் அவதாரங்கள் கண்ணன், இராமன், வராகன், வாமனன் இவையே.&lt;br /&gt;&lt;br /&gt;பேயாழ்வார் முதல் முறையாக "ஸ்ரீ" என்ற சமிஸ்கிருத பதத்திற்கு "திரு" என்ற தமிழ் சொல்லை பயன்படுத்துகிறார். "திரு" வை திருமாலுடன் இணைப்பதில் பெரும் தத்துவ வெற்றி அடங்கி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/R7YieSuBcpI/AAAAAAAAC7s/3h4tGUy1plI/s1600-h/lakshmi_800x600.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5167355526270513810" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/R7YieSuBcpI/AAAAAAAAC7s/3h4tGUy1plI/s320/lakshmi_800x600.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேதகாலத்து பூஜை முறைகளில் "ஸ்ரீ" , லட்சுமியாக பஜிக்கப் படுகிறாள். ஆழ்வார்கள் இவளை திருமாலின் நெஞ்சில் வைத்து அவளின் முழு காருண்யத்தை திருமால் பக்தர்களுக்கு தர வைக்கின்றனர். காருண்யமிக்க தாள்களை சரண் அடைவதில் தராதரம் வெண்டியதில்லை. அவள் எல்லோரையும் ஒரு தாயைப் போல் இரட்சிப்பாள். அவைதீக மதங்களான (அதாவது வேதத்தை ஒத்துக் கொள்ளாத மதங்கள். கடவுள் என்ற கருத்தில் நம்பிக்கை வைக்காத மதங்கள்) சமணம், பெளத்தம் இவை அறனை வெகுவாக வலியுறுத்தின. அறவழிக் கருத்துக்களை எல்லோருக்கும் பாடம் சொல்லித் தந்தனர். அறவழி நில்லேல் வேறு காப்பு இல்லை என்கின்ற நிலை. ஆழ்வார்கள் "திரு" வைக்காட்டி கதி அற்றாருக்கும் புகலிடம் உண்டு என்கின்றனர். நீ புத்திமானாக இருந்தாலும், மூடனாக இருந்தாலும் பக்தி செய்தால் இவள் கடைக்கண் அருளுக்கு பாக்கியமாவீர்கள் என்கின்றனர். இப் பக்தி வழி விரைவில் பாமர ஜனங்களிடையே செல்வாக்கு பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவைதீக மதங்கள் வேதத்தை ஒத்துக் கொள்ளாததால் சாதிப் பிரிவினை என்ற பாகுபாட்டையும் வலியுறுத்தவில்லை. வேதத்தை ஒத்துக் கொள்ளும் ஆழ்வார்கள் இரண்டுமுக்கிய மாற்று வழிகளைக் காண்பிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது நம் சரித்திரத்தில் மிகவும் முக்கியமான திருப்பு முனை.&lt;br /&gt;&lt;br /&gt;1. ஆழ்வார்கள் கண்ணனின் அடியார்க்கு சாதி அவசியமில்லை என்றனர். அதாவது பக்தி ஒன்றுதான் வழி என்றனர். இது குறித்த தொண்டரடிப்பொடியின் அறை கூவலை பிறகு சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2. இரண்டாவது மாற்று தமிழ் வேதத்தை செய்விப்பது. சமிஸ்கிருத வேதத்தைச் சொல்ல உரிமை உள்ளவர்கள் அந்தணர்கள் மட்டுமே என்று சொல்லும் வைதீக சாதீயத்திற்கு மறுப்பாக திராவிட வேதமாகிய திவ்யப் பிரபந்தங்களை அனைவரும் சொல்லலாம் என்று செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது அந்தக்காலம் தொட்டு இக்காலம் வரை ஒரு புரட்சிதான். இதற்கு மேலான தனித்தமிழ்&lt;br /&gt;ஆர்வத்தை நாம் எங்கும் காண இயலாது. செய்வித்தவர்கள் ஆழ்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்தி இயக்கத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் பெளத்தம் செழித்த காஞ்சிக்கு அருகில் தோன்றியது&lt;br /&gt;தற்செயலான நிகழ்வு இல்லை என்றுதான் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;Date: Wed, 03 Sep 1997 15:45:49 +0000&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-6092386631458149656?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/6092386631458149656/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=6092386631458149656' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/6092386631458149656'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/6092386631458149656'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2008/02/003.html' title='மடல் 003: பாயிரம் வாயிலாக தமிழ் மறுமலர்ச்சி'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/R7YieSuBcpI/AAAAAAAAC7s/3h4tGUy1plI/s72-c/lakshmi_800x600.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-3272880191371345082</id><published>2008-02-15T07:38:00.003+09:00</published><updated>2008-06-28T19:31:43.847+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='vehkai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='mangala sasanam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Siva Vaishnava Unity'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tirupUvaNam'/><title type='text'>மடல் 004: ஆழ்வார்கள் அனுபவித்த இறைமை</title><content type='html'>ஆழ்வார்கள் தோன்றிய காலத்தில் அவைதீக மதங்களுக்கு மாற்றாக நிறையச் செய்ய வேண்டி இருந்தது. கண்ணனை காட்சிக்கு எளியனாக்கி, புதிய சம்பிரதாயங்களை செய்விக்க வேண்டி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புண்ணிய வைணவ தலங்களெல்லாம் சாதாரண தமிழனால் பயணிக்க முடியாத தொலை தூரத்தில் இருந்தன. பொய்கையார் காலத்தில் பத்ரி, அயோத்தி, பிருந்தாவனம் என்று சில &lt;a href="http://www.namasthekerala.com/images/TIRUPATI.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 200px; CURSOR: hand" alt="" src="http://www.namasthekerala.com/images/TIRUPATI.jpg" border="0" /&gt;&lt;/a&gt;தலங்கள் வட நாட்டில் இருந்தன. "திருவெஃகை" என்றொரு தலத்தைப் பாடுகிறார். அவர் பிறந்த ஊர். இதற்கு முன் அதற்கு புண்ணிய அந்தஸ்து கிடையாது. உருவாக்குகிறார். கண்ணன் புவனசுந்தரன் என்று இருக்கும் போது கண்ணன் எங்கெல்லாம்&lt;br /&gt;உண்டோ அதெல்லாம் பிருந்தாவனம் என்கிறார். இப்படி இவர்கள் பாடிய தலங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதை வைணவர்கள், "மங்கள சாசனம்" பெற்ற திருத்தலங்கள் என்று போற்றுகிறார்கள். வைணவ திருத்தலங்கள் 108-ல் முக்கால்வாசி தமிழகத்தில் இருப்பது தற்செயலாக நடந்தது அல்ல. இதே போல் நாயன்மார்களும் தலம் சென்று பாடுகிறார்கள். அப்பர் திருப்பூவணத்தாண்டகத்தில், பூவணநாதனை இப்படிப் போற்றுகிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;pre&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;வடிவேறு திரிசூலம் தோன்றும், தோன்றும்&lt;br /&gt;  வளர்சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்&lt;br /&gt;கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்&lt;br /&gt;  காதில் வெண்குழைதோடு கலந்து தோன்றும்&lt;br /&gt;இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்&lt;br /&gt;  எழில் திகழும் திருமுடியும் இலங்கித்தோன்றும்&lt;br /&gt;பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்&lt;br /&gt;  பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே&lt;/span&gt; &lt;/pre&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஆழ்வார்களும், நாயன்மார்களும் நாம் பிறந்த ஊர் "புண்ணிய பூமி" என்ற உள்ளத்தெம்பை உருவாக்குகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சைவ ஆகமங்களெல்லாம் தென் தமிழகத்தில்தான் உருவாகின. இச்சம்பிரதாயங்களெல்லாம் &lt;br /&gt;&lt;a href="http://www.tirumala-tirupati.com/images/ph_23.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 100px; CURSOR: hand" alt="" src="http://www.tirumala-tirupati.com/images/ph_23.jpg" border="0" /&gt;&lt;/a&gt;வடக்கே கிடையாது. சைவ, வைணவப் பிரிவு கூட தெற்கே இருப்பது போல் அங்கு இல்லை. காரணம் அவை தோன்றிய இடம் தெற்கு. வடக்கு இல்லை! சைவ வழிபாடு தமிழகத்தில் மிகத் தொன்னைமையானது. திருமால் வழிபாடும் புதிய வழி அன்று. கண்ணன் என்ற கருத்தாக்கமே தெற்கே ஆரம்பித்ததுதான். அதனால்தான் கண்ணன் இன்னும் "கருந்தெய்வமாய்" நிற்கிறான். முதல் ஆழ்வார்கள் காலத்தில் இவை இரண்டும் கொஞ்சிக் குலாவி இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;தாழ்சடையும் நீள்முடியும், ஒண்மழுவும் சக்கரமும்&lt;br /&gt;சூழ்அரவும் பொன்நாணும் தோன்றுமால் - சூழும்&lt;br /&gt;திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு&lt;br /&gt;இரண்டுஉருவும் ஒன்றாய் இசைந்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(மூன்றாம் திருவந்தாதி-பேயாழ்வார்).&lt;br /&gt;&lt;br /&gt;சடைமுடியும், கையில் மழுவும், கழுத்தில் பாம்புமாக திருவேங்கடத்தான் இவருக்குத் தெரிகிறான். அப்படியே இருந்தால் தேவலை மீண்டும் பார்க்கும் போது நீண்ட முடியும், கையில் சக்கரமும், பொன்னால் செய்த ஆபரணங்கள் தரித்த திருமாலாகத் தோற்றம் தருகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;பண்டைத் தெய்வங்களும், மரபுகளும், நம்பிக்கைகளும் கையோடு கைகோர்த்து இளநடை பழகும் காட்சி இப்பாசுரத்தில் அற்புதமாய் வந்து நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திருவேங்கடத்தான் இப்படியெனில் தில்லைக் கூத்தன் எப்படி இருக்கிறான் என்கிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;&lt;pre&gt;இடம் மால் வலம்தான்; இடப்பால் துழாய்&lt;br /&gt;  வலப்பால் ஒண்கொன்றை&lt;br /&gt;வடமால்; இடம் துகில் தோல் வலம்&lt;br /&gt;  ஆழி இடம் வலம்மான்&lt;br /&gt;இடமால் கரிதால் வலம் சேது&lt;br /&gt;  இவனுக்கெழில் நலஞ்சேர்&lt;br /&gt;குடமால் இடம், வலம் கொக்கரை&lt;br /&gt;  யாம் எங்கள் கூத்தனுக்கே&lt;/pre&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;(பொன்வண்ணத்தந்தாதி-சேரமான் பெருமாள் நாயனார்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.zinbun.kyoto-u.ac.jp/~shakti/images/Nataraja.gif"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 200px; CURSOR: hand" alt="" src="http://www.zinbun.kyoto-u.ac.jp/~shakti/images/Nataraja.gif" border="0" /&gt;&lt;/a&gt;இடதுபுறம் திருமால், திருத்துழாய் (துளசி). துகிலாடை (பீதாம்பரம்), சுடராழி (சக்கரம்), கரிதால் (கரிய நிறத்தவனான கண்ணன்); வலது சேது (சிவப்பான சிவன்), கொன்றை, புலித்தோல், மான்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து......&lt;br /&gt;&lt;br /&gt;Date: Thu, 04 Sep 1997 09:32:20 +0000&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-3272880191371345082?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/3272880191371345082/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=3272880191371345082' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/3272880191371345082'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/3272880191371345082'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2008/02/004.html' title='மடல் 004: ஆழ்வார்கள் அனுபவித்த இறைமை'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-4903227416081506815</id><published>2008-02-13T07:50:00.001+09:00</published><updated>2008-06-28T19:33:03.700+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='vedantam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tirumazicai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nAmungan tiruvanthathi'/><title type='text'>மடல் 005: காரணன் நீ, கற்றவை நீ, கற்பவை நீ</title><content type='html'>&lt;div&gt;நம் ஆழ்வார் உலாவில் அடுத்து வருபவர் திருமழிசைப்பிரான்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் அருளிச் செய்தது நான்முகன் திருவந்தாதி (96 பாடல்கள்);&lt;br /&gt;திருச்சந்த விருத்தம் (120 பாடல்கள்).&lt;br /&gt;&lt;br /&gt;ஆழ்வார்கள் பாடிய பாடலை ஏன் அருளிச் செயல் என்று சொல்ல வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்&lt;br /&gt;புவிக்கும் புவியதுவே கண்டீர்- கவிக்கு&lt;br /&gt;நிறை பொருளாய் நின்றானை நேர்பட்டேன் பார்க்கில்&lt;br /&gt;மறை பொருளும் அத்தனையே தான்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;(நான்முகன் திருவந்தாதி -69)&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் வெறும் கவிதை சமைக்கவில்லை. அநுபூதி நிலையில் தாம் கண்டுணர்ந்த மெய்ப்பொருளை கவிதை என்ற ஊடகத்தின் வழியே உலகு அறியச் செய்கின்றனர். அதனால்தான் திருமழிசை கவிக்கு நிறைபொருளாய் செங்கண்மாலைக் காண்கின்றார். இவர் அவனை நேர்கொண்ட அநுபவத்தை கவிதையாக்கித் தருகிறார். இதை "அருளிச் செயல்" என்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்&lt;br /&gt;சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல-நல்லறம்&lt;br /&gt;ஆவனவும் நால்வேத மாத்தவமும் நாரணனே&lt;br /&gt;யாவது; ஈது அன்றென் பாரார்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;(நான்முகன் திருவந்தாதி-72)&lt;br /&gt;&lt;br /&gt;இல்லறம், துறவறம் எனறு ஏன் அலட்டிக்கொள்ளுகிறீர்கள்? நல்லறமாவது நாராயணனே! என்று முத்தாய்ப்பு வைக்கிறார். "நால் வேத மாத்தவமும்" என்றவுடன் காஞ்சிப் பெரியவர்தான் ஞாகபத்திற்கு வருகிறார். அவர் வேதத்திற்காகத் தவமிருந்தார். வேதம்தான் தவம் என்றார். திருமழிசை சொல்லுவது போல்"நால்வேத மாத்தவமும் நாராயணனே" என்றிருந்தார். சங்கரமடத்து சம்பிரதாயத்துப்படி கையெழுத்து இட்டால் "நாராயண ஸ்மிருதி" என்றுதான் எழுதிக் கையேழுத்து இட்டார். அர்த்தம் நாராயணனே ஞாபகமா இருத்தல் என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.sathyagalamtemple.net/arp3.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.sathyagalamtemple.net/arp3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை நம்மாழ்வார் வழியில் சொன்னால்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம்&lt;br /&gt;கண்ணன் எம்பெருமானென்றென்றே கண்கள் நீர்மல்கி.....&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;-திருவாய் மொழி 6 (1)&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கும் நிலை. திருமழிசைபிரான் அதையே:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;தொழிலெனக்குத் தொல்லை; மால் தன்னாமம் ஏத்த&lt;br /&gt;பொழுதெனக்கு மற்றதுவே போதும் - கழி சினத்த&lt;br /&gt;வல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த&lt;br /&gt;வில்லாளன் நெஞ்சத் துளன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(நான்முகன் திருவந்தாதி -85)&lt;br /&gt;&lt;br /&gt;என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;வெற்பேன்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி&lt;br /&gt;நிற்கின்றேன், நின்று நினைக்கின்றேன் - கற்கின்ற&lt;br /&gt;நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்&lt;br /&gt;கால்வலையில் பட்டிருந்தேன் காண்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;(நான்முகன் திருவந்தாதி-40)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருவேங்கடமே வீடென்று இருக்கிறேன். யோசித்துப் பார்த்தால் புரிகிறது,&lt;br /&gt;இத்தனை நாளாய் இந்த பாழாய் போன பண்டிதர் பின்னே அலைந்தது ஏன்? என்று.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு ஆழமான பாசுரம்.&lt;br /&gt;&lt;br /&gt;வேதாந்தம் என்பதற்கு வேதத்தின் அந்தம் என்று ஒரு பொருள் கொள்ளலாம். வேதம் &lt;a href="http://www.trsiyengar.com/images/Divyad3.gif"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px;" src="http://www.trsiyengar.com/images/Divyad3.gif" border="0" alt="" /&gt;&lt;/a&gt;என்பதை கல்வி-கேள்வி என்று கொண்டால் அது முடியும் பொது இறைவன் வருகிறான். அதாவது கல்வி- கேள்வி என்று இருக்கும் வரை நாம் "தெரிந்த" என்ற ஒரு குறையுள்ள (நிறைவு பெற முடியாத -கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு) நிலப்பரப்பில் நிற்கிறோம். நம் கல்வி-கேள்வி, பட்டம், பதவி இவையெல்லாம் "நான்" என்பதற்குள் அடக்கம். "நான்" அடங்கி, தெரிந்த நிலப்பரப்பபை விட்டு அகலும் பொது இறைமை ஆட்கொள்ளுகிறது (அதாவது உருவகமாச் சொன்னால்-வேங்கடம் வீடாகிறது).&lt;br /&gt;&lt;br /&gt;திருமழிசையின் வார்த்தைப் பிரயோகங்களைப் பாருங்கள்! "நூல் வலையில்" சிக்கி என்கிறார். நாம் படித்த படிப்பை வைத்து என்ன ஆட்டம் ஆடுகிறோம்? "நூலாட்டி கேள்வனார்" என்று கேலி செய்கிறார்! ஒரு வகையில் இது ஒரு மாபெரும் வலைதான். நாம் வலையில் விழுந்து ஆடுவதை பல சமயம் உணருவதே இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;இனியறிந்தேன் எம்பெருமான்! என்னை-இனியறிந்தேன்&lt;br /&gt;காரணன் நீ, கற்றவை நீ, கற்பவை நீ நற்கிரிசை&lt;br /&gt;நாரணன்நீ நன்கறிந்தேன் நான்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;(நான்முகன் திருவந்தாதி-96)&lt;br /&gt;&lt;br /&gt;Date: Sat, 06 Sep 1997 20:08:10 +0000 &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-4903227416081506815?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/4903227416081506815/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=4903227416081506815' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/4903227416081506815'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/4903227416081506815'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2008/02/005.html' title='மடல் 005: காரணன் நீ, கற்றவை நீ, கற்பவை நீ'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-5479708389317065359</id><published>2008-02-12T07:44:00.001+09:00</published><updated>2008-12-12T15:04:02.187+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamils'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dravida'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tirumazicai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='language'/><title type='text'>மடல் 006: விதையாக நற்றமிழை வித்திட்டாய்!</title><content type='html'>&lt;div&gt;மொழியின் பயன் என்ன என்று பார்ப்போம்!&lt;br /&gt;&lt;br /&gt;மொழியின் தோற்றுவாயை அறிய முயலும் அறிவியலார் மானுடத்தின் மூதாதையர் புல்வெளிகளில் வேட்டையடும் போது ஒருவருக்கொருவர் சங்கேதம் சொல்லிக் கொண்டு கூட்டாக இறையாட உதவும் ஊடகம் மொழி என்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்களுக்குள் பேசிக் கொள்ளாமலே கூட்டாக வேட்டையாடும் கழுதைப் புலிகளுக்கு இது பொருந்தாதுதான்!&lt;br /&gt;&lt;br /&gt;பேபில் மாளிகை கட்டத் துவங்கிய ஆதி மனிதர்கள். கட்டி முடிப்பதற்குள் பல்வேறு மொழி பேசி பிரிந்து போக கடைசிவரை அந்த மாளிகை கட்டப்படவே இல்லை என்று விவிலியம் (Bible) கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மொழி, செடிகொடி போல் வளருகிறது. மொழியின் தொற்றம் என்ன? வளர்ச்சி என்ன? என்றெல்லாம் தெரியாமலே பெரும்பாலான மக்கள் மொழி பேசுகின்றனர். செடி, கொடிகள் தாம் எப்படி தோன்றினோம் என்று அறிந்தா வளருகின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R7DQ2SuBcoI/AAAAAAAAC7k/z6MoqSWPSY0/s1600-h/dawn-s.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5165858403750343298" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R7DQ2SuBcoI/AAAAAAAAC7k/z6MoqSWPSY0/s320/dawn-s.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் மக்கள் ஆதிகாலம் தொட்டு குடிபெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். போகுமிடத்திலும் மொழி வளருகிறது. போகுமிடத்து மொழி காலப்போக்கில் பொது மொழி ஆகிப் போகிறது. பொது மொழி பேசுவதால் எல்லோரும் ஒரு நிரை என்று ஆவதில்லை. பொது மொழி பேசினாலும் பேசுகிறவன் குலம் பார்த்து, கோத்திரம் பார்த்து, குடி பார்த்து, குடி பெயர்வின் அடி பார்த்து மனிதர்கள் பிரிக்கப்படுகிறார்கள். சேர்க்க வேண்டிய மொழியே கடைசியில் மனிதர்களைப் பிரிக்கிறது. எல்லாம் மனிதனின் பார்வையைப் பொறுத்த விஷயம்!!&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையைச் சொல்லப்போனால் மொழி என்பது ஊனுடன் உயிர் கலந்து இருப்பது போல் நம்மோடு கலந்து இருக்கிறது. மொழி இல்லையேல் மானுடம் இல்லை. மொழி என்ற விளை நிலத்தில் நாம் விதையாகத்தான் விழுகிறோம். மொழியில் வளர்கிறோம், மொழியால் வளர்க்கப்படுகிறோம். இந்நிலையில் மொழி என்பது வெறும் ஊடகம் என்பது போக ஒரு ஆன்மீக பரிமாணம் பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை திருமழிசை ஆழ்வாரின் ஒரு இயற்பாவில் காணலாம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;கதவு மனம் என்றும் காணலாம் என்றும்&lt;br /&gt;குதையும் வினையாவி தீர்ந்தேன் விதையாக&lt;br /&gt;நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீ விளைவித்தாய்&lt;br /&gt;கற்ற மொழியாகிக் கலந்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆழ்வார்கள் தமிழை எவ்வளவு உயர் நிலையில் வைத்து பார்க்கிறார்கள் என்பதற்கு விளக்கமாய் அமைகிறது இப்பாசுரம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வுலகிற்கும் உடலிற்கும் கதவாக மனது செயல்படுகிறது. மனது சொல்லித்தான் உலகில் &lt;a href="http://www.photographysites.com/images/landscape.png"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px;" src="http://www.photographysites.com/images/landscape.png" border="0" alt="" /&gt;&lt;/a&gt;எல்லா வேலைகளும் நடைபெறுகின்றன. மனசில்லாமல் செய்யும் காரியும் உருப்படுவதில்லை. அதே நேரத்தில் மனது சொல்லும் எல்லாவற்றையும் செயல் படுத்தவும் முடிவதில்லை. அப்படியே மனது போனபடி செயல் பட்டாலும் செயலின் விளைவுகள் எப்போதும் நன்மையாய் முடிவதில்லை. எனவே மனதை அறிந்து கொள்ளுதல் ஆன்மீக வளர்ச்சியில் முக்கிய படி. மனது நிலைப்பட்டு, தான்தோன்றித்தனமாக ஓடாமல், தன்னை தான் அறிந்து, தன் எல்லை அறிந்து நின்று விடுவது முதல்படி. அப்போது பிரபஞ்சம் அது, அது, உள்ளபடி கண்ணுக்குத்தெரியும். மனதின் வர்ணப்பூச்சு எதுவுமில்லாமல் உலகம் தெளிவாய் தெரியும் போது அதன் உள்ளுள் உறையும் உறவுகளும் சரியாய் புரியும். பிரபஞ்சம் முழுவதையும் இணைக்கும் ஒரு தொப்புள் கொடி கண்ணில் படும். இதை இறை அனுபவம் என்றுதான் சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை திருமால் திருமழிசை ஆழ்வாருக்கு அருளுகிறார். எப்படி? தமிழ் என்ற மொழி மூலம்! கற்றமொழியாக இவர் ஊனுடனும் உயிரிடனும் கலந்து, இவர் உள்ளத்தை விளை நிலமாக்கி இறைமையை சாகுபடி செய்கிறார். தமிழின் பயனை இதற்கு மேலும் சொல்லமுடியுமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒரு பாடலை ஆரம்பமாக வைத்துத்தான் ஆழ்வார்கள் தமிழ் (திராவிட) வேதத்தை படைக்கின்றனர் என்பது என் ஊகம். வேதம் சொல்லும் மொழி உயர் தனிச் செம்மொழியாக இருக்க வேண்டும். ஆழ்வார்கள் தமிழால் அது முடியும் என்று செய்து காட்டினர். வேதத்தின் சாரமாக மட்டுமில்லை, வேத உபநிஷத்துக்களுக்கும் விளக்கம் தேடி பாசுரங்களுக்கு வரும் நிலையை உருவாக்கினர் ஆழ்வார்கள். இவர்கள் செய்வித்தது ஞானத்தமிழ்.&lt;br /&gt;&lt;br /&gt;Date: Sun, 07 Sep 1997 21:03:21 +0000&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-5479708389317065359?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/5479708389317065359/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=5479708389317065359' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/5479708389317065359'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/5479708389317065359'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2008/02/006.html' title='மடல் 006: விதையாக நற்றமிழை வித்திட்டாய்!'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R7DQ2SuBcoI/AAAAAAAAC7k/z6MoqSWPSY0/s72-c/dawn-s.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-8453912473446586660</id><published>2008-02-10T22:12:00.001+09:00</published><updated>2008-07-05T09:10:10.308+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tirumazicai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tiruchandavirutham'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='paripadal'/><title type='text'>மடல் 007: சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல யார் வல்லரே?</title><content type='html'>பிரம்ம சூத்திர உரைகளில் திரமிடாசார்யார் (திராவிட ஆசாரியர்) ஒருவர் குறிப்பிடப்படுகிறார். இவர் திருமழிசைப்பிரானாக இருக்க வேண்டும் என்று பேரா.குப்புசாமி சாஸ்திரியார் கருதுகிறார். இவ்வாழ்வார் சமைத்துள்ள திருச்சந்த விருத்ததில் மலைக்க வைக்கும் சந்தங்களை ஆண்டுள்ள விதத்திலிருந்து இவரது ஆழமான சமிஸ்கிருத புலமையும் தெரியவருகிறது. இவர் கி.பி. 7ம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது கி.பி.8ம் நு¡ற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;தன்னுள்ளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல்&lt;br /&gt;தன்னுள்ளே திரைத்தெழுந் தடங்குகின்ற தன்மை போல்&lt;br /&gt;நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும்&lt;br /&gt;நின்னுளே யடங்குகின்ற நீர்மைநின் கண் நின்றதே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://k43.pbase.com/o6/02/693902/1/72028365.OEd3IlPa.twowavescropped.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://k43.pbase.com/o6/02/693902/1/72028365.OEd3IlPa.twowavescropped.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லினால் தொடர்ச்சிநீ, சொலப்படும் பொருளும்நீ&lt;br /&gt;சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதிநீ&lt;br /&gt;சொல்லினால் படைக்கநீ படைக்க வந்து தோன்றினாய்&lt;br /&gt;சொல்லினால் சுருங்கநின் குணங்கள் சொல்ல வல்லரே?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;-திருச்சந்தவிருத்தம் 10,11&lt;br /&gt;&lt;br /&gt;என்ன அழகான பாசுரங்கள்! சந்தத்தில், பொருளில், கவிதை அழகில்!&lt;br /&gt;&lt;br /&gt;திரைகடலில் கிளர்த்து எழும் பேரலையானது எழுந்து, ஆர்ப்பரித்து, ஆடிக்களைத்து பின் அக்கடலிலேயே அடங்கிவிடுவது போல் இறைவன் என்ற ஒன்றில் பிறந்து, நின்று, திரிந்து,இறந்து பின் இறையினுள் அடங்கிவிடுகிறது என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது இந்திய ஞானிகளுக்கேயுரிய ஒரு பரந்த நோக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி "ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்து உழலும்" ஒன்றை வார்த்தைகளால் பிடிக்க முடியுமா? என்பது அடுத்த கேள்வி. அன்றைய ரிஷிகளிலிருந்து, இன்றைய ஜே.கிருஷ்ணமுர்த்திவரை இதை சொல்லி களைத்து இருக்கிறார்களே தவிர உண்மையையாய் " சொல்ல" முடியவில்லை! "சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல யார் வல்லரே?" என திருமழிசை கேட்பது சரிதான்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;ஊனில்மேய ஆவிநீ! உறக்கமோ டுணர்ச்சிநீ&lt;br /&gt;ஆனில் மேய ஐந்தும்நீ; அவற்றுள் நின்ற தூய்மைநீ&lt;br /&gt;வானினோடு மண்ணும்நீ; வளங்கடற் பயனும்நீ&lt;br /&gt;யானும்நீ, அதன்றி எம்பிரானும்நீ, இராமனே!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;-திருச்சந்தவிருத்தம் 94&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://p.webshots.com/ProThumbs/52/47252_wallpaper280.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://p.webshots.com/ProThumbs/52/47252_wallpaper280.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;அத்தனாகி, அன்னையாகி, யாளுமெம்பிரானுமாய்&lt;br /&gt;ஒத்தொவ்வாத பல்பிறப் பொழித்து நம்மையாட் கொள்வான்&lt;br /&gt;முத்தனார், முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்&lt;br /&gt;எத்தினா லிடர்க் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;-திருச்சந்தவிருத்தம் 115&lt;br /&gt;&lt;br /&gt;என்ன எப்படி போகிறது சந்தம் பாருங்கள்! திருமழிசை - சித்தர்கள், அருணகிரி நாதருக்கு முன்னோடி! ஓடப்பர், உடையப்பர்....என்ற பராசக்தி வசனத்திற்கு முன்னோடி (சமயம் தவிர்த்து ஆழ்வார்கள் எம்மை ஆழ்பவர்களே! -கலைஞர் ஒரு பேட்டியில்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என&lt;br /&gt;இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என&lt;br /&gt;ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என&lt;br /&gt;நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை&lt;br /&gt;&lt;/span&gt;(3.77-80)&lt;br /&gt;&lt;br /&gt;என்று பரிபாடல் திருமாலைப் பாடுகிறது (சங்கப்பாடல்). பாழ் என்றால் பூஜ்யம்; தொண்டு என்றால் ஒன்பது, பாகு என்றால் அரை. சங்கப்பாடல்களின் தொடர்ச்சிதான் பிரபந்தங்கள் என்று ஒரு கணக்கு. பரிபாடல் மாதிரியே புரியாத பாடலொன்றை (ஒன்றா?) திருமழிசையும் எழுதியுள்ளார். சாம்பிள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;ஐந்துமைந்து மைந்துமாகி அல்லவற்றுளாயுமாய்&lt;br /&gt;ஐந்து மூன்று மொன்றுமாகி நின்ற ஆதி தேவனே!&lt;br /&gt;ஐந்துமைந்து மைந்துமாகி அந்தரத் தணைந்து நின்று&lt;br /&gt;ஐந்துமைந்து மாயநின்னை யாவர் காணவல்லரே?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-திருச்சந்தவிருத்தம் 3&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tla1.com/Talent/Clare_Beaton/CB%20numbers.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://www.tla1.com/Talent/Clare_Beaton/CB%20numbers.JPG" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே ஒன்று, மூன்று, ஆறு என்று வகைக்கு ஒன்றாய் பாடி இருக்கிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்!!!!&lt;br /&gt;&lt;br /&gt;Date: Wed, 10 Sep 1997 17:01:11 +0000&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-8453912473446586660?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/8453912473446586660/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=8453912473446586660' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/8453912473446586660'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/8453912473446586660'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2008/02/007.html' title='மடல் 007: சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல யார் வல்லரே?'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-6844491935362461916</id><published>2008-02-09T21:14:00.001+09:00</published><updated>2008-07-05T09:15:21.198+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='narasimha mehta'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='barathi'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='pasalai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='bakthi'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='sanskrit'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nammalvar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='sangam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='koyil'/><title type='text'>மடல் 008: அதீத காதலும் பக்தி இலக்கியமும்</title><content type='html'>ஆழ்வார்கள் ஏன் இப்படி நெக்குருகி கண்ணா, மணிவண்ணா, முகுந்தா என்று புலம்புகிறார்கள் என்றொரு கேள்வி தன்னிச்சையாக எழுகிறது. இதன் காரணத்தை புரிந்து கொள்ள கிமு 400- 200க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுந்த சங்ககால இலக்கிய மரபைப் பரிச்சியப்படுத்திக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://img1.photographersdirect.com/img/18556/wm/pd1043257.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 200px; CURSOR: hand" alt="" src="http://img1.photographersdirect.com/img/18556/wm/pd1043257.jpg" border="0" /&gt;&lt;/a&gt;தமிழ் இலக்கியத்தையும், சமிஸ்கிருத இலக்கியத்தையும் ஒப்பு நோக்கினால் தமிழ் இலக்கியத்தில் தனிச்சிறப்போடு இருப்பது அகத்திணை மரபாகும். சுருங்கச் சொல்லுவதானால் "அக மரபு என்பது மனித உறவுகளின் உன்னதத்தை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தும் ஒரு வழியாகும்". அது காதலனைப்பிரிந்து காதலி பசலை கொண்ட செய்தியாக இருக்கலாம் அல்லது தன் அன்புக்குரிய குறுநில மன்னன் இறந்து வருந்தும் பாணனின் பாடலாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இலக்கிய மரபைப்பற்றி ஆரிய மன்னன் ஒருவனுக்கு தமிழ் புலவர் ஒருவர் சொல்லுவதாக ஒரு சங்கப்பாடல்வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு: குறுநில மன்னன் ஒருவன் இறந்து விடுகிறான். அவனது சபையில் வந்து பாடி, பொருள் பெற்று, அவன்பால் பெரிதும் அன்பு கொண்டிருந்த பாணனால் அத்துயரைத்தாங்கிக் கொள்ளமுடியவில்லை. புலம்புகிறான்-மல்லிகைச் செடியைப் பார்த்து! தலைவன் இறந்து விட்டான் இனி பெண்கள் வளையல் அணிய மாட்டார், மல்லிகை கொய்து பூச்சூடமாட்டர் எனவே மல்லிகையே இனி நீ பூத்து என்ன பயன்? என்று வருகிறது அப்பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;முல்லையும் பூத்தியோ?&lt;br /&gt;பாடியவர்: குடவாயிற் தீரத்தனார்.&lt;br /&gt;பாடப்பட்டோன்: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்.&lt;br /&gt;திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.&lt;br /&gt;குறிப்பு: கடவாயில் நல்லாதனார் பாடியது என்பதும் பாடம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#cc0000;"&gt;இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;&lt;br /&gt;நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்,&lt;br /&gt;பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;&lt;br /&gt;ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த&lt;br /&gt;வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை&lt;br /&gt;முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இப்படி அதீத காதல் கொள்வது, உணர்ச்சி வசப்படுவது தமிழக மரபு. சங்கத்திற்குப் பிறகு களப்பிரர் ஆண்ட இருண்ட காலத்தில் இம்மரபு மறைந்து விடுகிறது. எழுநு¡று ஆண்டுகளுக்குப் பின் இம்மரபை உயிர்ப்பிக்கிறார்கள் ஆழ்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"கோயில்" என்ற சொல்லைக்கவனியுங்கள். கோ+இல். அதாவது அரசன் வாழும் இல்லம். அரசனுக்கு உயர்ந்த இடத்தை பண்டைய தமிழகம் வழங்கியுள்ளது. காலப்போக்கில் அரசனைவிட இறைவனை அங்கு வைப்பது பொருந்தும் என்று தமிழகம் கருதுகிறது. அரசன் இருந்த இல்லம் கடவுளின் இல்லமாகிறது. அரசனைப்பாடிய புலவர்கள் இறைவனைப் பாட தலைப்படுகின்றனர். காதலன் வரவை எதிர்பார்த்து பசலை பூத்து நிற்கும் காதலிக்குப்பதில் இறைவனை நாயகனாக வைத்து காதலியாகி கசிந்து உருகுகிறார்கள். அக மரபின் தொடர்ச்சியாக"பக்தி மரபு" வருகிறது. பக்தி என்பது காதலின் ஓர் உன்னத வெளிப்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.indianromance.co.uk/images/photoGallery/rabariGirl1.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 200px; CURSOR: hand" alt="" src="http://www.indianromance.co.uk/images/photoGallery/rabariGirl1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;சோணியோ, தொத்தலோ எல்லோருக்கும் காதல் வருகிறது!! எதாவதொரு சமயத்தில் காதல் வசப்பட்டு உருகுகிறார்கள். இது அடிப்படை! காதல் உணர்வு மனிதனை தளிர்ப்பிக்கும் உணர்வு. காதல் கொண்ட மக்களின் முகத்தைப்பார்த்தாலே ஒரு "பொலிவு" தெரியும். இந்தக் காதல் உணர் வை நிரந்தரமாக்கும் முயற்சிதான் பக்தி. நிரந்தரமில்லாத மனிதர்களிடம் வைக்கும் காதலை விட எப்போதும் இருக்கும் இறைவனிடம் வைக்கும் காதல் நிரந்தரமாக இருக்கிறது. அதாவது ஒருவன் சாகும் வரை காதல் செய்யலாம் (வாவ்!) இக்காதல் கவிதைகள்தான் பக்தி இலக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலுக்கு கண் இல்லை என்பார்கள். காதல் கவிதைகளுக்கும் மட்டும் "கண்" வேண்டும் என்று கேட்பது நியாயம் இல்லை. பக்தி இலக்கியத்தை இந்த நோக்கில் பார்த்தால் இரசிக்க முடியும். காதல் உணர்வு அற்றவர்களால் "உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி" என்று நெக்குருக முடியாது. பாரதி "என் கண்ணின் பாவை" என்கிறான். ஆழ்வார்கள் "என் உள்ளத்தின் உயிரே!" என்கிறார்கள். ஒரே மரபு. அக மரபு. அது தமிழ் மரபு. தமிழின் மீது பற்று கொண்டவர்களால் இத்தனித்தமிழ் மரபை புறக்கணிக்க முடியாது. ஆழ்வார்களால் முடியவில்லை, பாரதியால் முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.marblegodstatue.com/gif/meerapr1.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 200px; CURSOR: hand" alt="" src="http://www.marblegodstatue.com/gif/meerapr1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;அன்று தமிழ் மண்ணில் தோன்றிய அக மரபு, பக்தி மரபாக மாறி மெல்ல, மெல்ல இந்தியாவை ஆட்கொள்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் செய்த கிருஷ்ணபக்தியை பின்னால் இராஜஸ்தானில் மீரா செய்கிறாள். வங்காளத்தில் கிருஷ்ண சைத்தன்யர் செய்கிறார். பின்னால் இராமகிருஷ்ணர் செய்கிறார். நரசிம்ஹ மேஹ்தா செய்வித்த "வைஷ்ணவ ஜனதோ" என்ற பாடலை வைத்து காந்தி பக்தி செய்கிறார். சைத்தன்யரின் வழிவரும் பிரபு பாதா, இஸ்கான் இயக்கத்தை தொடங்கி உலகை பரவசப்படுத்துகிறார். இதெற்கெல்லாம் ஆதாரம் சங்ககாலத்தில் தோன்றிய அகத்திணை மரபுதான். அது தமிழ் மரபு. சமிஸ்கிருதத்தில் இல்லாத மரபு.&lt;br /&gt;&lt;br /&gt;இம்மரபின் தொடர்ச்சி இன்றும் தமிழகத்தில் வாழ்கிறது-பல்வேறு ரூபங்களில்! ஆழ்வார் வழியில் பக்தி செய்த கடைசி தமிழ் கவிஞன் பாரதி. அதன்பின் இந்த அதீத காதல் உணர்வு சுதந்திர உணர் வுடன் சேர்த்து வைக்கப் படுகிறது (வந்தே மாதரம்!). தாய் நாட்டின் கொடிக்காக உயிர் துறக்கிறான் திருப்பூர் குமரன். இக்காதல் பின்னால் மொழியின் மீது வைக்கப்படுகிறது. தமிழுக்காக தீக்குளித்தவர்கள் பலர். கல்லக்குடி என்ற பெயர் மாற்றத்திற்காக தண்டவாளத்தில் தலையை வைத்து மாய்க்க தயாராக இருந்தார்கள்! அதீத காதல், அக மரபு, தமிழ் மரபு!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வீரத்தமிழர்களுக்கு முன்னோடியாக இருந்த ஒர் தமிழனின் சொல் கேளீர்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;pre&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;செஞ்சொற்கவிகாள்! உயிர்காத்தாட்&lt;br /&gt;  செய்மின்; திருமாலிருஞ்சோலை&lt;br /&gt;வஞ்சக் கள்வன் மாமாயன்&lt;br /&gt;  மாயக்கவியாய் வந்து என்&lt;br /&gt;நெஞ்சும் உயிரும் உள் கலந்து&lt;br /&gt;  நின்றார் அறியாவண்ணம்&lt;br /&gt;என் நெஞ்சும் உயிரும் அவையுண்டு&lt;br /&gt;  தானேயாகி நிறைந்தானே&lt;br /&gt;நம்மாழ்வார் திருவாய்மொழி&lt;/span&gt; (10-1)&lt;/pre&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது காதல், இது கவிதை, இது அகம், இதுதான் பக்தியும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://img1.photographersdirect.com/img/15356/wm/pd876638.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://img1.photographersdirect.com/img/15356/wm/pd876638.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Date: Tue, 16 Sep 1997 21:46:51 +0000&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-6844491935362461916?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/6844491935362461916/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=6844491935362461916' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/6844491935362461916'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/6844491935362461916'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2008/02/008.html' title='மடல் 008: அதீத காதலும் பக்தி இலக்கியமும்'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-1710826633810449542</id><published>2008-02-09T09:26:00.001+09:00</published><updated>2008-07-05T09:17:41.304+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='islam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dalit'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tiruppanazvar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='desikan'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='thondaradipodi'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Jati'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='discrimination'/><title type='text'>மடல் 009: சாதிகள் இல்லையடி பாப்பா!</title><content type='html'>திவ்யப்பிரபந்தங்கள் ஆழ்வார்களின் ஆழ்மனக் காதலை வெளியிடும் ஊடகங்கள் என்று கண்டோம். அவை பண்டைய அக வழி மரபு என்றும் கண்டோம். சங்க கால இலக்கியங்களை நமக்கு அறிமுகப்படுத்துபவர்கள் பாணர்கள் ஆவர். வைணவ இலக்கியங்களிலும் பாணர் ஒருவர் வருகிறார். அவர் பெயர் திருப்பாணாழ்வார் என்பதாகும். சங்ககாலத்தில் மதிப்பிற்குரியவாராக வரும் பாணர்கள் ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்தில் இழிசனம் ஆகிவிடுகின்றனர். சாதி என்பது ஒரு சமூக அடையாளம். தன்னை யார் என்று உண்மையாய் உணராத வரைக்கும் தனி மனிதனுக்கு சாதியக் குறியீடு தேவைப்படுகிறது. ஆழ்வார்கள் தம் ஆழ்நிலை அனுபூதி நிலைகளில் மானிடத்தின் உன்னத பரிமாணத்தை கண்டவர்கள். அவர்களுக்கு எந்த சாதீய அடையாளமும் தேவையில்லைதான். எனினும் சாதீய வழிமுறைகளில் ஊறிப்போன பாழ்பட்ட சமுதாயம் அத்தகைய உன்னத மனிதர்களையும் சாதீயக் கண்ணாடி போட்டுத்தான் பார்த்தது, பார்க்கிறது. திருப்பாணாழ்வார் வாழ்விலும் இது நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீரங்கம் அருகிலுள்ள உறையூரைச் சார்ந்தவர் திருப்பாணர். சமூக உரிமைகள் யாவும் மறுக்கப்பட்ட குலத்தில் பிறந்த அவர் திருவரங்கனை மட்டும் துணையாக் கொண்டு வாழ்ந்து வந்தார். கோயிலுக்கு சற்று தொலைவில் நின்று கொண்டு மெய்மறந்த நிலையில் வழி பட்டுக் கொண்டிருக்கும் போது லோக சாரங்கர் என்ற அந்தணர் இவரைக் காண நேரிடுகிறது. தம் வழியில் தடையாக நிற்கும் "தீண்டத்தகாதவரை" விலக்க அவர் மீது கல் எறிகிறார். நெற்றியில் கல் பட்டு இரத்தம் வழிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்பின் நடந்த சம்பவங்களை இருவேறு முறைகளில் சொல்லுகிறார்கள். சரித்திரத்தை நம் முன்னோர்கள் என்றும் நேரிடையாகச் சொன்னதில்லை. அப்பழக்கம் முகம்மதிய, ஆங்கில ஆட்சிகளுக்குப் பிறகுதான் வருகிறது. சரித்திரம், ஐதீகம் (Myth), புராணம் இவை அதிக வித்தியாசம் இல்லாமல்தான் தமிழக மண்ணில் உலாவுகின்றன. இதை ஆழ்மன வெளியீட்டின் குறியீடாகத்தான் கொள்ள வேண்டியுள்ளது. அரசாள்பவன் சரித்திரம் செய்வதற்கும், அடிமட்டத்து பாமரன் சரித்திரம் சொல்லுவதற்கும் இடையிலுள்ள பாரிய வித்தியாசமிது! (உம். கி.ராஜநாராயணன் - கோபல்லகிராமம்; Gabriel Garcia Marquez - One hundred years of solitude).&lt;br /&gt;&lt;br /&gt;1. அந்தணர்கள் கோயிலுக்கு திரும்புகின்றனர். அரங்கனை நீராட்டும் போது அரங்கனின் நெற்றியில் இரத்தம் வழிகிறது. ஏதோ தவறு நடந்துவிட்டது என உணரும் தறுவாயில் அசரீரி மூலமாக அரங்கன் திருப்பாணாழ்வாரை அந்தணர் சுமந்து வர கோயில் உள் சந்நிதிக்கு வரச் சொல்லுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;2. லோக சாரங்கர் வீடு சென்றதும் இரவில் கனவில் வந்த அரங்கன் திருப்பாணாழ்வாரை சுமந்து கொண்டு மறுநாள் கோயிலுக்கு வரச்சொல்லுகிறார். இது ஆழ்வார்களின் பக்தி இயக்கத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்சியாகும். ஏனெனில், ஆழ்வார்கள் ஸ்ரீரங்கத்தை பாசறையாக் கொண்டு ஒரு பெரிய சமூகப்புரட்சிக்கு வேறிட்டனர். ஒன்று, "எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிரை" என்ற முழக்கம். இரண்டாவது, தமிழ் என்பது "நீச பாஷை" அல்ல, அது வேதம் சொல்லத்தக்க செம்மொழி என நிறுவுவது (வேறொரு வகையில் பார்த்தால் தாய் மொழியில்தான் அனைத்தும் வெளிப்பட வேண்டும் என்ற தன்னம்பிக்கை முழக்கம்). திருப்பாணாழ்வாருக்கு நிகழ்ந்த இழி செயல் தொண்டரடிப்பொடியாழ்வார் என்ற "அந்தணரை" எப்படிப் பாதித்து இருக்கிறது என்பதைப் பாருங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;pre&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;பழுதிலா வொழுகலாற்றுப்&lt;br /&gt;  பலசதுப் பேதிமார்கள்&lt;br /&gt;இழி குலத்தவர்களேனும்&lt;br /&gt;  எம்மடியார்களாகில்&lt;br /&gt;தோழுமின், கொடுமின், கொள்மின்!&lt;br /&gt;  என்று நின்னொடு மொக்க&lt;br /&gt;வழிபட வருளினாய் போன்ம்&lt;br /&gt;  மதிள் திருவரங்கத்தானே!&lt;br /&gt;&lt;br /&gt;அமரவோ ரங்கமாறும்&lt;br /&gt;  வேதமோர் நான்கு மோதி&lt;br /&gt;தமர்களில் தலைவராய&lt;br /&gt;  சாதியந்தணர்களேலும்&lt;br /&gt;நுமர்களை பழிப்பாராகில்&lt;br /&gt;  நொடிப்ப தோரளவில் ஆங்கே&lt;br /&gt;அவர்கள்தாம் புலையர் போலும்&lt;br /&gt;  அரங்கமாநகருளானே!&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி விழுகிறது பாருங்கள் வார்த்தைகள். இது சாத்வீக மொழி அல்ல. தலித்துகளின் போராட்ட மொழி! சொல்பவர் யார்? தலித் அல்ல, அந்தணர். ஏன்? எம் அடியார்கள் என்ற மனித நேயம்! அங்கு சாதியும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கவிதை வரிகளை அப்படியே செயல்படுத்திய மற்றோர் உத்தம வீரர் ஸ்ரீஇராமானுஜர் (கி.பி.1017). பஞ்சமர்கள் என்று எந்த சாதியிலும் அடங்காத அப்பாவி மக்களை "திருக்குலத்தோர்" என்றாக்கி, அவர்களை "முதல் தீர்த்தக்காரர்" களாக்கியது இராமானுஜ மாமுனி! இவர் மனித நேயம் இந்தியர்களையும் கடந்து துருக்கிய பெண்ணை தத்து எடுக்க வைத்து அவளையும் அடியார் கோஷ்டியில் சேர்த்தது (துருக்க நாஞ்சியார்). இவருக்கு மிகவும் அபிமான ஆழ்வார்கள் திருப்பாணாழ்வாரும், ஆண்டாளும். இவருக்கு "ஆண்டாள் ஜீயர்" என்ற பெயரும் உண்டு. இவர் காலத்தில்தான், நாலாயிர திவ்யப்பிரபந்தங்கள் ஆண்டவன் மொழியாகி, முதல்வனுக்கு முன் செல்லும் மொழி ஆயிற்று. (இராமாநுஜரை அறிந்து கொள்ள வாசிக்க வேண்டிய புத்தகங்கள்: இந்திரா பார்த்தசாரதி -இராமாநுஜர் நாடகம்; சாண்டில்யன் - மதப்புரட்சி செய்த மகான் ஸ்ரீராமானுஜர்). இந்த மாமனிதனை சமூகம் காண்பது "பார்ப்பனர்" என்றுதான்!&lt;br /&gt;&lt;br /&gt;கிபி 14ம் நூற்றாண்டைச் சார்ந்த தத்துவ அறிஞரும், தருக்க நெறியாளரும், கவிஞருமான வேதாந்த தேசிகர் திருப்பாணாழ்வார் செய்வித்த பத்து பாசுரங்களுக்கு உரை எழுதியுள்ளார். (எல்லோரையும் விட்டு இவருக்கு உரை எழுதியது கருத்தில் கொள்ள வேண்டியது). பக்தி இயக்கத்தின் மேன்மையையும், திருமாலுக்கு அடிமை செய்யும் அடியார்களிடையே சாதீயம் கிடையாது என்பதை தொண்டரடிப்பொடி இப்படிச் சொல்லுகிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;pre&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;அடிமையிற் குடிமையில்லா&lt;br /&gt;  அயல் சதிப் பேதிமாரில்&lt;br /&gt;குடிமையில் கடைமை பட்ட&lt;br /&gt;  குக்கரில் பிறப்பரேலும்&lt;br /&gt;முடியினில் துளபம் வைத்தாய்&lt;br /&gt;  மொய் கழற் கன்பு சேய்யும்&lt;br /&gt;அடியரை யுகத்தி போலும்&lt;br /&gt;  அரங்கமா நகருளானே!&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆழ்வார்களின் வழி சமதர்மம், சமநீதி, மானுட மேன்மை, மனித நேயம். இதற்கு அடிப்படைத் தேவை மானிடர்பால் அன்பு. அன்பு..அதுதான் இவ்வியக்கத்தின் அடிநாதம்!!&lt;br /&gt;&lt;br /&gt;Date: Sun, 21 Sep 1997 19:47:53 +0000&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-1710826633810449542?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/1710826633810449542/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=1710826633810449542' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/1710826633810449542'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/1710826633810449542'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2008/02/009.html' title='மடல் 009: சாதிகள் இல்லையடி பாப்பா!'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-7809220526007001605</id><published>2008-02-08T08:01:00.001+09:00</published><updated>2008-12-12T15:04:02.617+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='kamban'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='andal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='amalanathipiran'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tiruppanazvar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nammalvar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='antaryami'/><title type='text'>மடல் 010: என் அமுதினைக் கண்ட கண்கள்</title><content type='html'>பக்தி இயக்கத்தின் முக்கிய நோக்கு ரசனை. அழகுணர்ச்சி. வாழ்வை ரசிப்பதற்கு கண்ணனைக் கருத்தாகக் கொள்கின்றனர்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற&lt;br /&gt;காவி மலரென்றும் காண் தோறும் - பாவியேன்&lt;br /&gt;மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை&lt;br /&gt;எல்லாம் பிரானுருவே என்று.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்மாழ்வார் - பெரிய திருவந்தாதி (73)&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது கண்ணன் கருப்பொருளாக உலகமெலாம் வியாபித்து இருக்கிறான். பூவிலும், காயிலும், மானிலும், மருவிலும், தேனிலும், தேன் சிட்டிலும், மண்ணிலும், மனிதருள்ளும் அகப்பொருளாய் (ஆந்தர்யாமியாக) அவன் இருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நோக்கின் பின்னால் கூர்ந்து கவனித்தால் பெரும் புரட்சிக்கான மனோதிடம் ஔ¢ந்து இருப்பதைக் காணலாம். அதாவது, திருப்பாணாழ்வாரை இழிசனம் என்று சாதீயம் ஒதுக்கியது. அவர் மனம் தளரவில்லை. மாசு நிறைந்த மானிடர் மேல் காதல் செய்வதற்குப் பதில் அவர் தன் காதலை மானிடர்க்கும் முதலான கண்ணனிடம் திருப்பினார். ஒன்றில்லாவிடில் மற்றொன்று! குறை ஒன்றும் இல்லை. மனம் தளர்ந்து விடுவதில்லை. இது முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆணாதிக்க சமுதாயத்தில் பிறந்து வளர்ந்த ஆண்டாள் ஆணாதிக்கத்திற்கு கொடுக்கும் சவுக்கடி, "அட பொடியன்களா! நீங்கள் எல்லாம் எனக்கு சமமா! உயர் பொருளான கண்ணன் அல்லவோ எனக்கு சரி சமம்" அவளது கால கட்டத்தை நினைத்துப் பார்த்தால் இது மாபெரும் புரட்சிகரமான போக்கு. இப்போது கூட, அடிமைப்பட்டிருக்கும் இந்திய பெண்ணிற்கு ஆண்டாளின் தைர்யத்தில் கால் பங்கு இருந்தால் கூட பாரதி சொல்லும் புதுமைப் பெண் வந்து நிற்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6uPUxi44cI/AAAAAAAAC7A/fQiD8uz4BXc/s1600-h/krishna-05.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5164378984770232770" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6uPUxi44cI/AAAAAAAAC7A/fQiD8uz4BXc/s320/krishna-05.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு புரட்சிகரமான போக்குகளுக்கும் அரங்கனின் ஆசி கிடைக்கிறது! அதுதான் இதில் விசேஷம்! அத்தனை ஆழ்வார்களிலும் இந்த இரண்டு புரட்சிவாதிகளும்தான் அரங்கனுடன் சங்கமித்தவர்கள். இதில் உள்ள நயம் உங்களுக்குப் புரிகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பாணாழ்வார் பத்தே பாசுரங்கள்தான் செய்வித்தார். புலவர் வழக்கபடி பத்துப் பாடல் பாடிவிட்டு, பல ஸ்துதி என்று கடைசியாக ஒரு பாடல் பாடுவது வழக்கம். அதில் பாடியவர் பெயர், பாட்டினால் வரும் நன்மை சொல்லப்படும். திருப்பாணாழ்வார் இம்மரபை கை விடுகிறார். முத்துப் போல் பத்துப்பாடல்களில் கண்ணன் மேல் காதல் கொண்டு அடி முதல் முடி வரை பாடி விட்டு, மெய் மறந்து, பாடியவரே இல்லாமல் செய்து விடுகிறார். இது காதலின் உயர் நிலை! காதல் "செய்பவர்" என்பது கூட இல்லாமல் வெறும் காதலே காட்சியாக நிற்பது!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;அமலனாதி பிரானடியார்க் கென்னை யாட்படுத்த&lt;br /&gt;விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்&lt;br /&gt;நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதிள ரங்கத்தம்மான் திருக்&lt;br /&gt;கமல பாதம், வந்தென் கண்ணினுள்ளன வொக்கின்றதே(1)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கண்ணனை விளிக்க எத்தனை சொற்களை பாவிக்கிறார் பாருங்கள்: அமலன், ஆதிபிரான், விமலன், விண்ணவர் கோன், வேங்கடவன், நிமலன், நின்மலன், ..இப்படி. கண்ணதாசன் சொல்லுவானே," ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே" என்று. அது போன்ற ஒரு நிலை. நீதி வானவன் என்ற பதத்திலிருந்து அவருக்கு இழைக்கப் பட்ட பிழைக்கு நீதி வழங்கப்பட்டது எனத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;ஆல மாமரத்தின் இலை மேல் ஓர் பாலகனாய்&lt;br /&gt;ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்&lt;br /&gt;கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோர் எழில்&lt;br /&gt;நீல மேனி! ஐயோ! நிறை கொண்டதென் நெஞ்சினையே (9)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஆலை இலைக் கண்ணன் உருவகம் பாருங்கள்! உலகங்கள் அனைத்தையும் உண்டு விழுங்கி விட்டு (ஞாலம் ஏழும்உண்டான்) பாலகனாய் சிறு இலையின் மேல் தவழ்ந்து வருகிறான் கணணன் ஊழிக் கூத்தின் கடைசியில்! பாலகன் என்ற உருவகம் வளர்ச்சியின் தொடக்கத்திற்கு திரும்பும் நிலையைக் குறிக்கிறது. கள்ளமற்ற குழந்தையாக காண்பிப்பது, உலகின் தோற்றமும் முடிவும் அவனுக்கு சிறு குழந்தையின் விளையாட்டுப் போல என சுட்டிக் காட்ட. இதையே கவி கம்பன்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்&lt;br /&gt;நிலை நிறுத்தலும் நீக்கலும் நீங்கலா&lt;br /&gt;அலகிலா விளையாட்டு உடையார்&lt;br /&gt;தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்பார். இப்படி சக்தி வாய்ந்த இவனது அழகிற்கு ஓர் முடிவு உண்டோ? "முடிவில்லதோர் எழில் நீலமேனி" என்கிறார். முர்ச்சையாகும் நிலை. வார்த்தை வரவில்லை. கவிஞர் தடுமாறுகிறார். ஐயோ!என் நெஞ்சு நிறை கொண்டதே என முடித்து விடுகிறார். அவருக்கு அப்போதிருந்த அருள் அனுபவத்தை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6uPCRi44bI/AAAAAAAAC64/o9q2sc8CUY0/s1600-h/krishna-03.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5164378666942652850" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6uPCRi44bI/AAAAAAAAC64/o9q2sc8CUY0/s320/krishna-03.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆழ்வார்கள் அழகின் ரசிகர்கள். அழகை அழகுக்காகவே ரசித்தார்கள். இதன் முத்தாரமாய் விழுகிறது பத்தாவது பாடல்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கொண்டல் வண்ணனைக் கோவலானாய் வெண்ணெய்&lt;br /&gt;உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை&lt;br /&gt;அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக்&lt;br /&gt;கண்ட கண்கள், மற்றொன்றினைக் காணாவே!(10) &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஆழ்வாரின் அருள் அனுபவம் அவர் நாவிலிருந்து பாலாய், தமிழாய், பரம கவிகளின் இசையாய் பீரிட்டுக் கொண்டு பாய்கிறது இப்பாசுரத்தில்! அழகு, இனிமை, இறைமை இவை சேர்ந்த கலப்பில் பாணரின் பாடல்கள் படிப்பவரின் உயிரை உருக்குவதாய் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;Date: Tue, 23 Sep 1997 19:02:49 +0000&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-7809220526007001605?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/7809220526007001605/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=7809220526007001605' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/7809220526007001605'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/7809220526007001605'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2008/02/010.html' title='மடல் 010: என் அமுதினைக் கண்ட கண்கள்'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6uPUxi44cI/AAAAAAAAC7A/fQiD8uz4BXc/s72-c/krishna-05.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-2500959787485832039</id><published>2008-02-07T10:24:00.001+09:00</published><updated>2008-07-08T08:24:25.812+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamils'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='indus valley'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='language'/><title type='text'>மடல் 011: வேதம் தமிழ் செய்த மாறன்</title><content type='html'>தமிழ் மிகத் தொன்மையான மொழியாக உலகில் நிற்கின்றது. கல் தோன்றா, மண் தோன்றா காலத்தே..போன்ற அரசியல் வசனங்கள் மிகைப்படுத்தி மொழியை ஒரு வழிபடும் கருத்தாக கொண்டு சென்றாலும், உண்மையில் இம்மொழி தொன்மை வாய்ந்ததாக இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வரசியல் வழிபடும் கலாச்சாரத்தில் வெறுப்புற்று இம்மொழியின் தொன்மை மீது சந்தேகம் கொண்டு மதுரைப் பல்கலைக்கழகத்தில் படித்துவரும் காலத்தில் உலகத் தமிழ் மாநாடு நடந்தது. ஆட்டங்களும், பாட்டங்களும், துதிகளும், தோத்திரங்களுக்குமிடையே சில நல்ல ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப் பட்டன. அதிலொன்று முனைவர் ஐராவதம் மஹாதேவனின் கட்டுரை. இது தமிழ் மொழியை சிந்து சமவெளி நாகரீக மொழி என்று பல சான்றுகளுடன் சொன்னது. இக்கருத்தை முன்னுமே கா.நா.சுப்பிரமணியன் எழுதிய மாதவி என்ற புதினத்தில் வாசித்து இருக்கிறேன். அது ஆய்வு பூர்வமாக மதுரையில் கிடைத்தது. இதன் பின் பல, ஐரோப்பிய, அமெரிக்க ஆய்வுகள் இக்கூற்று உண்மையென நிறுவின. இதில் பின்லாந்தைச் சேர்ந்த அஸ்கோ பார்ப்போலாவின் ஆய்வு முக்கியம் (&lt;a href="http://www.harappa.com/script/parpola0.html"&gt;Deciphering the Indus Script &lt;/a&gt;- Asko Parpola, Cambridge University Press. pp.374, $95). சமிஸ்கிருதம்தான் இந்திய மொழிகளில் மூத்த மொழி என்ற கருத்து மாறிவருகிறது. தமிழை &lt;a href="http://en.wikipedia.org/wiki/Proto-Indo-European_language"&gt;Proto Indo European &lt;/a&gt;மொழி என்றுதான் பெரும்பாலான மொழியியலார் நம்புகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தொன்மையான மொழி சமிஸ்கிருதத்தில் தாக்கம் ஏற்படுத்துவது இயல்பானதே. பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் (பெர்க்கிலி தமிழ் பீடம்) காளிதாசனின் காப்பியங்கள் சங்க மரபை ஒத்து இருக்கின்றன என்று சொல்வதில் ஆச்சர்யப் படுவதிற்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தொன்மையான இந்திய மொழிகளுக்கிடையே எவ்வளவு கொடுக்கல்-வாங்கல் இருந்தனவோ, அந்த அளவுக்கு போட்டியும் இருந்திருக்கிறது. இப்போட்டியில் ஆர்யம் (இச்சொல் இங்கு உயர்வு கருதி - உயர் தனிச் செம்மொழி-சொல்லப்படுகிறது. இன அடிப்படையில் அல்ல), ஒரு மிக சமார்த்தியமான காரியம் செய்கிறது. அதாவது ஆர்யம் கோயில் மொழி ஆகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் பாரிய லாபம் இருக்கிறது. சமய உணர்வு என்பது மிக, மிக தொன்மையான மனித உணர்வு. சமீபத்திய பரிணாமவியல் ஆய்வுகள் சமய உணர்வு மனித பரிணாமத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக நம்புகின்றனர் (Appraising Grace - What evolutionary good is god? by Daniel C.Dennet, pp.39-44, The Sciences, Jan/Feb 1997). இப்படி இருக்கையில் மொழியை சமயத்துடன் சேர்த்து வைப்பது மொழியின் இருப்பிற்கும் (survival) அதன் பெருமைக்கும் வழி வகுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வேதங்கள் சமிஸ்கிருதத்தில் இருக்கின்றன. மிகத்தொன்மையான சமிஸ்கிருததில் உள்ள இம்மறைகள் இன்றளவும் தப்பிதம் இல்லாமல் சொல்லப்படும் வகையில் மிக நேர்த்தியான பாட முறைகளை அமைத்து எவ்வித மாற்றமும் இல்லாமல் சொல்லப்பட்டு வருகின்றன. வேதம் வாழுமளவு சமிஸ்கிருதமும் இருக்கும். இப்படி நிலை பெற்றுப் போன ஒரு ஆழமான சம்பிரதாயத்தை மாற்றி, தமிழை தேவ பாஷையாக செய்விப்பது என்பது மலையைப் பெயர்ப்பதற்கு ஒப்பான செயலாகும். ஆனால் அதைச் செய்திருக்கின்றனர், ஆழ்வார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆழ்வார்கள் தமிழின் மீது மாறா அன்பு கொண்ட உன்னத தமிழர்கள். இவர்கள் பல குலங்களிலிருந்து வந்திருக்கலாம், ஆனாலும் அவர்கள் எல்லோருக்கும் தமிழின் மீது ஆறாக்காதல் இருந்திருப்பதை அவர்கள் செய்வித்த பாசுரங்களில் காணலாம். இவர்கள் அன்று இப்பெரும் முயற்சி எடுக்கவில்லையெனில் இன்று மெல்லத் தமிழ் செத்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாசுரங்கள் தெய்வப்பாடல்கள். முழுக்க, முழுக்க இறைத்தத்துவமும், அழகியலும், கவித்துவமும் கொண்டவை. அதாவது பண்டைய பாஞ்சராத்திர ஆகமங்களெல்லாம் தமிழ் நாட்டில் உருவானாலும் அவை உயர்வு கருதி சமிஸ்கிருதத்தில் எழுதப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறையை பின் பற்றி ஆழ்வார்களாலும் அத்தனை பாசுரங்களையும் சமிஸ்கிருதத்தில் செய்வித்து இருக்க முடியும். சமிஸ்கிரத புலவரான திருமழிசை ஆழ்வார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;...விதையாக நற்றமிழை&lt;br /&gt;வித்தியென் உள்ளத்தை நீ விளைவித்தாய்&lt;br /&gt;கற்ற மொழியாகக் கலந்து.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று எழுதக்காரணமென்ன? ஏன் ஆழ்வார்கள் பாசுரங்களை தமிழில் செய்தனர்?&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு ஆன்மீக காரணங்களைவிட சமூக காரணங்களே முக்கியம் என்று தெரிகின்றது. முதலில் ஆழ்வார்கள் பகவத் அனுபவத்தில் (இறை அநுபூதியில்) லயித்து மட்டும் இருப்பவர்களானால் கவிதையே எழுதவேண்டிய அவசியமில்லை. அப்படியே கவிதை செய்தாலும் அதை தமிழில் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. உதாரணமாக ஆழ்வார்களால் மொழி என்ற எண்ணத்தின் குறியீடு தோன்றும் தோற்றுவாய்க்கு முன்னமே நின்று நிலைத்து விட முடியும் என்று தெரிகிறது. நம்மாழ்வார் பிறந்து 16 வயதுவரை வாயே திறவாமல் யோகத்தில் மவுனித்து இருந்ததாக குரு பரம்பரைக் கதைகள் சொல்லுகின்றன. அப்படியே இருந்திருக்க வேண்டியதுதானே? ஏன் தன் தெய்வீக அனுபவங்களைத் தமிழில் தரவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;பாசுரங்களை நாமெல்லோரும் ஆய்வு செய்யும் வண்ணம் அவைகளை மீட்டுத்தந்த நாதமுனி, மாறன் சடகோபன் (நம்மாழ்வார்) பற்றி இப்படி எழுதுகிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#006600;"&gt;வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த&lt;br /&gt;மாறன் சடகோபன் வண்குருகூர் - ஏறு, எங்கள்&lt;br /&gt;வாழ்வாம் என்று ஏத்தும் மதுரகவியார், எம்மை&lt;br /&gt;ஆள்வார் அவரே சரண்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;எவ்வளவு ஆசையும் அன்பும் வார்த்தையில் விழுகின்றன பாருங்கள்! நம்மாழ்வாரை குருகூர் ஏறு (சிங்கம்) என்கிறார். "ஆழ்வார்கள் எம்மை ஆள்பவர்களே" என்ற கலைஞரின் வசனமும் முன்பே சொல்லப் பட்டு இருப்பதைக் காண்க.&lt;br /&gt;&lt;br /&gt;கவிச்சக்கிரவர்த்தி கம்பன், நம்மாழ்வார் என்ற மாத்திரத்தில் ஆரிய வேதம் சொல்லும் அந்தணர்கள் தங்கள் கரங்களை தலைமேல் வைப்பர் என்பதை:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#009900;"&gt;படி எடுத்துக் கொண்ட மாறன் என்றாம் பதுமக்கரங்கள்&lt;br /&gt;முடி எடுத்துக் கொண்ட அந்தணர்...... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(சடகோபர் அந்தாதி 34)&lt;br /&gt;&lt;br /&gt;என்கிறார். சமிஸ்கிருத மொழி வல்லுனரான வேதாந்த தேசிகர்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#009900;"&gt;"செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித்&lt;br /&gt;தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே" ...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்கிறார். பாருங்கள் தேசிகர் வாழ்ந்த 14ம் நூற்றாண்டுக்குள் நிலைமையை தலைகீழாக மாற்றிவிடுகின்றனர் ஆழ்வார்கள். ஆரிய வேதங்களுக்கு பொருள் தேட திராவிட வேதத்திலிருந்து சான்றுகள் எடுக்குமாறு!&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தமிழின் மறுமலர்ச்சி என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக ஒரு சுவையான செய்தி கூடல் (மதுரை) புராணம் என்ற நூலில் கிடைக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#009900;"&gt;அண்ட கோளத்தாரென்ற ஆரியத்தமிழாலன்று&lt;br /&gt;தண்டத் தமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தமிழ் என்ற வார்த்தைதான் திராவிடம் என்றாகிறது. ஆரியம் என்பது உயர்வு கருதி சமிஸ்கிருதத்திற்கு சொல்லப் படுகிறது. இப்பாடல் "ஆரியத் தமிழ்" என்றொரு பிரயோகத்தைப் போடுகிறது!!&lt;br /&gt;&lt;br /&gt;தனித் தமிழ் இயக்கத்திற்கு தலையிடி கொடுக்கும் வார்த்தை போல் அல்லவோ தெரிகிறது இது ;-)&lt;br /&gt;&lt;br /&gt;Date: Sun, 05 Oct 1997 11:25:12 +0100&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-2500959787485832039?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/2500959787485832039/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=2500959787485832039' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/2500959787485832039'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/2500959787485832039'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2008/02/011.html' title='மடல் 011: வேதம் தமிழ் செய்த மாறன்'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-5598346677628819985</id><published>2008-02-06T10:35:00.001+09:00</published><updated>2008-12-12T15:04:02.821+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tirukachi nambi'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Buddha'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ramanuja'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sankara'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='advita'/><title type='text'>மடல் 012: இதத்தாய் இராமானுசன்!</title><content type='html'>வேதங்களை காட்டிற்கு உவமை கூறும் ஒரு பழக்கம் உள்ளது. "வேதாரண்யம்" என்ற பெயர் அப்படித்தான் தோன்றுகிறது. காடு என்றால் நெடிதுயர்ந்த மரங்கள் இருக்கும். வாசனை பூச்செடிகள் இருக்கும். உயிர் காக்கும் மூலிகைகள் இருக்கும், முட் புதர்களும் இருக்கும்.&lt;br /&gt;காடு இப்படி எதிர் மறையான உணர்வுகளைத் தோற்றுவிக்க கூடியது. ஆச்சர்யம்/பயம் கலந்த உணர்வுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img height="324" src="http://www.mass.gov/envir/forest/images/hardwoodForest.jpg" width="244" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேதங்களை தன்னிச்சையாக மனிதன் இயற்கையுடன் ஒன்றிய தருணங்களில் கிடைத்த உண்மைத் தரிசனங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். வேதத்தின் அடிநாதம், மனிதன் தொடங்கி உலகத்தின் அத்தனை நிகழ்வுகளுக்கும் ஓர் காரணியைக் காட்டுவதுதான். சாராம்சத்தில் வேதம் மனிதனை ஒருவருடன் ஒருவர் இணைப்பதுடன், மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்குமுள்ள ஆழ்ந்த தொடர்பை மீட்பித்து அவனை மகிழ்வாக வாழ வைக்கும் நோக்குடன்தான் எழுதி வைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பயனுள்ள எதையும் மனிதன் கடைசிச் சொட்டுவரை சுவைத்து முடித்து விடுவதுதான் இதுவரை வழக்கமாய் உள்ளது. ஆயிரம் உதாரணங்கள் தரலாம். வேதத்தின் அடிப் பயனை தெரிந்து கொண்ட மனிதன் அதை அதீதமாக பயன்படுத்த, வேதம் வழிகாட்டலை விட்டு வழிபடும் பொருளாகிப்போகிறது. வழிபடுவதற்கு சடங்குகள் தேவை. ஒரு நிலையில் வேதம் மறைந்து சடங்குகள் மட்டும் நிற்கும் நிலை வந்தது. வேதம் வியாபாரம் ஆகிப் போனது. வேத வியாபாரிகள் நல்ல வாழ்வு கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இந்திய சிந்தனை ஓட்டமும், தத்துவத் தேடலும் அற்று உறைந்து நின்ற காலத்தில் தோன்றினான் சித்தார்த்த கெளதமன் என்ற புத்தபிரான். இப்படி சடங்குகள் நிரம்பி நின்ற வேதபாராயணம் வேண்டுமா என்ற புரட்சிகர கேள்வியை முன் வைத்தான். உண்மையை வேறு வழிகளில் கண்டுகொள்ள முடியாதா என்று ஆராய்ந்து புது வழி சொன்னான். வழி வழியாக சமயத் தத்துவ விசாரணைகள் ஆரியத்தில் (சமிஸ்கிரதம்) எழுதப்பட்டு வந்த போது, மக்கள் மொழிகளில் தன் போதனைகளை எழுதிவைத்தான் புத்தன். ஆரிய மாயையை முதலில் உடைத்தவன் அவன். இவன் கற்பித்த வழிமுறை இந்தியா தாண்டி எங்கெங்கோ (ஜப்பான், சீனா...) போனது சரித்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தன் "கடவுள்" என்ற கருத்தைப் பற்றி ஆழ்ந்த மவுனம் சாதித்து இருந்த போதும், அவனே கடவுளாக்கப் பட்டான் கால ஓட்டத்தில்! மரியாதை கருதி இந்தியர்கள் செய்யும் இக்காரியத்தில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. கடவுள் இல்லை, கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொன்ன பெரியாரை ஒரு வழிபடு பொருளாக மாற்றி வைத்திருக்கும் தமிழகத்தைப் பார்த்தால் அவரது அடிப்படை போதனைகளே கேள்விக்குறியாக ஆகிவிடுவது இச்செயலின் தீமை! இப்படித்தான் புத்தன் கதையும் ஆனது. புத்தம் அதன் சீர்மை கெட்டு, போதனைகள் வலுவிழந்த காலக்கட்டதில் இந்திய தத்துவ விசாரணைக்கு உரம் கொடுக்க தோன்றினான் சங்கரன் (ஆதி சங்கரர்).&lt;br /&gt;&lt;br /&gt;புத்தரின் மீது உள்ளார்த்தமாக ஆழ்ந்த பக்தி செய்தவன் சங்கரன். பெளத்தம் விட்டுச் சென்ற இடிபாடுகளிலிருந்து ஒரு மாபெரும் மாளிகையை உருவாக்குகிறான் சங்கரன். ஒன்றிலிருந்து ஒன்று என்று இந்திய சிந்தனைகளுக்கு ஒரு தொடர்ச்சி இருக்கிறது. சங்கரனின் அத்துவைத (இரண்டு இல்லை) தத்துவம் பெளத்த கருத்துக்களை உள்வாங்கி எழும்புகிறது. இதனால்தான் சங்கரனுக்கு "பிரசன்ன புத்தன்" (புத்தன் வேறு போர்வையில்) என்றொரு பட்டப் பெயர் உண்டு. ஆனால் சங்கரன் உருவாக்கிய சனாதன மதம் பண்டைய இந்திய மதங்களை ஒன்று சேர்ப்பதாக அமைகிறது. வங்காளத்தில் புழங்கிய காளி பூஜை, ஒரிசாவில் பிரபலமாயிருந்த ஞாயிறு வழிபாடு, மராட்டிய தேசத்து கணேச பூஜை (தமிழக பிள்ளையார் வழிபாடு ஔவை பிரபலப்படுத்தியது. "பிள்ளையார் எறும்பு" போல் யாருக்கும் தொந்திரவில்லாத சாத்வீகமான வழிபாடு அது. இப்போது சென்னையை பயமுறுத்துவது மராட்டிய வழிமுறை!), திராவிட தேசங்களில் இருந்த முருக, அரி, சிவ வழிபாடுகள் இவைகளை ஒன்று சேர்க்கிறார் சங்கரர். இதை இப்படித்தான் பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில் தமிழக மரபான ஐந்திணை வழக்கில் முல்லைக்கு கண்ணனும், குறிஞ்சிக்கு வேலனும், மருதத்தில் இந்திரனும், பாலைக்கு கொற்றவையும் (காளி), நெய்தல் தெய்வம் வருணன் என இருக்கிறது. சூரிய, கணேச வழிபாடு பண்டைய தமிழ் மரபில் இல்லை (?).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6kSbxi44aI/AAAAAAAAC6w/ogI03iE_jZM/s1600-h/Ramanuja.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6kSbxi44aI/AAAAAAAAC6w/ogI03iE_jZM/s320/Ramanuja.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5163678716122423714" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சங்கரன் செய்வித்த சனாதன மதம் பண்டை வேதங்களின் அதிகாரத்தை (authority) ஏற்றுக் கொள்கிறது.சடங்குகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காவிட்டாலும் வேதம் ஓதுதல் அந்தணர்களின் கடன் என்ற நிலையை மீட்டுக் கொடுக்கிறது. வேதமும், அதன் புரிதல்களும் மீண்டும் மேட்டுக்குடிக்கே போய்ச் சேர்ந்து விடுகிறது. சங்கரன் திராவிட கலாச்சாரத்தில் தோன்றினாலும் (மலையாள தேசங்களில் அரச மொழியாக தமிழ் இருந்தபோதும்), அவனுக்கு திராவிட/தமிழ் இலக்கியங்களில், அதன் மரபில் பரிச்சயமில்லை (தமிழ் நாட்டில் பிறந்து இங்கிலீஸ் மீடியத்தில் படிக்கும் மேட்டுக்குடி தமிழர்கள் போல்). அவன் செய்வித்த நூல்கள் அத்தனையும் உயர் ஆரியத்தில் நின்று போயின. "காலடி" மண்ணின் மொழியாகிய மலையாளம் நீச்ச பாஷையாக அவனுக்கு போய்விட்டது. எனவே சங்கரன் செய்வித்த மதமும் ஆரிய மதமாகவே போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் தோன்றுகிறான் ஸ்ரீபெரும்புதூரில் ஓர் தமிழன். தமிழ் மரபில் கல்வி கற்கிறான். ஈரப் பாசுரங்கள் நாலாயிரத்தையும் ஆழ்ந்து கற்கிறான். ஆழ்வார்கள் கண்ட இறை தரிசனங்களை அவர்கள் வழியில் பார்க்கிறான். இவனுக்கு தமிழ் நீச்ச பாஷையாகத் தோன்றவில்லை. தேவ பாஷையாகத் தெரிகிறது. மாறன் செய்வித்த தமிழ் இவனுக்கு அமுது. இவன் தமிழகத்தில் ஒரு சமய/சமூக புரட்சிக்கு வித்திடுகிறான், நம்மாழ்வாரின் நூற்றாண்டு அறைகூவலின் எதிரொலிபோல்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;pre&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;பொலிக! பொலிக! பொலிக!&lt;br /&gt;  போயிற்று வல்லுயிர்ச்சாபம்&lt;br /&gt;நலியும் நரகமும் நைந்த;&lt;br /&gt;  நமனுக்கிங் கியாதொன்று மில்லை&lt;br /&gt;கலியும் கெடும்கண்டு கொண்மின்;&lt;br /&gt;  கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்&lt;br /&gt;மலியப் புகுந்திசை பாடி&lt;br /&gt;  யாடி யுழிதரக் கண்டோம்&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(நம்மாழ்வார் திருவாய்மொழி )&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு கடல்வண்ணன் பூதங்கள் என்று சொல்வது வைணவ அடியார்களை! இப்பூதங்களின் பெரும்பூதம் ஸ்ரீபெரும்புதூர் பூதம் ;-)&lt;br /&gt;&lt;br /&gt;எனவேதான் இராமானுசர், சங்கரர் செய்வித்த அத்துவைத்திற்கு மாற்று வைக்க வேண்டி வந்தது. அடிப்படையில் இறைமை ஒன்று என்று சொல்லும் அத்துவைத கருத்துக்கள் அனைத்தும் மேட்டுக்குடியில் தங்கிவிட சாதி வேறுபாடுகள் அப்படியே நின்று இருந்தன சங்கருக்குப் பிறகும்! இராமானுசருக்கு இது பெரிய புதிராக படுகிறது. உண்ணும் சோறு, தின்னும் வெற்றிலை (வார்த்தையைப் பாருங்கள் - "தின்னும்" என்ற colloquial usage) எல்லாம் கண்ணனாக இருக்கிற பட்சத்தில் சாதி எங்கிருந்து வரும்? சாதி என்ற பொய்மையை எதிர்க்கிறார் இராமானுசர். தனது ஆத்மார்த்த குருவான திருகச்சிநம்பி (வைசியர்) க்கு உணவிடவில்லை தன் சனாதன பத்தினி என்ற காரணத்திற்காக இல்வாழ்வைத் துறக்கிறார் இராமானுசர் (நம்மில் யாருக்கு வரும் இந்த தைர்யம்?).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;pre&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;வேதத்தை, வேதத்தின் சுவைப் பயனை,&lt;br /&gt;  விழுமிய முனிவரர் விழுங்கும்&lt;br /&gt;கோதில் இன் கனியை, நந்தனார் களிற்றைக்&lt;br /&gt;  குவலயத்தோர் தொழுதேத்தும்.....&lt;/span&gt; &lt;/pre&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(பெரிய திருமொழி-திருமங்கை)&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணம் வழி செய்கிறார். ஆழ்வார்கள் செய்வித்த தமிழ் வேதத்தை திருமால் கோயில்களில் வழிபாட்டு முறையாக்கி, தமிழை இறை மொழி ஆக்கி, தமிழ் வேதம் அத்தனை சாதிகளுக்கும் பொது என்றொரு புதுச் சட்டத்தை கொண்டு வருகிறார். இது சரியான புரட்சிக் குரல். சைவ மரபில் சித்தர்களுக்குத்தான் அந்தத் தைர்யம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இராமானுசர் திருவரங்கத்தில் இராமகாதை சொல்லிக் கொண்டு வருகிறார். விபீஷணன் சரண்புகும் கட்டம். இவன் எதிர் கட்சியைச் சேர்ந்தவன். ஆயிரம் கேள்விகள், விசாரணைகள் (சேர்த்துக் கொள்வதா? நம்புவதா? இது போன்ற கேள்விகள்). இந்தக்கட்டத்தில் இராமானுசரின் சீடரொருவர் (இராமானுசருக்கு பெரிய சீடர் கோஷ்டி உண்டு, அதில் பல குலத்தவர் உண்டு) பயம் கொண்டு கூட்டத்திலிருந்து வெளியேறுகிறார். இராமானுசர் இதை கவனித்து விட்டு, உரையை நிறுத்திவிட்டு, ஏன் கிளம்பிவிட்டீர் என்கிறார்? சீடர் கண்களில் நீர் பொங்க, சரண் என்று ஒருவன் தனது குலம், மக்கள் அனைத்தையும் விட்டு கை வணங்கி நிற்கும் நிலையில் இத்தனை கேள்விகளா? என்னால் இங்கு இனி இருக்க முடியாது என்கிறார். இராமானுசர் உணர்ச்சி மேலிட தம்பி, அது இராமன் சபை! இது இராமானுசன் சபை! இங்கு கேள்விகள் கிடையாது! எல்லோரும் ஓர் நிறை. நீர் இரும்! என்று. இந்த அன்பு உள்ளத்தை கீழ்வரும் பாடல் (பட்டர் தனியன்) மிக அருமையாக வருணிக்கிறது:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#009900;"&gt;வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல்&lt;br /&gt;ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற&lt;br /&gt;முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த&lt;br /&gt;இதத்தாய் இராமானுசன்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[இராமானுசன் நம் தாய்! பரிவினால் எப்படி விழுகின்றன வார்த்தைகள், பாருங்கள் அன்பர்களே!]&lt;br /&gt;&lt;br /&gt;இராமானுசரின் இந்த புரட்சிகர போக்கு அவருக்கு பல இல்லல்களைத் தந்திருக்கிறது. இராமானுசரை இருமுறை கொல்ல சதி நடந்து இருக்கிறது. இராமானுசர் பெரும் புகழைக் கண்டு பொறாமை கொண்ட சோழ மன்னன் அவரை நாடு கடத்தி இருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கட்டுரையின் முக்கிய நோக்கு, சமயம் என்பது ஏதோ கண்ணை மூடிக் கொண்டு தியானித்து இருப்பது அல்ல, அது சமூக பிரக்ஞையுள்ள ஒரு இயக்கம் என்று சொல்லத்தான். சமயம் பல்வேறு சமயங்களில் சமூகத்தின் சவால்களை எதிர்கொண்டு இயைந்து செயல்பட்டு இருக்கிறது. வேதம் காடு என்றேன். காட்டில் வளரும் முட்செடிகள் போல்தான் சமயத்துடன் உடன்வாழும் மூடநம்பிக்கைகள். பாரதி சொல்வது போல், "திக்குத் தெரியாத காட்டில் உன்னைத் தேடித் தேடி இளைத்தேனே" என்பது போல் இம்மூடநம்பிக்கை என்ற புதர்களில் சிக்கி உண்மையை கண்டு கொள்ளாமல் தவிக்கும் லட்சோப லட்சம் மக்கள் உண்டு. கையில், வாளுடன், நெஞ்சில் ஆர்வமுடன் செல்லும் போது இப்புதர்கள் அழிந்து போகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#ff0000;"&gt;அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை&lt;br /&gt;அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்&lt;br /&gt;வெந்து தணிந்தது காடு - தழல்&lt;br /&gt;வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?&lt;br /&gt;தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(சுப்பிரமணிய பாரதி)&lt;br /&gt;&lt;br /&gt;Date: Sat, 18 Oct 1997 18:22:52 +0100&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-5598346677628819985?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/5598346677628819985/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=5598346677628819985' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/5598346677628819985'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/5598346677628819985'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2008/02/012.html' title='மடல் 012: இதத்தாய் இராமானுசன்!'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6kSbxi44aI/AAAAAAAAC6w/ogI03iE_jZM/s72-c/Ramanuja.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-1767570905091223585</id><published>2008-02-04T22:54:00.001+09:00</published><updated>2008-12-12T15:04:03.823+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tirumazicai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Buddha'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='reformist'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tiruchandavirutham'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ramanuja'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tolkappiam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sankara'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='paripadal'/><title type='text'>மடல் 013 - பாசுர வரலாறும் தமிழ் வரலாறும்</title><content type='html'>&lt;em&gt;அன்பர் ஒருவர் எழுப்பிய கேள்விகள் சிலவற்றிற்கு பதில் சொல்லும் கடமை உள்ளேன். அவர் இரண்டு முக்கியமான கேள்விகளை முன் வைக்கிறார். சமயப்புரட்சி என்ற வார்த்தை அவசியம்தானா? இரண்டு, மெய்ஞானத்தையும் mundane மொழி பிரச்சனையையும் சேர்த்து குழப்ப வேண்டுமா என்று?&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதில் ஆரம்பித்து முதலுக்கு வருகிறேன். பாசுர மடல் இதுவரை மெய்ஞான தத்துவங்களைத் தொடவில்லை. ஒருமாதிரி சமய வரலாற்றைத்தான் சொல்லி வருகிறது. வரலாறு என்னும் போது சமூகப்பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். நான் சங்கரரின் &lt;a href="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6cbVxi44VI/AAAAAAAAC6I/SMF-m2s531w/s1600-h/%40-sign.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6cbVxi44VI/AAAAAAAAC6I/SMF-m2s531w/s200/%40-sign.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5163125558694437202" /&gt;&lt;/a&gt;அத்வைதத்தை விளக்கவில்லை, அவர் வாழ்ந்த காலத்தின் சமூக விழுமியங்களைத்தான் (social values) சொன்னேன். மேலும் அக்கட்டுரையில் சொன்ன மாதிரி மெய் ஞானிகளும் காலத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறார்கள். புத்தன் செய்தது, சங்கரன் செய்தது, இராமானுசர் செய்தது இவையெல்லாம் அவ்வகை எதிர்கொள்ளலே. அது அவர்களின் சமூகக்கடமையும் கூட. அவர்களின் மெய்ஞானக்கருத்துக்கள் எல்லாம் இந்தியாவில் முன்னமே சொல்லப்பட்டதுதான் என்கிறார். மறுக்கவில்லை. அதைத்தான் காலத்தின் தேவை அறிந்து அவர்கள் வழங்கி இருக்கிறார்கள். வரலாறு என்று பார்த்தால் இது புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் கேள்வி, ஏன் மதப் புரட்சி என்று சொல்லவேண்டும்? மெய்ஞானமும், மூட நம்பிக்கைகளும் நெல்லும், பதரும் போல சேர்ந்தே வளர்ந்து இருக்கின்றன. அவ்வப்போது களை எடுக்க வேண்டிய அவசியம் இருந்து கொண்டேதான் இருந்திருக்கிறது. உளவியல் கண்ணேட்டத்தில் பார்த்தால் மனது எந்த மாற்றத்தையும் உடனே ஒத்துக் கொள்வதில்லை. மாற்றங்கள் சமூகத்தை பாதிக்கும் போது புரட்சி என்ற பெயர் பெருகிறது. இராமானுசர் செய்தது புரட்சிதான் - வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்த்தால். ஜே.கிருஷ்ணமூர்த்தி செய்தது புரட்சிதான். இந்த மனிதர்களின் சிந்தனைகள் பல லட்சக்கணக்கான மனதை தொட்டு மாற்றத்தைக் கொண்டு வரும் பொது ஒரு புரட்சி அங்கு தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாசுர வரலாறு தமிழ் இலக்கிய வரலாறு. பாசுர வரலாறு தமிழ் சமய வரலாறு. பாசுர வரலாறு பக்தி இயக்கத்தின் வரலாறு. சங்ககாலம் தொடர்ந்து இன்றுவரை _தமிழ் மொழியில்_ நடந்து வரும் ஒரு சமய வரலாறு அது. இதை தமிழ் பண்பாடு கோரும் ஒவ்வொரு தமிழனும் அறிந்து கொள்ள வேண்டியது கடமையாகும். அதுதான் பாசுர மடலின் நோக்கம். சமிஸ்கிருதம் இந்திய பண்பாட்டைத்தாங்கி நிற்கும் பண்டைய மொழி. அதன் தாக்கம் பரவலாக எல்லா மொழிகளிலும் இருக்கிறது. தமிழிலும் அது காணக்கிடைக்கிறது. அதை மறுக்கவில்லை. அதே நேரத்தில் தமிழ் தனக்கென சில விழுமியங்களைத் தாங்கிக் கொண்டு தனித்துவம் சொண்டு நிற்கிறது. பாசுர வரலாறு அதைத் தொட்டுச் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;a href="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6cblxi44WI/AAAAAAAAC6Q/PZ012M6hQJo/s1600-h/cartoonK.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6cblxi44WI/AAAAAAAAC6Q/PZ012M6hQJo/s200/cartoonK.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5163125833572344162" /&gt;&lt;/a&gt;பாசுர வரலாறு சொல்வதால் என்னை "சுத்த வைணவன்" என்று ஒதுக்காதீர்கள். வைணவம் தமிழுக்கு எவ்வளவோ செய்திருக்கிறது. தமிழின் இன்றைய செழுமைக்கு வைணவம் பெரும் பங்காற்றி இருக்கிறது. தனிப்பட்ட அளவில் எனக்கு எம்மதமும் சம்மதம்தான். பாசுரம் சொல்லும் போது நான் வைணவனாக இருந்தால்தான் ஆழ்வார்களின் இதயத்தை புரிந்து கொள்ள முடியும். கண்ணன் என்னும் கருத்தில் நம்பிக்கை இல்லாமல், பக்தி என்றால் என்னவென்று தெரியாமல் பாசுரம் சொல்லமுடியாது. அப்படிச் செய்வது பாவமாகும். எனவே பாசுரத்தில் மூழ்கும் பொது நான் வைணவன்தான். அது மூழ்கி இருக்கும் வரைதான் :-)&lt;br /&gt;&lt;/em&gt;_________________________________________&lt;br /&gt;சென்ற கட்டுரையில் ஐந்திணைக் கோட்பாட்டைச் சொல்லி பண்டைய தமிழர்கள் எப்படி தெய்வங்களை நிலத்தின் பண்பாக கொண்டனர் என்று பார்த்தோம். தொல்காப்பியர் நான்கு நிலங்களைத்தான் பிரதானமாகச் சொல்கிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#009900;"&gt;மாயோன் மேய காடுறை உலகமும்&lt;br /&gt;சேயோன் மேய மைவரை உலகமும்&lt;br /&gt;வேந்தன் மேய தீம்புனல் உலகமும்&lt;br /&gt;வருணன் மேய பெருமணல் உலகமும்&lt;br /&gt;முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்&lt;br /&gt;சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(தொல். அகத். நூற்பா. 5)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6cb4hi44XI/AAAAAAAAC6Y/G1wz0448U28/s1600-h/elephant-pair.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6cb4hi44XI/AAAAAAAAC6Y/G1wz0448U28/s320/elephant-pair.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5163126155694891378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முல்லைத் தெய்வம் கண்ணன் (மாயோன்); குறிஞ்சித் தலைவன் கந்தன் (சேயோன்); மருதக் கடவுள் இந்திரன் (வேந்தன்); நெய்தற் கடவுள் வருணன் என்று அறியக்கிடைக்கிறது. "தொல்காப்பியர் பாலைக்கு தெய்வமும் வேண்டிற்றிலர்: பிறர் பகவதியையும், ஆதித்தனையும் தெய்வமென்று வேண்டுவர்" என்று நக்கீரர் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தினைக்கடவுளரைச் சொல்லும் போது, "சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல்" என்னும் முறைபற்றி "மாயோன் மேய காடுறை உலகம்" எனத்துவங்குகிறார் என்று கொள்ளலாம். முல்லைக் கடவுளாக கண்ணன் நிற்பதால் இவனது கோவில்கள் முதலில் காடும் காடு சார்ந்த பகுதிகளிலுமே இருந்திருக்க வேண்டும். திருமாலிருஞ்சோலை, திருவேங்கடம் இவைகளை நோக்குங்கால் அது புரியும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற நிலங்களிலும் இவன் கோவில்கள் வந்திருக்க வேண்டும். வைணவ திருப்பதிகளின் இரத்தினமான திருவரங்கம் மருத நிலத்தில் நிற்பதே அதன் சான்று.&lt;br /&gt;&lt;br /&gt;பக்தி இயக்கத்தின் தோற்றம் பரிபாடலில் தெளிவாய் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#006600;"&gt;தீயினுட் டெறல் நீ பூவினு னாற்றநீ&lt;br /&gt;கல்லினுள் மணியுநீ சொல்லினுள் வாய்மைநீ&lt;br /&gt;அறத்தினு ளன்பு நீ மறத்தினுள் மைந்துநீ&lt;br /&gt;வேதத்து மறைநீ பூதத்து முதலுநீ&lt;br /&gt;வெஞ்சுட ரொளியுநீ திங்களு ளளியுநீ&lt;br /&gt;அனைத்துநீ யனைத்தினுட் பொருளுநீ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;(பரிபாடல் 3/63-68)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6ccOhi44YI/AAAAAAAAC6g/O0rvcAlCrDY/s1600-h/krishna-05.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6ccOhi44YI/AAAAAAAAC6g/O0rvcAlCrDY/s320/krishna-05.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5163126533652013442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சங்கத்தின் தொடர்ச்சிதான் பாசுரங்களும், பக்தி இயக்கமும். இப்பாடல் திருமழிசையின் வாயில் எப்படி வருகிறது பாருங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;ஊனில் மேய ஆவிநீ: உறக்கமோடுணர்ச்சிநீ&lt;br /&gt;ஆனில் மேய ஐந்தும்நீ: அவற்றுள் நின்ற தூய்மைநீ&lt;br /&gt;வானினோடு மண்ணும்நீ; வளங்கடற் பயனும்நீ&lt;br /&gt;யானும்நீ, அதன்றி எம்பிரானும்நீ; இராமனே!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;(திருச்சந்தவிருத்தம் 94).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6cdSRi44ZI/AAAAAAAAC6o/aC2ZpatEFlg/s1600-h/ram.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6cdSRi44ZI/AAAAAAAAC6o/aC2ZpatEFlg/s320/ram.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5163127697588150674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாசுர வரலாறு தமிழ் இலக்கிய வரலாறு. பாசுர வரலாறு தமிழ் சமய வரலாறு. பாசுர வரலாறு பக்தி இயக்கத்தின் வரலாறு. சங்ககாலம் தொடர்ந்து இன்றுவரை தமிழ் மொழியில் நடந்து வரும் ஒரு சமய வரலாறு அது. இதை தமிழ் பண்பாடு கோரும் ஒவ்வொரு தமிழனும் அறிந்து கொள்ள வேண்டியது கடமையாகும். அதுதான் பாசுர மடலின் நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;Date: Sun, 26 Oct 1997 12:01:59 +0100&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-1767570905091223585?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/1767570905091223585/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=1767570905091223585' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/1767570905091223585'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/1767570905091223585'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2008/02/blog-post.html' title='மடல் 013 - பாசுர வரலாறும் தமிழ் வரலாறும்'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6cbVxi44VI/AAAAAAAAC6I/SMF-m2s531w/s72-c/%40-sign.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-4917597907394687380</id><published>2008-02-04T09:01:00.001+09:00</published><updated>2008-12-12T15:04:04.012+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='periyazvar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='peyazvar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tirumazicai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Baghavad Gita'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nammalvar'/><title type='text'>மடல் 014: பற்றுடை அடியவர்க்கு எளியவன்</title><content type='html'>ஆழ்வார்களுக்கென்று ஒரு வழி இருக்கிறது. "ஆசை அறுமின்காள், ஆசை அறுமின்காள், ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்காள்" என்று திருமூலர் பாடினால், இவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;pre&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கண்ணன் என்னும் கருந்தெய்வம்&lt;br /&gt;  காட்சி பழகிக் கிடப்பேனை&lt;br /&gt;புண்ணில் புளிப்பெய்தார் போலப்&lt;br /&gt;  புறநின் றழகு பேசாதே,&lt;br /&gt;பெண்ணின் வருத்த மறியாத&lt;br /&gt;  பெருமா னரையில் பீதக&lt;br /&gt;வண்ண ஆடை கொண்டு, என்னை&lt;br /&gt;  வாட்டம் தனியே வீசீரே&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(ஆண்டாள்) என்று இருப்பார்கள். அதாவது ஆழ்வார்களுக்கு கண்ணன் ஒரு அனுபவம். வெறும் கருத்து அல்ல. கண்ணனை அனுபவித்தல் ஆழ்வார்கள் பாசுரங்கள் முழுவதிலும் விரவிக் கிடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;pre&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இருமலைபோல் எதிர்ந்தமல்லர்&lt;br /&gt;  இருவர் அங்கம் எரிசெய்தாய்! உன்&lt;br /&gt;திருமலிந்து திகழும்மார்பு&lt;br /&gt;  தேக்கவந்தென் அல்குலேறி&lt;br /&gt;ஒருமுலையை வாய்மடுத்து&lt;br /&gt;  ஒருமுலையை நெருடிக்கொண்டு&lt;br /&gt;இருமுலையும் முறைமுறையாய்&lt;br /&gt;  ஏங்கி ஏங்கி இருந்துணாயே&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(பெரியாழ்வார் திருமொழி -2/8)&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வர்ணனை பாருங்கள். ஒரு பெண், தன் குழந்தையுடன் அனுபவிக்கும் மிக பிரத்தியேகமான தன்னிலை அனுபவங்கள். சொல்வது பட்டர்பிரான்! தாயாக மாறினால் ஒழிய இது சாத்தியப்படாது. இப்படித்தான் ஆழ்வார்கள் கண்ணனை/வாழ்வை அனுபவித்து இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dollsofindia.com/dollsofindiaimages/paintings3/oil_painting_QH55_l.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://www.dollsofindia.com/dollsofindiaimages/paintings3/oil_painting_QH55_l.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதமான நெஞ்சம் கொண்ட பேயாழ்வார் இராமனை அதிகம் பாடவில்லை. தேவியைப் பிரிந்து நிற்கும் ஒரு அவதாரம். பெருமாள் மனது எப்படி பாடுபட்டு இருக்கும் என்று அவரை நினைத்து இவரால் அவரைப் பாட முடியவில்லை! அதுதான் ஆழ்வார் மனநிலை!&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு சுவாரசியமான விஷயம். கண்ணனின் லீலைகள் பலவற்றைப்பாடிய பாசுரத்தில் கண்ணனின் கீதோபதேசம் பற்றி ஒரு குறிப்புக் கூட கிடையாது!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கண்ணனின் எளிமை குறித்து ஆழ்வார்களுக்கு பல அனுபவங்கள். பாராங்குசன், சடகோபன், மாறன் என்றெல்லாம் அழைக்கப்படும் நம்மாழ்வார் தன் இறை அனுபவத்தை பாடலாக சொல்லிக் கொண்டு வருகிறார். அவரது சீடரான மதுரகவி எழுதிக் கொண்டு வருகிறார். ஒருபாடல்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;pre&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பற்றுடை அடியவர்க்கு எளியவன்; பிறர்க்கு அரிய&lt;br /&gt;  வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்&lt;br /&gt;மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடையாப்புண்டு&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்லிக் கொண்டு வந்தவர் அப்படியே மெய்மறந்து இருந்துவிட்டார். அதாவது உலகேழும் ஆளும் தெய்வம். ஒரு சின்னப் பையன் போல் வந்து, யசோதையுடன் விளையாடி, அவள் கையால் அடி வாங்கி, அவள் கையால் கட்டுப்பட்டு.....இவ்வளவு எளியவானக ஒரு கடவுள் இருக்கமுடியுமா என்று எண்ணி மனமிக மகிழ்ந்து, மெய் மறந்து &lt;img id="BLOGGER_PHOTO_ID_5162909706523042002" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" href="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6ZXBhi44NI/AAAAAAAAC44/8i4y8p_eB4o/s1600-h/krishna-01.jpg" src="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6ZXBhi44NI/AAAAAAAAC44/8i4y8p_eB4o/s200/krishna-01.jpg" border="0" alt=""&gt;நிற்கிறார். நமெக்கெல்லாம் இப்படி எப்போதாவது சில நொடிகள் வாய்ப்பதுண்டு. உடனே நிகழ்கால நிகழ்வுகள் அடுத்த விநாடி கீழே கொண்டு வந்துவிடும். ஆனால் நம்மாழ்வார் நிற்கிறார், நிற்கிறார்...ஆறுமாதமாக அடுத்த வரி சொல்லாமல் நிற்கிறார். பாட்டு எழுதிக் கொண்டு இருக்கும் மதுரகவிக்கு எப்படி இருக்கும். இவர் பாட்டுக்கு, சரி அவருக்கு அனுபவம் முடிந்து வரட்டும் என்று இவர் கிளம்பிவிட்டால்? இவர் கிளம்பியபின் அவர் பாடலை முடித்துவிட்டால் அருமையான பாசுரம் போய்விடும்! எனவே இவரும் சளைக்காமல் ஆறு மாதங்கள் பசி, தண்ணி இல்லாமல் கூடவே நின்றாராம். இது என்ன நிலை? இதை கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியவில்லை. ஆனால் அதுதான் ஆழ்வார்கள் சொல்லும் இறை நிலை. கண்ணன் வெறும் கருத்து அல்ல. அவன் ஓர் அனுபவம். ஆறு மாதம் கழித்து அடுத்த வரி இப்படி வருகிறது....&lt;br /&gt;&lt;br /&gt;எத்திறம், உரலினோடு இணைத்து இருந்தேங்கிய எளிவே!&lt;br /&gt;&lt;br /&gt;சேர்த்து பார்த்தால்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;pre&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பற்றுடை அடியவர்க்கு எளியவன்; பிறர்க்கு அரிய&lt;br /&gt;  வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்&lt;br /&gt;மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடையாப்புண்டு&lt;br /&gt;  எத்திறம், உரலினோடு இணைத்து இருந்தேங்கிய எளிவே!&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(நம்மாழ்வார் திருவாய்மொழி 3/1).&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது கண்ணன் பகவத் கீதை சொல்வதைவிட இவர்களுக்கு கண்ணன் எவ்வளவு காட்சிக்கு எளியவனாக, செளலப்பியனாக இருக்காறான் என்பதை நினைத்து மயங்குவதில்தான் இறை இன்பத்தை அனுபவித்து இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவ்வனுபவங்களையெல்லாம் பார்க்கும் போது திருமழிசை மிகவும் வித்தியாசப் படுகிறார். அவர் வாழ்ந்த காலம், அவர் வாழ்ந்த வாழ்வு, அவர் பெற்ற அனுபவங்கள் இவையெல்லாம் அவரை மிகவும் வித்தியாசமான ஆழ்வாராகக் காட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;Date: Sun, 26 Oct 1997 21:04:13 +0100&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-4917597907394687380?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/4917597907394687380/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=4917597907394687380' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/4917597907394687380'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/4917597907394687380'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2008/02/014.html' title='மடல் 014: பற்றுடை அடியவர்க்கு எளியவன்'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6ZXBhi44NI/AAAAAAAAC44/8i4y8p_eB4o/s72-c/krishna-01.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-4546874428892368253</id><published>2008-02-03T10:09:00.001+09:00</published><updated>2008-12-12T15:04:04.207+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tirumazicai'/><title type='text'>மடல் 015: திருமழிசை என்ற அதிசயம்</title><content type='html'>பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் இவர்களுக்குப் பின் வருகிறார் திருமழிசைப் பிரான். இவர் முதல்வர் மூவரையும் திருவல்லிக்கேணியில் சந்தித்தாக ஒரு கதை உண்டு (காரணம் பின்னால் புரியும்). இவர் வாழ்ந்த காலத்தில்தான் சைவ, வைணவ விரிசல் அதிகமாக இருந்திருக்கிறது. பெளத்தமும், சமணமும் கூட சேர்ந்து சண்டை போட்டுக் கொண்டு இருந்திருக்கின்றன. இவையெல்லாம் திருமழிசையின் பாடலில் பதிவாகிவுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்&lt;br /&gt;சிறியார் சிவப்பட்டார் செப்பில் - வெறியாய&lt;br /&gt;மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்&lt;br /&gt;ஈனவரே யாதலால் இன்று&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(நான்முகன் திருவந்தாதி 6)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;நாராயணன் என்னை யாளி நரகத்துச்&lt;br /&gt;சேராமல் காக்கும் திருமால்தன்-பேரான&lt;br /&gt;பேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு&lt;br /&gt;ஆசைப்பட்டாழ்வார் பலர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(நான்முகன் திருவந்தாதி 14)&lt;br /&gt;&lt;br /&gt;முதல் மூவரிடம் இருந்த சமயப் பொறுமை இவரிடம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நரசிம்ம பல்லவனுக்குப்பின் பல்லவ நாட்டை ஆண்டவர்கள், இரண்டான் மகேந்திரன் (கி.பி. 668- 670), முதலாம் பரமேஸ்வரன் (கி.பி. 670-680), இராஜசிம்மன் (கி.பி. 680-720). இவர்கள் அனைவரும் வீர சைவர்கள். சைவ சமய நெறியாளர்கள் அப்பர், சம்மந்தர் வாழ்ந்த காலமும் இதுதான். திருமழிசையோ வீர வைஷ்ணவராக இருந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக்கால "மரியாதைப் படி" இவர் நாடு கடத்தப் பட்டு இருக்கிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் பற்றிய சுவையான குரு பரம்பரைக் கதையொன்று உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இவருக்கு கணிகண்ணன் என்றொரு சீடன் உண்டு. இவர் நிஷ்டையில் இருந்தபோது ஒரு மாது- அவள் ஒரு காலத்தில் பல்லவனின் "கீப்"பாக இருந்தவள், தன் இளமையெல்லாம் பறிபோய், அரச மரியாதை போய் "அம்போ" என்று இருக்கும் காலையில் திருமழிசையின் தேஜசை பார்த்துவிட்டு இவரை வழிபட்டால் தன் இளமை மீண்டும் கிடைக்காதா என்ற &lt;img id="BLOGGER_PHOTO_ID_5162556402513273026" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6UVshi44MI/AAAAAAAAC4w/yQDx50HNk6Y/s200/fire.jpg" border="0" /&gt;நப்பாசையில் தினமும் இவர் இருக்கும் கோவில் திண்ணையில் கோலம் போட்டு வந்திருக்கிறாள். சீடன் இதைக் கவனித்து, திருமழிசையிடம் சிபாரிசு செய்ய அவரும் இரங்கி இவளுக்கு இளமையை திரும்ப அருளி இருக்கிறார். இவள் உடனே அரசவைக்குப் போய்விட்டாள். அரசனுக்கு பொறாமை. இவளைப் போல் தனக்கும் இளமை வராதாவென்று. அவளும் பெரியவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம். சீடனைக் கேட்டால் கூடப் போதுமென்று சொல்ல கணிகண்ணன் மாட்டிக் கொண்டான். கணிகண்ணனுக்கு இந்த சித்து எல்லாம் தெரியாது. நம்மால் முடியாது என்று இவன் சொல்ல அரசன் கடைசியில் ஒரு பாட்டாவது பாடிவிட்டு போ என்று சொல்ல, அதற்கும் கணிகண்ணன் கட்டபொம்மன் போல் நீ என்ன எங்கள் பெருமாளுக்கு திருத்துழாய் பறித்துத்தந்தாயா, சந்தனம் அரைத்துத் தந்தாயா? இல்லை மலர் மாலை கோர்த்துத் தந்தாயா? மாமானா, மச்சானா? எதற்கு பாட வேண்டும் உன்னை? எனக் கேட்க. முதலாம் பரமேஸ்வரன், "அப்ப சரிதான் நடையைக் கட்டு" என்று நாடு கடத்தி விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;சீடனைப் பிரிந்து இருக்க முடியாமல் இவரும் நாட்டைவிட்டுப் போய்விட்டார். சும்மா போக வேண்டியதுதானே? பெருமாளையும் "கூட வாரும் ஓய்!" என்று அழைத்துக் கொண்டு போய்விட்டார் . அங்குதான் ஆரம்பிக்கிறது வினை.&lt;br /&gt;&lt;br /&gt;Date: Mon, 27 Oct 1997 11:02:34 +0000&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-4546874428892368253?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/4546874428892368253/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=4546874428892368253' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/4546874428892368253'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/4546874428892368253'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2008/02/015.html' title='மடல் 015: திருமழிசை என்ற அதிசயம்'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6UVshi44MI/AAAAAAAAC4w/yQDx50HNk6Y/s72-c/fire.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-7555619096413582611</id><published>2008-02-03T09:33:00.001+09:00</published><updated>2008-07-12T10:42:03.131+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tirumazicai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='sivavakiayar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='kanikannan'/><title type='text'>மடல் 016: பை நாகப் பாயை சுருட்டிக் கொள்!</title><content type='html'>சீடன் நாடு கடத்தப் பட்டான். குருவும் கிளம்புகிறார். பள்ளிகொண்டு சயனித்து பெருமாள் இருக்கிறார்.திருமழிசை பெருமாளைப் பார்த்து:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#009900;"&gt;கணிகண்ணன் போகின்றான் காமருபூகச்சி&lt;br /&gt;மணிவண்ணா நீ கிடக்க வேண்டாம்&lt;br /&gt;துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்றேன் நீயும்&lt;br /&gt;உன் பைநாகப் பாயை சுருட்டிக்கொள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்கிறார். பாவம் பெருமாளும்தான் என்ன செய்வார்? சரிதான், நடையைக் கட்டும் என்று திருமழிசையுடன் தன் நாகப் பாயைச் சுருட்டிக் கொண்டு கிளம்பி விடுகிறார். இவர் கிளம்பியவுடன் இவரது தங்கை தேவியும் கூட கிளம்ப, சிவனும் கிளம்புகிறார். மாமாவோடு மருமானும், மற்றைய தெய்வங்களும் கிளம்ப நாடே வெறிச்சொடிப் போய்விடுகிறது. மழை இல்லை. விளைச்சல் இல்லை. அரசன் ஆடிப்போய் விடுகிறான். தன் தவறை உணர்ந்து இவர்களைத் தேடி வருகிறான். ஓரிரிக்கை கிராமம். அங்கு பெருமாள் தன் பரிவாரங்களோடு செளக்கியமாய் இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசன் திருமழிசையிடம் மன்னிப்பு கேட்க, குரு தன் சீடனிடம் மன்னிப்பு கேட்கச் சொல்ல, எல்லாம் ஒருவழியாய் சீர் அமைய பல்லவ நாட்டிற்கே திரும்புகிறார். பெருமாளும் திருவெஃகை கிராமத்திற்கு வந்து நின்று கொண்டே இருக்கிறார். பாயைச் சுருட்டச் சொன்னவர் விரிக்கச் சொல்ல வேண்டாமா? திருமழிசை மீண்டும் பாடுகிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#009900;"&gt;கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூகச்சி&lt;br /&gt;மணிவண்ணா நீ நிற்க வேண்டாம்&lt;br /&gt;துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தான் நீயும்&lt;br /&gt;உன் பைநாகப் பாயில் படுத்துக்கொள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று. அதன் பின் பெருமாள் படுத்துக் கொண்டார். மறந்து போய் திசைமாறி படுத்துக் கொண்டவிட்டதாக கதை. இப்பெருமாளுக்கு "சொன்னவண்ணம் செய்யும் பெருமாள்" என்று அதன் பின் பெயர் வழங்கலாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.geocities.com/knowvaishnavam/012.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருமழிசை மற்ற ஆழ்வார்களிலிருந்து மிகவும் வித்தியாசப் படுகிறார். தன் சொந்த அனுபவங்களை பதிவு செய்யாமல் அறிவு பூர்வமாக இறைமையை அணுகுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆணினோடு பெண்ணுமாகி அல்லவோடு நல்லவாய்&lt;br /&gt;ஊணோடோசை யூறுமாகி யொன்றலாத மாயையாய்&lt;br /&gt;பூணிபேணு மாயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய்&lt;br /&gt;காணி பேணும் மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;(திருச்சந்த விருத்தம் 26)&lt;br /&gt;&lt;br /&gt;என்று பாடுகிறார். இவரது சந்தங்கள் இவரை சித்தர்களோடு இனம் காட்டுகிறது. குருபரம்பரைக் கதைகள் இவர் வைணவராக மாறுவதற்கு முன் சிவவாக்கியர் என்ற பெயருடன் இருந்ததாகவும், பேயாழ்வார் இவரை ஆட்கொண்டு வைணவராக மாற்றினார் என்றும் சொல்லுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிவவாக்கியர் எப்படி பாடுகிறார்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#ff0000;"&gt;அண்ணலே அனாதியே யனாதிமுன் னனாதியே&lt;br /&gt;பெண்ணுமாணு மொன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்&lt;br /&gt;கண்ணிலாணு சுக்கிலங்கருதியோங்கு நாளிலே&lt;br /&gt;மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாற தெங்கனே&lt;br /&gt;&lt;br /&gt;நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா&lt;br /&gt;கோனதேது குருவதேது கூறிடுங் குலாமரே&lt;br /&gt;ஆனதேது அழிவதேது வப்புறத்தி லப்புறம்&lt;br /&gt;ஈனதேது ராமராம ராமவென்ற நாமமே&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அதே சந்தங்கள். அதே முறை. அதே எள்ளல். இவரேதான் அவரு, அவரேதான் இவரோ!&lt;br /&gt;&lt;br /&gt;திருமழிசையின் பிறப்பும் மர்மம் நிறைந்தாய் உள்ளது. பார்கவ முனிவர்க்கும், ஊர்வசிக்கும் பிறந்த பிள்ளை இவர் என்று குருபரம்பரை கதைகள் சொன்னாலும் பாவம், மனிதர் ரொம்ப கஷ்ட பட்டு இருக்கிறார். சாதீய கொடுமைகள் இவரை தாக்கிய வரலாறு காணக்கிடைக்கிறது. இவர் சிவ வாக்கியர் என்றால் இப்படி பாடி இருப்பார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#ff0000;"&gt;பறைச்சியாவதேதடா பணத்தியாவதேதடா&lt;br /&gt;இறைச்சி தோலெலும்பினு மிலக்கமிட்டிருக்குமோ&lt;br /&gt;பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ&lt;br /&gt;பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரு மும்முளே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பாவம் ஸ்ரீவைஷ்ணவரான திருமழிசை இப்படி யெல்லாம் பாடவில்லை. ஆனாலும் இவர் வாழ்வு மர்மம் நிறைந்தாய் உள்ளது. இவர் சிவவாக்கியர் என்பது கட்டுப்பாடற்ற ஊகம் என்று பேராசிரியர். இந்திரா பார்த்தசாரதி கருதுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;Subject: Date: Mon, 27 Oct 1997 17:18:02 +0000&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-7555619096413582611?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/7555619096413582611/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=7555619096413582611' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/7555619096413582611'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/7555619096413582611'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2008/02/016.html' title='மடல் 016: பை நாகப் பாயை சுருட்டிக் கொள்!'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-6025289982933494064</id><published>2008-02-02T09:13:00.001+09:00</published><updated>2008-12-12T15:04:04.499+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tirumangai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='acharya'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ramanuja'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nathamuni'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='manipravalam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='barathidasan'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='commentary'/><title type='text'>மடல் 017:வைணவ பரிபாஷையும், பக்தி செய்தலும்</title><content type='html'>"வியாக்யானம்" என்ற சொல்லை ஆழ்ந்து படித்து, விரிவான விளக்கம் சொல்லுதல் என்று கொள்ளவேண்டும். பாசுரங்கள் மேலோட்டமாக வெறும் கவிதைகள் போல் தெரிந்தாலும் அவை ஆழமான பொருள் கொண்டவை. பல நூல் கற்ற அறிஞர்கள் இப்பாசுரங்களுக்கு கொடுக்கும் விளக்கம் கேட்க மிக அருமையாக இருக்கும். "சும்மா" என்ற சொல்லை வைத்து நண்பர் ஜெயபாரதி எவ்வளவு சொல்லுகிறார். இதுதான் வியாக்கியானம் என்பது. ஒரு சின்ன சொல்லுக்குள் உலகத்தைக் காட்டும் செப்பிடு வித்தை!வியாக்கியானம் வாழ்வுக்கு சுவை கூட்டுவது. ரசனைக்கு விருந்து அது. வைணவ இலக்கியமான பாசுரங்களுக்கு பெரியவாச்சான் பிள்ளை என்பவர் ஆச்சர்யகரமான விளக்கங்கள் தந்துள்ளார். இதில் சமிஸ்கிருத புலமை மேலும் மெருகு கொடுக்கிறது. பல சமயங்களில் ஆவல் மிகக்கொண்டு மணிப்பிரவாளமாக இவ்விளக்கங்கள் அமைந்துவிடும் போது நாம் தடுமாறுகிறோம். எனவே எளிதான விளக்கங்கள் தேவைப் படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆச்சார்யன்" என்பதை ஆழ்ந்த புலமையுள்ள, மனிதநேயம் மிகக் கொண்ட மனிதர் என்று கொள்ள வேண்டும்.இவர்களிடம் உட்கார்ந்து பாடம் கேட்டால் அவர்கள் நடத்தையின் மூலமும், அவர்கள் அன்பின் மூலமாகவும்,அவர்கள் கற்ற கல்வியின் மூலமாகவும் பாசுரங்களின் உட் பொருள் தெரிய வைப்பர். வைணவ பரம்பரையில் இராமானுச முனி என்பவர் ஆசார்யர்களில் மேரு மலையாக நிற்கிறார். இன்று நாமெல்லோரும் இப்பாசுரங்களை வாசித்து அனுபவிப்பதற்கு இரண்டு பேர் முக்கிய காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. காலத்தால் அழிந்து போன பாசுர நூல்களை நமக்கு கிடைக்கச் செய்த நாத முனி. இவர் உ.வே.சாமிநாதையர் மாதிரி (இவர் யார் என்று கேட்டு விடாதீர்கள்!)&lt;br /&gt;&lt;br /&gt;2. தமிழ் வேதமென்ற பெரும் பொருளை நடைமுறைக்கு கொண்டு வந்து வைணவ சம்பிரதாயத்தை நிறுவி பாசுரங்களை திருமால் கொயில்களிலெல்லாம் முழங்க வைத்தவர் இராமானுசமுனி. இதை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;செய்யும் பசுந்துள பத்தொழில் மாலையும் செந்தமிழில்&lt;br /&gt;பெய்யும் மறைத்தமிழ் மாலையும் பேராத சீரரங்கத்&lt;br /&gt;தையன் கழற்கணியும் பரன் தாள் அன்றி எதாரியா&lt;br /&gt;மெய்யன் இராமானுசன் சரணேகதி வேறெனக்கே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(இராமானுச நூற்றந்தாதி 13)&lt;br /&gt;&lt;br /&gt;பசுந்துளபம் -துளசி; மறைத்தமிழ் -பாசுரம்; சீரங்கத்தையன் - ஸ்ரீரங்கத்து ஐயன் ஸ்ரீராமானுஜன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 220px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.ramanuja.org/ramanuja/ramanujapage.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ற பாடல் மூலம் அறியலாம். இவரது அன்புள்ளம் சரித்திரம் அறிந்தது. அரிய சில இரகசிய கிரந்தங்களை கற்கிறார் இராமானுசர். இவர் ஆச்சார்யன் சொல்லுகிறார், இதை யாருக்கும் பறை சாற்றக்கூடாது. தனக்குள்ளே வைத்து அனுபவிக்க வேண்டுமென்று. அடுத்த நாளே நம்ம இராமானுசர் கோயில் கோபுரத்தில் ஏறி எல்லோருக்கும் சொல்லி விடுகிறார். ஆச்சார்யனுக்கு கோபம். குரு வார்த்தையை மீறினால் நரகம் என்கிறார். அதற்கு நம் இராமானுசர் - வரும் நரகம் எனக்கு இருக்கட்டும். கேட்ட எல்லோருக்கும் சொர்க்கம்தானே என்கிறார். இந்த இரகசிய மந்திரம் என்ன?:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;pre&gt;&lt;span style="color:#3333ff;"&gt;குலந்தரும்; செல்வந் தந்திடும் அடியார்&lt;br /&gt;  படுதுயராவின வெல்லாம்&lt;br /&gt;நிலந்தரஞ் செய்யும்; நீள்விசும் பருளும்&lt;br /&gt;  அருளொடு பெருநில மளிக்கும்&lt;br /&gt;வலந்தரும்; மற்றுந் தந்திடும்; பெற்ற&lt;br /&gt;  தாயினுமாயின செய்யும்&lt;br /&gt;நலந்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்&lt;br /&gt;  நாராயணாவென்னும் நாமம்&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(பெரிய திருமொழி 9 - திருமங்கை ஆழ்வார்)&lt;br /&gt;&lt;br /&gt;இப்பாட்டை வரிக்கு, வரி உண்மையென ஆக்கிய பெருமான் இராமானுச முனி (அதை வேறொரு சமயம் பார்ப்போம்).&lt;br /&gt;&lt;br /&gt;இம்மாமனிதனிடம் மயங்காத ஆட்களே இல்லை. நம்ம பாரதிதாசன் என்ன சொல்லுகிறார் பாருங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்&lt;br /&gt;இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்&lt;br /&gt;இராமானுசனை ஈன்றதன்றோ?......"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேல்ஸ் இளவரசரை வரவேற்று கவி செய்த பாரதி, மாமுனி புரட்சித் திலகம் இராமானுசனைப் பாடாதது பெரும் குறையாகப் படுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;பேராசிரியர். சிற்பி பாலசுப்பிரமணியன் (இடதுசாரி?) வானம்பாடிக் கவி. அவர் இன்று இராமானுச காவியம் இயற்றிக் கொண்டு இருக்கிறார். முற்போக்காளர்கள் எல்லோரையும் - பெரியாரையும் சேர்த்து- கவர்ந்தவர் இராமானுச முனி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5162175443209085106" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6O7Nxi44LI/AAAAAAAAC4o/vu2WDj21vQ4/s320/Ramanuja.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய ஆச்சார்யர்கள் நல்ல தமிழ் போல் இப்போது அரிதாகிவிட்டனர் ;-)&lt;br /&gt;&lt;br /&gt;Date: Fri, 03 Oct 1997 20:23:45 +0100&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-6025289982933494064?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/6025289982933494064/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=6025289982933494064' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/6025289982933494064'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/6025289982933494064'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2008/02/018_02.html' title='மடல் 017:வைணவ பரிபாஷையும், பக்தி செய்தலும்'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6O7Nxi44LI/AAAAAAAAC4o/vu2WDj21vQ4/s72-c/Ramanuja.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-7427097887930130090</id><published>2008-02-01T17:35:00.001+09:00</published><updated>2008-07-12T12:41:19.156+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='andal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='origin of earth'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='birth of universe'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='water cycle'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tiruppavai'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='origin of matter'/><title type='text'>மடல் 018: ஆழி மழைக் கண்ணா!</title><content type='html'>&lt;div&gt;சூடிக் கொடுத்த சுடர் கொடி, பட்டர் பிரான் கோதை, அழகிய ஆண்டாள் - ஆழ்வார்களிலே கடைக்குட்டி! இவளைப் பற்றி கடைசியாக எழுதலாமென நினைத்தேன். ரா.பா ஆரம்பித்தவுடன் I could not resist my temptation. ஏனெனில் ஆண்டாள் is irresistable!! அத்தனை ஆழ்வார்களும் தன்னை நாயகியாக "நினைத்து" புலம்புவதற்கும் ஆண்டாள் தன்னியல்பால் நாயகியாக இருப்பதற்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள தொலைவுதான். அதனால்தான் ஆண்டாள் நம்மை ஆள்பவளாக உள்ளாள். அவள் விரகக் கவிகளை பின்னொரு சமயம் பார்ப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;காம்போதி ராகம் அட தாளம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;pre&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ, கை கரவேல்&lt;br /&gt;  ஆழியுள் புக்கு, முகந்து கொடார்த் தேறி&lt;br /&gt;ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து&lt;br /&gt;  பாழியந் தோளுடையப் பற்பநாபன் கையில்&lt;br /&gt;ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து&lt;br /&gt;  தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்&lt;br /&gt;வாழவுலகினிற் பெய்திடாய் நாங்களும்&lt;br /&gt;  மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்&lt;/span&gt; &lt;/pre&gt;&lt;br /&gt;(திருப்பாவை 4)&lt;br /&gt;&lt;br /&gt;பாசுரங்கள் அத்தனைக்கும் பண் உண்டு. ராகங்கள் உண்டு. இப்பாடல் காம்போதி ("கயிலை நாதனை கானத்தால் கவர்ந்த ராகம் எதுவோ பிரபோ?" - சம்பூர்ண இராமாயணம்) ராகம். எம்.எல்.வி. பாடிய திருப்பாவையோ, இல்லை அவர் சிஷ்யை சுதா ரகுநாதன் பாடிய திருப்பாவையையோ பின்னணியாகப் &lt;a href="http://www.raaga.com/channels/carnatic/movie/CL00079.html"&gt;போட்டுக் கொள்ளுங்கள்&lt;/a&gt;!&lt;br /&gt;&lt;br /&gt;ஆழி மழைக் கண்ணா! கடலின் மழையாய் உள்ள கண்ணனே, மழைக் கண்ணன். நல்ல பிரயோகம்!"நீரின்றி அமையாது உலகு" என்று வள்ளுவன் சொல்லிய படி மழை இல்லையேல் உலகம் அம்பேல். மழை உயிர்களின் ஜீவ நாடி. நம் உடலின் 90% வெறும் நீர்தான். அதனால் மழைக் கண்ணன்! கண்ணன் கருணைத்தெய்வம். கருணை மழை பொழிபவன் அதனால் மழைக் கண்ணன்! கண்ணன் முல்லைத் தெய்வம். முல்லை என்பது காடும் காடு சார்ந்த நிலமும். காடுகள் இல்லையேல் மழை இல்லை (sounds very familiar). மழை இல்லையேல் காடுகள் இல்லை. முல்லைத் தெய்வமான கண்ணனைத் தவிர மழையை வேறு யாரிடம் கேட்கமுடியும். அதனால் மழைக் கண்ணா!&lt;br /&gt;&lt;br /&gt;வேறு யாரிடம் கேட்க முடியுமா? வருணன் தானே மழைத் தெய்வம்? அப்படி நினைத்துதான் ஆயர்கள் வருணனுக்கு படையல் போட அதை கண்ணன் எடுத்துக் கொண்டான். வருணனுக்கு மகாக்கோபம் (பின்ன இருக்காதா? பந்தியில் உட்கார்ந்து சாப்பாடெல்லாம் போட்ட பிறகு, போய்யா வெளியே..என்றால்?) ஒரே மழையோ, மழை என்று பொழிந்து தள்ளி விட்டான். ஆயர்பாடி வெள்ளத்தில் மூழ்கியது. ஆயர் குலக் கொழுந்து கண்ணனால் அது தாங்க முடியுமா? முடியாது ஏன்? வார்த்தையில் இருக்கிறது இரகசியம். குலக் கொழுந்து! மரம் தண்ணீர் இன்றி வாடினால் முதலில் கருகுவது கொழுந்துதான். கண்ணன் ஆயர்களுக்கு துயர் என்றால் முதலில் வாடுபவனாக இருப்பான். அதான் அவன் அவர்களின் கொழுந்து. கண்ணன் சரிதான் போடா, என்று பக்கத்திலிருந்த கோவர்த்தன மலையைத் தூக்கி குடையாய் பிடித்து விட்டான்!மழை காத்த தெய்வமாதலால் மழைக் கண்ணன். ஆழி மழை கண்ணன் என்கிறாள் ஆண்டாள். இந்த பூமிதோன்றிய ஐந்து பில்லியன் வருடத்தில் முதல் ஒரு பில்லியன் வருடத்தில் பாதி நாள் மழைதான் பெய்ததாம். மழை பெய்து, பெய்து பூமி குளிர்ந்து போய், கடல் உருவாகி அக்கடலில் முதல் உயிர்வித்து (DNAs,Proteins and single cell organisms) தோன்றியிருக்கிறது. இம்மழை இல்லையேல் உலகில் உயிரே தோன்றியிருக்காது. எனவே தான் ஆழி மழைக் கண்ணன்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று நீ! Stop. நீதான் அந்த ஒன்று. ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்துழலும் அந்த ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;pre&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஒன்றுந் தேவும் உலகும் உயிரும்&lt;br /&gt;  மற்றும் யாதுமில்லா&lt;br /&gt;அன்று நான்முகன் றன்னொடு தேவர்&lt;br /&gt;  உலகோடுயிர் படைத்தான்&lt;br /&gt;குன்றம் போல்மணி மாடம்நீடு&lt;br /&gt;  திருக்குருகூரதனுள்&lt;br /&gt;நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத்&lt;br /&gt;  தெய்வம் நாடுதிரே&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(நம்மாழ்வார் திருவாய் மொழி)&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிப்பிரான். அதனால் ஒன்று நீ!&lt;br /&gt;&lt;br /&gt;கைகரவேல் - கைவிட்டு விடாதே அப்பா! கரவு என்றால் ஏமாற்றுதல் என்று ஒரு பொருள். வானம் பாத்த பூமியாய் எங்களை ஏமாற்றி விடாதே அப்பா! மழையைத் தா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஆழியுள் புக்கு, முகந்து கொடார்த் தேறி&lt;br /&gt;ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்த இரண்டு வரிகளில் ஆண்டாள் தன் அறிவியல் மேதமையைக் கோடி காட்டுகிறாள். ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரைக்கு பக்கம். கொஞ்சம் semi arid area. கரையான் (பாம்பு) புத்துக்கள் அதிகம், கடற்கரை அல்ல. இங்கு உட்கார்ந்து கொண்டு இந்தப் பெண் நீரின் சுழற்சி பற்றி சூழலியல் பாடம் தப்பாமல் சொல்கிறாள். ஆழியில் புகுந்து - அதாவது கடலுக்குப் போய், முகந்து - நீரை வாங்கி; கொடார்த்தேறி - கடலிலிருந்து நிலத்திற்கு கொண்டு வந்து தருகிறதாம் மேகங்கள். எப்படி மழை தருகின்றனவாம்? பராக்கிரமம் உடைய பத்மநாபன் தோளில் இருக்கும் சக்கிரம் மின்னுவது போல் மின்னி (அதாவது மின்னல் அடித்து), வலம்புரிச் சங்கு அதிர்வது போல் - அதாவது பாரத மகா யுத்தத்தில் பாஞ்சசன்னியம் என்ற கண்ணனின் சங்கு ஊதியவுடன் பாதிப் படை அந்த அதிர்வில் செத்து விழுந்ததாம்(super sonic waves)- இடி, இடித்து, சார்ங்கம் என்ற வில்லில் இருந்து புறப்படும் அம்புகள் போல் மழை சாரை, சாரையாக பொழியுமாம். வாவ்...என்ன வர்ணனை. எப்படி இழைக்கிறாள் பாருங்கள் உவமைகளை. ஆண்டாள் வெறும் மூடநம்பிக்கையுடன் கண்ணனை வழிபட்டாள் என்று இருந்திருந்தாள், ஆமாம்,ஏதோ மழை பெய்கிறது! பகவான் வானத்திலிருந்து கொட்டுகிறான் என்று எழுதி விட்டு போயிருப்பாள். இவ்வளவு கச்சிதமாக எந்தப் பிழையுமின்றி ஒரு அறிவியல் உண்மையை பின்னிப் பினைந்து அறிவும் தெய்வமும் ஒன்று (ஒன்று நீ) என்று எடுத்துக் காட்டுவது நம் முன்னோர்களின் (எந்தையும், தாயும் மகிழ்ந்துகுலாவி இருந்ததும் இந்நாடே, இதை வந்தனை கூறி, மனதில் இருத்தி, என் வாயுற வாழ்த்தேனோ!) திறம்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தோடு நின்றால் தேவலை! கண்ணனை "ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து" என்று ஒரு உவமை கொடுத்து ஒரு போடு போடுகிறாள். கார் மேகன், கொண்டல் வண்ணன், மேக வண்ணன் என்று மற்ற ஆழ்வார்கள் சொல்வது போல் கரிய நிறமுடைய கண்ணனை உவமை படுத்தி விட்டுப் போகாமல் ஆண்டாள் ஊழி முதல்வன் என்று சொல்வானேன்? ஆண்டாளுக்கு ஊழிக்கு முன்னிருந்த நிலமை பற்றி என்ன தெரியும்? ஊழிக்கு முன் கருமை ஏன் இருக்க வேண்டும்? எல்லோரும் கடவுளை ஜோதி, ளி, சூரியக் கோடிப்பிரகாசன் என்றெல்லாம் சொல்லும் போது இவள் கடவுள் ஊழிக்கு முன்னிருந்த கருமை என்கிறாள்.இப்பிரபஞ்சம் முழுவதற்கும் ஆராதமாக ஒரு கருஞ்குழி (black hole) இருப்பதாக அறிவியல் சொல்கிறது. நம் பால்வெளி (milky way galaxy) அண்டத்தின் அச்சு இப்படியொரு கருங்குழிதான் என்றும் சொல்கிறார்கள். இக்கருங்குழியின் அடர்த்தியோ மகா பெரிது. மெலிதினும் மெலிதான ஒளிக்கீற்று கூட இதைத்தாண்டி போக முடியாத வண்ணம் இவ்வடர்த்தி விழுங்கிவிடுகிறதாம். இவ்வுண்மைகளை ஆய்ந்த பேரா.சந்திரசேகருக்கு நோபல் பரிசு கிடைத்தது. இவரின் மாமா, வானம் ஏன் நீலமாக இருக்கிறது என்று சொல்லி நோபல் பரிசு பெற்றார் (சர்.சி.இராமன்). இவர் ஆழ்வார்களைப் படித்தாரா என்று தெரியவில்லை. கண்ணன் நீல வண்ணன். வானம் நீலமாக இல்லாமல் பின் எப்படி இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.coseti.org/images/m31.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.coseti.org/images/m31.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இக்கருஞ்குழியில் விழும் தகவல் என்ன ஆகிறது என்பது பெரிய ஆராய்ச்சி. பருப்பொருளின் நிலைத்த தன்மை என்ற விதியை வைத்தால் (conservation of mass) எந்தப் பொருளும் பிரபஞ்சத்திலிருந்து மறைவதில்லை (ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்து...நம்மாழ்வார்). எனவேகருங்குழியில் விழும் ஒளி (ஒளி என்பது தகவல்) வேறொரு அண்டத்தில் மீண்டும் தோன்றுமாம். இப்படி ஒரு பிரபஞ்சத்திலிருந்து ஒரு பிரபஞ்சமாக விரிந்து கொண்டு இருக்கிறதாம் படைப்பு. இதைப்பார்த்துவிட்டுதான் யசோதை அப்படியோ மயங்கி விழுந்துவிட்டாள். கண்ணனின் விஸ்வரூப தரிசனம்பார்த்த பார்த்தன் மெய் மயங்கி "அண்ணலே, இது போதும் இனித் தாங்காது என்றான். கீதைக்கு விளக்கம் எழுதிய மகாகவி பாரதி சொல்கிறான்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cd/Black_Hole_Milkyway.jpg/750px-"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cd/Black_Hole_Milkyway.jpg/750px-" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சூரிய கோளங்கள் ஒன்றோடொன்று மோதித் தூளாகின்றன. இவையனைத்தும் புதியன புதியனவாகத் தோன்றுகின்றன. கோடிப் பொருள்கள் - கோடியா? ஒரு கோடியா? கோடி கோடியா? கோடி, கோடி,கோடி, கோடி, கோடி, கோடி, கோடி, கோடி, கோடி, கோடி, கோடியா? அன்று. அநந்தம். எண்ணத் தொலையாத பொருள்கள் க்ஷணந்தோறும் தோன்றுகின்றன. எண்ணத் தொலையாத பொருள்கள் க்ஷணந் தோறும் மடிகின்றன. எல்லாம் கடவுளுக்கு ஒரே மாதிரி. சலித்தல் அவருடைய இயல்பு. அவருடைய சரீரமாகிய ஜகத் ஓயாமல் சுழன்று கொண்டிருத்தல் இயற்கை. இதனால் அவருக்கு அசைவில்லை. அவருக்கு அழிவில்லை.&lt;/span&gt; (பகவத் கீதை-உரை விளக்கம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d4/Keplers_supernova.jpg/600px-"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d4/Keplers_supernova.jpg/600px-" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக பிரபஞ்சத்தின் ஆதியுரு கருமை என்று தெரிகிறது. அது சரி, எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாளுக்கு இது எப்படி தெரிந்தது என்பதுதான் கேள்வி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை&lt;br /&gt;பாடியருளவல்ல பல்வளையாய் - நாடிநீ&lt;br /&gt;வேங்கடவற்கென்னை விதி என்ற இம்மாற்றம்&lt;br /&gt;நாங்கடவா வண்ணம் நல்கு.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உய்யக்கொண்டார் சொல்லும் "இம்மாற்றம்" நம்முள் நிகழ....ஆண்டாள் திருவடிகளே சரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;Date: Sun, 09 Nov 1997 17:02:07 +0100&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-7427097887930130090?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/7427097887930130090/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=7427097887930130090' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/7427097887930130090'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/7427097887930130090'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2008/02/018.html' title='மடல் 018: ஆழி மழைக் கண்ணா!'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-9143406795354675509</id><published>2008-01-31T18:04:00.001+09:00</published><updated>2008-12-12T15:04:04.961+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='modern poetry'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='thondaradipodi'/><title type='text'>மடல் 019: ஊமையின் கனவு</title><content type='html'>பாசுர மடல்கள் ஆழ்வார் மனதைப் புரிந்து கொள்ளவும், ஆழ்வார்களை நம்மிடம் கிட்டே கொண்டு வரவும், பாசுரங்கள் மூலமாக அவர்கள் தமிழுக்கு செய்திருக்கும் சேவைகளை அறிந்து கொள்ளவும் வருகின்றன. ஆழ்வார்களை உயர்ந்த பீடத்தில் வைத்து நம்மிடமிருந்து பிரித்து மரியாதை செய்வதைவிட ஆழ்வார்கள் எப்படி கண்ணனை சகியாக வைத்தார்களோ அதே போல் ஆழ்வார்களை நம் உற்ற தோழர்களாகக் காண்பதே மேல். ஒண்ணு மண்ணா இருப்பதில் உள்ள சுகமே தனி!&lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர் 13 தேதி ஒரு பாடல் இணையத்தில் உலா வந்தது. அது:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இளங்சிறாராய் இன்புற்றுத் துள்ளியோடி&lt;br /&gt;இளைஞராய் இளமங்கை இணைமார்புக்கேங்கி&lt;br /&gt;இங்குற்றோர் சொர்க்கமென இணைந்தனுபவித்து&lt;br /&gt;இங்குமங்குமோடித் தேடித்தேடிப் பொருள் சேர்த்தே&lt;br /&gt;இங்கோர் பாதிநாள் கடந்தபின்&lt;br /&gt;படுத்தெழுந்தோர் பாதியிரவில்,&lt;br /&gt;சற்றுமோர் சிந்தையின்றி&lt;br /&gt;உண்டுகூடிக் களித்துறங்கும்&lt;br /&gt;உற்றதொரு விலங்காய் வாழவே&lt;br /&gt;உதித்தேனோ என்ற எண்ணம் உந்த&lt;br /&gt;உணர்வார் தம் உள்ளத்தேடலை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று முடிந்தது. இப்பாடலில் ஒரு ஆழ்ந்த துக்கமும், தேடலும் தொக்கி நிற்கின்றன. பாலகனாய் துள்ளியோடிய நாட்கள், பின் பெண் பிள்ளைகள் மார்புக்காய் ஏங்கி நின்ற நாட்கள், பின் பெண் தரும் கலவையே (sex) சொர்க்கமென்று இருந்த நாட்கள், காசு, காசு என்று அலைந்த நாட்கள் இப்படி வாழ்வில் பாதிநாள் கழிந்த ஓர் இரவில் சட்டென ஒரு சிந்தனை, அட சேய்! இதுக்கா நான் பிறந்தேன்? கேள்வி ஆன்மீகத்தில் முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தேடல் பொதுவாய் 40-50ல் இருக்கும் புகலிட தமிழரிடம் ஓங்கி நிற்கும். வாழ்வு வெளியிலும், உள்ளம் தமிழகத்திலும் நிற்கும். என்றாவது ஒருநாள் அங்கு நிரந்தரமாய் போய் நிற்பேன் என்ற ஏக்கம். தாயைப் பிரிந்த சேய் மனது! இந்த உணர்வை நம்மில் பலர் அனுபவித்து இருக்கக்கூடும். துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து வாசிக்கலாம்! யாழும், பெண்ணும் துணைக்கு இல்லாவிடில் நம் துக்கத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளலாம். இவர் ஒரு கதை சொல்ல, அவர் ஒரு கதை சொல்ல கொஞ்ச நேரத்தில் துக்கத்தின் கனம் குறைந்து விடும். இந்த துக்கம் - கவிதை எழுதிய எல்.ஏ.சுவாமிநாதனுக்கு மட்டும் சொந்தமா? இல்லை இத்தகைய மனோநிலை ஆழ்வார்களுக்கும் வந்திருக்கிறதா? ஆழ்வார்களையே கேட்போம்:&lt;br /&gt;&lt;br /&gt;தொண்டரடிப் பொடியாழ்வார் தம் திருமாலை 3ம் பாடலில் இத்தயை மனோநிலையை&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6JReBi44JI/AAAAAAAAC4Y/Iwe0lDr0x8U/s200/baby_elep.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5161777699172704402" /&gt;வெளிப்படுத்துகிறார். அதாவது வேதநூல் பிரகாரம் நமக்கு நூறு வயது. அதில் பாதி உறக்கத்தில் போய்விடுகிறது. மீதி ஐம்பது ஆண்டு. அதில் ஒரு பெரும் பகுதி பால பருவத்தில் போய்விடுகிறது (உலகில் உள்ள உயிரினங்களில் மிக அதிக பால பருவம் உள்ள உயிரினம் மனிதர்கள்தாம். பதினெட்டு வயது வரை பால் வடியும் முகத்துடன் அம்மா தலைப்பை பிடித்துக் கொண்டு அலையும் ஒரே உயிரினம் மனிதர்கள்தாம்:-). மீதி உள்ள நாள்களில் காய்ச்சல், கடுப்பு, பசி என்று. கடைசி நாட்கள் மூப்பில் போய்விடுகிறது. அடடா! இடையில் உள்ள நாட்களில் நாம் என்ன செய்தோம்? பொண்ணு பிண்ணால ஓடறது (பெண் வாசகர்கள் ஆண்கள் பின்னால் என்றும், ஓரினப் புணர்ச்சியுடையோர் அந்தந்த இனத்தின் பின்னால் என்றும் திருத்திவாசிக்கவும்) அப்புறம் கல்யாணம், கார்த்திகை, காசு, உறவு இப்படி... உற்றதொரு விலங்காய் வாழவே உதித்தேனோ என்ற எண்ணம்...இதுவும் சிலருக்கு வருகிறது, பலருக்கு வருவதில்லை. இதை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;pre&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வேதநூற் பிராயம் நூறு&lt;br /&gt;  மனிசர்தாம் புகுவரேலும்&lt;br /&gt;பாதியும் உறங்கிப் போகும்&lt;br /&gt;  நின்றதில் பதினை யாண்டு&lt;br /&gt;பேதை பாலகன தாகும்&lt;br /&gt;  பிணிபசி மூப்புத் துன்பம்&lt;br /&gt;ஆதலால் பிறவி வேண்டேன்&lt;br /&gt;  அரங்கமா நகருளானே&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொல்கிறார் தொண்டர் அடிப்பொடி. அதே சிந்தனை!&lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட இன்னும் உருக்கமாகச் சொல்கிறார் திருமங்கை ஆழ்வார். ஏக்கங்கள் நிறைந்த நம் வாழ்வை ஊமை கண்ட கனவு என்கிறார். ஊமை கானும் கனவை அவனைத் தவிர வேறு யாரிடமும் சொல்லக் கூட முடியாது. இதில் தொனிக்கும் தனிமையும் கழிவிரக்கமும் சொல்லில் வடிக்க முடியாது. தனிமையை அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும். வெறும் ஊமைக்கனவு என்று சொல்லி விட்டுப் போனாலும் பரவாயில்லை. ஊமை கண்ட கனவும் பழுதானால்? என்ன கொடுமை ஐயா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;pre&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சேமமே வேண்டித் தீவினை பெருக்கித்&lt;br /&gt;  தெரிவைமார் உருவமே மருவி&lt;br /&gt;ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய்&lt;br /&gt;  ஒழிந்தன கழிந்அந் நாள்கள்&lt;br /&gt;காமனார் தாதை நம்முடை யடிகள்&lt;br /&gt;  தம்மடைந் தார்மனத் திருப்பார்&lt;br /&gt;நாமம்நா னுய்ய நான் கண்டு கொண்டேன்&lt;br /&gt;  நாராயணாவென்னும் நாமம்&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(திருமங்கை ஆழ்வார் - பெரிய திருமொழி -3)&lt;br /&gt;&lt;br /&gt;"உற்றதொரு விலங்காய் வாழவே உதித்தேனோ என்ற எண்ணம்!" இங்குதான் ஆரம்பமாகிறது ஆன்மீகத் தேடல். இந்த முற்றுப் பெறாத தேடலில் பல உணர்ச்சிகரமான கட்டங்கள் உண்டு. ஊர், ஊராய் அலையும் மக்கள் சொல்லலாம் ஊரிலேன் (இது ஈழச் சகோதரர்களுக்கு மிகவும் பொருந்தும்); காணியில்லை - எனக்கென்று சொந்தமாக நிற்பதற்கு இடமில்லை. உறவு என்று கொண்டாடுவதற்கு யாரும் இல்லை. வாழ்வில் பற்றுவதற்கு ஒன்றுமில்லை. காசு, காசு என்ற அலைந்தாலும், பட்டிணத்து அடிகள் சொன்னது போல் காதறந்த ஊசியும் கடைசி வரை வாராதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6JRwxi44KI/AAAAAAAAC4g/CCYmtfsmbZ8/s320/dawn-s.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5161778021295251618" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;pre&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஊரிலேன் காணியில்லை&lt;br /&gt;  உறவுமற் றொருவரில்லை&lt;br /&gt;பாரில்நின் பாத மூலம்&lt;br /&gt;  பற்றிலேன்; பரமமூர்த்தி&lt;br /&gt;காரொளி வண்ண னே! என்&lt;br /&gt;  கண்ணனே கதறு கின்றேன்&lt;br /&gt;ஆருளர் களைகணம்மா!&lt;br /&gt;  அரங்கமா நகருளானே!&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(தொண்டரடிப் பொடியாழ்வார் - திருமாலை -29)&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணனே கதறுகிறேன் என்கிறார். என் துயர்களை களைவார் யார் உளர், அம்மா? என்றும் வினவுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இம்மாதிரி சுயவிசாரணை ஆரம்பிக்கும் போது உள்ளத்தின் கசடுகள் பல வெளியே வரும். பாலைக் கடையும் போது வெண்ணய் திரண்டு மேலே வருவது போல். அதன்பின் மனது எளிதாகிவிடும். பின்வரும் ஆழ்வாரின் அனுபவம் போல்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;pre&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மனத்திலோர் தூய்மை யில்லை&lt;br /&gt;  வாயிலோர் இன் சொலில்லை&lt;br /&gt;சினத்தினால் செற்றம் நோக்கித்&lt;br /&gt;  தீவிளி விளிவன்; வாளா&lt;br /&gt;புனத்துழாய் மாலை யானே!&lt;br /&gt;  பொன்னிசூழ் திருவரங்கா&lt;br /&gt;எனக்கினி கதியென் சொல்லாய்?&lt;br /&gt;  என்னையா ளுடைய கோவே!&lt;/span&gt; &lt;/pre&gt;&lt;br /&gt;(திருமாலை 30)&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இனி கதி என்ன? என்ற கேள்வி எப்போதாவது வரும் போது ஆழ்வார்களுக்குள் வாருங்கள். அங்கு பதில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;Date: Sun, 16 Nov 1997 20:50:16 +0100&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-9143406795354675509?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/9143406795354675509/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=9143406795354675509' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/9143406795354675509'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/9143406795354675509'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2008/01/019.html' title='மடல் 019: ஊமையின் கனவு'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6JReBi44JI/AAAAAAAAC4Y/Iwe0lDr0x8U/s72-c/baby_elep.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-4734744346221458558</id><published>2008-01-30T13:46:00.001+09:00</published><updated>2008-12-12T15:04:05.410+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='krishna consciousness'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='barathi'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ramanuja'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='agam poetry'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='meera'/><title type='text'>மடல் 020: கண்ணனுக்கே ஆமது காமம்!</title><content type='html'>சூடிக் கொடுத்த சுடர்கொடி கோதை நாச்சியாரின் (ஆண்டாளின்) மனதைப்புரிந்து கொள்ள வேண்டுமெனில் வைணவத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் முதலில்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய மண்ணில் பல்வேறு தத்துவங்கள் செழித்து வளர்ந்திருக்கின்றன. வீடு பேறு என்ற நோக்கை குறித்ததாக அவை அமைந்தாலும் அதனதன் வழிகள் பெரிதும் வேறுபட்டு அமைகின்றன. இவ்வழிகள் எவ்வளவு வேறுபட்டவை எனக் கேட்டால் கடவுள் இல்லை என்பதிலிருந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனச் சொல்லும் வகையில் வேறுபட்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;சாக்கியர்கள் இயற்கைவாதிகள். கடவுள் என்ற கருத்து அவசியமில்லை என்பவர்கள். இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா, உனது எனது என்பதெல்லாம் இடையில் வந்த பந்தமடா! என்று சொல்லி கடவுளையும் அதில் சேர்த்து விடுகின்றனர்!! சூன்யவாதிகள், - "ஆதியாம் சிவனும் அவன் சோதியான சக்தியும்தான், அங்குமிங்கும் எங்குளவாகும், ஒன்றேயாகினால் உலகனைத்தும் சாகும்" - போன்ற கருத்துக்கு அவசியமில்லை, படைப்பு என்பது சூன்யத்திலிருந்து வருகிறது, எனவே கடவுள் &lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6AFdhi44EI/AAAAAAAAC3Y/szvxZq1_uKU/s200/telungana_women.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5161131177745637442" /&gt;அவசியமில்லை என்று சொல்லுகிறார்கள். பின் சடங்குமயமான வேதக் கடவுளர். பலியும், படையலும் வேண்டும் தேவதா உபாசனைகள்! சமணர்கள், - இவர்கள் வாழ்வு ஐம்புலச் சேட்டையால் அலைக்கழிக்கப்படுகிறது அதனால் புலனை அடக்கு என்று சொல்லி கொடூர தபசை வலியுறுத்துகின்றனர். ஒரு ஈய்க்கு கூட தீங்கு செய்யக்கூடாது என்று சொல்லி கையில் துடப்பமும் கையுமாக இருக்கச் சொல்பவர்கள் இவர்கள். பின், பெளத்தம். புத்தர் கடைசிவரை கடவுளைப் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லவே இல்லை. இருப்பு என்பதே புரிந்து கொள்ளமுடியாத சிக்கலாக இருக்கும் போது கடவுள் என்ற கவலை எதற்கு என்று சொல்லிவிட்டார். தக்ஷிணாமூர்த்தியின் அவதாரமாக உதித்த சங்கரரின் அத்வைதம் ஐன்ஸைடைனின் சார்புடைமை தத்துவம் போல் பலருக்கு புரியாமலே போய்விட்டது (காஞ்சிப் பெரியவர் அருளிய "தெய்வத்தின் குரல்" புத்தகம் வாசித்தால் புரியும் இது எவ்வளவு சிக்கலான விஷயம் என்று. புரிவது மாதிரி இருக்கும், அடுத்த பக்கம் முடிந்தவுடன் முதல் பக்கத்து விஷயம் தலையைக் குழப்பும்:-) இத்தனை பகுத்தறிவான போக்குகளின் இடையில் சிக்கித் தவித்தது ஒரு ஆயிரம் ஆண்டுக்கு முந்திய இந்தியா. இச்சிக்கலிலிருந்து முளைக்கிறது வைணவம். பாசியும், களியும் நிறைந்த குளத்திலிருந்து தாமரை பூப்பது போல்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதைய இந்தியப் பாமரனுக்கு சமணர்கள் போல் திகம்பரர்களாக காட்டில் அலைந்து வீடு பெறுவதா? இல்லை புத்தம், சரணம், கச்சாமி என்று சொல்லி துறவறம் கொள்வதா? இல்லை சங்கரர் சொல்வது போல் உலகே மாயை என்று வாழ்வில் பற்று இல்லாமல் இருந்து வீடுபேறு பெறுவதா? இல்லை சாக்கியர்கள் சொல்வது போல் வீடு பேறு என்பதையே விட்டு விடுவதா? என்ற பெரிய குழப்பம்! மொத்தத்தில் வாழ்வின் பொருள் தெரியாமல், அதை முறையாக இரசிக்கத் தெரியாமல் குழம்பிப் போய் இருந்தான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக இந்திய சமயச் சிந்தனையை நான்கு குறிக்கோள்களாகக் கொள்ளலாம். அறம், பொருள், இன்பம், வீடு என்பன அவை. அறமென்பதை வள்ளுவன்: மனத்துக்கண் மாசு இல்லாமல் இருப்பது என்கிறான். இதை தர்மம் என்பர் பெரியோர். பொருள் என்பதை: அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்ற உண்மையால் அறியலாம். இன்பம்: அனிச்ச மலர்களும், அன்னப்பறவையின் இறகும் மாதர்தம் கால்களுக்கு நெருஞ்சிப் பழம் - என்று பாடும் மயக்க நிலை. இதை காமம் என்பர். கடைசியாக வீடு - சரிதான் இவ்வளவுதான் வாழ்வா? இதுக்கா இந்த பாடுபட்டேன்? என்ற கேள்வி கேட்டு, வாழ்வை நேர் கொண்டு அதன் உட்பொருள் அறிதல். இதை மோட்சம் என்பர். இந்த நான்கு புருஷார்த்தங்களில் சிறப்பானது எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு வீடு பேறு என, புத்தகம் படிக்கத் தெரிந்த குழந்தை கூடச் சொல்லும். ஆனால்....&lt;br /&gt;&lt;br /&gt;காமம் என்கின்றனர் வைணவர்கள்!!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிச் சொல்வது யார்? துறவிகளின் அரசன் (யதி ராஜா) என்றழைக்கப்படும் இராமானுஜர்!&lt;br /&gt;&lt;br /&gt;இராமானுச நூற்றந்தாதியில் வரும் பாடலைப் பாருங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சேமநல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற்&lt;br /&gt;காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே&lt;br /&gt;ஆமது காமம் அறம்பொருள் வீடிதற் கென்றுரைத்தான்&lt;br /&gt;வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண்மிசையே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(திருவரங்கத்து அமுதனார் - இராமானுச நூற்றந்தாதி-40).&lt;br /&gt;&lt;br /&gt;காமம்தான் அறம், பொருள், வீட்டைக் காட்டிலும், சிறந்தது. இந்த மூன்றுமே காமத்திற்காகத்தான் இருக்கின்றன என்று சொல்லிவிட்டு, அக்காமம் கண்ணனை நோக்கியதாக இருக்கட்டும் என்று முடிக்கிறார். அதாவது கண்ணனுக்கே ..ஆம்..அது காமம் என்கிறார்! இதை எப்படி புரிந்து கொள்வது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6AExhi44DI/AAAAAAAAC3Q/uR8NfTTrWkM/s200/flower.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5161130421831393330" /&gt;மீரா இராஜ போகத்தை விட்டு விட்டு பிருந்தாவனதாரியான கண்ணனின் மேல் மையக்காதல் கொண்டு இராஜஸ்தானிலிருந்து கால் நடையாக பிருந்தாவனம் வந்து சேர்கிறாள். பிருந்தாவனத்தில்தான், தான் சிறு குழந்தையாக இருக்கும் போது கண்ணன் விக்கிரகத்தைக் கொடுத்து இக்காதலில் ஈடுபடுத்திய துறவியும் இருப்பதை அறிகிறாள். அவரைக் காண ஆவலுடன் விரைகிறாள். வாசலில் நின்ற சீடர்கள், என்ன விஷயம் எனக் கேட்டு பின் சொல்கின்றனர், "அம்மா, துறவி பெண்களைக் கண்ணாலும் பார்ப்பதில்லை, அதனால் உன்னைப் பார்க்கமாட்டார்" என்று!&lt;br /&gt;&lt;br /&gt;மீராவிற்கு துக்கத்தையும் விட, நகைப்பு வருகிறது. சீடர்களைப் பார்த்து சொல்கிறாள், கண்ணன் வாழும் பிருந்தாவனத்தில் தன்னை ஆண் என்று சொல்லும் உங்கள் தலைவரை நினைத்தால் சிரிப்பு வருகிறது. பிருந்தாவனத்தில் ஒரே ஆண் பிள்ளை கண்ணன்தான், மற்ற எல்லோரும் கோபிகைகள்தானே! என்று. இதைக் கேட்ட துறவி இதன் பொருள் புரிந்து ஓடிவந்து மீரா காலில் விழுகிறார். இது வைணவ நோக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இது மிகப் பண்டைய தமிழ் பக்தி நோக்கும்தான். இதை வளர்த்து எடுத்தவர்கள் ஆழ்வார்கள், பின் அதை உலகரியச் செய்தவர் ஸ்ரீராமானுஜர். நாம் முன்னைய மடல்களில் பார்த்தோம், பக்தி இலக்கியம் என்பது காதலன்-காதலி அன்பைச் சொல்லும் நிலையிலிருந்து வளர்ந்து இறைவனை நாயகனாக வைத்து, ஜீவர்களை காதலியாக வைத்து மானுட ஊற்றில் தேங்கும் அன்பு என்னும் உணர்வை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கச் செய்வது என்று. காதல் இனிது என்பான் பாரதி. இந்த இனிப்பை என்றும் தக்க வைத்துக் கொள்ளும் ஒரு வழிதான் பக்தி. காதல் உணர்வில் ஏக்கம் முக்கியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;pre&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில்&lt;br /&gt;  செண்பகத் தோட்டத்திலே&lt;br /&gt;பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே&lt;br /&gt;  பாங்கியோ டென்று சொன்னாய்&lt;br /&gt;வார்த்தை தவறி விட்டாய் - அடீ கண்ணம்மா&lt;br /&gt;  மார்பு துடிக்குதடீ&lt;br /&gt;பார்த்தவிடத்திலெல்லாம் - உன்னைப்போலவே&lt;br /&gt;  பாவை தெரியுதடீ! &lt;/span&gt;&lt;/pre&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு ஏக்கம் துடிக்கும் வரிகள்! மார்பு துடிக்கும் வரிகள். இதுதான் காதலின் சுகமான சோகம்! மானுடக் காதலில் ஒரு நிலையில் ஏங்கும் பொருள் கிடைத்து விடுகிறது. அப்புறம், காதல் கசந்து விடுகிறது. அதனால் வைணவர்கள் - கண்ணனுக்கே ஆமது காமம் - என்று வைத்தனர். இதன் சூட்சுமத்தை விளக்குவது கொஞ்சம் சிக்கல், பாரதி இதை இப்படி புரிந்து கொள்கிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;pre&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆசை முகம் மறந்து போச்சே - இதை&lt;br /&gt;  ஆரிடம் சொல்வேனடி தோழி?&lt;br /&gt;நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்&lt;br /&gt;  நினைவு முகம் மறக்கலாமோ?&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணன் முகமறந்து போனால் - இந்தக்&lt;br /&gt;  கண்களிருந்தும் பயனுண்டோ?&lt;br /&gt;வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி&lt;br /&gt;  வாழும் வழியென்னடி தோழி?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நினைவு முகம்! என்ன வார்த்தை! இச்சொற்பிரயோகம் தமிழின் உரைநடை வழிகாட்டிகளில் ஒருவரான லா.ச.ராமாமிருதத்தை பயித்தியமாய் அடித்திருக்கிறது. நினைவு முகம் மறத்தல்? இந்த உள்ளத்து அனுபவம் உண்டா நண்பர்களே?&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணப் படமும் இல்லை கண்டாய் - தோழி என்கிறார். அது சரிதான், கண்ணனின் வண்ணப்படத்தை வரைந்தவர் யார்? இக்கவிதையால் வைணவத்தில் சொல்லும் காதலை ஒருவாறு புரிந்து கொள்ள முடிகிறது (முடிகிறதா? ..மன்னிக்க நான் சாதாரணன். இவ்வுணர்வுகளை என்னால் வார்த்தைப்படுத்த முடியவில்லை).&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வைணவர்கள் முன் வைக்கும் இக்காதல் நோக்கில் பெரிய சமூக நன்மை மறைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று, கண்ணன்தான் ஒரே ஆண், மற்ற எல்லோரும் பெண் பிள்ளைகள் என்னும் போது நமக்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகள் அர்த்தமில்லாமல் போகின்றன. இக்கருத்தைத்தான் திருமூலரும் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்கிறார். நாம் எல்லோரும் ஒரே குலம். தேவன் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு, இப்படிச் சொல்வதால் இப்போது அமெரிக்காவில் பிரபலமாகிவரும் &lt;a href="http://www.promisekeepers.org/"&gt;Promise Keepers &lt;/a&gt;போன்ற ஆண் ஆதிக்க இயக்கங்களின் தேவைகள் இல்லாமல் போய்விடுகிறது. இவர்கள் விவிலிய வாக்கு என்று சொல்லி ஆண் ஆதிக்கத்தை நிலைப்படுத்த முனைகின்றனர். இது வைணவத்தில் அவசியமில்லை. அங்கு ஆண் பிள்ளைகள் இருந்தால்தானே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6AEThi44CI/AAAAAAAAC3I/3tdAY9oJeFQ/s200/gender.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5161129906435317794" /&gt;மூன்று, கண்ணனுக்கே ஆமது காமம் - என்று சொல்லிவிடுவதால் பெண் பிள்ளைகளுக்கு நினைத்து பார்க்க முடியாத சுதந்திரம் கிடைத்து விடுகிறது. இதை முழுமையாய் அனுபவித்தவர்கள் ஆண்டாளும், மீராவும்தான். ஆண்டாளின் தைர்யம் அவள் பாடல்களில் தெரிக்கிறது. அதை பிறகு பார்ப்போம். ஆக, வைணவர்கள்தான் ஒருவகையில் பெண் விடுதலையின் ஆரம்ப கர்த்தாக்கள் என்று தெரிகிறது. இது ஆண் மேலாதிக்கசமுதாயத்தில் பெரிய புரட்சிதான். அதனால்தான் வைணவம் சைவம் பிரபலமான அளவுக்கு பிரபலமாகவில்லை என்று தோன்றுகிறது;-)&lt;br /&gt;&lt;br /&gt;தனது அகங்காரத்தை விட்டு தனக்கும் மேலுள்ள ஒரு சக்தியிடம் காதல் கொள்வதென்பது மிக, மிக விசாலமான மனதை உடையவர்களால்தான் முடியும். அவ்விசாலமான மனது வந்துவிட்டால் தனது சகியும் இத்தேடலில் பங்கு கொள்ளும் தோழியாகவே படும். அப்போது ஆண் மேலாதிக்கம் என்பது வருவதற்கு வாய்ப்பு இல்லை. சாதீய கட்டுப்பாடும், ஆண் மேலாதிக்கமும் கொண்ட இந்தியா போன்ற இருகிப் போன நாட்டில் "கண்ணனுக்கே ஆமது காமம்" என்பது கவிதை (தத்துவ) அளவிலேயே நிற்பதுதான் நிதர்சனமான உண்மை!&lt;br /&gt;&lt;br /&gt;Date: Sun, 23 Nov 1997 21:21:01 +0100&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-4734744346221458558?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/4734744346221458558/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=4734744346221458558' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/4734744346221458558'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/4734744346221458558'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2008/01/021_30.html' title='மடல் 020: கண்ணனுக்கே ஆமது காமம்!'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R6AFdhi44EI/AAAAAAAAC3Y/szvxZq1_uKU/s72-c/telungana_women.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-6051670999317933642</id><published>2008-01-27T10:37:00.001+09:00</published><updated>2008-12-12T15:04:06.458+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='periyazvar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='andal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tiruppavai'/><title type='text'>மடல் 021 -சின்னஞ்சிறு கிளியே!</title><content type='html'>செங்கண் மால் வண்ணத்தில் நிலம். சிறு குன்றுகளும், நீரோடைகளும் பாயும் பிரதேசம். அங்கங்கே கரையான்கள் புத்து கட்டி பாம்புகளுக்கு வாடகை விட்ட புத்தூர் கிராமம். விஷ்ணு சித்தர் என்ற அந்தணர் தோட்டத்தில் பாத்தி கட்டிக் கொண்டு இருக்கிறார். துளசிச் செடிகள் சீராய் வளர்ந்து நிற்கின்றன.பவள மல்லியும், முல்லையும் கொட்டிச் சிதறி நந்தவனத்தை சுகந்தமாக்கி நிற்கின்றன. துளசி பறிக்க பாத்தி விட்டு பாத்தி தாண்டும் போது விஷ்ணு சித்தர் கண்களில் செளந்தர்யமான குழுந்தையொன்று கண்ணில் படுகிறது. நில மகள் அவதாரம் போல் அது சிரித்துக் கொண்டு மண்ணில் கிடக்கிறது. கரு,கரு வென்று கூந்தல். சுருள், சுருளாக முடி. சின்னஞ்சிறு கிளியே என் கண்ணம்மா என்று கையில் எடுத்து உச்சி முகர்ந்து, என் "கோதைக் கண்ணே" என்கிறார் பட்டர். தமிழுலகிற்கு கோதை நாச்சியார் அறிமுகமாகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/R5wlnBi44BI/AAAAAAAAC3A/VVifaNKvolU/s320/srivilliputhur.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5160040625419640850" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கணணன் கதை சொல்லி வளர்க்கிறார் பட்டர் குழந்தையை. அதற்கும் அந்தக் கதைகள்தான் பிடிக்கிறது இயல்பாய். அமுது ஊட்டும் போதும் அதைத் திருக்கண்ண அமுது என்றுதான் படைக்கிறார். கிருஷ்ண ஸ்மரனை இல்லம் நிறைந்து இருக்க தளர்நடை பயின்று, பாவாடைப் பெண் ஆகிறாள் கோதை.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்து சிறுமியருடன் சின்னதாக மண் வீடு கட்டி விளையாடிக் களைத்து திண்ணையில் பூக்கட்டிக்கொண்டு இருக்கும் பட்டர் மடியில் தூங்கி விடுகிறாள் கோதை. கனவில் கண்ணன் வந்து அவள் கட்டிய சிற்றில்லத்தை கலைக்கிறான். "வேண்டாம் வேண்டாமென" கத்துகிறாள் &lt;a href="http://www.geocities.com/malibutemple/gods/aandaal_small.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 80px;" src="http://www.geocities.com/malibutemple/gods/aandaal_small.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;கோதை. கண்ணன் கலைத்து நின்று சிரிக்கிறான். தோழிகள் சூழ கண்ணனை வளைத்து விடுகின்றனர் சிறுமியர். "கலைத்த வீட்டைக் கட்டித்தாடா!" என்கின்றனர் சிறுமியர். கலைக்கத் தெரிந்த கண்ணனுக்கு கட்டத் தெரியவில்லை. ஏழுலகம் உண்டு உமிழ்ந்தவனுக்கு மண்ணில் வீடு கட்டத் தெரியவில்லை. கை கொட்டிச் சிரிக்கின்றனர் பெண்கள். இங்கும் அங்கும் ஓடி களைத்து இவர்கள் கையில் சிறையாகிறான் பரந்தாமன். "மாட்டிக் கொண்டாயா" எனச் சிரிக்கின்றாள் கோதை. பட்டர் மடியில் உதிர்ந்த சிரிப்பு பட்டரையும் ஆட் கொள்கிறது. "கண்ணன் விளையாடுகிறான் பார்!" என இவரும் சிரிக்கிறார். குழந்தை கனவு கலைகிறது. "அப்பா, கண்ணன் எங்கே அப்பா?" என வினவுகிறாள். கண்ணன் வந்தானா அம்மா? என்ன செய்தான்? என இவர் கேட்ட இவள் அவருக்கு கண்ணன் கதை சொல்கிறாள். இப்படி கண்ணன் கதையே இவர்களுக்கு வாழ்வாகிப் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாவாடை, தாவணியில் மிளிர்கிறாள் கோதை இப்போது. அப்பாவிடம் மறக்காமல் கேட்பாள் இன்றும், கனவில் வரும் கண்ணன் நினவிலும் வருவானா என்று. பட்டர் சொல்லுவார், "கோதை, இப்படித்தான் கண்ணன் என் கனவிலுன் ஒருநாள் வந்தான். பாண்டியன் சபையில் போய் பரதத்துவத்தை நிறுவி வா! என்றான். பூக்கட்டும் என்னை மற்றவர் வாய் கட்டச் செய்தான். பொற்கிழி வளைந்து என் கையில் விழுந்த போது எல்லோருக்கும் எதிரில் என் வாக்கை நிலை நாட்ட பரந்தாமனாக வந்து நின்றான். மற்றவர் கண்பட்டுவிடாதோ?".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R5whDhi439I/AAAAAAAAC2g/P7kW9FwY6H0/s1600-h/periyazvar2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_eySWrbVwCy4/R5whDhi439I/AAAAAAAAC2g/P7kW9FwY6H0/s320/periyazvar2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5160035617487773650" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அதனால்தான், நீ உடனே பல்லாண்டு, பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருகாப்பு, என்று காப்பிட்டாய், இல்லையா அப்பா? என்றாள் கோதை. அமாம், கண்ணே! பிள்ளைக் கனி அமுதல்லவோ கண்ணன். நான் காப்பிடாமல் யார் காப்பிட முடியும்" என்கிறார் பட்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;தாயும், தாயும் பேசுவது போல் உள்ளது சில நேரம், பிள்ளையும், பிள்ளையும் பேசுவது போல் உள்ளது சில நேரம். அன்பு தருவதிலே யாருக்கு யார் நிகர் அங்கு?&lt;br /&gt;&lt;br /&gt;மார்கழி பிறக்கிறது. மதி நிறைந்த நாளொன்றில் பண்டைய வழக்கமாகிய பாவை நோன்பைத் துவக்குகிறாள் கோதை. பக்கத்து வீட்டுச் சிறுமியரை அழைத்துக் கொண்டு பாவைப் பாடல்களைச் சொல்லிக் கொண்டு தூங்கும் சிறார்களை எழுப்பிக் கொண்டு நெய் உண்ணாமல், பால் உண்ணாமல், இளங்காலையில் நீராடி கோவில் செல்கிறாள் கோதை. அவள் செய்யும் பாவையில் மறக்காமல் இவள் முன்னோர்களான மற்றய ஆழ்வார்களையும் ஒவ்வொருவராய் எழுப்பிச் செல்கிறாள். கண்ணன் வீடு சென்று நந்தகோபனை எழுப்புகிறாள், நப்பின்னையை எழுப்புகிறாள், அண்ணன் பலதேவனை எழுப்புகிறாள். சீரியசிங்கம் விழிப்புற்று எழுந்தாற் போல் கண்ணனும் எழுகின்றான் இவள் பாடல்களால். மார்கழியில் விடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_eySWrbVwCy4/R5whbRi43-I/AAAAAAAAC2o/PpuR-f13dw8/s320/andal_after_sathupadi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5160036025509666786" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணன் நினைவால் பசலை கொள்கிறாள் கோதைப் பெண். இவள் நோய் இன்னதென்று யாரும் அறிகிலர். இவள் மன்மதனுக்கு நோன்பு இருக்கிறாள். கரும்பு வில் கொண்டோனை கன்னல் கனி அமுதனைக் கொண்டு வா,என்கிறாள். முறத்தில் அரிசி கொட்டி கண்ணை மூடி கூடல் விளையாடுகின்றனர் இளம் பெண்கள். கண்ணன் கிடைப்பானாகில் கண்ணை மூடி வட்டம் போட்டாலும் வட்டம் சேர வேண்டும். அதுதான் விளையாட்டு. வட்டம்கூடுகிறது. கோதையின் பசலையும் கூடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தெருவோரம் போகும் குறத்தியைக் கூப்பிட்டு குறி சொல்லச் வைக்கின்றனர் பெண்கள். கன்னங்கரிய விழி கொண்ட குறத்தி, குச்சியை வைத்து விட்டு கோதையின் கையைத் தடவுகிறாள். பெண்ணுருக் கொண்டு பேதையின் நெஞ்சை குறி வைக்கும் இவள் உண்மைக் குறத்திதானோ? பொறுமை இழந்த பொழுதில் குறத்திகுறி சொல்கிறாள், "பெரிய இடத்து சம்மந்தம் உண்டு" என்று. சன்மானமாக அரிசியும், நெல்லும் படியளக்கும் போது, குறத்தி அவை வேண்டாம், கோதை உடுத்திக் களைந்த தாவணியே போதும் என்கிறாள். தாவணியை வாங்கி, ஆண் பிள்ளை போல் தலையில் முண்டாசாகக் கட்டிக் கொண்டு கிளம்புகிறாள் குறத்தி. "எந்த ஊர் குறத்தி அம்மா?", என வினவிக் கொண்டு பட்டர் வரும் சமயம் அவள் "சோலைமலைக் குறத்தி" என்று சொல்லிவிட்டு நடக்கிறாள். சோலைமலை, சோலை மலை என்பது பட்டர் நினைவில் பட்டுத் தெரித்து திருமால் இரும் சோலைதானோ என வினவும் முன் அவள் முக்குத் திரும்பி மறைந்து விடுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/R5wh0Bi43_I/AAAAAAAAC2w/miNdkRFg2tU/s1600-h/andal_pinnazhagu.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/R5wh0Bi43_I/AAAAAAAAC2w/miNdkRFg2tU/s320/andal_pinnazhagu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5160036450711429106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணன் வரும் நாள் நோக்கி காத்து காத்து இளைத்த கோதை, "சரி, இனி அவர் வந்து மாலை போடும்முன், நானே அவருக்கு மாலை போட்டு விடுகிறேன்" என்று சொல்லி அப்பா திருமாலுக்கு கட்டி வைத்த மாலையைச் சூடி அழகு பார்க்கிறாள் கோதை. கைகள் பதற, பட்டர், "கண்ணே, கண்ணனுக்கான மாலையை கன்னிப் பெண் நீ சூடலாமா? என்ன இது அபச்சாரமென" அவசர, அவசரமாக மீண்டுமோர் மாலை கட்ட,பூசைக்கு நேரமாகிவிடுகிறது. கோவில் சென்று அர்ச்சகரிடம் புது மாலையைக் கொடுத்தால்,அர்ச்சகருக்கு அருள் வந்து விடுகிறது. "கோதை சூடிக்கொடுத்த மாலைதான் எமக்கு உவப்பு, கொண்டு வாரும் அந்த மாலையை" என அர்ச்சகர் அருள் வந்து சொல்ல ஓடுகிறார் பட்டர்பிரான் வீடு நோக்கி. அழுதுகொண்டிருக்கும் கோதையை "அன்னாய், ஆண்டாள்!" எனக் கூவுகிறார். "என்ன அப்பா? புது வழக்கமாய் ஆண்டாள் என்கிறீர்கள்?" என வினவும் மகளுக்கு சொல்கிறார், "அவன் ஆண்டவன், அவன் உள்ளம் ஆளும் நீ ஆண்டாள்!" என்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_eySWrbVwCy4/R5wiJxi44AI/AAAAAAAAC24/g-vIGQ6N3zI/s320/andal_sudikoduthal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5160036824373583874" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்று இரவே ஆண்டாளுக்கு தெய்வ சொப்பனம் வருகிறது. வாரணங்களான யானைகள் சூழ, வண்ண நிலவனான கண்ணன் வந்து கை பற்றுவது போல்! அவள் கனவையெல்லாம் ஒன்றுவிடாமல் அப்பாவிடம் சொல்கிறாள் ஆண்டாள். "கனவு! கனவு! கண்ணே...தெய்வக் கனவுகள் பொய்பதில்லை. நம்பினார் கெடுவதில்லை, நான்குமறை தீர்ப்பு, அம்மா!" என்கிறார் கண்கள் குளமாக பட்டர்பிரான்.&lt;br /&gt;&lt;br /&gt;கனவு நினைவாக அதிக நாள் எடுக்க வில்லை. பரிவாரம் சூழ வந்து சேர்கிறான் ஓர் &lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_eySWrbVwCy4/R5wgjRi438I/AAAAAAAAC2Y/kS5J8lez2D0/s200/andal_nonbu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5160035063436992450" /&gt;இளைஞன் ஒருநாள். ஊரே திமிலோகப் படுகிறது. "என்ன அப்பா, எங்கும் இல்லாத புதுப் பழக்கமாய், பிள்ளை- பெண் வீடு தேடி வந்து பெண் கேட்பது?" என வினவுகிறார் பட்டர் சுவாமிகள். அதற்கு பிள்ளையாண்டான் சொல்கிறான், "சுவாமிகளே வைரம் இருக்கும் இடத்தைத் தேடித்தான் வியாபாரி போவது வழக்கம். வைரம் வியாபாரியை நோக்கிப் போகக் கண்டீரோ" என்று. திகைத்துப் போன பட்டர், "பிள்ளாய்! உன்பெயர் என்ன சொன்னாய்? ஊர் என்ன?" என வினவ. "என் பெயர் ரெங்க மன்னார், ஊர் திருவரங்கம்,உங்களை எனக்கு மிக நன்றாகத் தெரியும். உற்றம், உறவுகள் எப்போதும் உங்களைப் பற்றித்தான் பேச்சு" என்கிறான் முத்தாய்பாய்.&lt;br /&gt;&lt;br /&gt;வெகுளியான பட்டர்பிரான் வேறு என்ன செய்வார்? இத்தனை சாமர்த்தியமாக பேசும் பிள்ளையிடம்!அடுத்த நாளே கல்யாணம் நடக்கிறது. ஆண்டாளுக்கு இச்சம்மந்தத்தில் கன குஷி!&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணம் முடிந்து பிள்ளை வீட்டார் ஸ்ரீரங்கம் திரும்புகின்றனர். பட்டர்பிரானும் மாப்பிள்ளை ஊர் வரை வந்து போகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீரெங்கப் பெருமாளை தரிசித்து விட்டு வீடு போகலாம் என பிள்ளை சொல்லி விட்டு, பெரிய்ய்ய்ய கோவிலான திரு அரங்கத்தின் வீதி தாண்டி, வீதி தாண்டி, பல மண்டபங்கள் தாண்டி கருவரை விரைகிறான். வயதான பட்டர் முடிந்த மட்டும் எட்டி நடை போடுகிறார். இவர் பெரிய பெருமாள் சன்னிதிக்கு வருவதற்கும், மாப்பிள்ளைப் பையன் நாகப்பை அணையில் துயில் கொள்ளவும் சரியாக இருக்கிறது. இவர் வளர்த்த சின்னஞ் சிறுங்கிளி, மெல்லப் பாம்பணையில் கால் வைத்து ஏறி, ரெங்கனுடன் சங்கமித்துவிடுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கும், பல்லாண்டு, பல்லாண்டு என வேத முழக்கம் ஒலிக்கிறது. பட்டர்பிரான் கண்கள் குளமாக கை கூப்பி நிற்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;pre&gt;&lt;span style="font-size:85%;color:#000099;"&gt;ஒரு மகள் தன்னை உடையேன்,&lt;br /&gt;  உலகம் நிறைந்த புகழால்&lt;br /&gt;திருமகள் போல் வளர்த்தேன்&lt;br /&gt;  செங்கண்மால் தான்&lt;br /&gt;கொண்டு போனான்&lt;br /&gt;  பெருமகளாய்க் குடி வாழ்ந்து&lt;br /&gt;பெறும் பிள்ளை பெற்ற யசோதை&lt;br /&gt;  மருமகளைக் கண்டு உகந்து&lt;br /&gt;மணாட்டுப் புறஞ் செய்யும் கோலோ!&lt;/span&gt;&lt;/pre&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிற்சேர்க்கை: என்னுள்ளும், உன்னுள்ளும் மறைந்திருந்து ஒவ்வொரு நொடியும் இவ்வுலகை சிருஷ்ட்டிக்கும் அக்குழந்தைக்கு இக்கதை நண்பனே/நண்பியே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;embed pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" width="388" src="http://picasaweb.google.co.uk/s/c/bin/slideshow.swf" height="292" flashvars="host=picasaweb.google.co.uk&amp;captions=1&amp;RGB=0x000000&amp;feed=http%3A%2F%2Fpicasaweb.google.co.uk%2Fdata%2Ffeed%2Fapi%2Fuser%2Fb.senthil2002%2Falbumid%2F5156679496770613121%3Fkind%3Dphoto%26alt%3Drss" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள் நன்றி: &lt;a href="http://thiruvilliputtur.blogspot.com/2007_01_01_archive.html"&gt;ஸ்ரீவில்லிபுத்தூர்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Date: Wed, 26 Nov 1997 00:33:57 +0100&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11685832-6051670999317933642?l=thirumozi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thirumozi.blogspot.com/feeds/6051670999317933642/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11685832&amp;postID=6051670999317933642' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/6051670999317933642'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11685832/posts/default/6051670999317933642'/><link rel='alternate' type='text/html' href='http://thirumozi.blogspot.com/2008/01/021.html' title='மடல் 021 -சின்னஞ்சிறு கிளியே!'/><author><name>நா.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/14818436093975846251</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://bp1.blogger.com/_eySWrbVwCy4/SBm60fAVsPI/AAAAAAAADWY/v5JPVrvYW30/S220/K-face.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/R5wlnBi44BI/AAAAAAAAC3A/VVifaNKvolU/s72-c/srivilliputhur.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11685832.post-3735183073023157454</id><published>2008-01-25T15:31:00.002+09:00</published><updated>2011-12-25T08:29:11.347+09:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='periyazvar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dreams'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='krishna consciousness'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='andal'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='virtual'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nachiar tirumozi'/><title type='text'>மடல் 022: செய்ய தாமரைக் கண்ணினாய்!</title><content type='html'>&lt;span style="color:#cc0000;"&gt;&lt;em&gt;If the Great Experiment of life were re-run a million times over, chances are it would never again give rise to mammals, let alone mammals intelligent enough to invent television!&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Stephen Jay Gould&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இதே கருத்தைத்தான் சங்ககாலத்துப் பாட்டியொருவர், "அரிது, அரிது, மானிடராய் பிறப்பது அரிது" என்று கண்டு சொல்லியுள்ளார். இன்னும் அரிதான பல விஷயங்களை அவர் விளக்குகிறார். அப்படிப்பட்ட மனித வாழ்வில் மிகவும் அரிதான பருவம் பால பருவம். எவ்வித கள்ளமும் இல்லாமல் கலங்களற்ற தெளிந்த ஓடை போல் மனது இருக்கும் பருவம். அப்பருவத்தில் பெரியர்கள் விடாது பிடித்து நிற்கும் "நிஜம்" என்னும் நிலைக்கும், "கற்பனை" என்பதற்கும் வித்தியாசமே இல்லாமல் நிஜமும், கற்பனையும் ஒன்றாகக் கலந்து நின்று உலகு மகா அதிசயமாகத் தெரியும் பருவம்.சாக்கடையில் நெளியும் புழுவும், ஓடையில் ஓடும் மீனும், தென்னமரத்து பைங்கிளியும், வேலியின் ஓணானும் சக தோழர்களாய் இருந்து உலகை ரசிக்க வைக்கும் பருவம்.&lt;br /&gt;&lt;br /&gt;படைப்பின் இரகசியம் அடங்கியுள்ள இப்பருவத்தை ஆழ்வார்கள் இருந்து அனுபவித்த மாதிரி அனுபவித்தவர்கள் யாரும் கிடையாது. அதிலும் மேலாக விட்டு சித்தர் என்னும் பெரியாழ்வார் அனுபவித்த விதமே அலாதி. ஆழ்வார்களின் பாசுரங்களில் மிகவும் அதிகமாக பேசப்படும் இறைமை பால பருவத்து கண்ணன்தான். கோதை நாச்சியாரான ஆண்டாளும் தனது பாசுரங்களை கண்ணனது பால பருவத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறாள். ஆண்டாளின் திருப்பாவை பிரபலமான அளவுக்கு நாச்சியார் திருமொழி அறிமுகமாகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.sanatansociety.com/beeld/Paintings/Suresh_Johari/suj_go_krishna01_300.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாழ்வார் தமிழுக்கு தந்தது இரு பெரும் கொடைகள். ஒன்று அவர் இயற்றிய பெரியாழ்வார் திருமொழி. இதில் கண்ணனின் பால பருவத்தை அவர் யசோதை பாவத்தில் அனுபவிக்கும் பாசுரங்கள்தான் பின்னால் பிள்ளைத்தமிழ் என்ற இலக்கியப் பிரிவாக மலர்கிறது. இரண்டாவது, ஆண்டாளை ஆளாக்கி தமிழுக்குத் தந்தது. ஆண்டாளின் பாடல்களில் தெரிக்கும் மனோதிடம் இருபதாம் நூற்றாண்டு பெண்ணியல்வாதிகளின் எழுத்தில் கூட தெரிவதில்லை. தந்தை கொடுத்த திட கிருஷ்ண பக்திதான் அதற்குக்காரணம். ஆண்டாள் குழந்தை பருவத்திலிருந்து கண்ணன் மேல் காதல் கொள்கிறாள். இக்காதல் முதலில் விளையாடும் சக தோழனாக பாவிப்பதிலிருந்து பின்னால் காளைப்பருவத்து காதலான பாவித்து உடல் உருக விரகக் கவிதைகள் செய்யும் வரை ஒரே சீராக இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலபருவம் ஆண் பிள்ளைகளுக்கு சேட்டை நிரம்பிய பருவம்! குதூகலமான பருவம்! எல்லாமேவிளையாட்டுதான். ஆண்டாளது கண்ணனும் மிகவும் சேட்டை நிரம்பியவனாகவே இருக்கிறான். சின்னப்பெண்கள் "முதுகு நோவ" (ஆண்டாளின் பிரயோகம்) கட்டிய சிற்றிலை (சின்ன இல்லத்தை)சிதைக்கின்றான். சக தோழனை "தீமை செய்யும் சிரீதரா!" என்று சரியாகவே அழைக்கிறாள்ஆண்டாள் :-)&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப, ரொம்ப அழகான பாசுரங்கள். அழகான வார்த்தைப் பிரயோகங்கள். கண்ணனை "உன் முகத்தனகண்கள் அல்லவே" என விளிக்கிறாள். குழந்தைக்கு "முகமெல்லாம் கண்" என்ற கிராமத்து வழக்கு அப்படியே விழுகிறது ஆண்டாள் பாசுரத்தில். ஆழ்வார்களிலே பெரியாழ்வாரும், ஆண்டாளும் மிக, மிக,எளிய பதங்கள், கிராமத்து வசனங்கள் போட்டு கவிதைகள் செய்திருக்கும் அழகே அழகு. இதில் பெரிய உளவியல் இரகசியம் இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/R5mH7xi436I/AAAAAAAAC2I/4dVaLf8efdE/s1600-h/krishna_w_maid.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5159304309111316386" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_eySWrbVwCy4/R5mH7xi436I/AAAAAAAAC2I/4dVaLf8efdE/s320/krishna_w_maid.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணன் என்ற பரம்பொருளே மிக, மிக எளியதாக இருக்கும் என்ற நோக்கில் செய்யும் பக்தியில்,செய்யும் நபரின் மனமும் மிக, மிக எளியதாக மாறிவிடுகிறது. நாம் எப்படி நினைக்கின்றோமோஅப்படித்தான் அமையும் நம் குணமும். இந்த மனோ பாவத்தில் நக்கீரர் போல் ஆண்டாவனுடன் சண்டை போடமுடியாது. அங்கு பண்டித வல்லமையும், நேர்மை, தலை குனியாத பண்பு போன்ற வளர்ந்த ஆண் குணங்கள் அழுத்தி சொல்லப்படுகின்றன. ஆனால் ஆண்டாளின் பாசுரங்களிலோ மிக, மிக மென்மையான குணங்கள் பேசப்படுகின்றன (வண்ணதாசன் கதைகள் போல்).&lt;br /&gt;&lt;b
